புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_m10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10 
3 Posts - 60%
Manimegala
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_m10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_m10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_m10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_m10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_m10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10 
11 Posts - 4%
prajai
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_m10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10 
9 Posts - 4%
Jenila
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_m10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_m10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_m10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_m10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_m10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10 
2 Posts - 1%
jairam
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_m10காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 15, 2020 4:22 pm

ஸ்ரீசீதா ராம பட்டாபிஷேகம் நடந்த பிறகு ராமர் சபா மண்டபத்தில்
அமர்ந்திருந்தார்
அதிக வெப்பமும் இல்லாமல், அதிக குளிர்ச்சியும் இல்லாத வசந்த
காலம்! .

அப்போது சியவன முனிவர் தலைமையில் ஏராளமான முனிவர்கள்
ராமரைப் பார்க்க வந்தார்கள். அவர்களை முறைப்படி வரவேற்று
ஆசனங்களில் அமர வைத்தார். வந்த முனிவர்கள் பேசத்
தொடங்கினார்கள்;

??ராமா! லவணாசுரன் என்பவனின் காெடுமை தாங்கவில்லை.
அவனிடமிருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்? எனத் தொடங்கி
விவரித்தார்கள்.

மது என்ற அரக்கனுக்கும் கும்பீனசி என்பவளுக்கும் பிறந்தவன்
லவணாசுரன்; சிறுவயது முதல் கொடூரமான குணங்கள்
படைத்தவனாக இருந்தான்; ?நான் பிறந்ததே, அடுத்தவர்களுக்கு
தீமை செய்வதற்காகத்தான்? என்ற கொள்கை உடையவன்; துஷ்டன்
என்ற பெயர் எடுத்தவன்.

மகனின் அந்தநிலை கண்டு,தந்தையான மது,மிகவும் வருந்தினார்;
என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைசியில் தன் மகனிடம்
ஒரு சூலாயுதத்தைக் கொடுத்த மது, ?இந்த சூலாயுதம், நான்
கடுமையாகத் தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து பெற்றது.

இது உன்கையில் இருக்கும் வரை, உன்னை யாராலும் கொல்ல முடியாது?
என்று கூறினார். அதை லவணாசுரன் வாங்கிய அதே விநாடியில், அவன்
தந்தை நாட்டை விட்டு வெளியேறினார். கேட்க வேண்டுமா?

லவணாசுரனின் அட்டூழியம் எல்லை மீறிப் போனது; சிவபெருமான் தந்த
சூலாயுதம் என் கையில் இருக்கிறது?? என்ற ஆணவம் வேறு;
உலகங்களில் உள்ள நல்லவர்களுக்குத் தீங்குசெய்து அழித்து வந்தது
மட்டுமல்ல; விலங்குக ளையும் விட்டு வைக்க வில்லை லவணாசுரன்.

அவனால் துயரப்பட்ட முனிவர்கள் எல்லோரும், பற்பல அரசர்களிடம்
போய் முறையிட்டார்கள்; பலன் ஏதுமில்லை. அந்த நேரத்தில்தான்
ராவண சங்காரம் முடிந்து, ராமர் அயோத்தி திரும்பி அரசாட்சி செய்யத்
தொடங்கினார். ராமரிடம் முறையிட்ட முனிவர்கள் இதைச்
சொன்னார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 15, 2020 4:23 pm

??ராமா! மற்றவர் யாராலும் செய்ய முடியாத ராவண சங்காரத்தைச்
செய்து முடித்தாய் நீ! அதை அறிந்தே வந்தோம். யாராலும் வெல்ல
முடியாத லவணாசுரனிடம் இருந்து எங்களைக் காப்பாற்று!?? என
வேண்டினார்கள்.

வேண்டிய முனிவர்களைக் கைகூப்பி வணங்கிய ராமர்,
??அந்தத் தீயவனை அழிப்பேன் நான். பயப்படாதீர்கள்!?? என்று சொல்லி
தன் சகோரர்கள் பக்கம் திரும்பினார்;

??சகோதரர்களே! இந்த லவணாசுரனை சங்காரம் செய்யப்போவது யார்?
ராவணனை நான் சங்காரம் செய்தேன். லட்சுமணன் இந்திரஜித்தை
சங்காரம் செய்தான். பரதனாவது சத்ருக்கனனாவது போய் லவணாசுரனை
சங்காரம் செய்ய வேண்டும்?? என்றார்.

??லவணாசுரனை அழிக்கும் ெபாப்பை நான் ஏற்கிறேன்? என்றார் பரதன்.
அதைக் கேட்டதும் அதுவரை அமைதியாக இருந்த சத்ருக்கனன் பளிச்சென்று
எழுந்து ராமரை வணங்கிப் பேசத் தொடங்கினார்;

?சுவாமி! இவர் (பரதன்) இதுவரை பலவிதமான துயரங்களை அனுபவித்து
இருக்கிறார்; முனிவர்களைப் போலத் தவக்கோலம் கொண்டு தரையில்
படுத்துத் தாங்க முடியாத துயரங்களையெல்லாம் அனுபவித்தவர்.

ஆகையால், இவர் லவணாசுர வதம் செய்யப் போக வேண்டாம். நான்
செல்கிறேன்; அனுமதி அளியுங்கள்!? என வேண்டினார் சத்ருக்கனன்.
ராமர் முகம் மலர்ந்தார்; ?பலே! பலே! சத்துருக்னா! உன்னை இப்போதே
அந்த அரக்கனின் ராஜ்யத்திற்கு அரசனாகப் பட்டாபி ஷேகம்செய்து
வைக்கிறேன்.வித்தைகள் அனைத்தையும் அறிந்தவன் நீ!லவணாசுரனைக்
கொன்று அவன் ராஜ்ஜியத்தை நல்ல விதமாக ஆண்டு வா!? என்று கூறி
ஆசி அளித்தார்.

வசிஷ்டரின் தலைமையில் சத்ருக்கனனுக்கு, ராஜ்யாபிஷேகம் நடை
பெற்றது.

அது முடிந்ததும் சத்ருக்கனனைத் தன் மடியில் அமர வைத்துக் கொண்ட
ராமர், சத்ருக்கனனுக்கு ஓர் அம்பைக் கொடுத்தார். அறிவுரை ? அறவுரை
சொல்லத் தொடங்கினார்; ??குழந்தாய்! சத்துருக்கனா! இந்த அம்பை
வைத்துக் காெள்! இது மிகவும் சக்தி வாய்ந்தது. இதனால் லவணாசுரனைக்
கொல்!

சக்தி வாய்ந்த சூலாயுதத்தை அரண்மனையில் வைத்து விட்டு,
லவணாசுரன் உணவிற்காக வெளியே வருவான். ??ஆயுதமில்லாது
இருக்கும் அந்த வேளையில் லவணாசுரனைக் கொல்ல வேண்டும்.
லவணாசுரன் உணவிற்காக வெளியேறும் அவ்வேளையில், நீ அவன்
நகரத்தின் வாசலில் காத்துக் கொண்டிரு! அவன் திரும்பி வரும்போது,
அவனை நகரத்திற்குள் பிரவேசிக்க விடாமல் நீ அவனை யுத்தத்திற்கு
அழைத்துக் கொல்! வேறுவழியில்லை? என்று சத்ருக்கனன் செயல்பட
வேண்டிய வழி வகைகளை விரிவாகச் சொன்னார், ராமர்.

அதன்படியே செயல்பட்ட சத்ருக்கனன், வலணாசுரன் இருப்பிடத்திற்குச்
சென்றார்; லவணாசுரன் கையில் சூலாயுதம் இல்லாமல் உணவிற்காக
வெளியேறிய வேளையில், நகரின் கோட்டை வாசலில்போய் தயாராக
நின்றார். சத்ருக்கனன் .

உணவு தேடப் போயிருந்த லவணாசுரன் ஏராளமான விலங்குகளைக்
கொன்று சுமந்துகொண்டு வந்தான்; வந்தவன் ஆயு தங்களுடன் நின்றிருந்த
சத்ருக்கனனைப் பார்த்தான். ??அடே! முட்டாளே! உன்கையில் இருக்கும்
ஆயுதங்களால் உனக்கு என்ன பிரயோஜனம்?

உன்னைப் போன்ற வீரர்களை ஆயிரக்கணக்காய்க் கொன்று
தின்றிருக்கிறேன். நீயாகவே மரணத்தைத் தேடி வந்திருக்கிறாயே!
வெளியில்போய், எனக்காக உணவைக்கொண்டு வந்திருக்கிறேன்
நான். ஆனால், என் கோட்டை வாசலிலேயே எனக்காக, அருமையான நர
மாமிசம் என்னைத்தேடி வந்து, என் வாயில் வலுவில் விழுகிறது. என்ன
வியப்பு!? என்று பெருங்குரலெடுத்துச் சிரித்தான் லவணாசுரன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 15, 2020 4:23 pm

அதைக்கேட்ட சத்ருக்கனன் கோபத்தால் கொதித்தார்; ?முட்டாள் அரக்கா!
உன்னைத்தேடி யமனே வந்ததைப்போல வந்திருக்கிறேன், நான்.
அரக்கர்களை அலற வைத்த தசரதரின் பிள்ளை; அனைத்தும் அறிந்த
ஸ்ரீராமரின் தம்பி; சத்ருக்கனன் (பகைவர்களை நாசம் செய்பவன்) என்பது
எனது பெயர்.

மனிதனை முக்தி அடைய விடாமல் தடுக்கும் அறியாமையையும் அதன்
செயல்களான காம குரோதங்களையும் வென்ற எனக்கு, உன்னைப்
போன்ற வெளிப்படையான பகைவர்களை வெல்வது ஒரு காரியமா என்ன?
என்னைத் தாண்டி நீ உயிருடன் போக முடியாது? என்றார்.

லவணாசுரன் சிரித்தான்; வெகு நாட்களாக இதற்காகவே காத்துக்
கொண்டிருந்தேன். என் உறவினனான ராவண னை, ராமன் கொன்றதாகக்
கேள்விப்பட்டேன். ஏதோ தெரியாமல் செய்து விட்டான் என்று அந்த
அவமானத்தை இதுவரை பொறுத் திருந்தேன். என்னை எதிர்த்தவனும்
கிடையாது; எதிர்க்கக் கூடியவனும் கிடையாது.

உன்னைப் போன்றவர்களை எல்லாம் நான் கணக்கில் எடுத்துக் கொள்வதே
கிடையாது. இருந்தாலும் போர் செய்ய வேண்டுமென்று விரும்புகிறாய் நீ!
சற்று பாெறு! என் ஆயுதத்தை எடுத்து வருகிறேன்? என்றான் லவணாசுரன்.

சத்ருக்கனன் மறுத்தார்; ??இங்கிருந்து உன்னை உயிருடன் போகவிடுவேன்
என்று நினைத்தாயா? வீண் பெருமை பேசும் உன் அரக்க மாயைகளை நான்
அறிவேன். பகைவனின் வார்த்தைகளில் மயங்கி, அவனைத் தப்ப விடும்
மடையன் அழிவான். அனைத்து ஜீவ ராசிகளையும் கொன்று தின்னும்
உன்னைக் கொன்றால், அது உலகிற்குச் செய்யும் பெரும் உபகாரம்? என்றார்,

சத்ருக்கனன். கோபம் தாங்கவில்லை லவணாசுரனுக்கு; ??இதுவரை யாருமே
நம்மிடம் இவ்வளவுநேரம் பேசி, உயிரோடு போனதே கிடையாது. ஊஹும்!
இவனை விட்டு வைக்கக் கூடாது? என்று பெரும் மரங்களை அப்படியே
பெயர்த்து எடுத்து சத்ருக்கனன் மேல் வீசிக் கடுமையாகப் போரிட்டான்.

அரக்கன் வீசிய அனைத்தையும் கீழே தள்ளிய சத்ருக்கனன், அவனை நகரின்
உள்ளே பாேக விடாமல் தடுத்தார்; ஸ்ரீராமரால் கொடுக்கப்பட்ட உத்தமமான
அம்பை எடுத்தார்; மிகவும் சக்தி வாய்ந்த அந்த அம்பு வெளிப்பட்டதும் பெரும்
விபரீதங்கள் உண்டாயின. தேவர்கள்,

முனிவர்கள் என அனைவரும் நடுங்கினார்கள். அவர்களை பிரம்மதேவர்
சமாதானப் படுத்தினார். ராமர் தந்த அம்பைக் கையில் எடுத்த சத்ருக்கனன்,
ராமரைத் தியானித்து அந்த அம்பை லவணாசுரன் மீது ஏவினார். அது
லவணாசுரனின் மார்பைப் பிளந்து, மறுபடியும் சத்ருக்கனனிடமே வந்து
சேர்ந்தது.

லவணாசுரன் மாண்டு கீழே விழுந்தான். அதே விநாடியில் அரண்மனையில்
இருந்த, சிவபெருமான் தந்த சூலாயுதம், சிவபெருமானிடமே போய்ச் சேர்ந்தது.
முனிவர்களும் தேவர்களும் வாயாற மனமாற சத்ருக்கனனைப் புகழ்ந்தார்கள்.
பிறகென்ன? லவணன் ஆண்ட மதுபுரியை ஏற்கனவே ராமரால்
சத்ருக்கனனுக்குப் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட மதுபுரியை, சத்ருக்கனன்
நல்ல முறையில் ஆட்சி செய்தார்.

உட்பகைவர்களான பொறி புலன்களை வென்று தன் வசப்படுத்தியதோடு,
வெளிப் பகைவர்களையும் வென்று, அனைவருக்கும் நன்மை செய்த
சத்ருக்கனன், உயர்ந்த கதாபாத்திரம் என்பதில் ஐயமேதுமில்லை.
-----------------------------------------------
பி.என் பரசுராமன்
நன்றி- தினகரன்-ஆன்மிக மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக