புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
13 Posts - 25%
prajai
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
2 Posts - 4%
Rutu
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
1 Post - 2%
சிவா
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
1 Post - 2%
viyasan
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
10 Posts - 83%
Rutu
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_m10வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம் Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதங்கள் வேரூன்றியிருந்த திருத்தலம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 9:19 pm

மகிஷாசுரனின் அராஜகம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கியது. எல்லாவற்றினுள்ளும் நிறைந்த சக்தி ஒன்றாகத் திரண்டது. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவருக்குள் பொலிந்திருக்கும் அளப்பரிய ஆற்றல் பின்னிப் பிணைந்தது. சட்டென்று பிரபஞ்சத்தையே மறைத்து நிற்கும் பேரொளி உதயமாயிற்று. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. அரக்கர்கள் அதிர்ந்தனர். தேவர்கள் சந்தோஷத்துடன் ‘துர்க்கா... துர்க்கா...’ என்று தலைமீது கரம் கூப்பித் தொழுதனர்.

‘து’ எனும் எழுத்திலுள்ள ‘த்,’ சத்ரு நாசத்தையும், ‘உ,’ கர்மவினை அழிவையும், ‘ர்,’ நோயை விரட்டுவதையும், ‘க,’ பாவங்கள் பொசுங்குவதையும், ‘ஆ’ பயத்தை வெற்றிகொள்வதையும் குறிக்கின்றன. மகிஷனை அறைந்து தனது சூலத்தை பாய்ச்சி, தலையை வெட்டி அதன்மீதேறி நின்றாள் தேவி. அவளே மகிஷாசுரமர்த்தினியாகி பார் முழுதும் தன் அருளை பரப்பினாள். பிரபஞ்ச சக்தியான துர்க்கையின் அம்சமாக அவளிலிருந்தே பல்வேறு சக்திகள் வெளிப்பட்டு பல்வேறு துர்க்கை ரூபங்களாயின. ஒவ்வொன்றும் தனக்கென்று ஒரு மந்திரம், உப தேவதைகள், வாகனம், தனித்த உருவம் ஆகியவற்றுடன் திகழ்ந்தன. அவர்களில் காலராத்ரி துர்க்கை என்பவள் தனித்துவம் மிக்கவளாக பொலிந்தாள். அவளையே அழகுத் தமிழில் கருக்கினில் அமர்ந்தாள் என்று அழைத்தனர்.

கருக்கினில் என்றால் கிராமிய வழக்கு மொழியில் கருக்கல் வேளை என்பது பொருள். அதாவது இருள் சூழ்ந்திருக்கும் நேரம் என்பதாகும். ஆகமங்கள் இவளை இருட்டில் வழிபாட்டிற்குரியவளாக சொல்கின்றன. மாலையும் இருளும் சந்திக்கும் நேரத்தையும் கருக்கல் என்று சொல்லலாம். முற்காலத்தில் இரவு பூஜைகள் இங்கு சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன. மரங்களில் தெய்வங்கள் உறைவதாக வேத நூல்கள் உரைக்கின்றன. உதாரணமாக வாழைத்தண்டின் உட்புற மத்திய பாகத்தில் காளி உறைவதாகவும், அவளே ‘கதலீ கர்ப்ப மத்யஸ்தா காளி’ என்றும் சொல்வார்கள். வாழைத் தோப்பு காளியின் ஆட்சிக்குட்பட்டது. வேம்பில் அம்மன் குடி கொண்டிருப்பதை நம் அன்றாட வழிபாடுகளில் உணர்கிறோம். அதேபோல பனை மரத்திலுள்ள கருக்குகளில் தன் கூர்மையான சக்தியோடு இவள் உறைவதால் கருக்கினில் அமர்ந்தாள் என்று அழைத்தனர். பனை மரக்காட்டில் நிலைகொண்டவள் என இவளை சில நூல்கள் குறிப்பிட்டுப் பேசுகின்றன. அதற்கு ஆதாரமாக இந்த கருக்கினில் அமர்ந்தாள் ஆலயத்தைச் சுற்றி நிறைய பனை மரங்கள் இருந்ததாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர்.

காண்பதற்கு அபூர்வமானவளும், அருள் செய்வதில் இணையில்லாதவளுமான கருக்கினில் அமர்ந்தாள் கோயிலுக்குள் செல்வோமா?

கோயில் வளாகத்திலேயே மேற்கில் வேதபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ‘‘கருக்கமர்ந்த பட்டாரியார் கோயில்’’ என்று காஞ்சி கல்வெட்டுக்கள் இக்கோயில் பற்றி பேசுகின்றன. கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம் ஆகியவை பாங்குற அமைந்துள்ளன. கோயிலுக்கு வெளியே, வாயிலருகில், கருவறைக்கு நேராக பத்மாசனத்தில் புத்தர் தியானத்தில் ஆழ்ந்துள்ள சிலை வடிவங்களும், கத்தி, கேடயத்துடன் வீரன் சிற்பமும், நாகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலின் இருபுறமும் சுதையில் செய்யப்பட்ட துவாரபாலகர் நின்றிருக்கின்றனர். பக்கத்திலேயே நவகிரக சந்நதி அமைந்துள்ளது. கோயிலின் அர்த்த மண்டபம் நீள் சதுர வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கருவறை யில் ஐந்தடி உயர முடைய துர்க்கையின் சிற்பத்தைப் பார்க்க உடல் சிலிர்க்கிறது.

தேவி மகாத்மியம், காலராத்ரி துர்க்கை எனும் கருக்கினில் அமர்ந்தாளை அழகாக வர்ணிக்கிறது. இருளைப்போல கருத்த மேனியை உடையவளாக பயங்கர ரூபத்தோடு விளங்குகிறாள். போர்க்களத்தின் மையத்தில் நெடிய உருவத்தோடு பலத்த காற்றினில் அலைந்தபடி இருக்கும் ஈட்டிகளைப் போன்ற கேசங்கள் இவளுக்கு. கழுத்தில் மின்னலைப் போன்று ஒளிவீசும் மாலை. கண்கள் நெருப்புப் பந்துகள் போல சுழன்று கொண்டிருக்கின்றன. மூச்சு விடும்போது அக்னி ஜ்வாலை தெறிக்கிறது. துஷ்டர்களுக்கும் பகைவர்களுக்கும் பயத்தை உண்டாக்குகிறாள். அதேசமயம், பக்தர்களுக்கு அபய ஹஸ்தம் காட்டி இன்னருள் புரிகிறாள். இந்த வர்ணனைக்குட்பட்ட அதே உருவத்தை இங்கு மூல தேவியாக வடித்திருக்கிறார்கள். எண்கரத்தவளான இவளுக்கு மெல்லிய தேகம்தான்; ஆனால் உறுதியோடிருக்கிறாள். கண்களில் கோபம் தெரிந்தாலும், அதன் மையத்தே கருணை ஊற்றும் கொப்பளிக்கிறது. காலடியில் வீழ்ந்திருக்கும் மகிஷாசுரன் மீது அம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். ஆலயத்தின் தொன்மையும் காலராத்ரி தேவியின் சாந்நித்தியமும் மனதை நிறைக்கின்றன.

துர்க்கையின் அம்சங்களில் சற்று உக்கிரமான தேவி இவள். அனுக்கிரகம் செய்வதில் தாயுள்ளம் படைத்தவளும் இவள்தான். காலம் கடந்த சக்தியான கருக்கினில் அமர்ந்தாளை காலம் தாழ்த்தாது வணங்கினால், அன்னையின் அருட்சக்தி, நம் உடலிலும் வாழ்விலும் மென்மையாக ஊடுருவுவதை சுகமாக உணர முடிகிறது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காமராஜர் வீதி வழியாக வள்ளல் பச்சையம்மன் சாலை, மேட்டுத்தெரு பஸ் நிறுத்தம் அருகே இக்கோயில் உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக