புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
62 Posts - 57%
heezulia
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
104 Posts - 59%
heezulia
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஆழ்வார் ஆயிரம்! Poll_c10ஆழ்வார் ஆயிரம்! Poll_m10ஆழ்வார் ஆயிரம்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்வார் ஆயிரம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 2:53 am

ஆழ்வார் ஆயிரம்! Temple1

ஸ்ரீவைஷ்​ணவ சம்​பி​ர​தாய குரு பரம்​பரை பெரிய பெரு​மா​ளான அரங்​கன்,​​ பெரிய பிராட்​டி​யான தாயாரி​லி​ருந்து ஆரம்​பித்து வழி வழி​யாக நாத​மு​னி​கள்,​​ ஆள​வந்​தார்,​​ ராமா​னு​ஜர் என்று வளர்ந்து மண​வாள மாமு​னி​க​ளு​டன் நிறைவு பெறு​கி​றது.​ மேற்​படி குரு​ப​ரம்​ப​ரை​யில் பக​வத் ராமா​னு​ஜ​ரின் முதல் சீட​ராக விளங்​கி​ய​வர் கூரத்​தாழ்​வார்.​ அவர் அவ​த​ரித்த ஆயி​ர​மா​வது ஜயந்தி உற்​ச​வம் நெருங்​கும் இவ்​வே​ளை​யில்,​​ அம்​ம​கா​னைப் பற்றி இங்கு காண்​போம்.​

கூரத்​தாழ்​வார்,​​ காஞ்​சி​பு​ரத்​திற்கு அரு​கில் அமைந்​துள்ள "கூரம்' என்ற சிறு கிரா​மத்​தில்,​​ கலி​யு​கம் 4180 ஆண்டு ​(செüம்ய வரு​டம்)​ தை மாதம் ஹஸ்த நட்​சத்​தி​ரத்​தில் அவ​த​ரித்​தார்.​ இவ​ருக்கு பெற்​றோர்​கள் இட்ட பெயர் "திரு​மறு மார்​பன்' என்​ப​தா​கும்.​

தக்க காலத்​தில் தகுந்த சாஸ்​தி​ரங்​க​ளில் தேர்ச்சி பெற்ற இவ​ருக்கு திரு​ம​ணம் செய்து வைக்க பெற்​றோர்​கள் முயற்​சித்​த​னர்.​ அப்​போது,​​ தான் பிரம்​ம​ச​ரி​யத்​தைக் கடை​பி​டிக்​கப் போவ​தா​கச் சொல்லி மறுத்​து​விட்​டார் திரு​மறு மார்​பன்.​ மேலும் காஞ்​சிப் பேர​ரு​ளா​ள​னுக்கு ​(வர​த​ரா​ஜப் பெரு​மாள்)​ ஆல​வட்​டக் ​(விசிறி வீசு​தல்)​ கைங்​கர்​யம் செய்து கொண்​டி​ருந்த திருக்​கச்சி நம்​பி​க​ளின் அபி​மா​னத்​தைப் பெற்று வைண​வத்​தில் ஈடு​பட்டு வாழப் போவ​தா​க​வும் கூறி​னார்.​ உடனே இவ​ரது பெற்​றோர்​கள் கூரம் நாட்​டுப் பத​வியை இவ​ரி​டம் ஒப்​ப​டைத்​து​விட்டு திருப்​பதி சென்று வாழத்​தொ​டங்​கி​னர்.​

அர​ச​னா​கிய திரு​மறு மார்​பன்,​​ நள்​ளி​ர​வில் வழக்​க​மாக நகர சோத​னைக்​குச் சென்​றார்.​ அப்​போது ஓர் இரவு,​​ அந்​த​ணர் ஒரு​வர் வீட்​டில் சிலர் உரக்க வாதா​டிக் கொண்​டி​ருப்​ப​தைக் கேட்​டார்.​ அவ்​வீட்​ட​ரு​கில் நின்று காது கொடுத்​துக் கேட்டு விஷ​யங்​களை அறிந்​தார்.​ அதன்​படி அந்​தக் குடும்​பத்​தில் திரு​மண வய​தில் ஒரு பெண் இருப்​ப​தை​யும்,​​ ஆனால் ஜோதி​டர்​க​ளின் கருத்​துப்​படி அவ​ளுக்கு திரு​ம​ணம் செய்து வைத்​தால் மண​ம​க​னுக்கு உடன் மர​ணம் ஏற்​ப​டும்;​ இவ​ளும் வித​வை​யா​கி​வி​டு​வாள் என்​பது பற்​றி​யும் அவ்​வீட்​டி​னர் விவா​தித்​துக் கொண்​டி​ருந்​தது,​​ அர​ச​ரின் காது​க​ளில் விழுந்​தது.​

மறு​நாள் அக்​கு​டும்​பத்​தி​னரை தன் அவைக்கு அழைத்​தார் திரு​மறு மார்​பன்.​ அவர்​க​ளின் மகளை தானே மணம் முடிக்​கச் சித்​த​மா​யி​ருப்​ப​தா​கக் கூறி​னார்.​ இருந்த போதி​லும் தங்​க​ளுக்​குள் தாம்​பத்ய உறவு இருக்​காது என்று கூறி,​​ "ஆண்​டாள்' என்ற பெய​ரு​டைய அந்​தப் பெண்​ணைக் கல்​யா​ணம் செய்து கொண்​டார்.​ தான் அளித்த வாக்​கு​று​திப்​படி,​​ பிரம்​ம​ச​ரிய நெறி தவ​றா​மல் வாழ்ந்​தார்.​ ​

அர​சுப் பத​வி​யும்,​​ உயர்ந்த செல்​வ​மும் நிறைந்து விளங்​கிய போதி​லும் ஓர் துற​வி​யா​கவே வாழ்ந்​தார் திரு​மறு மார்​பன்.​ தன் செல்​வங்​க​ளை​யெல்​லாம் ஏழை எளி​யோர்​க​ளுக்கு அள்​ளித் தந்​தார்.​

தின​மும் இவ​ரின் அரண்​மனை வாயிற் கத​வு​கள்,​​ காஞ்சி வர​த​ரா​ஜப் பெரு​மா​ளின் அர்த்த ஜாம​பூஜை முடிந்​த​வு​டன்​தான் மூடப்​ப​டும்.​ ​ ஒரு நாள் தற்​செ​ய​லாக தன் அரண்​மனை வாயிற்​க​த​வு​கள் மூடப்​பட்ட பின் காஞ்​சிப் பெரு​மா​னின் திருக்​கோ​யில் வாயிற் கத​வு​கள் மூடப்​பட்ட ஓசையை மன்​னர் கேட்​டார்.​ உடனே,​​ "ஏதோ தவறு நேர்ந்​து​விட்​டது என்று வருந்​தி​னார்.​

அதே சம​யம் காஞ்​சி​யில் வர​த​ரா​ஜப் பெரு​மா​னுக்கு கூரத்​தில் அரண்​ம​னைக் கதவு மூடப்​ப​டும் ஓசை கேட்க,​​ அவர் தம்​மி​டம் அள​வ​ளா​விக் கொண்​டி​ருந்த திருக்​கச்சி நம்​பி​க​ளி​டம்,​​ "அது என்ன ஓசை?​' என்று கேட்​டார்.​

நம்​பி​க​ளும் திரு​மறு மார்​ப​னின் அரண்​மனை வாயிற்​க​த​வு​கள் மூடப்​பட்ட சத்​தம் ​(அரண்​மனை வாயிற்​க​த​வு​க​ளில் பெரிய வெங்​கல மணி​கள் கட்​டப்​பட்​டி​ருக்​கும்)​ என்று கூறி,​​ திரு​மறு மார்​ப​னின் சிறப்​பி​யல்​பு​களை வர்​ணித்​தார்.​ உடனே வர​த​ரா​ஜப் பெரு​மாள்,​​ "ஆழ்​வா​னின் செல்​வமோ நம்மை வியக்க வைத்​தது?​' என்று கேட்​டா​ராம்.​

இதை​ய​றிந்த ​ திரு​ம​று​மார்​பன்,​​ தம் செல்​வங்​க​ளை​யெல்​லாம் அனை​வ​ருக்​கும் வாரி வழங்​கி​னார்;​ "இனி வைணவ நெறிப்​படி வாழ்​வே​னே​யன்றி அர​ச​னாக இருக்​க​மாட்​டேன்' என்று கூறி​னார்.​ தன் மனை​வி​யு​டன் காஞ்சி நோக்கி நடைப் பய​ண​மாக இரவு வேளை​யில் கிளம்​பி​னார்.​ அவர் மனைவி,​​ "வழி​யில் கள்​ளர் பயம் உள்​ளதோ?​' எனக் கேட்​டாள்.​ அவள் அப்​ப​டிக் கேட்​ட​தற்​கான கார​ணத்தை விசா​ரித்​தார் ​ திரு​மறு மார்​பன்.​ அப்​போது ஆண்​டாள்,​​ "என் மடி​யில் உமது ​ உப​யோ​கத்​திற்​காக தங்க வட்​டில் ஒன்றை எடுத்து வந்​துள்​ளேன்' என்று கூறி​னாள்.​ இது கேட்ட திரு​மறு மார்​பன்,​​ அந்​தத் தங்​கப் பாத்​தி​ரத்​தினை வாங்கி தூரத்​தில் வீசி எறிந்​தார்.​ பின் மனை​வி​யி​டம் "மடி​யில் கனம் இருந்​தால்​தானே வழி​யில் பயம்?​' என்று கூறி,​​ பய​ணத்​தைத் தொடர்ந்து,​​ காஞ்​சி​பு​ரத்தை அடைந்​தார்.​ ​

விடிந்​த​தும்,​​ அங்​கி​ருந்த ராமா​னு​ஜரை சர​ண​டைந்​தார்.​ அவ​ரும் இவரை ஏற்று,​​ "கூரத்து ஆழ்​வார்' என்று புதுப்​பெ​யர் சூட்டி,​​ தம் சீட​ராக ஏற்​றுக் கொண்​டார்.​ ​(அது முதல்​தான் இவர் "கூரத்​தாழ்​வார்' என்று அழைக்​கப்​ப​டு​கி​றார்.)​

அதே காலத்​தில் முத​லி​யாண்​டான் என்​பா​ரும் ராமா​னு​ஜரை ஸர​ண​டைந்து சீட​ரா​னார்.​ ​

பின்​னர் ஸ்ரீரங்​கம் சென்​றார் கூரத்​தாழ்​வார்.​ அங்கே ஒரு நாள் உண்ண உண​வே​தும் கிடைக்​கா​த​தால் பசி​யால் களைப்​பு​டன் இருந்​தார்.​ இத​னால் அவர் மனைவி ஆண்​டாள் வருந்தி,​​ ஸ்ரீரங்​க​நா​தனை மன​மு​ருக வேண்​டி​னாள்.​

"உன் தொண்​டன் பசி​யோடு இருக்​கும்​போது நீர் அருள் செய்​யா​மல் இருப்​ப​தேன்?​' என்று மன​துக்​குள் நினைத்​தாள்.​ அந்​தச் சம​யம் அரங்​க​னுக்கு இரவு பூஜை மணி அடித்​தது.​ ஆண்​டா​ளின் வருத்​தத்தை அறிந்த அரங்​கன்,​​ அர்ச்​ச​கர்​கள் மூலம் தான் அமுது செய்த பிர​சா​தங்​களை ஆழ்​வா​ரின் இல்​லத்​துக்கு அனுப்பி வைத்​தார்.​ பிர​சா​தங்​களை எடுத்து வந்த அர்ச்​ச​கர்​க​ளைக் கண்டு ஆழ்​வார்,​​ நடந்​ததை ஊகித்​த​றிந்​தார்.​ ஆண்​டா​ளி​டம்,​​ "நீ அரங்​க​னி​டம் குறைப்​பட்​டுக் கொண்​டாயா?​' என்று கோபித்​துக் கொண்​டார்.​

அந்த அளவு,​​ இறை​வ​னி​டம்​கூட எதை​யும் யாசித்​துப் பெறக் கூடாது என்​றெண்​ணிய திட பக்​தர் கூரத்​தாழ்​வார்.

அரங்​க​னின் அரு​ளால் ஆழ்​வா​ருக்கு இரண்டு பிள்​ளை​கள் அவ​த​ரித்​தார்​கள்.​ அவர்​களே வேத வியாச பட்​டர் மற்​றும் பரா​சர பட்​டர் என்று பிற்​கா​லத்​தில் பிர​ப​ல​மாக விளங்​கி​னார்​கள்.​

ஒரு சம​யம் கிருமி கண்​ட​சோழ மன்​ன​ரால் ராமா​னு​ஜ​ருக்கு உயி​ரா​பத்து ஏற்​பட்​டது.​ அப்​போது கூரத்​தாழ்​வா​ரும்,​​ பெரிய நம்​பி​க​ளும் ​(இவர் ராமா​னு​ஜ​ரின் ஆசார்​யர்​க​ளில் ஒரு​வர்)​ சோழ​னி​டம் சென்று,​​ "நாரா​ய​ணனே உயர்ந்த தெய்​வம்' என்று வாதிட்​டார்​கள்.​ ராமா​னு​ஜ​ரைக் காக்க வேண்டி அவ​ரின் காவி உடை​யை​யும்,​​ முக்​கோ​லை​யும் தானே தரித்து மன்​னர் சபைக்​குச் சென்ற கூரத்​தாழ்​வாரை ராமா​னு​ஜரே என்று நினைத்​தார் சோழ மன்​னர்;​ அவ​ரு​டைய கண்​க​ளைப் பிடுங்​கி​விட உத்​த​ர​விட்​டான்.​ ஆனால் கூரத்​தாழ்​வாரோ,​​ "உன்​னைப் போன்ற பாவி​க​ளைக் காணா​மல் இருப்​பதே மேல்' என்று தன் கண்​களை தாமே பிடுங்​கிக் கொண்​டார்.​ பெரிய நம்​பி​க​ளும் அப்​ப​டியே செய்​தார்.​ ​

பிறகு திரு​மா​லி​ருஞ்​சோலை சென்​ற​டைந்து அங்கே சில காலம் வசித்​தார் கூரத்​தாழ்​வார்.​ முன்​ன​தாக கூரத்​தாழ்​வார் சொல்​படி ராமா​னு​ஜர் மேலக்​கோட்​டைக்​குச் சென்று 12 ஆண்டு காலம் வசித்​தார்;​ அங்கு திரு​நா​ரா​ய​ண​னுக்கு கோயில் கட்டி வைண​வம் வளர்த்​தார்.​

சுமார் 12 வரு​டங்​கள் கழித்து ராமா​னு​ஜ​ரும்,​​ கூரத்​தாழ்​வா​ரும் காஞ்​சி​யில் சந்​தித்​துக் கொண்​டார்​கள்.​ கூரத்​தாழ்​வா​ரின் பார்​வை​யற்ற நிலை​ய​றிந்த ராமா​னு​ஜர்,​​ காஞ்சி வர​த​ரா​ஜப் பெரு​மாள் அரு​ளால் கூரத்​தாழ்​வா​ருக்கு மீண்​டும் கண்​கள் கிடைக்​கும்​படி செய்​தார்.​

கூரத்​தாழ்​வா​ரு​டைய உத​வி​யில்​லா​மல் போனால் ராமா​னு​ஜர்,​​ ஸ்ரீபாஷ்​யத்​திற்கு சிறப்​பான பொருளை எழு​தி​யி​ருக்க முடி​யாது.​

பின்​னாட்​க​ளில் அரங்​க​னி​டம் முக்​திப் பேறைத் தரு​மாறு வேண்​டி​னார் கூரத்​தாழ்​வார்.​ பெரு​மா​ளும் ஒப்​புக் கொண்​டார்.​ ​ இதை​ய​றிந்த ராமா​னு​ஜர்,​​ "ஏன் இப்​ப​டிச் செய்​தீர்?​ எனக்கு முன்​பாக நீர் முக்தி அடைந்​து​விட்​டால் நான் எப்​படி வாழ்​வது?​' என்று கூரத்​தாழ்​வா​ரி​டம் ​ வருத்​தப்​பட்​டார்.​

ஆழ்​வாரோ,​​ "உங்​க​ளுக்கு முன்​னால் வைகுண்​டப் பதவி பெற்று,​​ நீங்​கள் பிறகு வரும்​போது அங்கே உங்​களை எதிர்​கொண்​ட​ழைக்​கும் பாக்​கி​யம் எனக்​குக் ​ கிடைக்​குமே' என்று கூறி ராமா​னு​ஜரை சமா​தா​னப்​ப​டுத்​தி​னார்.​ அது போலவே ஆழ்​வார் சீக்​கி​ரமே பர​ம​ப​தம் அடைந்​தார்.​ ராமா​னு​ஜர் நில உல​கில் 120 ஆண்​டு​கள் வாழ்ந்​தி​ருந்​தார்.​

கூரத்​தாழ்​வார்,​​ "பஞ்ச ஸ்த​வம்' என்ற நூலை அரு​ளிச் செய்​துள்​ளார்.​ இவ்​வ​ரு​டம் இவ​ருக்கு ஆயி​ர​மா​வது ஆண்​டாக அமை​கி​றது.​ ​(3.2.2010).​

கூரத்​தாழ்​வா​ரின் அவ​தா​ரத் தல​மான கூரம்,​​ காஞ்​சியி​லி​ருந்து சுமார் 8 கி.மீ.​ தொலை​வில் அமைந்​துள்​ளது.​ இவ​ரின் ஆயி​ர​மா​வது அவ​தா​ரப் பெரு​விழா,​​ அத்​த​லத்​தி​லும் மற்​றைய திரு​மால் தலங்​க​ளி​லும் சிறப்​பா​கக் கொண்​டா​டப்​ப​ட​வுள்​ளது.​ அன்​பர்​கள் அவ​சி​யம் இவ்​வை​ப​வங்​க​ளில் கலந்து கொண்டு குரு​வ​ருள் பெற வேண்​டும்



ஆழ்வார் ஆயிரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக