புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இசை ஞானி இளையராஜா யார் தெரியுமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின் -
1980களின் இறுதிப்பகுதியில் இளையராஜா ஒரு வாரப்பத்திரிகையில் Johann Sebastian Bach பற்றி ஒரு சிறிய தொடரை எழுதினார். அதைப்படிப்பவர் எவருக்கும் அவருக்கு சங்கீத மும்மூர்த்திகளிடம் எவ்வளவு பிரேமையும், பக்தியும் மதிப்பும் உண்டோ அதற்கு இணையாக J.S. Bach ஐயும் ஒரு மஹானுபாவராக இராகதேவனாக அவரால் போற்றப்படுவது தெரியவரும். பின்னால் அக்கட்டுரைகளின் தொகுதி ஒரு சிறியநூலாகவும் வெளிவந்ததுண்டு. என் புலம்பெயர்வாழ்வின் ஆரம்பத்தில் அரசுதரும் உதவிப்பணத்தில் வாழ்ந்துகொண்டிருந்தகாலை ஒருநாள் பெர்லினில் Kiperts என்னும் பாரிய புத்தகக்கடையினுள் நுழைந்து மேய்ந்துகொண்டிருந்தபோது அங்கே இசைநூல்களின் பகுதியில் J.S. Bach பற்றிய ஒரு அருமையான நூல் இருப்பதைக்கண்டேன். அட்டையில் அவரது ஓவியம், உள்ளே J.S. Bach ன் பிறந்த மனை, அவர் படித்த பள்ளிக்கூடம், பயின்ற இசைக்கல்லூரி, பணிபுரிந்த Leipzig St.Thomas தேவாலயம், 300 கிமீட்டர்கள் கால்நடையாக நடந்து சென்று இசைநிகழ்ச்சி பார்த்த ஹம்பேர்க்கின் ஓபரா கலைக்கூடம் எனப் பல அரிய படங்களுடன் வழுவழுப்பான உயர்ந்த தாளில் செம்பதிப்பாக அந்நூல் பதிக்கப்பட்டிருந்தது. உடனே எனக்கு இந்நூலை இளையராஜா பார்க்க நேர்ந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்றுதான் தோன்றியது. விலையப் புரட்டிப்பார்த்தேன் 50 D.Marks என்றிருந்தது. கனதியான அந்நூலை அனுப்புவதற்கும் இன்னொரு 50 D.Marks தேவைப்படும் என்பதும் தெரிந்ததுதான். அது இங்கே ஒரு மாதத்தை ஓட்டுவதற்குத் தேவையான தொகை, எனினும் அதைவாங்கி அவருக்கு விமான அஞ்சலில் அனுப்பிவைத்தேன். ” பெற்றுக்கொண்டேன் நன்றி ” என்று இரண்டு வார்த்தைகள் எழுதுவாரென்பது என் எளியதும் நியாயமானதுமான எதிர்பார்ப்பு. நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்களாகி இன்று கால்நூற்றாண்டுகள் கடந்தும் விட்டன. பதில் இன்றுவரை இல்லை.
சில ஆண்டுகளின் பின் முனைவர் வா.மு. சேதுராமன் தலைமையில் இயங்கும் பன்னாட்டுத்தமிழ் மன்றம் பெர்லினில் நடத்திய ஒரு மகாநாட்டுக்காக கவிஞர் இரவிபாரதி வந்திருந்தார். அவர் என்னுடனேயே சிலநாட்கள் தங்கினார். இவர் பாலுமகேந்திராவின் ‘ மறுபடியும் ’ படத்தில் ரோஹிணி பாடி ஆடும் ” ஆசை அதிகம் வைச்சு மனதை அடக்கி வைக்கலாமா என் மாமா ” என்கிற துள்ளுப்பாடலை எழுதியவர். (இன்னும் எம்.கே.தியாகராஜா பாகவதரின் சகோதரரின் மகனுமாகிய இவர் திரு. மூப்பனாரின் காரியதரிசியாகவும் சிலகாலம் பணியாற்றியவர்) இரவிபாரதி மூச்சுக்கு மூச்சு நம்மிடம் இளையராஜாவின் கொடியை உயர்த்திப்பிடித்தபடிக்கு இருந்தார். இளையராஜா மீது சற்றுகோபமாக இருந்த நான் அவரிடம் இளையராஜாவுக்கு Johann Sebastian Bach இன் நூல் அனுப்பிவைத்த கதையைச் சொன்னேன். “அட நீங்க ஒண்ணு “ என்றுவிட்டுத் தன் கதையைச்சொனார் இரவிபாரதி:
“ ஒரு நாள் இளையராஜாவிடமிருந்து வீட்டில் வந்து சந்திக்கும்படி போன் வந்தது என்றார்கள். ஏதோ இன்னொரு பாட்டு எழுதுற சான்ஸாக்குமென்று குதித்துக்கொண்டு என் ஸ்கூட்டரை விரட்டிக்கொண்டு அங்கு சென்றேன். போனால் அது வேறு விஷயம். என்னவென்றால் அவர்கள் வீட்டில் திடிருட்டுப்போயிருந்தது. அவர்கள் வீட்டின் உதவியாள் ஒருவர் (அவரும் திருச்சியைச் சேர்ந்தவர்) ஒரு இலக்ஷம் ரூபாய் பணத்தை (உண்மையான தொகையை இங்கே நான் தவிர்த்துள்ளேன்.) உருவிக்கொண்டு ஓடிவிட்டார்.
பொலீஸுக்குப்போனால் விஷயம் கெட்டுவிடுமென்று நினைத்தார்களோ, அல்லது வேறேதும் காரணமோ தெரியவில்லை. ’ நாங்கள் பொலீஸுக்குப்போக விரும்பவில்லை. உங்கள் ஊர்க்காரர்தானே, நீங்கள், ஆளைப்பார்த்து நைச்சியமாகப்பேசிப் பணத்தை எப்படியாவது மீட்டுத் தந்துவிடுங்கள் ’ என்றனர் அவரும் மனைவியுமாக.
இவ்வளவு தொகையைத் திருடிச்சென்றவனிடம் பேசிமீட்பதாவது…………. எனக்குச் சற்றேனும் நம்பிகையில்லை, சரி ஒருதரம் முயன்றுதான் பார்ப்போமேயென்று தாமதிக்காமல் உடனே ஒரு வாடகைக்காரை வைத்துக்கொண்டு இன்னொரு நண்பனையும் துணைக்குக்கூட்டிக்கொண்டு திருச்சிக்குப்புறப்பட்டேன். அவனது வீட்டை ஒருவாறு கண்டுபிடித்ததும் எமது வண்டியைதூரத்தில் ஓரங்கட்டி நிறுத்திவைத்துவிட்டு கால்நடையாக அவனுடைய வீட்டுக்குப்போனோம். அவனோ வீட்டில் சமர்த்தாகச் சம்மணமிட்டுச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். என்னை அவனுக்கு முன்பே தெரியுமாதலால் எம்மைக்கண்டவுடன் ஆள்சிறிது கலவரமாவதை உணரக்கூடியதாக இருந்தது. அவன் சாப்பிட்டுமுடிக்கும்வரையில் காத்திருந்தோம். என்னுடன் கூடவந்த நண்பரும் ஒரு காவல்துறை அதிகாரியைப்போலவே பார்வைக்கு வாட்டசாட்டமாக இருப்பார். சாப்பாடானதும் நாங்கள் அவனைத்தனியே அழைத்துப்போய் நைஸாக கதையைக்கொடுத்தோம். ’ கண்ணா இளையராஜா சாருக்கு இன்னிக்கு உலகத்தில இருக்கிற செல்வாக்கு உனக்கு தெரியாததல்ல, அவர் உன்னை என்னவேணுமின்னாலும் பண்ணலாம். இருந்தும் அவர் நல்ல மனுஷன் பார்த்தியா, உன்னை உதைக்க வைப்பதையோ, ஆறேழுவருஷங்கள் உள்ள தள்ளிக் கழி திங்கவைக்கிறதையோ அவர் விரும்பல. அவர் கேஸ் கோர்ட்னு எதுக்கும்போகமாட்டார். உன்னை மன்னிச்சுடுவார். பணத்தை ஒழுங்காக் கொடுத்திடுபா’ என்றோம். அவனுக்கு கண்கள் கலங்கியேவிட்டன. ’ஏதோ சபலத்துல செஞ்சுப்புட்டேன்………….சார். அவங்கமேலும் தப்புத்தான்……… கண்டவர் கண்ணிலும் படும்படிக்கு பணத்தை அப்பிடிக் கேர்லெஸா போட்டுவைக்கலாமா’ என்றான். எமக்கும் நம்பிக்கை வந்தது. இருங்க சார் என்றவன் வீட்டுக்குள் போய் ஒரு ப்ரௌண் தாள் பையிலிருந்து பணத்தைக்கொண்டுவந்து தந்தவன் ‘ ஒரு முன்னூறு ரூபா எடுத்துப்புட்டேங்க வழிச்செலவுக்கு ’ என்றான். பின் ”இம்மாந்தூரம் வந்திருக்கீங்க இன்னிக்குச் சாப்பிட்டுத்தான் நீங்க போவணும்” என்றும் உபசரித்தான். பணத்தை மீட்டுவந்து கொடுத்தோமே இந்தப்பெரியவருக்கு ’நன்றி’ என்றொரு வார்த்தை சொல்லவோ எம்மை உபசரிக்கவோ தெரியலை. கடேசி எமது வண்டிச்செலவையோ பெற்றோல் செலவையாவது கொடுக்கணும்னு தோணிச்சா மனுஷனுக்கு? இன்றுவரை இன்னொரு படத்துக்கு என்னை ஒரு குத்துப்பாட்டு எழுதவாவது கூப்பிட்டிருப்பாரா?” என்று முடித்தார்.
ஒருமுறை ஏ.ஆர்.ரகுமான் பிரபலமாகி வந்துகொண்டிருந்த நேரம் நட்புரீதியிலான ஒரு உரையாடலின்போது ஒர் நிருபர் இளையராஜவிடம் கேட்டாராம் ” ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களில் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது? “ இளையராஜா அக் கேள்வியையே காதில் விழாததுபோல் இருக்கவும் அதேகேள்வியைத் திருப்பி மீண்டும் வேறுமாதிரி “ கொஞ்சம் சரிசெய்தால் கேட்குபடி இருக்கும் என்று ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களில் எதையாவது நீங்கள் நினைத்ததுண்டா? “ என்று கேட்கவும் நான் ருசியான முழுச்சாப்பாடு போடுகிற சமையல்காரன் கண்ணா…….எங்கிட்ட பொப்கார்ண் பற்றிய பேச்செல்லாம் எதற்கு?” என்றாராம். இதை முழுதாக நம்பலாம். காரணம் அவர் இந்த ’ பொப் கார்ண் ’என்கிற வார்த்தையை சிங்கப்பூரிலும் ஒரு மேடையில் பிரயோகித்திருக்கிறார். ஞானியாகவே இருந்தாலும் இன்னொருவருடைய திறமையை ஒப்புக்கொள்வதில் தயக்கம். தன்னை ஒரு தலித்தென்று ஒப்புக்கொள்வதில் தயக்கம்.
இளையராஜா என்னதான் தன்னை ஒரு சித்தனாக முத்தனாக மெஞ்ஞானியாக கற்பித்துக்கொண்டாலும் அவரது சனாதன வழிபாட்டு முறைகள், ஆச்சார பூஜா புனஸ்காரங்களன்ன நடவடிக்கைகள் எல்லாம் social-morals , Sociology சார்ந்த விஷயங்களில் அவர் இன்னும் தேறவில்லை என்பதைத்தான் காட்டுகின்றன. இல்லாவிடில் “ராஜா கையை வைத்தால் அது ராங்காப்போனதில்லை“ போன்ற எம்.ஜி.ஆர்பாணிப் பிரதிக்னைகளை எல்லாம் பண்ணியிருக்கமுடியாது.
இசையும் ஒரு சமையல் முயற்சிபோலத்தான், நல்ல சமையல்காரர் என்பதற்காக அவர் சமையல் எப்போதும் அசத்தலாக அமைந்துவிடுமென்றும் இல்லை. எதிர்பார்க்கவும் முடியாது. மதுராந்தகத்தில் ஒரு பாட்டி யாழ்ப்பாணத்துப்பாணியில் அருமையான பாலப்பம் சுடுவாரென்று சொன்னார்கள். நாலு நண்பர்கள் சேர்ந்து ஐம்பது கி.மீ தூரத்துக்கு வாடகைக்கார் வைத்துக்கொண்டு போனோம். அன்று அவர் சுட்ட அப்பங்களின் சுவையோ மிகச் சாதாரணமாகவே இருந்தது.
நாட்டுப்புற இசையை அரங்கறியச்செய்த இம்மாமேதை திருவாசகம் சிம்பொனியைக்கூட அவர் ஒருவிதமாகச்செய்ய நினைத்து அதுவேறொரு விதமாக வந்துவிட்டதுபோலத்தான் படுகிறது. திருவாசகத்தின் உயிரே அதன் உருக்கந்தான். ஆனால் இத்தனை வாத்தியங்களையும் கலைஞர்களையும் வைத்துக்கொண்டு சிம்பொனியாக இசைத்ததில் அச்சாகித்தியத்தின் உருக்கமுமும் நெகிழ்வும் ரசமும் காணாமல் போய்விட இசை தனியாக நிற்கிறது. பரவாயில்லை ஆனாலும் அவர் இன்னும் ஒரு “ நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மாவுக்காக ” எமக்குத் தேவையானவராகவே இருக்கிறார். பத்மபூஷன் அன்ன லோகாயத விருதுகளை விடவும் உலக மக்கள் மனதில் தீராது ரீங்கரித்துக்கொண்டிருக்கும் எத்தனையோ வர்ணமெட்டுக்களை உற்பத்தி செய்ததால் அவர்தம் மனதிலும் வாழ்ந்து நினைக்கப்படுபவர் என்பதுதான் அவருக்குப்பெருமை.
மானுஷ விழுமியங்களில் மறுக்கள் மாறுபாடுகள் உள்ள ராஜா எப்படியாவது இருக்கட்டும் சகித்துக்கொள்வோம். ஆனால் அற்புத இசைஞானமும், வண்ண வண்ணக்கற்பனைகளும், படைப்பூக்கமுமுள்ள இளையராஜா என்கிற ஜீனியஸ் எங்களுக்கு என்றுந்தேவையானவர், அவரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டியது எமது கடமையும்.
submit_url ="http://sathish777.blogspot.com/2010/03/blog-post_09.html"
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
- சிவசங்கர்பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
அப்படி இல்லை அக்கா... திறமை இருக்கும் இடத்தில் பணிவும், பண்பும் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. எனக்கு இளையராஜாவின் இசை மிகவும் பிடிக்கும். ஆனால், அவரின் மேற்குறிப்பிட்ட பண்புகள் உண்மையாயின், இளையராஜா என்ற தனி மனிதரை ஆதரிப்பதில் தயக்கம் ஏற்படும்.உதயசுதா wrote:திறமை இருக்குமிடத்து கர்வமும் இருக்கும் என்பது நியதிதானே.
அவருக்கு இருக்கும் திறமைக்கு கர்வம் இருப்பதில் என்ன தவறு?
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சில நேரங்களில் சில மனிதர்கள்.
இந்த இடத்தில் மாமேதை அப்துல் கலாம் அவர்களை அன்புடன் நினைவுக்கு கொண்டு வருகிறேன்..... யார் ஒரு கடிதம் எழுதினாலும் அதற்கு தன் கையாலயே பதில் எழுதக்கூடியவர் அந்த மாமேதை......
நானும் இளையராஜாவுக்கு எதிரி இல்லை.... அவருடைய பாடல்கள் அத்தனையும் தேன் தேன்.....
எத்தனை உயர்வுள்ள இடத்தில் இருந்தாலும் கொஞ்சம் தன்னடக்கமும் சேர்ந்து இருந்துவிட்டால் கிரீடத்தில் வைத்த வைரம் போல் ஜொலிக்கும்....
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு தாமு.....
நானும் இளையராஜாவுக்கு எதிரி இல்லை.... அவருடைய பாடல்கள் அத்தனையும் தேன் தேன்.....
எத்தனை உயர்வுள்ள இடத்தில் இருந்தாலும் கொஞ்சம் தன்னடக்கமும் சேர்ந்து இருந்துவிட்டால் கிரீடத்தில் வைத்த வைரம் போல் ஜொலிக்கும்....
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு தாமு.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
அப்பா ரஹ்மான் அவர்களிடம் எவ்வளவு இருக்கும் ?ஆனால் அவர் அப்படி இல்லையே ?எனக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்sivasangker wrote:அப்படி இல்லை அக்கா... திறமை இருக்கும் இடத்தில் பணிவும், பண்பும் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. எனக்கு இளையராஜாவின் இசை மிகவும் பிடிக்கும். ஆனால், அவரின் மேற்குறிப்பிட்ட பண்புகள் உண்மையாயின், இளையராஜா என்ற தனி மனிதரை ஆதரிப்பதில் தயக்கம் ஏற்படும்.உதயசுதா wrote:திறமை இருக்குமிடத்து கர்வமும் இருக்கும் என்பது நியதிதானே.
அவருக்கு இருக்கும் திறமைக்கு கர்வம் இருப்பதில் என்ன தவறு?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
kannan3536 wrote:அப்பா ரஹ்மான் அவர்களிடம் எவ்வளவு இருக்கும் ?ஆனால் அவர் அப்படி இல்லையே ?எனக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்sivasangker wrote:அப்படி இல்லை அக்கா... திறமை இருக்கும் இடத்தில் பணிவும், பண்பும் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. எனக்கு இளையராஜாவின் இசை மிகவும் பிடிக்கும். ஆனால், அவரின் மேற்குறிப்பிட்ட பண்புகள் உண்மையாயின், இளையராஜா என்ற தனி மனிதரை ஆதரிப்பதில் தயக்கம் ஏற்படும்.உதயசுதா wrote:திறமை இருக்குமிடத்து கர்வமும் இருக்கும் என்பது நியதிதானே.
அவருக்கு இருக்கும் திறமைக்கு கர்வம் இருப்பதில் என்ன தவறு?
யாரு அவரு ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|