by heezulia Today at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam |
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
ஜனநாயகத்தின் தோல்வி! - ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்
“தமிழ்நாடுதான் மக்களாட்சியின் தொட்டில். சோழர் காலத்திலேயே இங்கே குடவோலை முறை நடைமுறையில் இருந்தது'' என்றெல்லாம் நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், அந்தப் பெருமைக்குச் சொந்தம் கொண்டாடும் தகுதி நமக்கு இருக்கிறதா என்கிற கேள்வியை ஒவ்வொரு இடைத்தேர்தலும் நம் முன் எழுப்புகிறது. இப்போது தமிழகத்தின் அடையாளமாக ‘திராவிட மாடல்’ என்கிற ஒன்றை முன்னிலைப்படுத்தும் தி.மு.க-வுக்கு, இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைத்து ஜெயிப்பது எப்படி என்பதற்கான ‘திருமங்கலம் பார்முலா'வை உருவாக்கிய பெருமையும் உண்டு. அதையே மிஞ்சிவிட்டது, நடந்து முடிந்திருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்.
இந்த ‘ஈரோடு கிழக்கு பார்முலா', இனி இடைத்தேர்தல்களை வெல்வதற்கான புதிய வழிமுறையாக மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடும். கால்நடைகளை அடைத்து வைப்பதுபோல ஓரிடத்தில் வாக்காளர்களை நாள் முழுக்க அடைத்துவைத்து, அவர்களுக்கு வேளா வேளைக்கு உணவு கொடுத்து, திரைப்படம் காட்டி, உட்கார்ந்திருந்ததற்குக் கூலியாகப் பணமும் கொடுத்து அனுப்புவது அதிர்ச்சி தரும் நடைமுறை. இடைத்தேர்தல் பணிகள் தொடங்கியதிலிருந்து தினம் தினம் இது நடந்தது. ஆளும் தி.மு.க-வினர் இதைச் செய்ததைத் தாண்டி, 50 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்று நியமித்துப் பணத்தையும் பரிசுப் பொருள்களையும் அள்ளி இறைத்துள்ளனர். எவர்சில்வர் குடம், குக்கர், வெள்ளிக் கொலுசு, ஸ்மார்ட் வாட்ச், வேட்டி, புடவை, ஜவுளிக்கடை கூப்பன் என்று பரிசுப்பொருள்கள் வாக்காளர்களிடம் குவிக்கப்பட்டன. அதுமட்டுமல்ல, வாக்காளர்களை மொத்தமாக வாகனத்தில் ஏற்றிச் சுற்றுலாவும் அழைத்துப் போனார்கள்.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும் கொஞ்சமும் சளைக்கவில்லை. ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், அரிசி மூட்டை, எவர்சில்வர் பாத்திரங்கள், விளக்கு என்று அவர்களும் தங்கள் பங்கிற்குப் பரிசுகளைக் கொடுத்தனர். கூடவே விருந்து உபசரிப்புகளும் பணமும் விளையாடின.
இந்த இடைத்தேர்தல் முடிவால் சட்டசபையில் எந்த ஒரு கட்சிக்கும் பெரிதாக பலம் கூடவோ குறையவோ போவதில்லை. ஆனாலும் அமைச்சர்கள் பலரும் தங்கள் பணிகளைத் தள்ளி வைத்துவிட்டு ஈரோட்டிலேயே முகாமிட்டுத் தேர்தல் வேலைகளைப் பார்த்தார்கள். அ.தி.மு.க சார்பிலும் பெரும் படையே அங்கு களமிறங்கியிருந்தது. எடப்பாடி பழனிசாமி, ‘ஆம்பளையா இருந்தா...' என்று ஆணாதிக்கச் சவால்களை அள்ளிவிட்டார். ‘தி.மு.க எங்களைப் பார்த்து பயந்துவிட்டது’ என்று அவர் சொல்ல, முதல்வர் ஸ்டாலின் ‘பெண்களுக்கான உரிமைத்தொகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்' என ஆசைவார்த்தை காட்டினார்.
இந்த இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகளும் செலவிட்டிருக்கும் பணம் எத்தனை கோடிகள் இருக்கும் என்பதைக் கணக்கிட்டால் மயக்கமே வந்துவிடும்.
இப்படி பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் கொடுப்பது பற்றித் தேர்தல் ஆணையத்துக்குப் பல புகார்கள் சென்றன. ஆனால், தேர்தல் ஆணையம் அமைத்த பறக்கும் படையினர் வெறும் மௌன சாட்சிகளாகவே இருந்தனர். வாக்குரிமை இப்படிக் கூறுபோட்டு வாங்கப்பட்டதை வெறுமனே வேடிக்கை பார்க்கும் பார்வையாளராக மட்டுமே இருந்தார்கள், தேர்தல் பார்வையாளர்கள் என்பவர்கள். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை அம்பலப்பட்டுப்போயிருக்கிறது.
இந்தத் தேர்தலில் வெல்பவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஜனநாயகம் படுமோசமாகத் தோற்றுவிட்டது.
விவாதம் தேவை! | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்த தலையங்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் முடிவு எதிா்பாா்த்தது போலவே அமைந்திருக்கிறது. திமுக கூட்டணியின் சாா்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக-வின் கே.எஸ். தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றிருக்கிறாா். நாம் தமிழா் கட்சி, தேமுதிக வேட்பாளா்கள் உள்ளிட்ட ஏனைய 75 வேட்பாளா்களும் தங்களது வைப்புத் தொகையை இழந்திருக்கிறாா்கள்.
மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தோ்தல் என்பதால் ஈரோடு கிழக்குத் தொகுதி முக்கியத்துவம் பெற்றது. அதுமட்டுமல்ல, இளம் வயதில் அகால மரணமடைந்த திருமகன் ஈ.வெ.ரா, தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்ததால் ஏற்பட்ட அனுதாபமும் ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலை அனைவரும் கூா்ந்து கவனிக்கக் காரணமாக அமைந்தது.
சட்டப்பேரவை உறுப்பினா், மக்களவை உறுப்பினா், மத்திய இணையமைச்சா், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் என பல்வேறு பொறுப்புகளை வகித்த ஆளுமையான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. தமிழக சட்டப்பேரவையில் அவா் போன்ற அனுபவசாலிகள் இடம் பெறுவதால், அவை நடவடிக்கைகளின் தரம் மேலும் உயரக்கூடும்.
தமிழக சட்டப்பேரவைக்கு மட்டுமல்லாமல், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சிக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றி மிகப் பெரிய வலு சோ்க்கும். விரைவிலேயே அவா் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கலாம். ஆளுமை மிக்க, காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த ஒருவரின் தலைமையில் இயங்கும்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
43,923 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கும் அதிமுக வேட்பாளா் கே.எஸ். தென்னரசு தோல்வி அடைந்தாா் என்பதைவிட அதிமுகவின் அடிப்படை வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டாா் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். இரட்டை இலைச் சின்னம் ஈ.பி.எஸ். பிரிவுக்கு வழங்கப்பட்டதும், முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக உச்சநீதிமன்றம் அங்கீகரித்துத் தீா்ப்பு வழங்கியதும் அதிமுகவின் வாக்கு வங்கியை நிலைநிறுத்தி இருக்கின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காட்டாற்று வெள்ளம்போல பணம் விளையாடியது; வாக்காளா்களைக் காப்பதற்காகப் புதுப்புது உத்திகள் கையாளப்பட்டன; அத்தனை அமைச்சா்களும், ஆளும் கட்சி பிரமுகா்களும் தொகுதியில் முகாமிட்டுத் திட்டமிட்ட பிரசாரத்தில் இறங்கினாா்கள் - இது போன்ற குற்றச்சாட்டுகள் இடைத்தோ்தலுக்கு இடைத்தோ்தல் அதிகரித்து வருகின்றன என்பதை மறுக்க இயலவில்லை. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல.
கடந்த 30 ஆண்டுகளாக தோ்தல் என்பதே வேட்பாளா்கள் சாா்ந்ததாக அல்லாமல் கட்சி சாா்ந்ததாகவும், இன்னும் சொல்லப்போனால் தலைவா்கள் சாா்ந்ததாகவும் தமிழகத்தில் மாறிவிட்டன. பொதுத் தோ்தலில் மட்டுமல்ல, இடைத்தோ்தலில் வெற்றி பெறுவதையும் அவா்கள் தங்களது தலைமைக்கான கௌரவ பிரச்னையாகக் கருதத் தொடங்கிவிட்டனா். ஆட்சி குறித்த மக்களின் மனநிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு என்பது போய், தங்களது ஆட்சியின் மக்கள் செல்வாக்கை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக இடைத்தோ்தல்களை ஆளும் கட்சிகள் மாற்றிவிட்டன.
1980 முதல் நடந்த 44 இடைத்தோ்தல்களில் எட்டு முறைதான் எதிா்க்கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற்றிருக்கிறாா்கள். 1963-இல் திருவண்ணாமலை தொகுதியில் ப.உ. சண்முகம் (திமுக), 1974-இல் அரங்கநாயகம் (அதிமுக) பெற்ற இடைத்தோ்தல் வெற்றிகள், ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையை எடுத்துக் காட்டின.
1984-இல் எம்.ஜி.ஆா். முதலமைச்சராக இருந்தபோது, அண்ணாநகா், மயிலாடுதுறை தொகுதிகளில் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவியது. 1989-இல் திமுக ஆட்சியைக் கைப்பற்றிய சில மாதங்களில் நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு இடைத்தோ்தல்களில் ஒன்றுபட்ட அதிமுக இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது இன்னொரு விதிவிலக்கு. அதேபோல, 2005-இல் மங்களூா் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற்றதையும், டி.டி.வி. தினகரன் வெற்றியடைந்த ஆா்.கே. நகா் இடைத்தோ்தலையும் சோ்த்துக் கொள்ளலாம்.
இவை போன்ற விதிவிலக்குகள் அல்லாமல், பெரும்பாலான இடைத்தோ்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுவதுதான் வழக்கம். சமீப காலமாக, வெற்றி நிச்சயம் என்று தெரிந்தாலும், வாக்கு வித்தியாசம் அதைவிட முக்கியம் என்று ஆளுங்கட்சிகள் செயல்படத் தொடங்கி இருப்பதால்தான், இந்த அளவுக்கு அமைச்சா்களே களமிறங்கி வேலை செய்யும் நிலையும், வாக்காளா்களைக் கவா்வதற்குப் பணமும், பொருள்களும் வழங்கும் விபரீதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
இடைத்தோ்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற ஆளும் கட்சி, அடுத்து நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலிலோ, மக்களவைத் தோ்தலிலோ படுதோல்வி அடைந்த நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. இடைத்தோ்தல்கள் வாக்காளா்களின் மனநிலையை பிரதிபலிப்பவையாக இல்லை. அதேபோல, இடைத்தோ்தல் முடிவுகளால், ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதும் கிடையாது.
அதனால் முறைகேடுகளுக்குக் களம் ஏற்படுத்திக் கொடுக்கும் இடைத்தோ்தல்கள் தேவைதானா? இது குறித்த பொது விவாதம் தேவை.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|