புதிய பதிவுகள்
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_c10செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_m10செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_c10 
9 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_c10செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_m10செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_c10 
44 Posts - 64%
heezulia
செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_c10செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_m10செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_c10 
21 Posts - 30%
T.N.Balasubramanian
செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_c10செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_m10செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_c10செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_m10செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 3 Jun 2011 - 14:30

சூழல் பாதுகாப்பு என்றவுடனே நம்மில் பலர் பேசத் தொடங்குவது ஓசோன் படலத்தில் ஓட்டை, புவி வெப்பமயமாதல், சூழல் மாசுபடுதல் போன்ற பிரச்னைகளையே. கைக்கெட்டும் தூரத்தில் நாமே பாதுகாக்கக்கூடிய சுற்றுப்புறச் சூழலைப் பற்றி பலரும் யோசிப்பதில்லை.

சூழல் மாற்றத்தால் நாம் பல விஷயங்களை இழந்துள்ளோம். அதில் ஒன்று சிட்டுக் குருவி. புவிச் சூழலில் பல்வேறு உயிர்கள் வாழ்வதற்கு மனிதர்களின் மறைமுக தயவு தேவைப்படுகிறது. மற்ற உயரினங்களுக்கு மறைமுகத் தயவு வேண்டும் என்றால் சிட்டுக் குருவிகளுக்கோ நேரடி உதவி தேவைப்படுகிறது. காரணம் இவை நம்மை அண்டி வாழ்ந்த ஓர் உயிரினம். இவற்றின் அழிவுக்கு முக்கிய காரணம் நமது சூழல், உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமே.

இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சில பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்ந்து சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தங்களது வார விடுமுறைகளில் சந்தித்துக் கொள்ளும் இவர்கள் சூழல் பாதுகாப்பில் நாட்டமுள்ள, கல்லூரி, பள்ளி மாணவர்கள், மருத்துவர் போன்றவர்களைத் தங்களுடன் இணைத்துக் கொண்டு "நெஸ்ட்'- ஏ ஹோம் ஃபார் ஃபெதர் ஃபரண்ட்ஸ்' என்ற அமைப்பை துவங்கினர். இந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் டால்ஸ்டாயிடம் பேசினோம்.
""கிராமப்புற ஓட்டு வீடுகளில் உள்ள சந்து பொந்துகளில் கூடுகட்டி மனிதர்களுடன் மனிதர்களாக வாழ்ந்தவை சிட்டுக் குருவிகள். நம் பாட்டன் பூட்டன் வீடுகளில் முற்றம் என்ற ஓர் இடம் உண்டு. அங்கே சிறு தானியங்களைக் காய வைப்பார்கள். இடித்தல், புடைத்தல், குருணை நீக்குதல் என்ற தானியங்களைப் பதப்படுத்தும் சில முறைகள் நடைபெற்றன. இதனால் சிட்டுக் குருவிகளுக்கு உணவு கிடைத்தது. இன்றோ வீடுகளில் தானியங்களைப் பார்ப்பதே அரிதாகி விட்டது

நாம் சாப்பிட்டு எஞ்சியவற்றைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவை சிட்டுக் குருவிகள். அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரம் பெருகிவரும் காலகட்டத்தில் ஓடுகளும் இல்லை, சந்து பொந்துகளும் இல்லை. முற்றமும் இல்லை, தானியங்களும் இல்லை. சின்க்கில் பாத்திரங்கள் துலக்கப்பட்டு வீணாகும் சோற்றுப் பருக்கைகள் கூட நேரடியாகப் பாதாளச் சாக்கடை கழிவுகளுடன் கலந்துவிடுகின்றன. சிட்டுக் குருவிகளின் வாழ்விடம், உணவுத் தட்டுப்பாடு காரணமாக அவை வெகுவாக அழிந்துவிட்டன. வீட்டுக்குள் பறந்து திரியும் குருவிகள் பல மின் விசிறியில் அடிபட்டு இறந்தன. பொதுவாக மனித நடமாட்டம் இருந்தால் மற்ற பறவைகள் அந்த இடத்தை விட்டுப் பறந்துவிடும். ஆனால் சிட்டுக் குருவிகளோ மனிதர்கள் வசிக்கும் வீட்டுத் தாழ்வாரங்களில்தான் கூடுகட்டி வாழும்.

இரண்டு முதல் மூன்று முட்டைகள் வரை இடும். குஞ்சுகள் பொரிந்தவுடன் கூட்டில் இடப்பற்றாக் குறை காரணமாக ஆண் மற்றும் பெண் பறவை தனது குஞ்சுகளை நம்மை நம்பி விட்டுவிட்டு இரவு நேரத்தை வீட்டுக்கு வெளியே உள்ள சிறு மரங்களின் கிளைகளில் அமர்ந்து கழிக்கும். ஒரு பறவை இனம் தனது குஞ்சுகளை நம்மை நம்பி விட்டுச் செல்லும் போது ஆறு அறிவு படைத்த நாம் அதை காக்கத் தவறியதுதான் வேதனை. எனவே வார இறுதியில் நாங்கள் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் சுமை தூக்குபவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு கடை உரிமையாளர்கள், டீ கடை நடத்துபவர்கள், வியாபாரிகள் போன்றவர்களைச் சந்தித்து சிட்டுக் குருவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அவர்களையும் எங்களுடன் இணைத்துக் கொள்கிறோம். சிட்டுக் குருவியின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் சிட்டு குருவிகள் எந்தெந்தப் பகுதிகளில் எஞ்சியுள்ளன என்பதைத் தெரிந்து கொள்கிறோம். அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள், டீக்கடைகளில் பேசி தினமும் அதற்கு குருணை, தானியங்கள், தண்ணீர் வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். அப்பகுதியில் உள்ள மரங்கள், கட்டடங்கள், கடைகளில் ஷட்டர்களுக்கு அருகே சிறிய அட்டைப் பெட்டிகளைத் தொங்கவிட்டிருக்கிறோம். சிட்டுக் குருவிகள் அந்தப் பெட்டிகளுக்கு உள்ளே நுழைந்து வெளியே வருவதை ஒரு விளையாட்டாக வைத்திருக்கின்றன.
சிட்டுக் குருவிகள் கண்களில் படும் இடங்களில் நார், காய்ந்த புல், வைக்கோல் போன்றவற்றைப் போட்டு வைத்தபோது, அவற்றை எடுத்துச் சென்று அந்தப் பெட்டிகளுக்குள் வைத்துக் கொண்டன. நாளடைவில் பெட்டிகளுக்குள் சிறிய சிட்டுக் குருவி குஞ்சுகள் தலை வெளியே தெரிவதும் பெரிய குருவிகள் அவற்றுக்கு உணவு கொடுக்கவும் தொடங்கின.

எங்கள் திட்டம் வெற்றி பெற்றதால் அட்டை பெட்டிகளுக்கு அருகில் மரப்பெட்டிகளை வைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதனால் பெட்டிகள் எளிதில் சிதைவடையாததுடன், மழை, குளிர்காலங்களில் குருவிகள் முட்டை பொறிக்கத் தேவையான வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்ளும்.

செல்போன் டவர்களால் சிட்டுக் குருவிகளுக்குப் பாதிப்பு இருப்பதாகக் கூறுவார்கள். அப்படியொன்றும் பெரிய பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், இரண்டு செல்ஃபோன் டவர்கள் அருகருகில் இருந்தும் அதற்கு கீழே உள்ள கடைகளின் ஷட்டர்களில் கூடுகட்டி இதுவரை ஐந்து முறைக்கு மேல் முட்டையிட்டுக் குஞ்சு பொறித்துள்ளன. அதே இடத்தில் தற்போது 25-க்கும் மேற்பட்ட சிட்டுக் குருவிகள் கூடுகட்டியுள்ளன. கோவையில் காந்திபுரம், போத்தனூர், நஞ்சுண்டாபுரம், செல்வபுரம், தெலுங்குபாளையம், இடையவர்வீதி, பெரியகடைவீதி, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு போன்ற பகுதிகளில் சிட்டுக் குருவிகளை அடிக்கடி பார்க்க முடிகிறது.

சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் மற்றும் ஹோட்டல்களில் சிட்டுக்குருவி வறுவல் பரிமாறப்படுவதாக தகவல் வந்துள்ளது. அப்பகுதியில் தெருப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளோம். சிட்டுக்குருவி லேகியம் ஆண்மை அதிகரிக்கும் என்பது பொய்யான வதந்தி. சிட்டுகுருவிகளை வேட்டையாடுபவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் டால்ஸ்டாய்.
நெஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் சி.பாபு. இவர் கோவை காந்திபுரம் ஆம்னி பஸ் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளி. சிட்டுக் குருவிகளுக்குத் தவறாமல் குருணை வைப்பது, அதை யாராவது வேட்டையாட வந்தால் அவர்களை விரட்டுவது என பணியாற்றுகிறார். ""இப்படி முறையான பராமரிப்பால் தற்போது அங்கு சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்துள்ளது'' என்கிறார் அவர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 3 Jun 2011 - 14:36

இப்ப பெங்களூர் ஏர்போர்ட் உள்ளேயே இந்த குருவிகளை பார்க்கலாம். ரொம்ப அழகாக இருக்கும் . நான் சின்னவளாக இருந்த போது எங்க வீட்டுல இந்த குருவிங்க கூடு இருந்தது, (ஹால்லில்) எனவே, அந்த குட்டிகள் பற்க்க கத்துக்கும் போது எங்க அம்மா ஃபேன் போடுவதை நிறுத்திடுவாங்க . என்ன அதுகள் அடி பட்டுடுமே என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri 3 Jun 2011 - 14:46

ஆண்

[img]செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Housesparrow01[/img]

பெண்

செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Housesparrowfemale02



ஜோடி

செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Sparrowpair







கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 3 Jun 2011 - 14:52

நன்றி சுதானந்தன் புன்னகை இது ஆண் பறவை . தலை கருப் பாக இருக்கு பாருங்கோ, பெண் என்றால் லைட் ப்ரௌன் கலரில் இருக்கும்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 3 Jun 2011 - 15:34

செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! 53667-6_26_626201041835123_16

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri 3 Jun 2011 - 16:00

krishnaamma wrote:நன்றி சுதானந்தன் புன்னகை இது ஆண் பறவை . தலை கருப் பாக இருக்கு பாருங்கோ, பெண் என்றால் லைட் ப்ரௌன் கலரில் இருக்கும்

நன்றி....

ஆண், பெண், ஜோடி பறவைகள் என மூன்றையும் பதிந்துவிட்டேன்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu 15 Sep 2011 - 13:03

இதை வாசிக்கும் போதே மனதுகுளிர்கிறது.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu 15 Sep 2011 - 13:45

சிரி சிரி சிரி




செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக