புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்
Page 1 of 1 •
-
அந்நிய நாட்டுத் தீவிரவாதிகளிடமிருந்து நம்மைக்
காப்பாற்றிய முன்னோடிகளான அர்ஜுன், விஜய்காந்த்
போன்றோரின் வரிசையில் இணைந்திருக்கிறார் சூர்யா.
கூடவே அவர் இயற்கை விவசாயியாகவும் சுற்றுச்சூழல்
ஆர்வலராகவும் இருப்பதுதான் இதில் வித்தியாசம்.
இந்தியப் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின்
பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட
எஸ்பிஜி (SPG, Special Protection Group) என்னும்
அமைப்பின் வீரத்தையும் தியாகத்தையும் சித்தரிப்பதற்காக
உருவாக்கப்பட்ட ஆக்ஷன் திரில்லர் இது என்று சொல்லப்
பட்டாலும் ஒரு பொழுதுபோக்குச் சித்திரமாக இந்தத்
திரைப்படம் எவ்வித சுவாரசியத்தையும் தரவில்லை.
எஸ்பிஜி அமைப்பினர் எதிர்கொள்ளும் நடைமுறைச்
சிக்கல்கள், அனுபவங்கள், ஆபத்துகள், அரசியல்கள்
ஆகியவற்றை மட்டும் மையப்படுத்தி
உருவாக்கியிருந்தாலாவது இத்திரைப்படம் பிரத்யேக
கவனத்தைப் பெற்றிருக்கலாம்.
ஆனால் அதற்கு இடையில் பல்வேறு சமூகப் பிரச்னைகளைப்
பேசுகிற பாவனைகள் அநாவசியமாகத் திணிக்கப்பட்டிருப்பதால்
இந்தக் குழுவின் அத்தனை உழைப்பும் வீணாகியிருக்கிறது.
ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ரயிலின் மீது பாய்ந்து வெடி
குண்டுகளைப் பொருத்துகிறார் சூர்யா. படத்தின் துவக்க
காட்சி இதுதான். ஏன் அவர் அவ்வாறு செய்ய வேண்டும்?
கதை நாலைந்து மாதத்திற்கு முன் நகர்கிறது.
ராணுவ உளவுத்துறையில் இருந்து கொண்டு நாட்டின்
பாதுகாப்பிற்காகப் பல சிரமங்களையும் சாகசங்களையும்
செய்தவர் சூர்யா. அவரின் திறமையை அடையாளம் காணும்
இந்தியப் பிரதமரான மோகன்லால், சூர்யாவைத் தனது
பாதுகாப்பு அதிகாரியாக வைத்துக் கொள்கிறார்.
பிரதமரைக் கொல்வதற்காக பாகிஸ்தான் தீவிரவாதிகள்
தொடர்ந்து முயல்கின்றனர். இவற்றையெல்லாம்
முறியடிக்கிறார் சூர்யா. ஆனால் ஒரு கட்டத்தில் தீவிரவாதிகள்
தங்களின் நோக்கத்தில் வெற்றி பெறுகின்றார்கள்.
இதற்குப் பிறகு என்னவானது என்பதைச் சூடும் சுவையும்
இன்றி வெற்று ஆக்ஷன் காட்சிகளின் வழியாகச் சொல்ல
முயன்றிருக்கிறார்கள்.
---------------------
-
அந்நிய நாட்டுத் தீவிரவாதிகளிடமிருந்து நம்மைக்
காப்பாற்றிய முன்னோடிகளான அர்ஜுன், விஜய்காந்த்
போன்றோரின் வரிசையில் இணைந்திருக்கிறார் சூர்யா.
கூடவே அவர் இயற்கை விவசாயியாகவும் சுற்றுச்சூழல்
ஆர்வலராகவும் இருப்பதுதான் இதில் வித்தியாசம்.
இந்தியப் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின்
பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட
எஸ்பிஜி (SPG, Special Protection Group) என்னும்
அமைப்பின் வீரத்தையும் தியாகத்தையும் சித்தரிப்பதற்காக
உருவாக்கப்பட்ட ஆக்ஷன் திரில்லர் இது என்று சொல்லப்
பட்டாலும் ஒரு பொழுதுபோக்குச் சித்திரமாக இந்தத்
திரைப்படம் எவ்வித சுவாரசியத்தையும் தரவில்லை.
எஸ்பிஜி அமைப்பினர் எதிர்கொள்ளும் நடைமுறைச்
சிக்கல்கள், அனுபவங்கள், ஆபத்துகள், அரசியல்கள்
ஆகியவற்றை மட்டும் மையப்படுத்தி
உருவாக்கியிருந்தாலாவது இத்திரைப்படம் பிரத்யேக
கவனத்தைப் பெற்றிருக்கலாம்.
ஆனால் அதற்கு இடையில் பல்வேறு சமூகப் பிரச்னைகளைப்
பேசுகிற பாவனைகள் அநாவசியமாகத் திணிக்கப்பட்டிருப்பதால்
இந்தக் குழுவின் அத்தனை உழைப்பும் வீணாகியிருக்கிறது.
ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ரயிலின் மீது பாய்ந்து வெடி
குண்டுகளைப் பொருத்துகிறார் சூர்யா. படத்தின் துவக்க
காட்சி இதுதான். ஏன் அவர் அவ்வாறு செய்ய வேண்டும்?
கதை நாலைந்து மாதத்திற்கு முன் நகர்கிறது.
ராணுவ உளவுத்துறையில் இருந்து கொண்டு நாட்டின்
பாதுகாப்பிற்காகப் பல சிரமங்களையும் சாகசங்களையும்
செய்தவர் சூர்யா. அவரின் திறமையை அடையாளம் காணும்
இந்தியப் பிரதமரான மோகன்லால், சூர்யாவைத் தனது
பாதுகாப்பு அதிகாரியாக வைத்துக் கொள்கிறார்.
பிரதமரைக் கொல்வதற்காக பாகிஸ்தான் தீவிரவாதிகள்
தொடர்ந்து முயல்கின்றனர். இவற்றையெல்லாம்
முறியடிக்கிறார் சூர்யா. ஆனால் ஒரு கட்டத்தில் தீவிரவாதிகள்
தங்களின் நோக்கத்தில் வெற்றி பெறுகின்றார்கள்.
இதற்குப் பிறகு என்னவானது என்பதைச் சூடும் சுவையும்
இன்றி வெற்று ஆக்ஷன் காட்சிகளின் வழியாகச் சொல்ல
முயன்றிருக்கிறார்கள்.
---------------------
தோற்றத்தில் மாறா இளமையுடன் இருக்கும் சூர்யாவின்
அசாதாரணமான ஃபிட்னஸ் அவரது பாத்திரத்திற்கும்
சாகசங்களுக்கும் நியாயம் சேர்க்கிறது. தனது
பாத்திரத்தைக் கம்பீரமாகவும் வலுவாகவும்
கையாண்டிருக்கிறார் சூர்யா.
சாயிஷாவை இத்திரைப்படத்தின் நாயகி என்று
சம்பிரதாயத்திற்குச் சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவே.
இடையிலேயே ஆர்யாவிற்கும் இவருக்கும் திருமணம் நடந்து
விட்டதால் திரைக்கதையில் அடக்கி வாசித்திருக்கிறார்கள்
போலிருக்கிறது.
ஹோட்டல் ரூம் நகைச்சுவையில் சற்று எல்லை
மீறியிருக்கிறார்கள். ஆண் என்றால் புத்திசாலித்தனமானவன்,
பெண் என்றால் முந்திரிக்கொட்டைத்தனமான முட்டாள் என்பது
இதிலும் தொடர்கிறது.
பிரதமராக மோகன்லால். இயல்பாக நடித்திருக்கிறார்.
சமயங்களில் கல்லூரி நாடகக் காட்சிகள் போல் இருந்தாலும்
பாகிஸ்தான் தூதரக அதிகாரியைக் கண்டிக்கும் காட்சியில்
அசர வைக்கிறார்.
ஆர்யாவின் இயல்பான குணாதிசயத்தை அவரது
பாத்திரத்திலும் அப்படியே பொருத்தியிருக்கிறார்கள்.
தொழிலதிபரிடம் பேசும் காட்சியைத் தவிர வேறொன்றும்
சுவாரசியமில்லை.
இந்தியாவின் பொருளாதாரச் சூழலையே நிர்ணயிக்கும்
தொழிலதிபராக போமன் இரானி தனது அட்டகாசமான
உடல்மொழியில் கலக்கியிருக்கிறார். எந்தவொரு தேசத்தின்
தலையெழுத்தையும் நிர்ணயிப்பவர்கள் கார்ப்ரேட்
அதிபர்களே என்னும நிதர்சனமான உண்மை இவரது
பாத்திரத்தின் வழியாக ‘நச்’சென்று சொல்லப்பட்டிருக்கிறது.
முன்னாள் மற்றும் சமகால மத்திய அரசுகளின் செயல்கள்
விமரிசனங்களுக்கும் கேலிக்கும் ஆளாகின்றன. பிரதான
வில்லனாக வருபவர் எந்த சுவாரசியத்தையும் தரவில்லை.
இது கே.வி. ஆனந்தின் வழக்கமான வடிவமைப்பில்
வந்திருக்கும் திரைப்படம். நெருங்கிய நண்பனின் துரோகம்,
ஹைடைக் பார் நடனம், பயோ வார், லாஜிக்கும் சுவாரசியமும்
இல்லாத திருப்பங்கள் என்று பல விஷயங்கள் அப்படியே
வந்திருக்கின்றன. கதாநாயகனை முதலில் தீவிரவாதி
போலவும் அரசியல் பிரமுகரைக் கொல்லப் போவது போலவும்
சித்தரித்து பிறகு அவரைப் பிரமுகரின் ‘பாதுகாவலராக’
காட்டும் திருப்பங்களையெல்லாம் நாம் ‘ஆதவன்’ போன்ற
பழைய திரைப்படங்களிலேயே பார்த்து விட்டோம்.
வழக்கமாக எழுத்தாளர்கள் சுபாவுடன் கூட்டணி அமைக்கும்
கே.வி. ஆனந்த், இம்முறை பட்டுக்கோட்டை பிரபாகருடன்
இணைந்திருக்கிறார். சில இடங்களில் வசனங்கள் ரசிக்க
வைக்கின்றன. பிகேபியின் பிரத்யேகமான குறும்புகளும்
ஆங்காங்கே இணைந்திருக்கின்றன.
எம்.எஸ்.பிரபுவின் அட்டகாசமான ஒளிப்பதிவு தன்
பங்களிப்பைச் சிறப்பாகத் தந்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகள்
பரபரப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பூச்சிகளின்
தாக்குதல் தொடர்பான காட்சி குறிப்பிடத்தக்கது. ஆண்டனியின்
துள்ளலான எடிட்டிங்கின் மாயத்தை இதில் காண முடியவில்லை.
இரண்டரை மணி நேரத்திற்கு மேல் நீளும் இந்தத் திரைப்படத்தில்
சில காட்சிகள் கொட்டாவி விட வைக்கின்றன. சமுத்திரக்கனி
தன் பழைய காதல் கதையைச் சொல்லும் காட்சி ஓர் உதாரணம்.
நாளுக்கு நாள் கட்டெறும்பாகத் தேய்ந்து கொண்டே போகிறார்
ஹாரிஸ் ஜெயராஜ். இதில் எந்தவொரு பாடலும் ரசிக்கும்
படியாக இல்லை. நவீன நுட்பத்தில் தோய்க்கப்பட்டு நம் முன்
எறியப்படும் சத்தங்கள் மட்டுமே ஒலிக்கின்றன.
பரபரப்பான பின்னணி இசையில் இந்தக் குறையைப் போக்க
முயன்றிருக்கிறார் ஹாரிஸ்.
கமல்ஹாசனின் ‘குருதிப்புனல்’ திரைப்படத்தில் ஒரு காட்சி
நினைவிற்கு வருகிறது. பிரதமரின் பாதுகாப்பு
கமாண்டோக்களின் பலத்த ஏற்பாடுகளையும் மீறி அவரைக்
கொல்வதற்கான சதி நடக்கும். அந்தக் காட்சிகளில் இருந்த
பரபரப்பு, நம்பகத்தன்மை, சுவாரசியம், சரியாகக் காட்சிப்
படுத்துதல் போன்ற எதுவுமே இந்தத் திரைப்படத்தில் இல்லை.
இயற்கை விவசாயம், லண்டன், காஷ்மீர், கனிமவளச்சுரண்டல்,
கார்ப்ரேட் ஆதிக்கம், அரசியல் கருப்பு ஆடுகள் போன்ற
விஷயங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான்.
ஆனால் அனைத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பியதில்
சகிக்க முடியாத கலவையாகியிருக்கிறது ‘காப்பான்’.
மெல்ல உயிர் விட்டுக் கொண்டிருக்கும் விவசாயத் துறையின்
ஆதாரமான பிரச்னைகளைத் திரைப்படம் எனும் கலையின்
வழியாக உரையாடுவது நல்ல விஷயம்.
ஆனால் அதை மையமாக வைத்து தீவிரமான முயற்சிகளை
உருவாக்காமல் சமூகப் பிரச்சினைகளை ஊறுகாயாகத்
தொட்டுக் கொள்ளும் பாவனையை தமிழ் சினிமா முதலில்
கைவிட வேண்டும்.
-
--------------------------------
நன்றி-தினமணி
- GuestGuest
கொஞ்சம் பார்த்தேன். பார்க்கலாம். சஹோவைட சிறப்பு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|