புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
48 Posts - 45%
heezulia
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
3 Posts - 3%
jairam
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
2 Posts - 2%
சிவா
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
1 Post - 1%
Manimegala
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
14 Posts - 4%
prajai
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
6 Posts - 2%
jairam
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
3 Posts - 1%
Rutu
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_m10வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளலார் - சனாதனியா, இல்லையா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 03, 2023 5:43 pm

உதயநிதி, தன் 'சனாதன ஒழிப்பு மாநாடு' வெறுப்புப் பேச்சின்போது வள்ளலாரைப் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். வள்ளலார் 200-வது ஜெயந்தி விழாவின் பகுதியாக, நேற்று இரு நாள் மெய்யியல் கருத்தரங்கு, சென்னை பெரம்பூரில் தொடங்கியது. அந்நிகழ்வின் தொடக்க விழாவில் பங்கு கொண்டு, நான் பேசிய பேச்சின் எழுத்துவடிவம் இது. நிகழ்ச்சியின் வீடியோ சுட்டி கிடைத்ததும் பகிர்கிறேன்.

===

வள்ளலார் - சனாதனியா, இல்லையா?

தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி அவர்கள், ஜூன் 21, 2023 அன்று, வடலூரில் வள்ளலார் 200வது ஜயந்தி உற்சவத்தில் கலந்துகொண்டு, “வள்ளலார் பெருமான் சநாதன தர்மத்தின் ஆகச்சிறந்த தலைமகன்களில் ஒருவர்” என்று பேசினார்.

அவ்வளவுதான். பலரும் கொதித்து எழுந்துவிட்டனர்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், ‘சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும் சநாதன தர்மத்துக்குமான அடிப்படை வித்தியாசங்கள் தெரியாதவர் ஆர்.என்.ரவி’ என்று சாடினார். ‘ஆளுநர், வள்ளலாரின் கருத்துகளைத் திரிக்கிறார். அவரைச் சநாதன தரமத்துக்குள் அடைக்கப் பார்க்கிறார்’ என்றார்.

இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களும், ஆளுநர் வள்ளலாரை சநாதனத்துக்குள் அடைக்கப் பார்ப்பதாகவும் ஆளுநருக்கு வள்ளலார் குறித்து எதுவும் தெரியவில்லை என்பதாகவும் பேசினார்.

அடுத்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன். ‘வள்ளலார் வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எதிரானவர்’ என்றும் ‘வள்ளலாரும் திருவள்ளுவரும் சநாதன தர்மத்தை ஓட ஓடத் துரத்தியவர்கள்’ என்றும் கருத்து உதிர்த்தார்.

அடுத்து வீரமணி அவர்கள், ‘வெள்ளுடை அணிந்த வள்ளலாரை காவியுடை அணிந்த சநாதனியாக ஆக்கப் பார்க்கிறார்கள்’ என்றார்.

இதையடுத்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நான் கலந்துகொண்டு பேசினேன். எவ்வாறு திமுக தலைமையிலான தமிழக அரசு வள்ளலாரை அபகரித்து, அவர் நெற்றியில் பூசியிருக்கும் திருநீறை அழித்து, அவரது கருத்துகளைத் திரிக்கப் பார்க்கிறது என்று குறை சொன்னேன். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஓய்வுபெற்ற பேராசிரியர் வீ. அரசு, வள்ளலார் முதல் ஐந்து திருமுறைகள் எழுதியபின், தன் கருத்தில் மாற்றம் அடைந்து ஆறாவதாக ஒரு திருமுறை எழுதினார்; அதில் முற்றிலும் மாறான கருத்துகளைச் சொன்னார். அதனால் அவர் வாழும் காலத்தில் இந்த ஆறாம் திருமுறை பதிப்பிக்கப்படவே இல்லை; அவர் உயிர் துறந்தபின்னரே பதிப்பிக்கப்பட்டது என்றார்.

பேராசிரியர் அரசும் தற்போதைய தமிழக அரசும் வள்ளலாரைச் சரியாகப் புரிந்துகொண்டார்களா அல்லது கவர்னர் ரவிதான் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறாரா என்பதை இந்த இரண்டு நாள் கருத்தரங்குதான் தீர்மானிக்கவேண்டும்.

நான் அறிந்தவரையில் வள்ளலார் முழுவதுமாக இந்து மதத்தின் வரையறைக்குள்தான் வாழ்ந்தார், போதித்தார். நம் அனைவரையும் பொருத்தவரை சநாதனம் என்பது இந்து மதமே. இந்து என்ற பெயரை யார் வைத்தார்கள், அதன் பொருள் என்ன போன்ற விவாதங்கள் இங்கே தேவையற்றவை. அந்நியர்கள் நம் மதங்களுக்கென்று ஒரு பெயரை வைப்பார்கள். நாம் அதற்கு இன்னொரு பெயரை வைத்திருப்போம். இரண்டும் ஒன்று என்பதை விஷயம் தெரிந்தவர்கள் சட்டென்று சொல்லிவிடுவார்கள்.

இந்து மதம் எனும் சநாதன தர்மத்தின் அடிப்படை என்பது சாதியும் வர்ணாஸ்ரமுமா? நிச்சயமாகக் கிடையாது. இந்து மதத்தில் வர்ணாஸ்ரமக் கருத்துகள் இல்லை என்று நான் சொல்லவில்லை. தர்ம சாத்திரங்கள் அனைத்துமே வர்ணாஸ்ரமத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் மதத்தின் அடிப்படை வர்ணாஸ்ரமம் கிடையாது. இந்து மதத்தைப் பொருத்தவரை இரண்டே இரண்டு கருத்துகள்தாம் முக்கியமானவை: (1) கர்மவினை, மறுபிறவிக் கோட்பாடு. (2) இந்தக் கர்மவினை, மறுபிறவிச் சுழலிலிருந்து விடுபட வழி உண்டு. அவ்வளவுதான். இந்து மதத்திலிருந்து வெளியே இருக்கும் பௌத்தம், ஜைனம் ஆகியவையும்கூட இதே கருத்துகளைக் கொண்டவையே.

மறுபிறவிச் சுழலிலிருந்து வெளியேற, அதாவது முத்தி அடைய, பல ரிஷிகளும் பல்வேறு வழிகளைக் கண்டடைந்தனர். அவற்றைத் தம் அடியார்களுக்கு முன்மொழிந்தனர். எந்த வர்ணத்தில் ஒருவர் பிறந்திருந்தாலும், எந்த ஆஸ்ரமத்தில் ஒருவர் இருந்தாலும், முத்தி அடைவதற்கு வர்ணமோ, ஆஸ்ரமமோ, பாலோ தடையாக இருக்கவில்லை. இதன் காரணமாகவே, வர்ணாஸ்ரமம் என்பது இந்து மதத்துக்கு, சநாதன தர்மத்துக்கு முக்கியமானதல்ல என்று உறுதியாகக் கூறமுடியும்.

வள்ளலார் முருகனில் தொடங்கி, சிவன் வழியாகச் சோதி வடிவைக் கண்டடைந்தவர். விநாயகர், திருமால், தேவி ஆகியோரையும் பாடல்வடிவில் பாடிப் பரவியவர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர். உயிர்களிடத்தில் கருணை கொண்டவர். திருமுறைகளில் பாடல் பெற்ற சிவத்தலங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பாடியவர். தேவார மூவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரொடு மாணிக்கவாசகரையும் சேர்த்து சமயக் குரவர்கள் நால்வரையும் பாடல்களால் சிறப்பித்தவர்.

பிரச்னை எங்கே வருகிறது என்றால், இந்து மதத்தின் எதிரிகள், சநாதனம் எனும் சொல்லுக்குத் தாங்களாகவே ஒரு பொருளைக் கற்பித்து, சோளக்கொல்லை வைக்கோல் பொம்மை வீரன் ஒருவனை உருவாக்கி அவனுடன் போர் புரிந்துகொண்டிருக்கிறார்கள். சநாதனம் என்னும் சொல் மக்களை நால் வருணங்களாகப் பிரிப்பதுவே என்றும், இது முழுக்க முழுக்க ஆரிய, வட நாட்டு இறக்குமதி என்றும் இவர்கள் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் கீழடியில் தோண்டத் தோண்ட மதத்துக்கான சான்றுகளே இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் சிவனியமும் மாலியமும் தென்னாட்டில்தான் தோன்றின, வட ஆரியப் பார்ப்பனர்கள், வேத வழிபாட்டை மட்டுமே கொண்டவர்கள், இந்தத் தென்னாடுடைய சிவனையும் மாலையும் களவாடிக்கொண்டுவிட்டனர் என்றும் சொல்கிறார்கள்.

ஆன்மிக அருளாளர்கள் நாயன்மார்களாகட்டும் ஆழ்வார்களாகட்டும் இதுபோன்ற குளறுபடிக் கருத்துகளை நமக்குச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனரா? அவர்கள் வேதங்களைப் போற்றிப் புகழ்ந்தவர்கள்.

ஆனால் வள்ளலார் வேதங்களைப் பற்றிச் சொல்வது என்ன? வள்ளலார்

வேதநெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உள அனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே
கலையுரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக

என்று பாடியதும் இதுபோன்ற வேறு சிலவும் மேற்கோள் காட்டப்படும்.

இந்து மதம் என்பது விரிந்து பரவியது. அது ஒற்றைப் புத்தகம், ஒற்றைக் கடவுள், ஒற்றைக் கருதுகோள் எனும் ஆபிரகாமிய மதங்களைப் போன்றதல்ல.

சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை ஆகியவை ஆறும் இந்து மதத்தின் ஆறு தரிசனங்கள் எனப்படுபவை. இவை பல இடங்களில் ஒன்றை ஒன்று மறுப்பவை. வேதங்களின் கர்ம காண்டத்தை, வேள்வியை மட்டும் முன்னிறுத்தும் பூர்வ மீமாம்சையை உத்தர மீமாம்சிகளான வேதாந்திகள் கடுமையாகக் கேலி செய்கின்றனர். மறுக்கின்றனர். பிரம்ம ஞானத்தை முன்வைக்கின்றனர். முன்னவர்களுக்கு வேதம் முக்கியம். பின்னவர்களுக்கு உபநிடதங்களும் பிரம்மசூத்திரமும் பகவத் கீதையும் முக்கியம். அருளாளர்கள் பலரும் கர்ம மார்க்கத்தையும் ஞான மார்க்கத்தையும் மறுத்து பக்தி மார்க்கத்தையே முதன்மையாக வைக்கின்றனர். அவர்களுக்கு புராணங்களும் இதிகாசங்களும் கடவுள்மீதான அருட்பாடல்களுமே முக்கியம். கோவில்கள் கட்டி, சிலைகளை நிறுவி, வழிபடும் சைவ சித்தாந்திகளுக்கும் பாஞ்சராத்ர வைணவர்களுக்கும் ஆகமங்கள் முக்கியம்.

வள்ளலாரைப் பொருத்தமட்டில், வேதம், ஆகமம், புராணங்கள், இதிகாசங்கள் எவையும் தேவையில்லை. அதனாலேயே அவர் சநாதனத்துக்கு எதிரானவரா?

பொன்னாகி மணியாகிப் போகமாகி
புறமாகி அகமாகிப் புனிதமாகி
மண்ணாகி மலையாகிக் கடலுமாகி
மதியாகி ரவியாகி மற்றுமாகி
முன்னாகிப் பின்னாகி நடுவுமாகி
முழுதாகி நாதமுற முழங்கி எங்கும்
மின்னாகிப் பரவி இன்பவெள்ளம் தேக்க
வியன்கருணை பொழிமுகிலாய் விளங்கும் தேவே

என்று சிவபெருமானை ‘மகாதேவ மாலை’ எனும் தோத்திரமாகப் பாடிக் களித்தவரல்லவா வள்ளலார்?

‘கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக’ என்று ஆறாம் திருமுறையில் வள்ளலார் சொல்லிவிட்டாரே, எனவே அதற்குமுன்பான ஐந்து திருமுறைகளையும் தூக்கி எறிந்துவிடலாம் என்பீராயின், அதே ஆறாம் திருமுறையில்

‘நாத்திகம் சொல்கின்றவர்தம் நாக்கு முடை நாக்கு
நாக்கு ருசி கொள்ளுவதும் நாறிய பிண்ணாக்கு
சீர்த்தி பெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர் திருவாக்கு’

என்று சொல்லியிருக்கிறாரே, அதை என்னவென்று சொல்வீர்?

அதற்கு முந்தைய பாடலிலும் “அம்பலத்தில் எங்கள் ஐயர் ஆடிய நல்லாட்டம்” என்று தில்லையில் ஆடும் நடராஜர்தம்மை விடாது துதிக்கின்றாரே, அதை என்னவென்று சொல்வீர்?

திராவிட இயக்கத்தவர் வள்ளலாரைத் தம் பக்கல் இழுத்து, அவர் நெற்றி விபூதியை அழித்து, அவரை நாத்திகராகக் காண்பிக்க முனைகிறார்கள். அதனை இங்கே கூடியிருக்கும் நீங்கள் அனுமதிக்கப்போகின்றீர்களா என்பதுதான் கேள்வி.

பத்ரி சேஷாத்ரி




வள்ளலார் - சனாதனியா, இல்லையா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக