புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழுக்குச் சட்டை Poll_c10அழுக்குச் சட்டை Poll_m10அழுக்குச் சட்டை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அழுக்குச் சட்டை Poll_c10அழுக்குச் சட்டை Poll_m10அழுக்குச் சட்டை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
அழுக்குச் சட்டை Poll_c10அழுக்குச் சட்டை Poll_m10அழுக்குச் சட்டை Poll_c10 
11 Posts - 4%
prajai
அழுக்குச் சட்டை Poll_c10அழுக்குச் சட்டை Poll_m10அழுக்குச் சட்டை Poll_c10 
9 Posts - 4%
Jenila
அழுக்குச் சட்டை Poll_c10அழுக்குச் சட்டை Poll_m10அழுக்குச் சட்டை Poll_c10 
4 Posts - 2%
Rutu
அழுக்குச் சட்டை Poll_c10அழுக்குச் சட்டை Poll_m10அழுக்குச் சட்டை Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
அழுக்குச் சட்டை Poll_c10அழுக்குச் சட்டை Poll_m10அழுக்குச் சட்டை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அழுக்குச் சட்டை Poll_c10அழுக்குச் சட்டை Poll_m10அழுக்குச் சட்டை Poll_c10 
2 Posts - 1%
Barushree
அழுக்குச் சட்டை Poll_c10அழுக்குச் சட்டை Poll_m10அழுக்குச் சட்டை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அழுக்குச் சட்டை Poll_c10அழுக்குச் சட்டை Poll_m10அழுக்குச் சட்டை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுக்குச் சட்டை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 21, 2010 11:27 am

"டேய் சுந்தர்... இங்கே வா!'' தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன் மகனை அழைத்தாள் கிரேஸ். சுந்தர் வந்தான்.

"நீ போட்டிருக்கிற சட்டையைப் பாருடா. எவ்வளவு அழுக்கா இருக்கு! பழைய சட்டையாவும் இருக்கு. இந்தா.... அந்த பழைய சட்டையைக் கழற்றிட்டு இந்த புதுச் சட்டையைப் போட்டுக்கோ'' என்று கொடுத்தாள் கிரேஸ்.

"போம்மா... எனக்கு இந்தப் பழைய சட்டையே போதும். புதுச் சட்டை வேண்டாம். புதுச் சட்டையை போட்டுக்கிட்டு விளையாடப் போனா அதுவும் அழுக்காகி பழைய சட்டை ஆகிடும்'' என்றான்.

"டேய் சுந்தர்... உன்னோட விளையாடும் பசங்களின் சட்டையைப் பார்த்தாயா? உன் சட்டை மாதிரி அழுக்காவாடா போட்டிருக்காங்க? சுத்தம் சுகம் தரும்னு நீ படிச்சதில்லையா?'' என்றாள் அம்மா.

"போம்மா... புதுச் சட்டையும் வேணாம், ஒண்ணும் வேணாம். இந்தப் பழைய சட்டையே போதும்'' என சொல்லிக் கொண்டே மறுபடி தெருவுக்கு விளையாடச் சென்றான் சுந்தர்.

சுந்தர் விளையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். அப்போதும் அம்மா கிரேஸ் அந்த பழைய அழுக்குச் சட்டையைக் கழற்றிவிட்டு துவைத்த சட்டையை போட்டுக் கொள்ளும்படி கொடுத்தாள். தனக்கு அந்தச் சட்டையே போதும் என்றான் அவன். வேறு சட்டை போட்டுக்கொள்ள முடியாது என்று அவன் மறுத்தான்.


"டேய் ஏண்டா இப்படிப் பண்றே...? உனக்கு எத்தனை புதுச்சட்டை இருக்கு? நீ இல்லாத வீட்டுப் பிள்ளையைப் போல எப்போதும் ஒரே அழுக்குச் சட்டையை போட்டுக் கொண்டே திரியறே... ஒரே அழுக்குச் சட்டையை போட்டுக்கிட்டிருந்தா நோய்க் கிருமிகள் பரவி உடல் நலத்தைப் பாதிக்கும்'' என்றாள். ஆனால் அம்மா என்ன சொல்லியும் சுந்தர் கேட்பதாக இல்லை.

அம்மாவும் மகனும் நடத்திய உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தார் சுந்தரின் அப்பா தங்கவேல். "டேய் சுந்தர்... ஆடை இல்லா மனிதன் அரைமனிதன். கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பதெல்லாம் அணியும் ஆடைகள் பற்றி வந்த அழகான பொன்மொழிகள். ஒருவன் அணியும் ஆடைதான் அவனுக்குப் புதுப் பொலிவைத் தரும்'' என்றவர், பழைய அழுக்குச் சட்டையை கழற்றிவிட்டு வேறு சட்டை போட்டுக்கொள்ளும்படி சுந்தரை அறிவுறுத்தினார். அவனோ அதையெல்லாம் கேட்பதாக இல்லை.

தன் கணவரிடம், "என்னங்க நம்ம பையன் இப்படி இருக்கான்? போட்டால் ஒரே சட்டைதான். எப்பப் பார்த்தாலும் பழைய அழுக்குச் சட்டைகளை போட்டுக்கொண்டே திரிகிறான். பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?'' என்று கணவரிடம் மகனைப் பற்றி குறைபட்டுக் கொண்டாள் கிரேஸ்.

இந்நிலையில் ஒருநாள் தங்கவேல் பக்கத்து ஊர் பஸ் ஸ்டாண்டில் கண்ட காட்சியை தன் மகனின் அழுக்குச் சட்டையோடு ஒப்பிட்டுப் பார்த்தார். அதுதான் தன் மகனின் மனமாற்றத்திற்கு உதவும் என அவர் நம்பினார்.

அன்று பள்ளி விடுமுறை. தன் மகன் சுந்தரை அழைத்துக் கொண்டு பக்கத்து ஊருக்குச் சென்றார் தங்கவேல். வெயில் காலம் என்பதால் அங்கு வரும் மக்களுக்கு அதிக தாகம் எடுத்தது. அவர்கள் பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டிரம் அருகே குழுமி நின்று தாகம் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். அதை சுந்தரும் தொலைவில் நின்று வேடிக்கை பார்த்தான்.

அவன் தன் தந்தையிடம், "ஏம்பா... ரெண்டு குடிநீர் டிரம் இருக்கு. ஆனால் ஆட்கள் எல்லாம் ஒரே டிரம்மில் உள்ள தண்ணீரையே குடிக்கிறாங்க. இன்னொரு டிரம்மில் தண்ணீர் இல்லையாப்பா? ரெண்டு டிரம்மில் உள்ள தண்ணீரையும் மக்கள் பருகினால் தண்ணீர் குடிக்க இப்படி ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டாமே? போட்டி போட வேண்டாமே?'' என்றான்.

"நீ கேட்பது நல்ல கேள்விதான். வா, அருகில் போய் பார்ப்போம்'' என தன் மகனை அழைத்துக் கொண்டு தண்ணீர் டிரம்கள் அருகே சென்றார் தங்கவேல். மிக அருகில் சென்றபோதுதான் சுந்தருக்குப் புரிந்தது. இரண்டு டிரம்களில் தண்ணீர் இருந்தும் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரே டிரம் தண்ணீரை மட்டும் விரும்புவதற்கான காரணம் தெரிந்தது.

ஒரு டிரம்மில் தண்ணீர் நிறைய இருந்தபோதும் அந்த டிரம் அழுக்கு படிந்து பார்க்கச் சகிக்காமல் இருந்ததால் மக்கள் தாகமாக இருந்தும் அந்த டிரம்மை சீண்டவில்லை என்பதை உணர்ந்தான்.

`பிறருடைய மதிப்பைப் பெற நம்முடைய நடவடிக்கைகள் மட்டுமல்ல, நம்முடைய உருவத் தோற்றமும், நம் உருவத் தோற்றத்தை பளிச்சென்று எடுத்துக் காட்டும் ஆடைகளும் அவசியம்' என்று உணர்ந்தான் சுந்தர்.

வீட்டிற்கு வந்த அவன், தன் அம்மா- அப்பாவிடம், தன் மனதை அந்த அழுக்கு தண்ணீர் டிரம் மாற்றிவிட்டது என்றான். சுந்தர் இப்போது எல்லாம் பழைய அழுக்குச் சட்டைகளை அணிவதில்லை. அம்மா கிரேஸ் துவைத்து தரும் தூய்மையான சட்டைகளை மட்டுமே அணிந்து கொள்கிறான்.

குட்டீஸ்... நீங்களும் துவைத்த தூய ஆடை களைத்தானே அணிகிறீர்கள்? சபாஷ்!


எஸ். டேனியல் ஜுலியட்
***





அழுக்குச் சட்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Wed Apr 21, 2010 12:42 pm

அழுக்குச் சட்டை 677196 அழுக்குச் சட்டை 677196 அழுக்குச் சட்டை 677196 அழுக்குச் சட்டை 677196



அழுக்குச் சட்டை Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 21, 2010 12:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அழுக்குச் சட்டை Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக