புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_m10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10 
306 Posts - 42%
heezulia
ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_m10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_m10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_m10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_m10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_m10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_m10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10 
6 Posts - 1%
prajai
ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_m10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_m10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_m10ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவுக்கு ருத்ர குமாரன் வேண்டுகோள்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed May 18, 2011 8:14 pm

மே 18,2011



ஈழத் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாடுகடந்த தமிழிழ அரசின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் அனுப்பிய அந்தக் கடிதத்தின் விவரம்:



நியூயார்க் 16, 2011



மதிப்புக்குரிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு,



நடைபெற்று முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியடைந்து தமிழ்நாட்டின் முதல்வராக, தாங்கள் பதவியேற்கும் இத்தருணத்தில் ஈழத் தமிழ் மக்கள் சார்பில் தங்களை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பெருமகிழ்வடைகிறது.



ஈழத் தமிழர் தேசம்; தமது தாயகத்தை பாதுகாத்துக் கொள்ளவும், கௌரவமான வாழ்வை மீட்டெடுத்துக் கொள்ளவும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் கொடுமைகளுக்கும் நீதி கோரவும் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்ளை எதிர்த்து ஜனநாயக வழியில், அரசியல் இராஜதந்திர வழிமுறைகளில் போராடும் இன்றைய தருணத்தில் தங்களது வரலாற்று வெற்றி ஈழத் தமிழ் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தினையும் தந்திருக்கிறது.



இலங்கைத்தீவில், ஈழத் தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு தமது அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான அரசியல்வெளி முற்றாக மறுக்கப்பட்டு உள்ள ஒரு சூழலில் இலங்கைத்தீவுக்கு வெளியே புலம் பெயர்ந்து வாழும்; ஈழத் தமிழ் மக்களாகிய நாம் எமது அரசியல் பெருவிருப்பாகிய சுதந்திரத் தமிழீழ அரசினை உருவாக்கிக் கொள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம்.



ஒரு தேசத்துக்குரிய தகைமை கொண்ட ஈழத் தமிழினம் சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட இனஅழிப்பு முயற்சியிலிருந்து நிரந்தரப் பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்வதற்கு தனியரசினை அமைப்பதைத் தவிர வேறு வழியேதுமில்லை என்பதனை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கிறது.



உலகெங்கும் சிதறிப்பரவி வாழும் ஒரு மில்லியன் எண்ணிக்கை கொண்ட ஈழத் தமிழ் புலம் பெயர் மக்களும் உலகின் 80 மில்லியன் தமிழ் மக்களும் ஒருங்குகூடிச் செயற்படுவதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ நாம் வழிவகுக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் நாம் செயற்பட்டு வருகிறோம்.



இலங்கைத் தீவில் சிங்கள இனவாதத்தின் திட்டமிட்ட இனஅழிப்பு நடவடிக்கைகளிலிருந்து தனது இருப்பினை பாதுகாத்துக்கொள்வதற்காக தமிழினம் நாளும் நடாத்தும் போராட்டத்தினை தாங்கள் நன்கறிவீர்கள். தமிழர் தாயகம் சிங்கள ஆக்கிரமிப்புப் பகுதியாக மாற்றப்பட்டிருப்பதையும், அங்கு தமிழர் வாழ்வு பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படிருப்பதையும் பல தடவைகள் வெளிப்படுத்தியும் உள்ளீர்கள்.



2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது வெற்றி பெற்று தங்கள் கட்சியின் ஆதரவில் மத்தியில் அரசாங்கம் அமையும் சூழ்நிலை தோன்றின் ஈழத்தமிழரின் சுதந்திரமான பாதுகாப்பான வாழ்வுக்கு சுதந்திரத் தமிழீழம் அமைவதுதான் ஒரேவழி என மத்திய அரசுடன் வாதாடி அதனை வென்றெடுப்பேன் எனத் துணிச்சலுடன் தெரிவித்திருந்தீர்கள்.



தற்போது சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற பின்னர் போர்க் குற்றவாளியான இலங்கை அதிபரை அவர் தம் தரப்பையும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவும், இலங்கை மீது பொருளாதாரத் தடையினைக் கொண்டுவரவும் இந்திய மத்திய அரசினை வலியுறுத்துவேன் என மிக உறுதிபடக் கூறியுள்ளீர்கள்.



வேறு பல அரசியல் தலைவர்கள் போல் சொல்லொன்று செயலொன்றாக இல்லாமல் - கருத்தை துணிச்சலுடன் சொல்வது மட்டுமன்றி அதனை செயல்படுத்தும் ஆற்றலும் கொண்டவர் தாங்கள் என ஈழத் தமிழ் மக்கள் நம்புகிறார்கள். இதனால் தாங்கள் முதல்வராவதை மகிழ்வுடன் வரவேற்கிறார்கள்



இலங்கையில் சிங்கள இனவாதம் தமிழர்களை சமத்துவமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கான வாய்ப்பெதனையும் கடந்த காலங்களில் விட்டு வைத்ததில்லை. இனியும் விட்டு வைக்கப் போவதில்லை. தமிழர்களின் அடையாளத்தை அழித்து, மெல்ல மெல்ல அவர்களை சிங்கள இனத்துடன் கரையப் பண்ணி இனக் கபளீகரம் செய்யும் முயற்சியினை சிங்கள அரசு மேற்கொண்டு வருகிறது.



ஈழத் தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளின் ஊடாகத் தமிழரின் பாதுகாப்பான, கௌரவமான வாழ்வுக்கான ஏற்பாடு ஒன்றை எட்டுவதற்கு எடுக்கும் முயற்ககைளைச் சந்தர்ப்பம் பார்த்து உரிய நேரத்தில் சிங்கள இனவாதம் தனது இரும்புச் சப்பாத்துக்களால் துவம்சம் செய்து விடும். இந்த நிலை தமிழீழத் தனியரசினைத் தவிர வேறு மார்க்கம் ஏதுமில்லை என்பதனை உலகுக்கு முரசறைந்து சொல்லும்.



இத்தகைய ஒரு போக்கில் வரலாறு முன்னேறும் தருணத்தில் தாங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பது தமக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமையும் என ஈழத் தமிழ் மக்கள் கருதுகிறார்கள். தாங்கள் முதல்வராக இருந்த போதுதான் ஈழத் தமிழ் மக்களின் கௌரவமான வாழ்வும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது என்பது வரலாற்றில் நிலைபெறும் வகையில் தாங்கள் செயற்பட வேண்டும் என்பதே எமது விருப்பாகும்.



தங்கள் தலைமையில் அமையும் தமிழக அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழ் மக்களுக்கும் வசந்தத்தைத் தரும் காலமாக அமையட்டும் என வாழ்த்தி நிற்கிறோம்.



நன்றி.



விசுவநாதன் ருத்ரகுமாரன்

பிரதமர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்



இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

நன்றி விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக