புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் அழித்தாய் இறைவா? Poll_c10ஏன் அழித்தாய் இறைவா? Poll_m10ஏன் அழித்தாய் இறைவா? Poll_c10 
30 Posts - 55%
heezulia
ஏன் அழித்தாய் இறைவா? Poll_c10ஏன் அழித்தாய் இறைவா? Poll_m10ஏன் அழித்தாய் இறைவா? Poll_c10 
24 Posts - 44%
mohamed nizamudeen
ஏன் அழித்தாய் இறைவா? Poll_c10ஏன் அழித்தாய் இறைவா? Poll_m10ஏன் அழித்தாய் இறைவா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் அழித்தாய் இறைவா? Poll_c10ஏன் அழித்தாய் இறைவா? Poll_m10ஏன் அழித்தாய் இறைவா? Poll_c10 
72 Posts - 59%
heezulia
ஏன் அழித்தாய் இறைவா? Poll_c10ஏன் அழித்தாய் இறைவா? Poll_m10ஏன் அழித்தாய் இறைவா? Poll_c10 
45 Posts - 37%
mohamed nizamudeen
ஏன் அழித்தாய் இறைவா? Poll_c10ஏன் அழித்தாய் இறைவா? Poll_m10ஏன் அழித்தாய் இறைவா? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஏன் அழித்தாய் இறைவா? Poll_c10ஏன் அழித்தாய் இறைவா? Poll_m10ஏன் அழித்தாய் இறைவா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் அழித்தாய் இறைவா?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Dec 15, 2010 2:29 pm

(இது நடந்துமுடிந்த கோரத்தை எண்ணிப்பாடியது. சில மாதங்களின்முன்பு. பகிர்ந்து கொள்கிறேன்)

என்ன கோபம் எங்கள் மீது இறைவா
ஏது பிழை நாம் இழைத்தோம் இறைவா
சொன்ன மொழி செந்தமிழே தவறா- இதில்
சொல்லரிய குற்ற மென்ன தலைவா

வானமது ஏறி நடந்தோமா - உங்கள்
வானுலகில் தீது புரிந்தோமா
ஆனதொரு கோபுரங்கள் ஏதும்
அழித்திடித்து மோசம் விழைத்தோமா

வேலெடுத்து சூலம் பறித்தோமா -அங்கு
விளையாட உடுக்கை எடுத்தோமா
தேவர்களை கேலி புரிந்தோமா ஒரு
தேவமகள் கூந்தல் இழுத்தோமா

தாவி முகில்ஏறி நடந்தோமா - சிவன்
தலையிலுள்ள நிலவில் நடந்தோமா
ஏனிழைத்த குற்றமென்ன இறைவா நீ
எம் குலத்தை வேரறுத்தல் சரியா

ஏன் புரிந்தாய் சுடலை ஆடும் சிவனே உன
திருநடத்தால் செத்தது எம்இனமே
ஊன் உருகி சாம்பல் மேடு ஆச்சு- இனி
ஓடிவந்து அள்ளி மேனி பூசு

படைத்தவனோ பிரம்மன் பார்க்கவில்லை - கடல்
பள்ளிகொண்டான் எழுந்து காக்க வில்லை
அழித்துவிட்டாய் நீயும் தமிழ் மண்ணை. இப்போ
கொடுத்தென்ன புத்தனுக்கு மண்ணை

கால் மிதித்து கச்சை யுடுத்தாயே வேங்கை
தோல் உடுத்த கோபம் இன்னும் உண்டோ
வேல் விழித்த உமை கொடுத்த பாகா -உன்
கால் உதைக்க நாம் கிடைத்ததேனோ

பாழுமுயிர் தானெடுக்க எண்ணின் அது
பறித்தெடுக்க இது உனக்கு வழியா
ஊழி நடமாடி உயிர் கொள்ள - உனக்
கொருமுறையும் இது விடுத்து இலையா

ஆழிசூழ் உலகறியா கோரம் - மனம்
அஞ்சும் இதை சொல்வதற்கு யாரும்
மாளும் உடல் பட்ட வதை கொஞ்சம் -அல்ல
மரணம் என்ற பெயர் இதற்குமல்ல

பிள்ளைபசி என்றழு மோர் தாய்க்கு -அவள்
பின்னிருந்து குண்டு வெடித்ததிரும்
தள்ளிஒரு பிணம் நடந்து வீழும் -அதன்
தலைசிதறி துண்டெனவே ஓடும்

மெய்சிலிர்த்து அச்சம் உச்சம் ஏறும் அய்யோ
மிரண்டு பிள்ளை நீர்விடுத்துசோரும்
கையில்லாம லொருவர் ஓடக் காணும் - கண்
காட்சி கண்டு பஞ்சடைந்து போகும்

நெஞ்சிடித்து வேகமாக நோகும் -உள்ள
நினைவழிந்து கால்கள் சோர்ந்து சாயும்
கண்ணெதிரே கணவன் உயிர்போகும் -உடன்
கதறியழ குரல் அழிந்துபோகும்

துள்ளியோடி தப்பு என்று கூறும் மனம்
மெல்ல எழ வீடிடிந்து வீழும்
உள்ளிருந்து பிள்ளை அம்மா என்கும் அதில்
வீழ்ந்தசுவர் கால்நசிக்கக் கதறும்

பெண்குழந்தை இன்னொருத்தி ஓடும் முற்றம்
போக ஒரு குண்டு அயல் வீழும்
கண்ணெதிரே புகையெழுந்து மூடும் காணக்
கண்டதுண்டமாகி உடல் சிதறும்

பங்கருக்குள் ஒர்குழந்தை ஓடும் கண்
பாத்திருக்க மண்இழுத்து மூடும்
சிங்க ராச படையும் சேர்ந்த நாடும்
சேர்ந்து மண்ணைமூட பூமி தின்னும்

இத்தனையும் பார்த்து அவள் ஓட உடன்
எங்கிருந்தோ சிங்கமகன் வந்து
குத்தியவள் நெஞ்சு கிழித்தோட செங்
குருதிவழிந் தே நிலத்தில் வீழ்வாள்

பாதிஉயிர் போக யாதும் எண்ணி அவள்
பரிதவித்து உடல்தகித்து நோவாள்
வெயி லெறித்து நிலம்கொதிக்க தாகம் வந்து
விட்டமீதி உயிரெடுத்துப் போகும்

பீதி கொண்டு கத்தும்குரல் கேட்டு செத்த
பிணங்களோடு பிணங்களாக சேர்ந்து
போகுமுயிர் காக்கவென்று வீழ்ந்த - பலர்
பிழைக்கவில்லை குழி பறித்து போட்டான்

பேய் பிடித்த சிங்களமும் - நட்பு
பேசிவந்த அன்னியரும் சேர்ந்து
கை பிடித்து யுத்தவெறியரோடு
கத்தி கொண்டு எம்மை வெட்டி கொல்ல

வாரி இரத்தம் உண்ண விட்டதென்னநீ
வைத்திருக்கும் கண்ணுக்கான தென்ன
தீயிறைக்கும் கண் மறைத்து பாய்ந்து - சதி
செய்ததுண்டோ கங்கை தேசமெண்ணி

கவிபடிக்க குற்றம் கண்ட கீரன் தன்னை
எரித்துவிட்டாய் ஏதும் எண்ணமுன்னே
கொடிய புத்தஅரசு எம்மைக் கொல்ல
கூடி நின்று வேடிக்கையா பார்த்தாய்

முத்தெனவே வீரமுடன் விளைந்த பெரும்
சொத்தினையே இழந்து விட்டோம் இறைவா
ரத்தம் எல்லாம் போனபின்பு தமிழன் - வெறும்
வைக்கல் பொம்மைதானே என்ற நினைவா

இல்லை ஈழமைந்தர் புதைந்தாலும் அவர்
எண்ணியது போவதில்லை என்றும்
வில்லை விட்டு ஏகும் அம்புபோல - இவர்
வீறுகொண்டெழுந்து செயல் கண்டார்

அல்லன போய் ஆதவனாய் ஒளிர்வான் ஈழ
அரசுவரும் ஆட்சியிலே அமர்வான்
வெல்லவென பிறந்தவனாம் விதியே உன்
வினைமுடித்து ஓடு தமிழ்வெல்வான்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 15, 2010 2:39 pm

நல்லவர்களை ஈசன் கைவிடுவதில்லை வெற்றி கொஞ்சம் தாமதமாக கிடைக்கும் ஆனால் மிக பெரியதாக இருக்கும்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Dec 15, 2010 7:27 pm

ஒவ்வொரு பத்தியாக எடுத்து ஒட்டினேன்..இவை நன்றாக இருக்கிறது என்று கூற.. இறுதியில் எல்லா பத்திகளும் இருக்கின்றன் அந்த ஒட்டிய பகுதியில்.. என்ன சொல்ல... கண்ணீர் வடிய கவிதை மூலம் அந்தக் கொடுமையைக் கண்டுகொண்டு.. இருக்கிறேன்..



ஏன் அழித்தாய் இறைவா? Aஏன் அழித்தாய் இறைவா? Aஏன் அழித்தாய் இறைவா? Tஏன் அழித்தாய் இறைவா? Hஏன் அழித்தாய் இறைவா? Iஏன் அழித்தாய் இறைவா? Rஏன் அழித்தாய் இறைவா? Aஏன் அழித்தாய் இறைவா? Empty
kavithaigal
kavithaigal
பண்பாளர்

பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010
http://kanthavel.yolasite.com

Postkavithaigal Wed Dec 15, 2010 7:35 pm

உங்களுடைய படைப்புகள் ஒவ்வொன்றும் மிக அருமை. இது தான் உங்களின் தனிச் சிறப்பு அன்புடன் கவிதைக்காக கந்தவேல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக