புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
42 Posts - 63%
heezulia
ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சியர்களே! ஆட்சியர்களே! நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jul 31, 2022 10:52 am

ஆட்சியர்களே! ஆட்சியர்களே!
நூல் ஆசிரியர் : தமிழறிஞர் இரா, இளங்குமரனார்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
திருவள்ளுவர் தவச்சாலை, திருவளர்குடி (அல்லூர்), திருச்சிராப்பள்ளி மாவட்டம்-620 101  பக்கங்கள் :  28 விலை : ரூ. 26

••••••

ஆட்சியர்களே! ஆட்சியர்களே! என்ற தலைப்பிலான அளவில் சிறிய நூல், ஆட்சியாளர்கள் அனைவருக்கும் புத்தி புகட்டும் விதமாக அறநெறி, தமிழ்நெறி அறிவுறுத்தும் விதமாக உரத்த சிந்தனையுடன். நெஞ்சுரத்துடன் தமிழறிஞர் இரா, இளங்குமரனார் எழுதியுள்ள இந்த நூல் மிகச்சிறந்த ஆவணமாகும். ஆட்சியாளர்கள், ஆட்சித்தலைவர்கள் படித்தால் திருந்துவார்கள், மனம் மாறுவார்கள்.

(1)    நாட்டுநல வித்து, (2) ஆட்சியர்களே! ஆட்சியர்களே!
(3) சாதிக்கட்சியரே! சாதிக்கட்சியரே! (4) மதத்தலைவர்களே! மதத்தலைவர்களே! (5) உழைப்பவர்களே! உழைப்பவர்களே!
(6) வேதியரே! வேதியரே! வாழிய நீவிர்! (7) முறைமன்ற நடுவர்களே! முறைமன்ற நடுவர்களே! (8) ஆங்கிலவழிக் கொடைவள்ளல்களே! ஆங்கிலவழிக் கொடைவள்ளல்களே! (9) பெற்றோர்களே! பெற்றோர்களே! (10) மாணவர்களே! மாணவர்களே! என பத்து தலைப்பிலான சிறிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.

இரண்டு முறை எழுதி இருப்பதால் தலைப்பே கவனம் ஈர்ப்பதாக உள்ளது. சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் மனிதநேயம் கற்பிக்கும் விதமாக சாதி, மத, வெறி மாய்க்கும் விதமாக அறிவுரை அல்ல, அல்ல, அறவுரை வழங்கி உள்ளார். சமூகத்தில் உள்ள சீர்கேடுகளை களைய என்ன செய்ய வேண்டும் என்பதற்கு தீர்வுகளும் எழுதி உள்ளார். பொக்சிசம் போன்றது இந்நூல்.

நூலிலிருந்து பதச்சோறாக சில வரிகள் மட்டும் உங்கள் சிந்தனைக்கு இதோ!

தேர்தல் செம்மையே ஆட்சி அடிப்படைச் செம்மை என்றால் தேர்தலில் கொள்ளப்படும் கரவு, ஊழல், வன்முறை, வெறி என்பவை ஆட்சி அரியணையில் ஏறும்போது எப்படி இருக்கும். மதுக்குடி, இலவசம், கையூட்டு, காட்சிப்படம், கட்சிவெறி, சாதிசமய வெறிகள் என்பவற்றால் சிந்தனையையும், உழைப்பையும், பண்பாட்டையும் கெடுப்பவர்கள் கட்சிக்கு வந்தால் ஆட்சி எப்படி இருக்கும்?

செம்மையான உழவுத்தொழில் போல அரசியலிலும் செம்மை நிலவ வேண்டும், தேர்தலில் ஊழல் நடப்பது முறையன்று என்று வலியுறுத்தி உள்ளார். வாக்களிக்க பணம் தந்ததாக புகார் வந்து தேர்தல் ஆணையமே தேர்தலை நிறுத்தி வைத்த மோசமான நிகழ்வு தமிழகத்தில் நடந்தது, தமிழகத்திற்கு தலைகுனிவு தான். தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும். மதுவால் விளையும் வன்முறையும் ஒழிய வேண்டும் என்று சமூக பொறுப்பணர்வுடன்  நல்ல பல கருத்துக்களை நூல் முழுவதும் எடுத்து இயம்பி உள்ளார்.

கேள்விகள் கேட்டு விடையாகவும் சுவைபட எழுதி உள்ளார், பாருங்கள்.

அரசு என்பது என்ன? எதற்காக அரசு? ஆளும் நாட்டின் மண்ணை, மண்ணின் மக்களை, மண்ணின் மொழியைக் காப்பது தானே அரசு! நெஞ்சிலே கைவைத்துச் சொல்லுங்கள், நாங்கள் செய்வது இறையாட்சியாம், ஆட்சி தான் என்று நெஞ்சமென ஒன்று இருந்தால் தானே கைவைத்துச் சொல்வீர்கள்!  ஆட்சிக்கட்டில் ஏறும்போதே அதனைக் கழற்றி வைத்துவிட்டுத் தானே அமர்ந்தீர்கள்!

தற்போது தமிழகத்தில் மனசாட்சியோடு ஓரளவிற்கு நல்லாட்சியே நடந்து வருகிறது, ஆனால் அய்யா கேட்டுள்ள கேள்விகள் ஒன்றிய அரசுக்குப் பொருந்துவதாக உள்ளன. மனசாட்சியின்றி, விலைவாசி ஏறுவதைக் கண்டுகொள்ளாமல் ஏழைகள் மேலும் ஏழையாவதையும் தனக்கு வேண்டிய சில பணக்காரர்கள் மட்டும் மேலும் கோடீசுவர்ர்கள் ஆவதற்கு உதவி, வேடிக்கைப் பார்த்து வருபவர்களுக்கு கேட்கப்பட கேள்விகளோவே தோன்றியது.

மீனின் சாதி, பறவைச் சாதி, விலங்கின் சாதி என மற்றை உயிர்ப்பிரிவுகளுக்குத் தானே இருந்தன, மாந்தருக்குள் குடி உண்டு, குலம் உண்டு, இனம் உண்டு, ஒன்றன் விரிவு ஒன்று. ஒரு குடும்பத்தார், ஒரு குடிப் பலகுடியர், ஒரு குலம், பல குலத்தார் ஓர் இனம்.

“குலமும் ஒன்றே, குடியும் ஒன்றே! இனமும் ஒன்றே! அவரவர் பழக்கத்திற்குத் தக்கப் பழகிய தொழில் செய்தனர். ஆனால் தொழில் பிரிவு உயர்வு, தாழ்வு கொண்டது அன்று”

என் சாதி பெரிது, உன் சாதி பெரிது என முட்டி மோதிக் கொள்ளும் - கொல்லும் சாதி வெறியர்களுக்கு புத்தி புகட்டும் விதமாக எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஓர் இனம் என்று திருமூலர் கூறிய கருத்தை, அறிஞர் அண்ணா வழிமொழிந்த கருத்தை நினைவூட்டும் விதமாக விளக்கி உள்ளார். சாதிச் சண்டைகள் இடுவது உயர்திணையான மனித இனத்திற்கு அழகு அல்ல என்பதை வலியுறுத்தி மாந்தநேயம் கற்பித்து உள்ளார்.

“மதங்கள், சமயங்கள், மார்க்கங்கள் எனத் தோன்றாப் பழங்காலம் பெருமை மிக்கது. அந்நிலையில் வாழவே சமயச் சான்றோர் வழிகாட்டினர். ஆனால் அருவிநீர் அகப்பட்ட கழிவுகளை எல்லாம் திரட்டியது போல் மாந்தர் சிறுமைத்தனத்தைச் சமய மதங்களில் ஏந்திக் கடவுள் பெயரால் செய்யக்கூடாக் கேடுகள் செய்கின்றனர் என்பது உண்மை விளக்கமாம்.”

பழங்காலத்தில் பெருமையோடு கொடிகட்டி வாழ்ந்த தமிழனுக்கு மதம், கடவுள் இல்லை என்ற உண்மையை உணர்த்தி உள்ளார். கீழடியில் கிடைத்த பொருட்களில் ஒன்று கூட கடவுள் மத குறியீடுகள் எதுவும் கிடைக்கவில்லை. முதல் மனிதன் தமிழன் வாழ்ந்தபோது சாதி, மதம், கடவுள் இல்லை என்பதே உண்மை. மதத்தின் பெயரில்  நடக்கும் மடமைகளைச் சாடி உள்ளார்.

“இந்திக்காரனைப் பாருங்கள் – வங்கத்தானைப் பாருங்கள் – அவ்வளவு வேண்டா – ஆந்திரன் – கருநாடகத்தான் – மலையாளத்தான் ஆகியோரையாவது பாருங்கள், உங்களைப் போல் பள்ளிக்குள் நுழையும் போதே சமுதாயக்கொலை புரியும் சண்டாளர்கள் உண்டோ?

அரசுப்பள்ளிகளில் மட்டும் வாழ்ந்த தமிழ்வழிக்கல்வி அருகி அங்கும் ஆங்கில வழிக்கல்வி பரவி விட்டது. தமிழர்களிடையே ஆங்கில வழிக் கல்வியில் பிள்ளைகளைப் படிக்க வைப்பதே பெருமை என்று கருதுகின்றனர். ஒருவித மனநோயாகப் பரவிவிட்டது. ஆரம்பக்கல்வி என்பது தாய்மொழிக் கல்வியாக தமிழ்வழிக் கல்வியாக இருந்தால் தான் குழந்தைகள் அறிவாளி ஆகும் என்பதை வலியுறுத்தியது சிறப்பு.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக