புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
6 Posts - 1%
prajai
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 13, 2021 8:43 am

இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் 704399
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும்
உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை
நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக
பெறுவதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்து
காத்திருக்கின்றனர்.

நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில
ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து
வந்தாலும், உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை
குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே
உறுப்பு தானம் செய்யமுன் வருகின்றனர். இதனால்
போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல்
உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உடல் உறுப்பு தானம் குறித்து,திருச்சியைச் சேர்ந்த இதய
சிகிச்சைநிபுணரும், உறுப்பு தானத்தில்விழிப்புணர்வு
ஏற்படுத்தியதற்காக கின்னஸ் சாதனை படைத்தவருமான
டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி கூறியதாவது:
-
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் 16288141291138

உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டு
தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா,
அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி
ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று,
கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும்.

உயிரிழந்த ஒருவரிடமிருந்த கண்களை (கருவிழியை)
தானமாகப் பெற முடியும்.

அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண்,
இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு,
தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம்.
இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க
முடியும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 13, 2021 8:45 am

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும்
உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை
நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக
பெறுவதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்து
காத்திருக்கின்றனர்.

நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில
ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து
வந்தாலும், உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை
குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே
உறுப்பு தானம் செய்யமுன் வருகின்றனர். இதனால்
போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல்
உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உடல் உறுப்பு தானம் குறித்து,திருச்சியைச் சேர்ந்த இதய
சிகிச்சைநிபுணரும், உறுப்பு தானத்தில்விழிப்புணர்வு
ஏற்படுத்தியதற்காக கின்னஸ் சாதனை படைத்தவருமான
டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி கூறியதாவது:

உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டு
தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா,
அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி
ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று,
கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும்.

உயிரிழந்த ஒருவரிடமிருந்த கண்களை (கருவிழியை)
தானமாகப் பெற முடியும்.

அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண்,
இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு,
தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம்.
இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க
முடியும்.

பதிவு செய்வது எப்படி?

உடல் உறுப்பு தானம் செய்யவிருப்பம் உள்ளவர்கள் முதலில்
தனது விருப்பத்தை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும்.
பின்னர், தமிழக அரசின் www.tnos.org என்ற இணைய
தளத்தில் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையையும்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும்
பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்கள்
கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம்
இல்லை. தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது
மூளைச்சாவுஅடைந்தாலோ அவரது குடும்பத்தினர்களின்
அனுமதியுடன்தான் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

உறுப்பு தானத்தை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு
கடந்த2008-ல் உறுப்பு தானத் திட்டத்தைதொடங்கியது.
இத்திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் யாராவது
மூளைச் சாவு ஏற்பட்டு, அவரது உறுப்புகளை தானம்செய்ய
குடும்பத்தினர் முன்வந்தால், தமிழ்நாடு உடல் உறுப்புமாற்று
அறுவை சிகிச்சை ஆணையம் வழியாக முன்னுரிமை வரிசை
அடிப்படையில் தேவைப்படும் நோயாளிகளுக்கு, அவர்கள்
பதிவுசெய்த மருத்துவமனைக்கு வழங்கப்படும்.

இதில், மூளைச்சாவு அடைந்தவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை,
ஏதாவது ஒரு உறுப்பை மட்டும் (உறுப்பு மாற்று அறுவை
சிகிச்சைக்கு அனுமதி பெற்றிருந்தால்), அங்கு உறுப்பு தானம்
கேட்டு பதிவு செய்த ஒருவருக்கு வழங்க முடியும்.

நாட்டில் உடல் உறுப்புகளை தானமாக பெற 5 லட்சம் பேர் பதிவு
செய்து காத்திருக்கின்றனர். இதில்,ஆண்டுக்கு 2 லட்சம் பேர்
சிறுநீரகம் பெற காத்திருக்கும் நிலையில் 8 ஆயிரம் பேருக்கும்.

கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் பேர்
காத்திருக்கும் நிலையில் 1,700 பேருக்கும், 15 ஆயிரம் பேர் இதய
மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நிலையில்
250 பேருக்கும் மட்டுமே உறுப்புகள் கிடைக்கின்றன.

உறுப்பு தானம் தேவைப்படுபவர்களில் 90 சதவீதம்பேர்
தேவையான உறுப்பு கிடைக்காமலேயே உயிரிழக்கின்றனர்.

தமிழகம் தொடர்ந்து முன்னிலை


உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல
ஆண்டுகளாக தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக,
தமிழகத்தில் கடந்த 2008 முதல் 2020 வரை 1,393 பேரிடமிருந்து
7,831 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில்
இதுவரை சிறுநீரகத்துக்காக 6,158 பேரும், இதயத்துக்காக 28 பேரும்,
நுரையீரலுக்காக 39 பேரும், கல்லீரலுக்காக 418 பேரும் காத்திருப்பு
பட்டியலில் உள்ளனர்.

விழிப்புணர்வு வேண்டும்

உறுப்பு தான விழிப்புணர்வை அதிகரிக்க சமூகத்தில்
பிரபலமானவர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணி, பிரச்சாரம்
நடத்தலாம். மாணவ, மாணவிகளிடம் உறுதிமொழி ஏற்பு
நிகழ்ச்சிகளை நடத்தலாம். அரசு சார்பில் வழங்கப்படும் அடையாள
அட்டைகள், பேருந்து / ரயில் பயணச் சீட்டுகளில் உறுப்பு தானம்
குறித்து விழிப்புணர்வு வாசகங்களை இடம்பெறச் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

எனவே, முடிந்தவரை உடல் உறுப்புகளை மண்ணுக்குக்
கொடுக்காமல், மனிதர்கள் உயிர்வாழ கொடுப்போம்!

-பெ.ராஜ்குமார்
நன்றி-இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக