புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
31 Posts - 36%
prajai
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
3 Posts - 3%
Jenila
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
1 Post - 1%
jairam
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
7 Posts - 5%
prajai
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_m10மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள்


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Feb 28, 2011 10:33 am



-எஸ்.வி.வேணுகோபாலன்

வாழ்க்கையின் தேர்வு

வாழ்க்கையின் தேர்வின்படிவாழ்ந்துவிட

மக்கள் துணிந்து விடுவார்களானால்

விதியால் என்ன செய்ய முடியும் -

வழிவிட்டு நிற்பதைத் தவிர ?

இரவு தனது முகத்திரையைத் துறந்துவிடுகிறது..

சங்கிலிகள் எல்லாம் உடைந்து நொறுங்குகின்றன..

-அப் அல் காசிம் அல் ஷாபி (துனிசியாவின் இருபதாம் நூற்றாண்டுக் கவி) - எகிப்திய கிளர்ச்சியின்போது மக்கள் இசைத்த பாடல்களில் ஒன்று.

லஞ்சம், ஊழல், வேலையின்மை, உணவுப் பொருள் தட்டுப்பாடு, காட்டாட்சி....என பெருகிவந்து கொண்டிருந்த கொடுமைகளுக்கு எதிராகப் பல்லாண்டுகள் கனன்று கொண்டிருந்த நெருப்பு இந்த ஆண்டு ஜனவரி 25 அன்று கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய போது, உலகின் மொத்த கவனமும் வரலாற்றுப் புகழ்மிக்க இந்த நாட்டின் பக்கம் திரும்பியது. பிப்ரவரி 11 புனித வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மக்கள் ஓர் இறுதி நாள் போர்க்கோலம் பூண்டு திரண்ட போது, கொடுங்கோல் ஆட்சி புரிந்துவந்த சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் பதவி விலகுவதாக துணை அதிபரை அறிவிக்கச் சொல்லிவிட்டுக் குடும்பத்தோடு செங்கடல் பகுதியின் உல்லாச விடுமுறை இல்லத்திற்கு ஓடிவிட்டிருந்தான். உற்சாக வெடி வாணங்கள் தலைநகர் கெய்ரோவின் உச்சியில் கலக்கிக் கொண் டிருந்தன. தஹ்ரீர் சதுக்கத்தில் லட்சோப லட்சம் மக்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி உணர்ச்சி வெள்ளத்தில் ததும்பிக் கொண்டிருந்தனர்.

அதற்குச் சில நாட்கள் முன்னதாகத்தான் மற்றுமொரு அரபு நாடான துனிசியாவில் இதே மாதிரி இன்னொரு போக்கிரி சர்வாதி காரியான பென் அலி, வாரக்கணக்கில் தொடர்ந்து நடந்த மக்கள் எழுச்சிக்குமுன் தாக்குப்பிடிக்க முடியாமல் நாட்டை விட்டு ஓடினான். நாம் இங்கே தைப் பொங்கல் கொண்டாடிக் கொண்டிருந்த இந்த ஜனவரி 15 அன்று துனிசியா மக்கள் மேற்படியான அவர்களது பேரானந்தப் பொங்கலைக் கொண்டாடியது, அருகில் இருந்த எகிப்து மக்களை அடுத்த பத்து நாளுக்குள் மேற்காசியாவின் அந்தப் பகுதியின் அரசியல் கூர் முனைக்குக் கொண்டு நிறுத்த மிகப் பெரும் உத்வேகத்தைத் தந்துவிட்டது. சுதந்திரம், ஜனநாயகம், விடுதலை... இதுதான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏமன், ஜோர்டான், லிபியா என்று வட ஆப்பிரிக்க - மேற்கு ஆசியா பிராந்தியத்து மக்களை ‘இது பொறுப்பதில்லை....’என்று தத்தமது ஆட்சியாளர்க்கு எதிராகத் திரண்டெழ வைத்துக் கொண்டிருக்கிறது..

மத்திய கிழக்கு நாடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

“எந்த நோக்கமற்றும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் ஏதாவது உயரிய நோக்கிற்காக உயிரை விடுவது மேல்” என்று எழுதியிருந்த மிகப் பெரிய பதாகைகளோடு ஆண்களும் பெண்களுமாக எகிப்து மக்கள் திரண்ட கெய்ரோ மாநகரின் அந்தச் சதுக்கத்தின் பெயரான தஹ்ரீர் என்பதற்குப் பொருளே விடுதலை என்பது தான்..

உலகின் தொன்மை வாய்ந்த நாகரிகங்களில் நைல் நதி ஓடும் எகிப்து வரலாற்றுச் சிறப்புமிக்கது. பிரமிக்க வைக்கும் பிரமிடுகளும், கம்பீர ஸ்பிங்க்ஸ் உருவங்களும், இன்ன பிறவும் அலங்கரிக்கும் இந்த தேசத்தின் வரைபடம் வட ஆப்பிரிக்காவில் ஒரு காலும், சூயஸ் கால்வாய் கரையைக் கடந்து மேற்கு ஆசியாவில் ஒரு காலுமாக இருக்கிறது. இரண்டு கண்டங்களில் கால் பாவி நிற்பதால் இவற்றின் இணைப்புப் பாலமாகவே அழைக்கப்படுவது எகிப்து.

ஹொஸாம் எல் ஹமாலவி ஒரு துடிப்பான பத்திரிகையாளர். மாணவப் பருவத்திலேயே கொழுந்துவிட்டெரிந்த ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு அவரது அரசியல் பார்வையைச் செதுக்கத் தொடங்கியிருந்தது. 1998ல் அவரது தூண்டுதலால் அதற்குமுன் பல்லாண்டுகளாக பல்கலைக் கழக வளாகங்கள் காணத் தவறியிருந்த மாணவர் கலகத்தைச் சந்தித்தன. இராக்கில் அமெரிக்கா குண்டு வீச்சை நடத்துவதற்கு எதிராக அவர் திரட்டிய சில நூறு மாணவர்களுக்கும் அது புதிய அனுபவம். ஒரு கணம் அசந்துபோய் நின்று விட்டுப் பிறகு அவர்களை இரும்புப்பூண் போட்ட கழிகளால் புரட்டி எடுத்த காவல் துறைக்கும் அந்தக் கலகம் புதிய காட்சி. பின்னர் உள்நாட்டில் ஓர் ஆங்கில நாளேட்டில் வேலைக்கான நேர்காணலில் அந்த வேலையெல்லாம் சும்மா ஒரு பக்கத்தில், தமது இலட்சியம் முபாரக் ஆட்சியை வீழ்த்துவது என்று அவர் சொன்னதைக் கேட்டு பத்திரிகை ஆசிரியர் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். வேடிக்கையை நிறுத்திவிட்டு வேலைக்கு வா என்று வேலை போட்டும் கொடுத்திருக்கிறார். ஹமாலவியினது கனவு இத்தனை துலக்கமாக நிறைவேறியிருக்கிறது இப்போது.

துனிசியா எழுச்சி வெற்றி பெற்ற அடுத்த நாளே தொடங்கி முடிய எகிப்து கிளர்ச்சி ஒன்றும் அத்தனை திடீர் போராட்டம் அல்ல... அதன் விதைகள் பல்லாண்டுப் பெருந்துயரத்தின் வெறுப்புணர்வில், அடங்க மறுக்கும் உள் கொதிப்பில், முற்போக்கு சக்திகளின் உள்ளோட்ட கருத்துப் பரப்புதலின் ஆழ் நிலத்தில் ஊன்றப்பட்டிருப்பதை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆண்டாண்டுகளாய் அடக்கிவைக்கப் பட்டிருந்த தொழிலாளர்களின் கலகம், டிசம்பர் 2006ல் தலைநகர் கெய்ரோவிற்கு வடக்கே மகல்லா நூற்பாலையில் பெரும் போராட்டமாக வெடித்ததைச் செய்தியாளராக அருகிருந்து பார்த்ததோடு, அதற்கு ஆதரவும் திரட்டியவர் ஹமாலவி. தங்களது சர்வதேச செய்தித் தொடர்பாளராக அவரை அந்தத் தொழிற் சங்கத் தலைவர்கள் கொண்டாடியிருக்கின்றனர். மாணவர்கள், பல் துறை ஊழியர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், இலக்கியவாதிகள்.... எல்லாம் தற்போதைய வரலாற்றுப் போராட்டத்தில் அணிவகுத்ததற்கு இப்படி யான சின்னஞ்சிறு உள் வரலாறுகள் உண்டு. துனிசியாவின் வெற்றிக் களிப்பின் தீப்பொறி சட்டென்று இங்கும் பெரிய தீயைப் பற்ற வைத்துவிட்டது.

அரபு மண்ணின் எண்ணெய் வளம் சிந்தாமல், சிதறாமல் தங்களை வந்தடை வதற்கும், பாலஸ்தீனர்களின் உரிமைப் போர் நடக்கும் மேற்கு காசா பகுதியில் தங்களது செல்லப் பிள்ளையான இஸ்ரேல் செய்யும் அராஜக நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுப்பதற்கும் மிகவும் வாய்ப்பான மண் அது என்று அமெரிக்காவிற்குத் தெரியும்.... ஆகவேதான், ஜனநாயகம் தேவை என்ற ‘டப்பிங்’ குரலைத் தாங்களே கொடுத்து விடுவது என்று பேசத் துவங்கியது அமெரிக்கா. சவூதி அரேபியா உள்ளிட்டு அரபு நாடுகளின் எந்தப் பகுதியிலும் ஜனநாயகம் பற்றி பேசாத அமெரிக்கா இப்படி திடீரென்று ஜனநாயகத் துடிப்போடு புறப்பட்டது ஏன் என்று யாரும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. தனக்கு சலாம் போட்டுத் தனது கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதுதான் ஒரு நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் போன்றவற்றின் அடையாளம் என்று அமெரிக்கா பல முறை தெளிவாக்கி இருக்கிறது.

அரசின் ஆதரவுக் கையாட்படை தேசத்தின் உன்னத கலைச் செல்வங்கள் வைக்கப் பட்டிருக்கும் மியூசியத்தைச் சூறையாடச் சென்றபோது, சாதாரண மக்கள் மனிதச் சங்கிலியாகக் கை கோர்த்து அரணாக நின்று காத்ததை ‘ஹிந்து’ நாளேட்டின் வாசகர் களின் ஆசிரியர் எஸ்.விசுவநாதன் (பிப்ரவரி 14) பெருமிதத்தோடு சுட்டிக் காட்டுகிறார். தேசத்தின் பாதுகாப்பு யார் கையில் என்பதன் பிரதிபலிப்பு அது.

அமெரிக்க அரசின் சார்பாக உடனே எகிப்துக்குப் பறந்து சென்ற அதிகாரி நிலவரங்களை தங்கள் அரசுக்குச் சொல்லி இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்குவதில் பின்வாங்கிய இராணுவம் எடுத்த நிலைக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும். துவக்கத்தில் கொல்லப்பட்ட 300 பேரின் படுகொலையும், சுதந்திர வேள்வியில் தாங்களாகத் தங்களை எரித்துக் கொண்டோரின் தியாகமும் இராணுவத்தின் போக்கை தீர்மானிப்பதில் பங்கு வகித்திருக்கலாம். இனியும் நீடிக்க முடியாது என்ற கட்டத்தில் முபாரக் ஓடிவிட்டார். ஆரம்பத்தில் சவாலுக்கு நின்றவர், அதற்காகவே பரவலான வெறுப்பை ஈட்டியிருக்கும் மக்கள் விரோதி சுலைமானை தமக்குத் துணையாக துணைத் தலைவராக நியமித்தவர், பிறகு அந்த சுலைமான் மூலம் அறிவிப்பு கொடுத்துவிட்டு பதவி விலகிச் சென்றுவிட்டார்.

பிப்ரவரி 11 வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்த கதையின் அடுத்த அத்தியாயம் இப் போது இராணுவத்தின் கைக்குச் சென்று விட்டது. அது ஜனநாயகத்தை நோக்கி நடை போட்டு வர வேண்டியது எதிர்காலத்தின் கையில் இருக்கிறது. ஒரு ஜனநாயக ஆட்சி அரும்பவேண்டுமென்ற மக்களின் விருப்பம் அத்தனை சீக்கிரம் நிறைவேறிவிட முடியாத சவால்கள் நிரம்பவே உண்டு.

புரட்சி முற்றுப்பெற்றுவிடவில்லை என்கிறார் ஹமாலவி. இன்னும் தொடரவேண்டிய திருக்கிறது...கிளர்ச்சிக்கு வந்த மத்திய தர அறிவுஜீவிகள் இந்தக் கட்டத்தோடு எல்லாவற்றிற்கும் ஆறு மாதம் ஓய்வு கொடுத்துவிட் டுத் தங்களது உயர் ஊதிய வேலையை நோக்கிச் சென்றுவிடலாம். ஆனால் குறைந்த ஊதியத்தில் தவித்துக் கொண்டிருக்கும் ஆலைத் தொழிலாளி போராட்ட ஆயுதத்தைக் கீழே போட முடியாது என்கிறார் அவர். தொடரும் வங்கி வேலை நிறுத்தங்கள், தொழிலாளர் போராட்டங்கள் அதைத்தான் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

எகிப்து உள்ளிட்டு மத்திய கிழக்குப் பகுதியெங்கும் கிளர்ந்து பொங்கிக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சி, உலகெங்கும் சுதந்திர வேட்கை கொண்டிருப்போரை வசீகரித்து ஈர்க்கிறது. புதிய தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்தின் விளைவால் பாதிப்புறும் நாடுகளிலுள்ள மக்களை மாற்றுக் கொள்கை களின் சாத்தியங்களை நோக்கிச் சிந்திக்க உசுப்புகிறது. அடக்குமுறைக்கும், ஒடுக்கு முறைக்கும், ஆயுத பலமிக்க இராணுவத் திற்கும் எதிராக மிகச் சாதாரண மக்கள் ஒன்று பட்டு உறுதியாக அணிதிரண்டு நிற்கும்போது ஆட்சியாளர்களின் நாற்காலிகளை உடைத் தெறிய முடியும் என்ற நம்பிக்கையைப் புதுப் பித்துத் தந்திருக்கிறது. ஏகாதிபத்தியத்தின் தன்மையை மீண்டும் அம்பலப்படுத்தியிருக் கிறது.

துனிசியாவிலும், எகிப்திலும் கிளர்ச்சிக் காலத்தில் பாரம்பரிய இசையை இசைத்தபடி வீதிகளில் திரண்ட மக்கள் கோரியது, விடுதலையை.. ஜனநாயகத்தை..சுதந்திரக் காற்றை..

பஹ்ரைனில், துப்பாக்கிச் சூட்டைச் சந்தித்தும் போராட்டங்கள் தொடரும் லிபியாவில், ஜோர்டானில், இன்னும் போராட்டத்தின் அடுத்த கட்டங்களைத் தொடரும் துனிசியாவில்.... ஜனநாயகத்தின் குரல்கள் எதிரொலித்தபடி மத்திய கிழக்கில் இருக்கும் அரபு நாடுகளின் வரலாறு இப்போது இந்த நூற்றாண்டில் புதிய வரலாறை எழுதத் தொடங்கி இருக்கிறது.


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Feb 28, 2011 10:34 am

உங்களுடைய கட்டுரையின் நோக்கம் ஒவ்வொருவரும் ஆயுதம் ஏந்தி போரிட வேண்டும் ,அப்படித்தானே எதிர்பார்க்கிறீர் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Feb 28, 2011 10:49 am

என்னையா தேவை இல்லாமல் கிளப்பிவிடுகிறீர்?ஆயுதம் ஏந்தி போராடுவது தான் போராட்டமா ?எல்லாநாடுகளிலும் மக்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் .தங்கள் வாழ்வுக்காக .அரசியல் வாதிகளின் ஊலழல்ளுக்கேதிராக.
நாங்க சொல்லி நீங்க செய்தா அது போராட்டம் அல்ல ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக