புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_m10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram
ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_m10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10 
14 Posts - 45%
Guna.D
ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_m10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_m10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_m10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_m10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_m10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10 
17 Posts - 4%
prajai
ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_m10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_m10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_m10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
jairam
ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_m10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_m10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_m10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_m10ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat May 28, 2011 4:07 pm

(பெரிய கவிதை. நேரம் ஒதுக்கி அமைதியாக பாருங்கள் நன்றி!)

பனி படர்ந்து புல்வெளியில்பரவி எழில்கொல்ல
பசுமைகொண்ட இலையழுது பலதுளி நீர்சிந்த
சினமெழுந்து கதிர்பனியைச் சுட்டழித்து வெல்ல
சிறகடித்துப் பறவையினம் சேதிசொல்லும் காலை
கனிசுவைக்க மாமரத்தை கிளி பறந்து சேரும்
கலகலத்த இலைமறைவில் கனிகிடந்து நாணும்
இனிபழத்தின் முகம்சிவக்க இளங்கிளியோ உண்ணும்
ஈழமண்ணின் இயற்கையதாம் இனியதொருகாலை

வனமதிலே கள்நிறைந்து வாசமிடும் பூக்கள்
வந்துபூவை கொஞ்சிமீண்டும் வான்பறக்கும்பூச்சி
இனம்மகிழச் சுதந்திரத்தை எண்ணும் ஈழமாந்தர்
ஏழைகளின் கனவுபோல என்றும் அதைத் தேட
குனியும்நடை கொள்குரங்கு கொப்புதனில் தாவி
குழைஉதிர்த்து கலகமிடக் காணுமொரு குயிலும்
தனியிருந்து ஒருகிளையில் தாகம் கொண்டுபாட
தவழுமிளங் காற்றொலியைத் தானெடுத்து ஓடும்

எதிர்நிமிர்ந்த பெருமலையோ இசைபறித்துவீச
எதிரொலிக்கு இன்னொருத்தி என்றுகுயில் ஏங்க
கதிரெழுச்சி கண்டிருளோ கடகடன்றுஓடும்
கதிநினைந்து கதிர்மகிழ்ந்து கனல்பெருத்து மூளும்
நதிநடந்த விதம் நெளிந்து நெடுங்கிடந்தபாதை
நானதிலேநடந்து செல்ல நேரெதிரே கண்டேன்
விதிசினந்த சிறுவர் கூட்டம் வேதனையில் கூடி
விரிஉலகம் நிறைதமிழம் மொழியிற்பேசக் கேட்டேன்

கருமைநிறம், மேனிகளில் கசங்கியதோர் உடையும்
காய்ந்த சிறு வயிறுஒட்டி கடும்பசியின் சுவடும்
இருவிழிநீர் வழிந்தஇடம் இருமருங்கும் காய
எழுந்த துயர் பூமுகங்கள் எரித்த நிலை கண்டேன்
சரிகுழலும் வாரிவிடச் சற்றும் மனம் எண்ணா
சிறுமிகளும் தேகமது செழுமை பெருந்தீமை
தருமெனவே அஞ்சினரோ தன்னெழிலை விட்டு
தரைவிழுந்த புழுதியுற்ற பூமலராய் நின்றார்

அவர்களுடன் பலசிறுவர் அணியிருந்துபேசி
அதிசினந்து கொதியெழுந்து ஆற்றஎவர் இன்றி
பவள இதழ் பனிபடர்ந்து பதைபதைக்க கூறும்
பலகுரலும் கேட்டு ஒரு பக்கம்நின்று பார்த்தேன்
தவளுமிளந் தமிழ்மொழியின் தடமழிக்கஎண்ணி
தவறிழைத்து இனமழிக்கும் தரணியிலே இவர்கள்
எவர் விளைத்த தவறுஇதோ ஏதிலியாய் நின்று
ஏங்கியழக் காரணம் யார் இவ்வுலகே யன்றோ!

சிறுவர்தமை சேர்த்துப்பெரும் போரெடுத்தீர் என்று
செந்தமிழர் படையில்குறை சொன்னவ்ர்கள் இன்று
சிறுவருடன் மழலைகளும் சிறுமியரும் கொன்று
சொல்லரிய தொகையினரைச் சிறையிலிடச் செய்தார்
உருவம்மாறி அங்கமின்றி உள்ளதெலாம்நொந்து
உயிர் பிழைக்க ஏதும்வழி இல்லைஎன்று கூறும்
சிறுமைதனை இவ்வுலகே சேர்ந்தளித்தகோலம்
சேர்ந்திவர்கள் செய்தகுற்றம் யார்கணக்கில் போகும்

(ஒரு சிறுமி)
அம்மா என்னைப் பெற்றவளே நீ அருகில்வாராயோ
அள்ளிகட்டிக் கொஞ்சிப்பேசு அன்பைத் தாராயோ
செம்மாதுளையின் முத்தே என்றே என்னைக் கூறாயோ
செந்தேன் தமிழில் சொல்லில் இனிமை சேரப் பேசாயோ
எம் மாபெரிதோர் துன்பம் கொண்டேன் இழிமை செய்தாரே
இருகண்வழியும் பெருநீரோடும் இமைகள் தழுவாயோ
வெம்மை கொண்டே இதயம்வேக விம்மிக் கேட்கின்றேன்
விடியும் வாழ்வோ விரைவில் என்றாய் விட்டேன்சென்றாயோ

மாவில் தூங்கும்கிளியைப்போலுன் மடியில்கிடந்தேனே
மலரைத்தூவி தலையிற் சூட்டி மகிழ்வைத் தந்தாயே
பாவி எங்கள் வாழ்வில்வந்தே பலியைக் கொண்டானே
பார்க்கக் கண்முன் பட்டப் பகலில் சுட்டுக் கொன்றானே
கூவி கேட்டும் தெய்வம்வாழும் கோவில் கும்பிட்டும்
கொன்றார் உயிரைக் கொல்லும் செயலில்குறைவே எழவில்லை
ஆவி உடலை விட்டுப் பதறி அலறிச் சாவென்று
அகிலம் கொண்ட அமைதிதானும் அதிலும் குறைவில்லை

(மற்றவள்)
படையும் அரசும்அழிப்பார் எம்மை பாவம் என்செய்தோம்
பகலில் இரவில் கடையில் தெருவில் பள்ளிக்கூடத்தில்
நடையாய் நடந்தே நம்மைகொன்று நாட்டைச் சிதைக்கின்றார்
நாங்களேதும் கேட்டால் உலகோ நம்மைப் பிழைஎன்றார்
தடைகள் போட்டுச் சாலை, தெருவில் தனியேபோய்விட்டால்
தலையேஇன்றி வெட்டிதுண்டாய் தரையுள் புதைக்கின்றார்
இடையே காக்கஇளைஞர் எழுந்தே எம்மைக் காத்திட்டால்
எல்லாஉலகும் ஒன்றாய் கூடி எரிகுண்டெறிகின்றார்

(சிறுவன்)
புகையும் தீயாய் எரியும் ஊரை பேசும் மொழியறியா
பிறிதோர் இனமே செய்தாரிங்கு, போனோமா நாமும்?
பகைவர்தம்மின் ஊரும் சென்றே படுத்தோர் தலைவெட்டி
பாதிஇரவில் வீட்டில் தீயைப் பற்றச் செய்தோமா?
நகைகள் திருடி நடுவீட்டினிலே நாக்குத்தொங்கத்தான்
நாமும் சிறியோர் பெற்றோர் தூக்கி நாசம்செய்தோமா?
வகைகள் தொகையும் காணாஅழிவை வாழ்வில் செய்கின்றார்
வையம்கண்டும் தொன்மைத்தமிழை வாரிப்புதை என்றார்

(இன்னொருவன்)
நாடும் உலகும் எதிராய் நின்றால் நல்லோர் என்செய்வார்
நாளும் சாகும் நம்மை காப்பாய் நாடே என்றோடி
ஆடும் வரையும் ஆடிக்கத்தி அலறித் தெருவோடி
அடர்ந்தகாடு அலைகொள்கடலும் அருகே நின்றாலும்
ஓடும் ஒழிவும் பயனோ நிலவுக்கொழித்தே பரதேசம்
நாடிச்சென்றால் விடுமோ அதுபோல் நம்மைக் கொன்றானே
வீடுமின்றி வெல்லும் திடமும் வெற்றிக் களிப்பின்றி
வீரிட்டலறி மயங்கும்வாழ்வே விதியாய் போயாச்சே !

(மற்றுமொருவன்)
ஆண்ட இனமோ மீண்டும் ஆள அடிமுன் வைத்தாலே
ஆழக் குழியைவெட்டும் உலகோ அறத்தின் எதிராமே
மீண்டும்இவரோ விட்டோர் பிழையை மீளச் செய்கின்றார்
மெல்ல பேசி உண்மைவிட்டு மிருகத்தைக் கூட்டி
நீண்டதாளில் நீதிக்கதைகள் நெடிதே எழுதித்தான்
நெஞ்சம் ஆற நெளிந்துவளையும் நீசப் பாம்பானார்
ஆண்ட இனமோ அழியும்வேகம் அடிக்கும் புயலென்றால்
அணைக்கும் உலகக் கரங்கள் ஆமையானால் பிழைப்போமா

(முதல் சிறுமி)
வேண்டாம் நம்பி விதியென் றெண்னி வீணேபோகாமல்
விரைந்து எழுவோம் வீரம்கொள்வோம் விடிவைக்காண்போமே
கூண்டில் ஏற்றிக் குற்றம் புரிந்தோர் கொள்ளும் நிலைகாண
கொள்கை கொண்டு நாமும்கூடிக் குரலைத் தருவோமே !
ஆண்ட இனமும் ஆளக்கேட்டால் அண்ணாந்தே பார்த்து
ஆளைஏய்க்கும் உலகில் நாமும் அறத்தைக் கேட்போமே
மீண்டும் எழுந்தோர் அரசு தொலைவில் மீட்கப் புறப்பட்டார்
மெல்லத் தெரியும் விடிவை விரைவில்கொள்ள புதிதாவோம்

(எல்லோரும் சேர்ந்து)

வெல்லட்டும்தமிழீழம்! விளையட்டும் புதுவாழ்வு !!
செல்லட்டும் பெருங்கொடுமை! சிதறட்டும் பகைஆட்சி!!
கொல்லட்டும் துயர்,துன்பம்! கொள்ளட்டும் மனமின்பம் !!
தொல்தொட்டும் எம்பூமி திரும்பட்டும் எம்கையில்!!
சொல்லட்டும் புவி வாழ்த்து! சுதந்திரமே எம்மூச்சு!!
நில் தொட்டு நெஞ்சுறுதி நீகொண்டுஎழு வெல்வோம்

(நன்றி)

avatar
Guest
Guest

PostGuest Sat May 28, 2011 4:44 pm

ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) 677196 ஈழத்தில் ஒரு விடியல்...? (கவிதை) 224747944 வெல்லட்டும்தமிழீழம்! விளையட்டும் புதுவாழ்வு !!
செல்லட்டும் பெருங்கொடுமை! சிதறட்டும் பகைஆட்சி!!
கொல்லட்டும் துயர்,துன்பம்! கொள்ளட்டும் மனமின்பம் !!
தொல்தொட்டும் எம்பூமி திரும்பட்டும் எம்கையில்!!
சொல்லட்டும் புவி வாழ்த்து! சுதந்திரமே எம்மூச்சு!!
நில் தொட்டு நெஞ்சுறுதி நீகொண்டுஎழு வெல்வோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக