புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
21 Posts - 95%
Geethmuru
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
148 Posts - 58%
heezulia
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
83 Posts - 32%
T.N.Balasubramanian
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
9 Posts - 4%
prajai
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_m10ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 2:30 am

ஓவியக்கலையின் ராஜா ரவிவர்மா Jan17-10
ராஜா ரவிவர்மா


ஓவியக்கலை என்றதுமே பலரும் உச்சரிப்பது பிக்காஸோ, லியனார்டோ டாவின்சி, சால்வடோர் டாலி போன்ற மேலைநாட்டுக் கலைஞர்களின் பெயர்களைத்தான். அவர்களுக்கு இணையாக சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திய பெருமை ரவிவர்மாவைச் சேரும்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளிமானூர் என்ற கிராமத்தில் 1848 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 -ல் பிறந்தவர் ரவிவர்மா. அவரது பெற்றோர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்துக்கு நெருங்கிய உறவுமுறை கொண்டவர்கள்.

கேரளாவின் பழமையான அரச குடும்பங்களுக்கே உரித்தான சமூக, பொருளாதார, கலாச்சார பிரதிபலிப்புகள் கிளிமானூர் இல்லத்திலும் படிந்திருந்ததில் வியப்பில்லை இலக்கியத்தின் மீதான இயல்பான ஆர்வம், கதகளி மற்றும் துள்ளல் போன்ற கலைகள் மீது ரவிவர்மாவின் குடும்பத்தாருக்குப் பெரும் ஈடுபாடும், திறனும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ரவிவர்மா ஒரு கலைஞனாக மிளிர்ந்ததில் அவரது தாயின் பங்கு மிகப் பெரியது. கதகளியில் ரவிவர்மாவுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் இந்தியக் கலைகள் பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது. இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே இந்நிலை காணப்பட்டது. இந்தியாவில், மேற்கத்திய நாடுகளின் தொடர்பால் ஒரு புதிய கலப்புக் கலை உருவாகத் தொடங்கியது. இந்தியக் கலைஞர்கள் மேற்கத்திய முறைகளில் உள்ள நல்ல அம்சங்களை கிரகித்துக் கொண்டு தங்கள் பாரம்பரிய ஓவியக் கலைக்கு மெருகூட்ட முயற்சித்தனர்.

துணிகளின் மீது தைல வண்ணங்களைப் பயன்படுத்தும் புதியமுறை வேகமாய்ப் பரவியது. திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் ஆஸ்தான ஓவியராக அழகிரி நாயுடு என்பவர் அக் காலகட்டத்தில்தான் நியமிக்கப்பட்டார். ரவிவர்மாவின் மாமா ராஜவர்மா என்பவர் அழகிரி நாயுடுவிடம் அனைத்து கலை நுட்பங்களையும் கற்றுணர்ந்தார். அவரிடமிருந்தே ரவிவர்மா ஓவியக்கலையில் பால பாடத்தைப் படித்தார். ரவிவர்மாவின் ஓவிய ஆர்வம் ராஜவர்மாவை ஆச்சர்யப்படுத்தியது. அவரிடமிருந்து ரவிவர்மா கற்றுக் கொண்டது மிகக் குறைவான அளவே என்றாலும் பொறுப்பாகவும், அன்பாகவும் அவர் கற்றுத் தந்தது ரவிவர்மாவைக் கவர்ந்தது.

ரவிவர்மா தனது 14 ஆவது வயதில் திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் அரசர் 'ஆயில்யம் திருநாளின்' ஆதரவில் அரண்மனையில் வசிக்கத் துவங்கினார்.

அச் சமயம் அரண்மனை ஓவியராகயிருந்து வந்த ராமசாமி நாயக்கர் என்பவர் ரவிவர்மா தனக்குப் போட்டியாக வந்துவிடுவாரோ என்ற அச்சத்திலும், பொறாமையிலும் அவரை எதிரியாகப் பாவிக்கத் துவங்கினார். டச்சு நாட்டைச் சேர்ந்த தியோடர் ஜென்சன் என்ற உருவப்பட (போர்ட்ரெய்ட்) ஓவியர், வைசிராயின் சிபாரிசின் பேரில் அரண்மனைக்கு விஜயம் செய்தார். சமஸ்தானம் அவருக்குப் பெருமளவிலான வெகுமதிகளைக் கொடுத்து கெளரவித்தது. தியோடர் ஜென்சனும் தனது ஓவியக்கலை நுட்பங்களை ரவிவர்மாவுக்குக் கற்றுத் தர முன்வரவில்லை. தான் ஓவியம் வரைவதைப் பார்ப்பதற்கு மட்டுமே ரவிவர்மாவை அவர் அனுமதித்தார்.

ரவிவர்மாவின் ஓவியங்களை, அவற்றின் அழகியல் உணர்வு வெளிப்பாடுகளை மதிப்பீடு செய்பவர்கள் - புதிய முறையான, துணிகளின் மீது தைல வண்ண ஓவியங்களை வரைவதில் நிறுவன ரீதியான, முறையான பயிற்சி எதையும் ரவிவர்மா பெற்றதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இளம் வயதிலேயே பொதுமக்களின் ஆதரவையும், பாராட்டுகளையும் பெறுவதில் ரவிவர்மா குறிப்பிடத்தக்க சிறப்பான வெற்றியடைந்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த வெற்றியின் பின்னே, ரவிவர்மாவின் உயர்வான சமூக அந்தஸ்து இருந்ததை மறுக்க முடியாது. அதே நேரத்தில் அந்த வெற்றிகளுக்கான அடிப்படைத் திறமை அளவிட முடியாத அளவு அவரிடம் குவிந்திருந்தது என்பதையும் மறைக்க முடியாது.

1866 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத்து ராணி லக்ஷ்மிபாயின் சகோதரியை ரவிவர்மா திருமணம் செய்து கொண்டார். அரசர் ஆயில்யம் திருநாளின் பரிபூரண ஆதரவு ரவிவர்மாவுக்குப் பெரிதும் உதவி செய்தது. மக்களின் குறிப்பிடத்தக்க ஆதரவு அங்கீகாரம் கிடைக்கும் முன்பாகவே ரவிவர்மாவுக்கு, கெளரவம் வாய்ந்த 'அரச வளையலைப்' பரிசாக ஊக்குவித்தார் ஆயில்யம் திருநாள்.

அவருக்குப் பிறகு அவரது சகோதரர் விசாகம் திருநாள் அரச பதவிக்கு வந்த போது ரவிவர்மாவின் உறவினர்கள் அதிருப்தியடைந்தனர். அரச குடும்பத்தின் உள்விவகாரங்கள் மக்களைச் சென்றடைவது அக் காலத்தில் மிக அபூர்வம். அதிலும் சமஸ்தானத்துக்கு வெளியே செய்திகள் பரவ வாய்ப்பேயில்லாமலிருந்தது. அதனால் ரவிவர்மாவைத் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அரச குடும்பத்தின் உயரிய அங்கத்தினராகவே மக்கள் அங்கீகரித்து வந்தனர்.

பிரிட்டிஷ் அதிகார வர்க்கமும் அவ்வாறே நினைத்தது என்பதுதான் ஆச்சரியம். அது அரச குடும்பத்தினரை எரிச்சலடைய வைத்தது என்றே சொல்ல வேண்டும். 1904 ஆம் ஆண்டு புத்தாண்டுப் பரிசாக 'கெய்சர் ஹிந்த்' என்ற பதக்கத்தை வழங்கி ஆங்கிலேய அரசாங்கம் ரவிவர்மாவைப் பெருமைப்படுத்தியது.

அப் பதக்கத்தில் 'ராஜா ரவிவர்மா' என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அது குறித்து திருவாங்கூர் சமஸ்தானம் எந்த ஆட்சேபணையும் எழுப்ப முடியவில்லை. ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் ரவிவர்மாவின் செல்வாக்கும், மதிப்பும் அதிகரித்ததோடு ராஜாங்க ரீதியான சமஸ்தானத்து எதிர்ப்புகளையும் எளிதாக எதிர் கொள்ள வழி வகுத்தது.

ரவிவர்மாவைப் பொறுத்தவரையில் அவருக்குரிய அங்கீகாரம் எளிதாகவும் விரைவாகவும் கிடைத்தது. 1873 -ல் சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொள்ள ரவிவர்மாவை ஆயில்யம் திருநாள் தூண்டினார். அன்றைய கவர்னர் லார்ட் ஹோபர்ட் ஆதரவில் நடைபெற்ற அக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியம் முதல் பரிசான தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. அதே ஓவியம் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சிக்கும் அனுப்பப்பட்டு பதக்கம் வென்றதோடு தகுதிச் சான்றிதழையும் பெற்றது.

1874 ஆம் ஆண்டுக்கான சென்னை கண்காட்சியிலும் ரவிவர்மாவே தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். 1893 இல் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வதேச ஓவியக் கண்காட்சிக்கு ரவிவர்மா 10 ஓவியங்களை அனுப்பி வைத்தார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களைச் சித்திரிக்கும் அந்த ஓவியங்களைக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த 'வேர்ல்டு கொலம்பியன் கமிஷன்' ஏற்றுக் கொண்டது. ரவிவர்மாவுக்குப் பட்டயங்களுடன் இரண்டு பதக்கங்களும் பரிசாகக் கிடைத்தன.

ரவிவர்மாவின் ஓவியங்களுக்கு ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் அமோக ஆதரவு இருந்தது. அவரது ஓவியங்களை நல்ல விலை கொடுத்து அவர்கள் வாங்கினார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக