புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_c10தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_m10தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_c10தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_m10தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_c10 
47 Posts - 65%
heezulia
தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_c10தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_m10தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_c10 
21 Posts - 29%
T.N.Balasubramanian
தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_c10தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_m10தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_c10தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_m10தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 8:21 am

எந்த `மை’யை வைத்து மயக்குகிறார்களோ தெரியவில்லை, டீன்-ஏஜ் என்னும் விடலைப் பருவத்தில் ஆணோ-பெண்ணோ சீக்கிரம் காதல் வயப்படுகிறார்கள். கண்ணடிபட்டு காத லாகும் இந்த டீன்-ஏஜ் காதலில் பெரும்பாலானவை கல்லறையில் முடிவது தான் சோகம்..
`காதலுக்கு இனம், மதம், மொழி பேதமில்லை’ என்று வியாக்கியானம் பேசும் ஜோடிகள், எதிர்ப்புகள் வலுக்கும் போது அதனை சந்திக்க திராணியில்லாமல் மனம் ஒடிந்து போவ தேனோ…? படிக்கும் வயதில் காதல் தேவைதானா?- என்று எத்தனையோ கேள்விகள், பத்திரிகைகளில் காதல் ஜோடி தற்கொலையை படிக்கும் போது நினைவலைகளில் ஓடிக் கொண்டிருக்கும்.
`காதல்’ எப்போது பிரச்சினையாக மாறி டீன்-ஏஜ் இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டு கிறது என்பதை இனி பார்ப்போம்.
`தேசிய குற்ற ஆவண காப்பகம்’ என்கிற அமைப்பு கவலை தரும் செய்தியை வெளி யிட்டுள்ளது. “ஆண்டுதோறும் டீன்-ஏஜ் காதல் ஜோடிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. 2006-07-ம் ஆண்டில் மட்டும் 5857 பேர் தற்கொலையை கச்சிதமாக நிறை வேற்றி உள்ளனர்” என்கிற வேதனை தரும் செய்தியை அந்த அமைப்பு புள்ளி விவரத் துடன் காட்டுகிறது.
காதல் தோல்வியுடன், பரீட்சை தோல்வியும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி தற்கொலைக்கு உசுப்பேத்துகிறது என்கிற விவரமும் தெரிய வருகிறது.
பக்குவப்படாத வயதில் தோன்றும் காதல் எண்ணங்கள் எது நல்லது? எது கெட்டது? என்பதை சிந்திக்க விடுவதில்லை. நாளடைவில் பெற்றோருக்கு விஷயம் தெரிந்து வில் லங்கம் ஆகும் போது பெற்றோரையே உதறித்தள்ளிவிடும் எண்ணம் வந்துவிடுகிறது. பிரச் சினை இன்னும் வலுத்தால் தற்கொலை முடிவை நோக்கி இறுதிப் பயணம் மேற் கொள்கிறார்கள்.
“மனநெருக்கடி அதிகரிப்பு, உறக்கம் இல்லாமல் தவித்தல், தனிமையில் உட்கார்ந்து சம் பந்தம் இல்லாமல் யோசித்தல், மன அழுத்தத்துக்கு உள்ளாகுதல் உள்ளிட்ட காரணங்கள் டீன்-ஏஜ் காதலர்களை தற்கொலைக்கு அழைத்துச் செல்கிறது” என்கிறது ஒரு ஆய்வுத் தகவல்.
வாழ வேண்டிய பொற்காலம் காத்திருக்க, அதனை மறந்து மரணம் ஒன்றே தீர்வு என்கிற ரீதியில் முதுகெலும்பு இல்லாமல் சிந்திக்க காரணம் யார்? என்று ஆராய்ந்தால் `பெற் றோர்கள்’தான் முதலிடம் பிடிக்கின்றனர்.
இளம் பருவத்தில் குழந்தைகளின் சிந்தனை, செயல்பாடுகளில் வரும் மாற்றங்களை அவர் கள் கண்டும் காணாததுபோல் விட்டுவிட்டால் பிரச்சினைக்கு தூபம் போடுவது போல் ஆகிவிடுகிறது. ஒருவேளை மகன்-மகளிடம் விசாரித்து அவர்கள் காதலிப்பதை ஒப்புக் கொண்டால் தாம்தூம் என்று விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து அவர்களை அடித்து உதைக்கிறார்கள். ஆனாலும் அடிபட்டவர்கள் தங்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் காதலிப்பது தெரிந் தால் பெற்றோரின் நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும்?
1. மகனோ-மகளோ காதலிப்பது தெரிந்தால் வீட்டில் அவர்களை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு மிகப்பெரிய பிரளயத்தை ஏற் படுத்திவிட வேண்டாம்.
2. டீன்-ஏஜ் மாணவப் பரு வத்தில் வரும் காதலால் படிப்பு- எதிர்கால லட்சியத்தில் விழும் கேள்விக் குறிகளை பெற்றோர் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். பெரியோர் புத்திமதி சொல்ல வேண்டும் என்கிற காரணத்துக்காக அக்கம்பக்கத்து வீடுகள், தூரத் தில் வசிக்கும் உறவினர் வீடுகளுக்கு தகவல் அனுப்பி, மகனின் – மகளின் காதல் ரக சியத்தை பரப்பிவிட வேண்டாம். இது அவர்களை எதிர்மறையாக சிந்தனை செய்ய வைத்து விடும்.
3. புத்திமதிகளுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை எனில் சிறந்த மனோதத்துவ நிபு ணரிடம் அவர்களை அழைத்துச் செல்லலாம்.
4. அவர்களின் நெருங்கிய நண்பர், பிடித்த உறவினர் மூலம் நல்ல விஷயங்களை எடுத் துக் கூறி புரிய வைக்கலாம்.
5. காதல் வாழ்க்கையால் எதிர்காலத்தை இழந்து தவிப்பவர்களைப் பற்றி எடுத்துக்கூறி நடைமுறை வாழ்க்கை என்ன என்பதை புரிய வைக்கலாம்.
6. பெற்றோரே நல்ல விஷயங்களைக் கூறி சிந்தனையைக் கிளறிவிட்டு பிள்ளைகளை இறுதி முடிவு எடுக்க வைக்கலாம்.
7. சில வீடுகளில் மூத்த சகோதர-சகோதரிகள் மணமாகாத நிலையில் இருப்பார்கள். எனவே குடும்பத்தில் அவர்களுக்கு உண்டான பொறுப்பு, கடமையைப் பற்றி எடுத்துக் கூறலாம்.
8. எக்காரணம் கொண்டும் காதல் வயப்பட்ட தங்கள் குழந்தையை தனிமைப்படுத்தவோ, சந்தேக கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது. வழக்கமான அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வீட்டில் தான் தனி மைப்படுத்தவில்லை என்கிற நம்பிக்கை அவர்களிடம் தெளிவை ஏற்படுத்திவிடும்.
9. மகளோ-மகனோ காதலிப்பது தெரிந்துவிட்டால் கண்கொத்திப் பாம்பாக பின்தொடர்ந்து நிழல்போல் கண்காணிக்க கூடாது.

10. அவர்கள் விரும்பும் இடங்கள், நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தலாம்.
*****************
இளைஞர்களுக்கு ஏற்ற `5′
1. இளம் பருவத்தில் வரும் காதல் `கடவுள் கொடுத்த பரிசு’ என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். டீன்-ஏஜ் வயதில் வரும் வழக்கமான உணர்வுதான் காதல். வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க ஏற்ற வயதோ, பக்குவமோ உங்களுக்கு வரவில்லை என்பதை உணர்ந்து கொண்டாலே போதும்.
2. திருமணம் வாழ்க்கை முழுவதும் தொடரும் பந்தம். எனவே காதல் உள்பட எந்த விஷ யத்திலும் அவசரம் காட்டக் கூடாது. இதைவிட சிறந்த வாழ்க்கை எதிர்காலத்தில் அமை யும் என்று உறுதியாக எண்ணும் மனநிலையை வளர்த்துக் கொள்வது முக்கியம்.
3. இப்போதைக்கு உங்களுக்கு உள்ள கடமையை புரிந்து கொள்ளுங்கள். அதை மறந்து காதலில் தீவிரம் காட்டினால் உங்களது திறமை குன்றிவிட வாய்ப்பு உள்ளது.
4. எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, அது பலகீனமானது என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.
5. உங்கள் காதலால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் சில பிரச்சினைக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. எனவே உங்களால் மற்றவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதில்உறுதியாக இருங்கள்.


-தினத்தந்தி-




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Apr 03, 2011 10:48 am

நல்ல தகவல் அண்ணா! மகிழ்ச்சி மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 03, 2011 11:45 am

காதலிச்சு கல்யாணம் செய்த பிறகுஇத படிச்சு என்ன புண்ணியம் அழுகை

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 3:22 pm

பயனுள்ள பகிர்வு தாமு... அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 6:11 pm

பயனுள்ள பதிவு நண்பா பகிர்வுக்கு நன்றி இந்த காலத்தில் காதல் விளையாட்டாத்தான் நிறைய பேருக்கு தெரியுது தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!! 440806




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக