புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_c10ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_m10ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_c10ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_m10ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_c10ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_m10ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_c10ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_m10ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_c10ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_m10ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_c10ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_m10ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 12, 2010 3:24 pm

இன்று நம் தமிழ் இளைஞர்கள் படிப்புக்கு முக்கியத்துவம் தருகிறார்களோ இல்லையோ, கண்டிப்பாக எங்காவது வெளிநாடு செல்ல வேண்டும் என்று கடப்பிதழ் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். வெளி நாட்டிலிருந்து பணி முடித்து திரும்பிச் செல்லும் இளைஞர்களின் ஆடம்பரம், பகட்டு இவற்றில் அனைவரும் மயங்கி வெளிநாட்டு வேலையைத் தேர்ந்தெடுக்க முன்வருகிறார்கள். மகிழ்ச்சியான விடயம்தான், ஆனால் வெளிநாட்டு வேலை என்பது நூற்றில் 10 பேருக்கு மட்டுமே எளிதாகவும், கௌரவம் மிக்கதாகவும் அமைகிறது! மற்ற 90 விழுக்காட்டு இளைஞர்களின் நிலை என்ன? மற்ற நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியாது. அவ்வாறு தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் எடுத்துக் கூறுங்கள்! இப்பொழுது மலேசியாவில் பணிபுரியும், தமிழகத் தொழிலாளர்களின் நிலையை இங்கு எடுத்துக் கூறுகிறேன். இதன் மூலம் இங்கு வர நினைப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கலாம்.

திரைகடலோடியும் திரவியம் தேடு என்று அன்றே நம்மவர்கள் சொல்லி வைத்ததற்கிணங்க இன்று நாம் அனைவரும் வெளிநாடுகளில் வேலை செய்யும் எண்ணத்தை அதிகரித்துக் கொண்டுள்ளோம். இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி மதிப்புக் கூடுகிறது. இன்று மிகவும் எழைகளாக யாரும் இல்லை என்ற அளவிற்கு பெரும்பாலான மக்கள் சற்று செல்வச் செழிப்புடன் வாழ ஆரம்பித்துள்ளார்கள். வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் மனைவியர்கள், சந்தைக்கு காய்கறி வாங்கச் செல்லும்பொழுது விலையைக் குறைத்துக் கேட்பது அநாகரீகம் என்று அவர்கள் கேட்கும் விலையைவிடக் கூடுதல் விலையைக் கொடுத்தே காய்கறி முதல் மளிகைச் சாமான்கள் வரை வாங்குகிறார்கள். நான் என் தங்கை திருமணத்திற்கு காய்கறி வாங்கச் சென்றபொழுது, விலையைக் குறைத்துக் கேட்டு அந்த வியாபாரி என்னைப் புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்து விரட்டியடித்தது இன்னும் என் கண்ணில் நிற்கிறது. அந்த அளவுக்கு பணத்தின் அருமை உணராமல் செலவு செய்பவர்களாக இன்றைய பெரும்பாலான இல்லத்தரசிகள் உள்ளார்கள்! காரணம் பெருந்தொகைகள் ஒரே நேரத்தில் அவர்கள் கைக்குக் கிடைக்கிறது. இதனால் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என அடம்பிடித்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படி அதிகமாக பணம் எப்படி கிடைக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. கணவன்மார்களும் மரியாதை குறைந்து விடும் எனக் கருதி என்ன வேலை செய்கிறோம், எவ்வளவு கஷ்டமான வேலை, எத்தனை மணி நேர வேலை என்பதையும் கூறுவதில்லை.

அந்நியத் தொழிலாளிக்கு ஏற்படும் முதல் அவலம்:

ஏஜெண்டுகள் என்ற போர்வையில், உனக்கு மலேசியாவில் சிறப்பான எட்டு மணி நேர வேலை, மாதம் 30,000 சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பெரும்பாலும் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை பணம் வாங்கி விடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஆகும் உண்மையான செலவு வெறும் 30000 மட்டுமே. காரணம் தோட்ட பெர்மிட் என்னும் மிகக் குறைந்த விலை உள்ள பெர்மிட் மட்டுமே அவர்களுக்கு வழங்குகிறார்கள்.

இங்கு வந்ததும் ஏற்படும் அதிர்ச்சி:

மலேசியா வந்தடைந்ததும் அவர்களுக்கு அளிக்கப்ப்படும் வேலைகள்: சாலையோரங்களில் கார் கழுவுதல், உணவக வேலை, தொழிற்சாலைகளில் அடிமட்ட வேலைகள், சாலைப்பணி (தார் ஊற்றுதல்) போன்ற வேலைகளே அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. கல்லூரிப் படிப்பை முடித்த எத்தனையோ இளைஞர்கள் இன்று கார் கழுவும் வேலைகளிலும், உணவகங்களிலும் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு வழங்கப்ப்டும் சம்பளம் மாதம் Rm 600 முதல் 800 வரைக்குள்தான். அதாவது 8000 முதல் 10000 வரை மட்டுமே. இதில்தான் இவர்களின் செலவுகளையும் பார்த்துக்கொண்டு, கடனையும் அடைக்க வேண்டும். வாங்கி வந்த கடனை அடைக்க மட்டும் மூன்று ஆண்டுகள் பணி புரிய நேரிடுகிறது. ஒரு நாளைக்கு 14 முதல் 16 மணி நேரம் வேலை செய்தே ஆக வேண்டும். மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டிய தருணங்களை மனவேதனையுடன் கழித்து வருகிறார்கள்.

வேலையும், வருமானமும் இப்படியென்றால் இவர்களுக்கு மலேசியப் போலீசார் அளிக்கும் கொடுமைகள் அளவில்லாதது. காரணம் இவர்களிடம் இருப்பதோ தோட்ட வேலைக்கான பெர்மிட். வேலை செய்வதோ வேறு இடத்தில். இங்கு மலேசியாவில் ஒருவர் சாலையில் நடந்து செல்கிறார் என்றால் அவர் நிச்சயம் வெளிநாட்டவர்தான் என்பதை போலீசார் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். காரில் வரும் போலீஸ் அவர்களை அப்படியே காருக்குள் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்று விடுவார்கள். அவர்களிடமுள்ள கைத்தொலைபேசி, பணம் என அனைத்தையும் பறித்துக் கொண்டு வேறொரு இடத்தில் இறக்கிவிட்டுச் சென்றுவிடுவார்கள். மலேசியாவில் உள்ள (குடியுரிமை உள்ள) இந்திய இளைஞர்கள் தமிழகத்திலிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களை நடத்தும் விதம் வேதனையானது. இப்பொழுது அதிகமாக வேலையிடங்களில் சம்பளமும் வழங்குவதில்லை. கேட்டால் அடி, உதை!

சரி, இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதே என சமீபத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலார்கள், இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்து காப்பாற்றி நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டார்கள். என்ன பிரச்சனை என்றே கேட்க மறுத்துவிட்டது இந்திய தூதரகம். வேறெங்கும் செல்ல வழியில்லாத அவர்கள் இரண்டு நாட்கள் தூதரகத்திற்கு முன்பு சாலையில் படுத்து இருந்தனர். அதற்கு இந்திய தூதரக அதிகாரிகள் எடுத்த முடிவு மலேசிய இந்தியர்களையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. குடிநுழைவுத்துறைக்கு செய்தியனுப்பி அனைத்து இளைஞர்களையும், முகாமில் கொண்டு சேர்த்து பெருமையடைந்தது மலேசிய இந்திய தூதரகம்.

கொடுமையின் உச்சம் முகாம் வாழ்க்கைதான். குடிநுழைவு அதிகாரிகள் சோதனையின் போது அகப்பட்டுக் கொள்ளும் அந்நியத் தொழிலாளிகளை முகாமிற்கு கொண்டுசென்று தள்ளிவிடுவார்கள். அங்கு 20 பேர் தங்கும் இடத்தில் 100 பேரை தங்க வைத்துக் கொடுமைப்படுத்துவார்கள். எத்தனையோ தமிழக இளைஞர்கள் நோய்வாய்ப்பட்டு உள்ளே இறந்து விட்டதாகவும், அவர்களின் தடயங்களை அழித்து காட்டுக்குள் தூக்கிச் சென்று எரித்து விட்டதாகவும் உள்ளே சென்று வந்தவர்கள் கூறக் கேட்டுள்ளேன். காலையில் வழங்கப்படும் உணவு, பால், இனிப்பில்லாத தேனீர். மதிய உணவாக ஒரு கப் சோறு, அவித்த மீன் (இந்த மீனைச் சாப்பிட்டால் உடல் முழுதும் அரிப்பு வந்துவிடுமாம்) இரவில் மீண்டும் தேநீர் மற்றும் ஒரு ரொட்டி மட்டுமே. இரவில் தூங்கும்பொழுது காவல் அதிகாரிகள் தண்ணீரை ஊற்றிவிடுவார்களாம். இதில் காலை 5 மணிக்கும், மாலையும் உடற்பயிற்சி வேறு! எத்தனையோ இளைஞர்கள் பல வருடங்களாக உள்ளே உள்ளார்களாம். அவர்களை விடுவிக்க இந்திய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வருவதில்லை.

தமிழகத்திலிருந்து இங்கு வேலைக்கு வருகிறேன் என்று வரும் பெரும்பாலான பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு, மலேசியப் பத்திரிக்கைகளில் இழிவாக எழுதுமளவிற்குச் சென்றுவிட்டார்கள். மஜ்ஜித் இந்தியா என்னும் பகுதியில் சேலை கட்டிச் செல்லும் மலேசியப் பெண்களையும் விபச்சாரப் பெண்கள் என்ற நோக்கில் இளைஞர்கள் அணுகியதால் இப்பிரச்சனை பூதாகரமாகக் கிளம்பியது.

இவர்களின் அவலங்களை எழுத வேண்டுமானால் இன்னும் எழுதிக் கொண்டே இருக்கலாம். புதிதாக வருபவர்கள் இதுபோன்ற சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் தவிர்க்க வேண்டியே இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன்.



ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 3:45 pm

நல்ல பயனுள்ள கட்டுரை அண்ணா ....

வெளிநாடு சென்றால் இத்தனை பிரச்சனைகள் சந்திக்க நேரிடுமா ?
இதுவரை அது நல்ல வாழ்க்கை என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன் . இப்போது தான் தெரிகிறது எவ்ளோ கஷ்ட்டம் இருக்குனு ...

நன்றி அண்ணா ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Oct 12, 2010 4:01 pm

சிவா சொல்றது முற்றிலும் சரி.ஒரு லட்சம், இரண்டு லட்சம்
என்று காச கொடுத்துட்டு இங்க வந்து கிளீனிங் கம்பெனில
கிளீனர குறைவான சம்பளத்துக்கு வேலை பார்க்குற எத்தனயோ பேர நான் பார்த்து இருக்கேன். அதனால வெளிநாட்டு வேலை என்றதும் ஆ ன்னு வாய பிளக்காம
உண்மை நிலை என்ன என்று தெரிஞ்சுச்கிட்டு வாங்க.
மலேசியாவுல உள்ள தூதரகம் மட்டும் இல்ல இங்க இருக்கற
தூதரகமும் சுத்த வேஸ்ட். என்னவோ இவனுக ஆகயத்துல
இருந்து குதிச்ச மாதிரி வேலை பார்க்குராணுக.




ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Uஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Dஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Aஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Yஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Aஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Sஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Uஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Dஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Hஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Oct 12, 2010 4:07 pm

மனதைத்தொடும் விடயங்களை சுட்டிக்காட்டி எழுதிய இக்கட்டுரை பாராட்டத்தக்கது
எதிர்கால சந்ததிக்காக விட்டுவைக்க வேண்டிய அருமையான விளக்கம்
இப்படியான துயர் மலேசியா மாத்திரமில்லை எல்லா நாடுகளிலும் நடைபெறுவதை காண்கிறோம்
வெளிநாட்டு மோகத்தில் மூழ்கி தங்களது வாழ்க்கை தொலைத்த லெட்சம் பேரை அன்றாடம் காண்கிறோம்
நாட்டில் நல்லமுறையில் கற்று சம்பாத்தியம் நாட்டில் தேடி அதில் உள்ள கௌரவத்துடன் வாழ இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்

நன்றி அண்ணா அருமையான கட்டுரை



நேசமுடன் ஹாசிம்
ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 4:50 pm

உதயசுதா wrote:சிவா சொல்றது முற்றிலும் சரி.ஒரு லட்சம், இரண்டு லட்சம்
என்று காச கொடுத்துட்டு இங்க வந்து கிளீனிங் கம்பெனில
கிளீனர குறைவான சம்பளத்துக்கு வேலை பார்க்குற எத்தனயோ பேர நான் பார்த்து இருக்கேன். அதனால வெளிநாட்டு வேலை என்றதும் ஆ ன்னு வாய பிளக்காம
உண்மை நிலை என்ன என்று தெரிஞ்சுச்கிட்டு வாங்க.
மலேசியாவுல உள்ள தூதரகம் மட்டும் இல்ல இங்க இருக்கற
தூதரகமும் சுத்த வேஸ்ட். என்னவோ இவனுக ஆகயத்துல
இருந்து குதிச்ச மாதிரி வேலை பார்க்குராணுக.

உண்மைதான் அக்கா அதுமட்டிமில்லாம இங்க உள்ள இந்திய தூதருக்கு தினமும் ஒரு பார்டியில் கலந்துகொல்ல்வதுதான் வேலை மற்றவர்கள் பற்றி கவலை இல்லாதவர்கள் இவர்களை நம்பி இங்கே வருவது சுத்த தண்டம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Oct 12, 2010 5:11 pm

உதயசுதா wrote:சிவா சொல்றது முற்றிலும் சரி.ஒரு லட்சம், இரண்டு லட்சம்
என்று காச கொடுத்துட்டு இங்க வந்து கிளீனிங் கம்பெனில
கிளீனர குறைவான சம்பளத்துக்கு வேலை பார்க்குற எத்தனயோ பேர நான் பார்த்து இருக்கேன். அதனால வெளிநாட்டு வேலை என்றதும் ஆ ன்னு வாய பிளக்காம
உண்மை நிலை என்ன என்று தெரிஞ்சுச்கிட்டு வாங்க.
மலேசியாவுல உள்ள தூதரகம் மட்டும் இல்ல இங்க இருக்கற
தூதரகமும் சுத்த வேஸ்ட். என்னவோ இவனுக ஆகயத்துல
இருந்து குதிச்ச மாதிரி வேலை பார்க்குராணுக.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 5:17 pm

ஹாசிம் wrote:மனதைத்தொடும் விடயங்களை சுட்டிக்காட்டி எழுதிய இக்கட்டுரை பாராட்டத்தக்கது
எதிர்கால சந்ததிக்காக விட்டுவைக்க வேண்டிய அருமையான விளக்கம்
இப்படியான துயர் மலேசியா மாத்திரமில்லை எல்லா நாடுகளிலும் நடைபெறுவதை காண்கிறோம்
வெளிநாட்டு மோகத்தில் மூழ்கி தங்களது வாழ்க்கை தொலைத்த லெட்சம் பேரை அன்றாடம் காண்கிறோம்
நாட்டில் நல்லமுறையில் கற்று சம்பாத்தியம் நாட்டில் தேடி அதில் உள்ள கௌரவத்துடன் வாழ இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்

நன்றி அண்ணா அருமையான கட்டுரை

நண்பா யாரும் வெளிநாட்டு ஆசைகாகமட்டும் இப்படி வரவில்லை நாட்டில் செய்யும் வேலையிக்கு கிடைக்கும் சம்பளம் போதுமானதாக இல்லாததாலும் இங்கே அதேவேலைக்கு கிடைக்கும் சம்பளத்தில் குடும்பத்தை காபாதமுடியும் என்பதால்தான் வருகிறார்கள் வெளிநாட்டிற்கு வந்தவர்கள் எல்லாம் இவ்வாறு துன்பப்படவில்லை ஒரு சிலர்தான் அதுவும் சரியான நபர்கள் மூலம் வராதவர்கல்தான் இவ்வாறு துன்பபடுகிரார்கள், என்ன வருவதற்குமுன் ஒருதடவைக்கு பலமுறை விசாரிதுவந்தால் தப்பிக்கலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 12, 2010 8:14 pm

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்... ஏன்கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்..?

அன்றே சொல்லி வைத்தார்கள். திரைகடலோடியும் திரவியம் தேடச்சொன்னார்கள். ஆனால் தன்மானம் இழந்து பெறும் திரவியம் தேவையா...?

சிந்திக்க வேண்டும் இளைஞர்கள்.

அருமையான கட்டுரைக்கு நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 14, 2010 11:10 pm

மிக அருமையான அறிவுரை சிவா. நான் இந்தத் துன்பம் எல்லாம் மலேஷியாவில் இல்லை. பிற வளைகுடா நாடுகளில் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன். எல்லா வளமும் இருந்தும் உழைப்பையும் நம் கெளரவத்தையும் அயல்நாட்டுக்கு அடகு வைக்கும் இந்நிலை மாற, இது போன்ற கட்டுரைகள் பயனளிக்கும். தொடர்கள் இப்பிரிவிலும் தங்கள் தொண்டு.. ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! 678642 ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! 154550



ஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Aஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Aஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Tஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Hஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Iஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Rஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Aஒரு அந்நிய தொழிலாளியின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்கள்! Empty
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Fri Oct 15, 2010 2:07 am

இந்த விடயத்தில்
முதல் தவறு : தொழில் திறமையற்ற படிப்பறிவற்றவர்கள் வெளிநாட்டில் சென்று பிழைத்து உயர்ந்த நிலைக்கு செல்ல ஆசை படுவது

இரண்டாம் தவறு: இந்தியாவிலே வெளிநாட்டில் கூலி வேலை செய்து வாழ நினைப்பவர்களுக்கான விழிப்புணர்வு இல்லாமை.

மூன்றாம் தவறு: ஒன்றுக்குமே உதவாக்கரையாக இருக்கும் எமது இந்திய தூதரகம்.[மலேசியாவிலுள்ள இந்திய தூதரகத்தை திட்டுவதற்கு எனக்கு மட்டமான கேவலாமான தமிழ் வார்த்தைகளை தேடிகொண்டிருக்கிறேன் ]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக