புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!  Poll_c10சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!  Poll_m10சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!  Poll_c10 
42 Posts - 63%
heezulia
சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!  Poll_c10சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!  Poll_m10சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!  Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!  Poll_c10சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!  Poll_m10சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!  Poll_c10சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!  Poll_m10சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சண்டேன்னா மூணு! கருணாநிதி!கேடி பிரதர்ஸ்!கனிமொழி!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 30, 2011 7:42 am




துக்ளக் அட்டைப்படங்களில் இரண்டு கழுதைகள் பேசிக் கொள்கிற மாதிரி வருபவை முத்திரை பதிப்பவை என்பது துக்ளக் இதழின் வாசகர்களுக்குத் தெரியும்! இந்த அட்டைப்படக் கார்டூனில் திமுகவின் தோல்விக்கான காரணங்களை திமுக தலைவரே கூட ஆராய விரும்பா விட்டாலும், சொல்கிறார்கள். விடுபட்டுப் போன, ஆனால் மிக முக்கியமான ஒரு காரணம், கேடி பிரதர்ஸ் என்று (இனிஷியலை வைத்து மட்டுமல்ல, செய்திருக்கிற உட்டாலக்கடி வேலைகளை வைத்தும் தான்!) அழைக்கப்படும் மாறன் சகோதரர்கள்!


நாலே வருடங்கள்! சரிவு கலைஞர் டீவீக்கு மட்டுமல்ல....இங்கே


சரிந்து விழுந்த செல்வாக்கை, கட்சியைத்தூக்கி நிறுத்த கருணா நிதியால் முடியுமா, ஸ்டாலினால் கட்சியைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்க முடியுமா என்பதெல்லாம் ஒன்பதுரூபாய் நோட்டு மாதிரித் தான்! செலாவணியானால் தான் உண்டு! கருணாநிதி பிறந்த நாள் வருகிற ஜூன் மாதம் மூன்றாம் தேதி வருவதை ஒட்டி, கட்சியை முடுக்கிவிட கோபாலபுரத்தில் இருந்து முயற்சிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. ஜெயலலிதா கூட ஜூன் மூன்றாம் தேதி, கருணாநிதிக்கு பிறந்தநாள் பரிசாக சில அதிரடி அறிவிப்புக்களைத் தருவார் என்றும் சொல்கிறார்கள்!சன் குழுமத்துக்கு கொஞ்சம் விசேஷமான கவனிப்பு இருக்கும் என்றும் ஒரு தகவல். வீராப்பெல்லாம் ஒடுங்கி, தேர்தல் trend தெரிய ஆரம்பித்த உடனேயே சன் தொலைகாட்சி திடீர் நடுநிலைமை வகிக்க ஆரம்பித்திருப்பது. பார்க்க வடிவேலு காமெடி மாதிரியே இருக்கிறது!

மே முப்பதன்று, டில்லி உயர்நீதி மன்றத்தில் கனிமொழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது, ஆனால் ஜாமீன் கிடைப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. மாறாக,சிபிஐ இந்த மனுவின் மீது தன்னுடைய பதிலை சொல்வதோடு விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பதைக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் கேட்டிருக்கிறது. மொரிஷியஸ் நாட்டுக்கு விசாரிக்கப் போன சிபிஐ உருப்படியான தகவலோடு திரும்பி இருக்கிறதா அல்லது எப்போதும் போல வெறும் கையை வீசிக் கொண்டுதான் திரும்பியிருக்கிறதா என்பதைக் கொஞ்சமாவது அன்றைக்குச் சொல்ல வேண்டுமே!



போதாக்குறைக்கு, மூன்றாவது, நான்காவது துணைக் குற்றப் பத்திரிகைகளில் இன்னும் கொஞ்சம் பெயர்களையும் சேர்த்து, திஹாருக்கு விருந்தாளிகளாக அனுப்புகிற வரை,இப்போதிருக்கும் நிலையில், கனிமொழி உட்பட 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியவர்கள் எவரும் ஜாமீனில் வெளிவருவது சாத்தியமில்லை என்று தான் தெரிகிறது. அதனால், குற்றப்பத்திரிகை மிகவும் வலுவாக இருக்கிறது என்றோ, விசாரணையில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுக் குற்றவாளிகள் அத்தனைபேரும் தண்டனை அனுபவிப்பார்கள் என்றோ முடிவுக்கு வந்தீர்களானால்,அதன் பொறுப்பு உங்களுடையது!

கனிமொழிக்கு ஆதரவாக அடுத்து திஹார் சிறைக்குள் யார் யார் போகப் போகிறார்கள் என்பது தான் இப்போதைய பரபரப்பு! தயாளு? தயாநிதி? அல்லது தயாநிதி காங்கிரசில் சேர்ந்து திமுகவின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்க்கிற மாதிரி இன்னொரு சுற்று ஆட்டத்தை,ஆரம்பிப்பாரா?

ஊகம் உங்களுடையது!

2005 இலிருந்தே தயாநிதியின் மந்திரி பதவியை வைத்து, சன்குழுமம் தன்னுடைய வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும், எவருடன் வேண்டுமானாலும் கூட்டு சேரும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்! மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டதருணத்தில் கலாநிதி மாறன் அழகிரியைக் குறிப்பிட்டே குற்றம் சாட்டியது அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிடக் கூடியதுதானா?இப்போது திமுக தலைவர் குடும்பம் சந்தித்து வரும் அத்தனை பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் தயாநிதிதான் என்பதும் கூடக் கரைவேட்டிகளுக்குத் தெரிந்ததுதான்!
தயாநிதி மாறன் வியாழக்கிழமை சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார்! குலாம் நபி ஆசாத்தும் கூட இருந்திருக்கிறார்! சோனியாவை சந்திப்பதற்கு முன்னால், செவ்வாய்க்கிழமை தயாநிதி மாறன் செய்திருக்கிற இன்னொரு ஆச்சரியப் படுத்துகிற வேலை, மு.க அழகிரியுடன் திஹார் சிறைக்குப்போய்க் கனிமொழியை சந்தித்தது தான்! 'இதயம் கனத்தது; கண்கள் பனித்தன' கதை வசனம் நினைவுக்கு வந்தாலும் சரி! ‘கூட இருந்து குழிபறிப்பது,'உடனிருந்தே கொல்லும் வியாதி' என்ற சொலவடைகள் நினைவுக்கு வந்தாலும் சரி! அது உங்கள் பாடு.


கோபாலபுரம் , சி ஐ டி நகர் இரண்டு குடும்பங்களும்,பெங்களூரில் இருந்து செல்வி உட்பட மிக ஒற்றுமையாக, கனிமொழிக்குப் பக்க பலமாகத் தங்கள் ஒற்றுமையை திஹார் சிறைக்குப்போய் சந்தித்துக் காண்பித்திருக்கிறார்கள். நவக்கிரகங்கள் மாதிரி எதிரும்புதிருமாய் நேற்றுவரை இருந்தவர்களைக் கனிமொழி கைது விவகாரம் ஒற்றுமைப் படுத்தியிருக்கிறதா? அல்லது, "இன்று நீ! நாளை நான்" "உன்னாலே நான்-- என்னாலே நீ கெட்டாய்!" ரகம் தானா?கொசுக்கடி தாங்காமல் கனி மொழி அவதிப்பட்டார் என்றெல்லாம் அனுதாபத்தை உச்சுக் கொட்டின ஊடகங்கள் கூட,இந்தக் குடும்ப ஒற்றுமை அதிசயத்தைப் பற்றி என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றன. குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்கிற மாதிரி, இந்தத் திடீர் ஒற்றுமை எங்கே போய் எதிலே முடியும் என்பதை ஊகிக்க முடியாததுதான் காரணம் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்!


இவ்வளவு சொல்லிவிட்டு, காங்கிரஸ் சமாசாரத்தைக் கொஞ்சம் தொடவில்லையானால், கூட்டணி தர்மம் என்னாகிறது?
சுரேஷ் கல்மாதிக்குத் துணையாக சில அதிகாரிகள் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டதோடு விவகாரம் முடிந்து விடவில்லை. பிரதமர் Shunglu Committee அறிக்கை மீது காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருக்கிறார். டில்லி அரசு, அந்தக் கமிட்டியின் அறிக்கையை நிராகரித்து, தவறுகள் எதுவுமே நடக்கவில்லை என்று பதில் சொல்லியிருக்கிறது. சீக்கிரமே சுரேஷ் கல்மாடிக்குத் துணையாக, சில காங்கிரஸ் புள்ளிகளும் திஹாருக்குப் போக வேண்டியிருக்கும் என்று சில தகவல்கள் நமட்டுச் சிரிப்புடன் கசிய விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் முன்னாள் இந்நாள் முதலமைச்சர்கள் மாட்டிக் கொண்டு உள்ளே போக வேண்டிய நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த மாதிரி நெருக்கடியான நேரத்தில், திமுகவை மாட்டிவிட்டு, தங்கள் கட்சி அம்மணமாய்த்திரிவது ஜனங்களுடைய கண்ணுக்குத் தெரிய விடாமல் திசை திருப்புவது, காங்கிரஸ் கட்சிக்குக் கைவந்த கலைதான்! சௌகரியமும் கூட இல்லையா!!

கூட்டணி தர்மத்துக்கு எல்லோரும் ஒரு "ஓ " போடுங்க! வேறென்ன செய்வது?!


consenttobenothing




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக