புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
4 Posts - 5%
Rutu
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
3 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
2 Posts - 2%
prajai
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
2 Posts - 2%
Jenila
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
2 Posts - 2%
viyasan
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_m10சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 11, 2020 5:15 pm

சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! 161414
0
சிறுவர் கதை: ஆபத்து… ஆபத்து…

சுந்தரவனத்தில் சிங்கம் நடந்து வருவதைப் பார்க்கவே
கம்பீரமாக இருக்கும். காட்டின் அரசனாக இருப்பதால்
மட்டுமின்றி, சிங்கத்தின் நல்ல குணத்துக்காகவே காட்டு
உயிரினங்கள் மதிப்பு வைத்திருந்தன.

அன்று சிங்கம், கரடியுடன் வன உலாவுக்குக் கிளம்பியது.
எதிரில் தென்படும் விலங்குகளையும் பறவைகளையும்
நலம் விசாரித்துக்கொண்டே சென்றது சிங்கம்.

அப்போது ஓர் ஆலமரத்தின் அடியில் நரிகள் சண்டை
போட்டுக்கொண்டிருந்தன.

“சண்டையை நிறுத்துங்கள். நம் வனத்தில் யாரும்
சண்டையிடக் கூடாது என்று சட்டம் இருக்கிறதே,
மறந்துட்டீங்களா? உங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை
என்றால், உங்களால் எப்படி மற்ற விலங்குகளுடன்
ஒற்றுமையாக இருக்க முடியும்?” என்று குரலில் கொஞ்சம்
கடுமையைக் காட்டியது சிங்கம்.

நரிகள் பயத்தில் அந்த இடத்தைவிட்டு ஓடின.

“மந்திரியாரே, இன்று மாலை அனைத்து விலங்குகளையும்
மலைமேட்டுக்கு வரச் சொல்லுங்கள்” என்றது சிங்கம்.

உடனே தகவல் தெரிவிக்கக் கிளம்பியது கரடி.

சூரியன் மறையும் மாலை நேரம். முயல், மான், புலி, நரி
என்று விலங்குகள் மலை மேட்டுக்கு வந்து சேர்ந்தன.

“அரசர் ஏன் நம்மைக் கூப்பிட்டிருக்கார்?
மாதத்துக்கு ஒரு முறைதானே கூப்பிடுவார்? என்ன விஷயம்?”
என்று விலங்குகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன.

சில நிமிடங்களில் சிங்கம் வந்து சேர்ந்தது.
“என் அருமை சுந்தரவனக் குடிமக்களே, மீண்டும் உங்களைச்
சந்திப்பதில் மகிழ்ச்சி. நமது சட்டங்களைச் சிலர் மீறிக்
கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒற்றர்கள் மூலமாகவும்,
இன்று நேரிலும் கண்டேன்.

இது நல்லதல்ல. யாரும் யாருடனும் சண்டை போடக் கூடாது.
ஒருவருடைய எல்லைக்குள் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது.

அரசாங்கம் வழங்கும் உணவைத் தவிர, தனியாக வேட்டையாடக்
கூடாது. அதன்படி வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களில்,
ஓநாய்க் கூட்டத்தினர் மட்டும் அடிக்கடி அருகில் உள்ள
சந்தனவனத்திலுள்ள மான் கூட்டத்தினரைத் தாக்குவதாகக்
கேள்விப்படுகிறேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 11, 2020 5:16 pm

நரிக்கூட்டத்தினரோ காடுகளை விட்டுவிட்டு, அருகிலுள்ள
கிராம மக்களிடம் இருக்கும் ஆடு, மாடுகளைக் கொன்று தின்று
கொண்டிருக்கின்றன.

இது அவர்களுக்கு மட்டுமல்ல, இந்தக் காட்டிலுள்ள அனைத்து
விலங்குகளுக்கும் ஆபத்தை உண்டாக்கும். இனி இப்படி ஒரு
சம்பவம் நடந்தால் அதற்கு ஏற்படும் இழப்புகளுக்கு நான்
பொறுப்பல்ல. எல்லோரும் கவனமாக நடந்துகொள்ளுங்கள்.
நீங்கள் அனைவரும் செல்லலாம்” என்று பேச்சை முடித்தது
சிங்கம்.

விலங்குகள் கலைந்து சென்றன. இரு நரிகள் மட்டும், “அரசர்
என்ன சொன்னாலும் கேட்கணுமா? அரசாங்க உணவைச்
சாப்பிடுவதில் சுவாரசியமே இல்லை. யாருக்கும் தெரியாமல்,
கிராமத்துக்குள் புகுந்து ஆடு, கோழி என்று சாப்பிடுவதில்
எவ்வளவு சுவாரசியம் இருக்கிறது என்று அரசருக்குத் தெரியாது”
என்று பேசிக்கொண்டன.

முன்னால் சென்றுகொண்டிருந்த நரிகளின் தலைவன்,
“அடப்பாவிகளா, நீங்க ரெண்டு பேரும் செய்யற வேலைதானா
இது? உங்களால எங்க எல்லாத்துக்கும் பிரச்சினை வரப் போகுது.
இதோட நிறுத்திக்குங்க. அரசர் கோபப்பட்டு நீங்க எல்லாம்
பார்த்ததில்லை. அப்புறம் யாராலும் உங்களைக் காப்பாத்த
முடியாது” என்று எச்சரிக்கை செய்தது.
-
சிறுவர் கதை: ஆபத்து…ஆபத்து! 26719804
“ஐயோ… தலைவரே, நாங்க அப்படி எல்லாம் செய்வோமா?”
என்று ஒரே குரலில் இரண்டு நரிகளும் பதில் சொல்லிவிட்டு
ஓடின.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 11, 2020 5:16 pm

அன்று அமாவசை. இரண்டு நரிகளும் கிராமத்துக்குள் நுழைந்தன.

“இதுதான் சரியான நேரம். நேத்து ஒரு ஆட்டைதான் அடிச்சி
சாப்பிட்டோம். இன்னிக்கி ஆளுக்கு ஒரு ஆட்டைச்
சாப்பிட்டுடணும் ” என்றது ஒரு நரி.

பெரிய ஆடு ஒன்றை இரண்டும் பிடிக்கப் போனபோது, முதுகில்
மூங்கில் கம்புகள் இடியாக இறங்கின. இரண்டும் சுதாரிப்பதற்குள்
பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. உயிர் பிழைத்தால் போதும்
என்று இரண்டும் ஓட முடியாமல் ஓடின.

ஐந்து பேர் தடிகளோடு நரிகளைத் துரத்திக்கொண்டே வந்தனர்.
கொஞ்சம் மெதுவாக ஓடினால் மாட்டிவிடுவோம் என்பதால்,
மூச்சை பிடித்துக்கொண்டு நரிகள் ஓடின.

அப்போது சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. ஓடிவந்தவர்கள்
சட்டென்று நின்றனர். பயத்தில் வந்த வழியே திரும்பி ஓட
ஆரம்பித்தனர். நரிகளுக்கு இப்போதுதான் உயிர் திரும்பிவந்தது.

“பெரியவங்க சொன்னதைக் கேட்காமல் இருந்ததுக்கு நல்ல
பாடம் படிச்சிட்டோம். இனி இப்படி ஒரு நாளும் செய்யக் கூடாது”
என்றது ஒரு நரி.

“உயிர் பிழைச்சதே பெரிய விஷயம். அரசர் மட்டும் வராமல்
இருந்திருந்தால் இந்நேரம் அவ்வளவுதான். காயம் சரியாக

ரெண்டு மாசம் ஆகும்” என்றது மற்றொரு நரி.
நன்றி

மோ. கணேசன்
மாயா பஜார் – இந்து தமிழ் திசை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக