புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
33 Posts - 62%
heezulia
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
17 Posts - 32%
cordiac
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
1 Post - 2%
Geethmuru
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
1 Post - 2%
JGNANASEHAR
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
160 Posts - 56%
heezulia
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
100 Posts - 35%
T.N.Balasubramanian
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
9 Posts - 3%
prajai
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
1 Post - 0%
Geethmuru
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
1 Post - 0%
cordiac
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_m10வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 8:46 am

வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை? Vikatan%2F2020-04%2Fb943d027-71c1-46c1-a1e7-135fc8658a3d%2F0013
-
ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தை, 1955-ம் ஆண்டு முதல்
அமெரிக்கா அங்கீகரித்து பயன்படுத்திவருகிறது.

ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்து குறித்து அமெரிக்கா - இந்தியா
இடையே நடைபெறும் மிரட்டல்/அடிபணிதல் அரசியல், பெரியளவில்
விவாதப் பொருளாகியிருக்கிறது.

இந்த மருந்து, கொரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என்று
திட்டவட்டமாக இன்னமும் முடிவுக்கு வராத நிலையிலேயே இந்தத்
தகராறு. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவுக்குத் தேவைப்படும்
அல்லது அந்த நாடு வாங்கும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தில்
47 சதவிகிதம் இந்தியாவில் உள்ள நிறுவனங் களிடமிருந்துதான்
செல்கிறது.

இந்த மருந்து ஏற்றுமதியில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது
இஸ்ரேல். அந்த நாட்டின் ஆக்டாவிஸ் (actavis) என்கிற நிறுவனம்,
இந்த மருந்தை அமெரிக்காவுக்கு அனுப்புகிறது. இந்த இஸ்ரேலிய
நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் டேவா பார்மாசூட்டிகல்ஸ்
(teva pharmaceuticals). இதன் தொழிற்சாலை குஜராத் மாநிலத்தில்
உள்ளது.

ஆக, இஸ்ரேலிய நிறுவனம் கொடுக்கும் ஹைட்ராக்சி க்ளோரோகுயின்
மருந்தும் கிட்டத்தட்ட இந்தியாவில் உற்பத்தி செய்யப் படுகிறது என
எடுத்துக்கொள்ளலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 8:47 am

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் முதல் இடத்தில் இருப்பது சைடஸ் பார்மா (zydus pharma). இது அகமதாபாத்தில் இருக்கும் கெடிலா ஹெல்த்கேர் (Cadila healthcare) நிறுவனத்தின் துணை நிறுவனம். சைடஸ் பார்மா, இந்தியா விலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் மருந்தில் 33.4 சதவிகிதம் ஏற்றுமதி செய்கிறது.

இதுமட்டுமல்லாமல், ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்துக்கான பெரும்பாலான மூலக்கூறுகள் சீனாவிடம் இருந்தாலும், சீன - அமெரிக்க வர்த்தக மோதல் காரணமாக, அனைத்து மூலக்கூறுகளையும் இந்தியா வழியாகவே அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்தை அமெரிக்காவைச் சேர்ந்த மைலேன் Nv (mylan Nv) நிறுவனம் உற்பத்தி செய்ய அந்நாட்டு அரசு பணித்தாலும், அந்த நிறுவனத்தால் இந்த மூலக்கூறு இல்லாமல் உற்பத்தி செய்ய முடியாது. அதனால்தான் இந்தியா இந்த மருந்து மற்றும் அதற்கான மூலக்கூறு ஏற்றுமதியைத் தடைசெய்ததும் அமெரிக்கா பதற்றமடைந்தது.

ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தை, 1955-ம் ஆண்டு முதல் அமெரிக்கா அங்கீகரித்து பயன்படுத்திவருகிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள மிகவும் அடிப்படையான மருந்துகளில் இதுவும் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் எழுதப்படும் சுமார் 50 லட்சம் மருந்து சீட்டுகளில் இந்த மருந்து இடம்பெற்றிருக்கும். இந்த மருந்து மட்டுமல்ல, தனது மொத்த மருந்து தேவையில் 80 சதவிகிதம் மருந்துகளை இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்துதான் அமெரிக்கா இறக்குமதி செய்து கொள்கிறது. மீதமுள்ள 20 சதவிகித மருந்துகளை மட்டுமே அமெரிக்கா உற்பத்தி செய்கிறது.

அதேசமயம், உலக மருத்துவச் சந்தையில் அமெரிக்காதான் முதல் இடம் வகிக்கிறது. உலகத்தில் உள்ள மருத்துவச் சந்தையின் மதிப்பு 1.205 டிரில்லியன் அமெரிக்க டாலர்! அதில் அமெரிக்காவின் சந்தை 38 சதவிகிதம். இவ்வளவு பெரிய சந்தை இருந்தாலும், அமெரிக்க நிறுவனங்கள் மருத்துவ உலகில் அதிகமான காப்புரிமைகளை வைத்திருந்தாலும், மருந்து அல்லது மூலக்கூறுகளை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் அமெரிக்காவில் கிடையாது. இந்தப் பின்னணியில்தான் அடுத்த கேள்வி முக்கியத்துவம்பெறுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82469
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 8:48 am

அமெரிக்கா ஏன் மருந்துகளையும் மூலக் கூறுகளையும் உற்பத்தி செய்வது கிடையாது? ‘ஹைட்ராக்சிக்ளோரோகுயின் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டதற்கு காரணம், அமெரிக்காவின் மிரட்டலா?’ என்ற விவாதத்துக்கெல்லாம் செல்ல வேண்டாம். மேற்கண்ட கேள்விக்கு மட்டும் விடை தேடுவோம்.

இதற்கு முக்கிய காரணம், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான். எந்தப் பகுதியில் இதைப் போன்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் அந்தப் பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று ஆகியவை மிகவும் மாசடைந்துவிடும். தமிழகத்தின் கடலூர், ஒரு நல்ல உதாரணம். விசாகப்பட்டினம் - கிருஷ்ணப்பட்டணம் அருகில் அமைக்கப்பட்டுள்ள பார்மா தொழிற் பேட்டைகள் இதற்கு கொடுமையான மற்றோர் உதாரணம்.

பிரிட்டனில் மருந்து தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் இருந்த உயிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில், பெண் கடலுயிரிக்கு, ஆண் கடலுயிரிக்கு இருக்கக்கூடிய உறுப்புகள் தென்பட்டதுடன், சில சிதை மாற்றங்களும் காணப் பட்டன. அதைப்போலவே ஆண் கடலுயிரிகளின் முட்டைகளில் பெண் கடலுயிரிகளின் புரதங்கள் காணப்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடல் உயிரிகளில் ஏற்பட்ட இந்தச் சிதைவுகளுக்கு காரணம், அருகில் இருந்த மருந்து மூலக்கூறு உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறிய ‘ethynyl estradiol’ என்பது பிறகு கண்டறியப்பட்டது.

மேற்சொன்னவை மட்டுமல்லாமல், ‘மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் அருகில் ஆன்டி பயாடிக்ஸ் வெளியேறி, அங்கு இருக்கும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை உள்ளிட்ட நுண்ணுயிரிகள் அவற்றுக்குப் பழகிபோய், அந்த மருந்துக்கு எதிரான தங்களின் சக்தியை அதிகரித்துக் கொள்கின்றன (anti- micorbial resistance). அந்த நுண்ணியிரிகள் மனிதர்களைத் தாக்கும்போது, அவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டி ருந்தாலும், போதிய பலனளிக் காமல்போய்விடுகிறது’ என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 2016-ம் ஆண்டு, ஜெர்மன் விஞ்ஞானிகள் ஹைதராபாத் பெரிய மருந்து தயாரிக்கும் வளாகத்துக்கு அருகில் உள்ள பட்டஞ்சேறு - பொல்லரம் கிராமங்களில் பல்வேறு மாதிரிகளை எடுத்து சோதனை செய்தனர். சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் anti-microbials காணப்பட்டன. கண்டறியப்பட்ட பாக்டீரியாக்கள், பூஞ்சைகளில் 95 சதவிகிதம்anti-biotic மருந்துகளுக்குக் கட்டுப்படாதவை யாக இருந்தது, அவர்களுக்கு கவலையளித்தது.

இங்கிருந்துதான் பல்வேறு நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வளாகத்தில் 170 நிறுவனங்கள் உள்ளன. அதில் 20 நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான anti-biotics-ஐ உற்பத்திசெய்து அனுப்புகின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட பாதிப்புகள் சிறியள விலான உதாரணங்கள் மட்டுமே. விரிவாக எழுதுவதற்கு பக்கங்கள் போதா! முக்கியமான மருந்துகளைக்கூட வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யாமல் இந்தியா போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ள காரணம், அவர்களுடைய சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம்தான். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

‘சுற்றுச்சூழலை பாதிக்காமல் இந்த மாதிரியான மருந்துகளை உற்பத்தி செய்ய முடியாதா?’ என்று கேட்டால்... முடியும். ஆனால், அதற்கு மிக அதிகமாகச் செலவாகும். இதுதான் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் போன்ற மருந்துகளின் பின்னணியில் உள்ள சூழலியல் அரசியல். இதைப் புரிந்துகொண்டால்தான் நமது சூழலை நம்மால் பாதுகாக்க முடியும்.
-
------------------------------------------------------
-பூவலகு சுந்தர்ராஜன்
நன்றி- விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக