புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
3 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
2 Posts - 3%
viyasan
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
2 Posts - 3%
prajai
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
2 Posts - 3%
Baarushree
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
2 Posts - 3%
manikavi
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
1 Post - 1%
Rutu
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
1 Post - 1%
சிவா
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
2 Posts - 6%
Rutu
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
1 Post - 3%
manikavi
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
1 Post - 3%
viyasan
பனைமரம்....!!!  Poll_c10பனைமரம்....!!!  Poll_m10பனைமரம்....!!!  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனைமரம்....!!!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Sep 21, 2011 5:44 pm

பனைமரம்....!!!

ஆரம்பம்: பனமரத்தின் ஆரம்பம் இந்தியா, பர்மா எனச் சொல்லப்படுகிறது. தற்போது இது இலங்கை, இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது.

பனையில் பல இனங்கள் உண்டு. ஆனாலும் Borassus flabellifer (Family: Arecaceae) என்ற இனமே இக்கட்டுரையில் விபரிக்கப் படுகின்றது. இது ஆங்கிலத்தில் palmyrah, toddy palm என்று வழங்கப்படும்.

பனை மரத்தின் விபரம்: நட்டாயிரம் வருடம், பட்டாயிரம் வருடம் என்று தமிழர் வாழ்வோடு ஒன்றி, ஒரு வாழிவாதாரப் பங்கு கொண்ட மரமாகத் திகழும் பனை ஒரு வரண் நில வளரியாகும். நன்றாக வளர்ந்த பனைமரம் 10-30 மிட்டர் உயரம் வரை இருக்கும். இது வேர் (root), அடிமரம் (trunk), ஓலைகளைக் கொண்ட முடி (crown) என மூன்று பகுதிகளைக் கொண்டது. வேர்ப் பகுதி நார் வகையானது, நிலத்தில் படர்ந்து வளரும், ஆணிவேர் இல்லை. அடிமரம் நீண்ட, கறுப்பு நிறமுடையது, உருண்டையானது. இதன் பருமன் மேல்நோக்கி குறைந்து கொண்டு போகும்.

முடிக்கு கிட்டவர இதன் பருமன் சீரானதாக இருக்கும். அடிமரத்தில், விழுந்த ஓலை மட்டைகளின் அடையாளங்கள் (scars) கிடையான கோடுகளாக காணப்படும். பனைகள் கிளைகள் அற்றவை. ஆனாலும் கிளைகள் உள்ள மரங்களும் அரிதாக உண்டு. பனைமரத்தின் வட்டு என அழைக்கப்படும் முடிப்பகுதியின், நுனியில் 10-30 வரை விசிறி போன்ற ஓலைகளைக் கொண்டிருக்கும். ஓலைகளின் எண்ணிக்கை, மரத்தின் வளர்ச்சியையும், செழிப்பையும் பொறுத்தது. முடியின் மையப்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு, விரியாத குருத்தோலைகள் இருக்கும். இவை மென்மஞ்சள் அல்லது பழுப்பு நிறமானவை. நன்றாக விரிந்த ஓலைகள் தடிப்பானவை, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. இவற்றின் இலைப்பரப்பு நீளப்பாட்டில் ஈக்குகளுடன் ஒட்டியபடி இருக்கும். ஓலைகள் மரத்துடன் பனம் மட்டை எனப்படும் தண்டுப்பகுதியுடன் ஒட்டிக்கொணடிருக்கும். பன மட்டைகள் நீண்டு, வளைந்தவை, மெல்லிய மஞ்சள் நிறமானவை. மேல்பக்கத்தில் குழியாகவும், கீழ்பக்கத்தில் குவிவாகவும் இருக்கும். கரைகள் வாள் போன்ற கறுப்பு நிறமுடைய கருக்குகளைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக பனம்மட்டையை கருக்கு மட்டை என்றும் கூறுவர். பனம் மட்டைகள் மரத்தின் வட்டுடன் ஒட்டியபடி இருக்கும். இப்படி ஒட்டும் பகுதிகள் Y உருவ அமைப்புடையவை. கங்கு மட்டையென அழைக்கப்படும் இவை பன்னாடை என்று அழைக்கப்படும் மெல்லிய வலை போன்ற அமைப்புக்களால் மரத்துடன் சேரக்கப்பட்டிருக்கும்.

பனைமரம் இருபூந்துணர்த் தாவரமாகும். அதாவது ஆண்மரமும், பெண்மரமும் வேறானவை. இரு மரங்களும் பூக்கும்போது பூம்பாளைகள் எனப்படும் பூந்துணர்களை உருவாக்குகின்றன. பூந்துணர்கள் தோன்றும் வரை இவற்றை ஆண், பெண் மரங்கள் என இனம் காண்பது கடினம். பனை மரத்தில் இரண்டு முக்கிய வகை மரங்கள் உள்ளன. ஒன்று கரிய நிறமுடைய பழங்களைத் தருவன, மற்றையது செம்மண்ணிற நிறத்தையுடைய பழங்களைக் கொண்டன.
மேலொட்டிகள்: பனைமரம் இதர மரங்களுக்கும் ஆதாரங்களாக உள்ளன. பனங்கத்தாளை எனப்படும் ஒரு வகை ஓர்க்கிட் பனை மரங்களில் மேலொட்டியாக வாழ்வதை நாம் பார்க்கக் கூடியதாகவுள்ளது. ஆலமரங்கள் அநேக சந்தர்ப்பங்களில் தமது வாழ்க்கையை பனை மரத்தில் மேலொட்டியாக ஆரம்பிக்கின்றன. பின் இவை வளரத் தொடங்க, கீழ் நோக்கி பனை மரத்தைச் சுற்றி வளர்ந்து, காலப்போக்கில் பனைமரத்தின் அடியை முற்றிலும் மூடும். இந்நிலையில் பாரப்பவர்களுக்கு பனை மரம் ஆலமரத்தின் நடுவிலிருந்து முளைத்ததாகத் தோன்றும்.

பனம் மரத்தின் ஆரம்ப வாழ்க்கை பனங்கொட்டை எனப் பொதுவாக அழைக்கப்படும் பனம் விதையிலிருந்து தொடங்கும். விதைகள் பனம்பழங்களில் தோன்றுபவை. மரத்திலிருந்து கனிந்த பனம்பழங்கள் நிலத்தில் விழுந்தபின் இவ்விதைகள் தானாகவே முளைக்கத்தொடங்கும். விதைகள் முளைத்து பனங்கிழங்கைத் தோற்றுவித்து அதன் உணவுச்சக்தியைப் பாவித்து வளரத்தொடங்கும். வளரும்போது உண்டாகும் முதல் இலை விரியாதது. இந்நிலையில் இதனை பீலி என்று அழைப்பர்.
வடலி: பனை மிகவும் மெதுவாக வளரும் ஒரு மரம். குறைந்த வயதுடைய சிறிய பனைமரத்தை வடலி என்று அழைப்பார்கள்.. வடலியில் ஓலைகளும் அவற்றின் மட்டைகளும் மரத்தில் ஒட்டியபடி இருப்பதை எப்போதும் காணலாம். வடலி வளர்ந்து முற்றாக பயன் தர 15-20 வருடம் வரை செல்லும்.
பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் பிரயோசனத்திற்குரியது. உணவு, மரத்தேவை, பானம், விறகு, விளையாட்டுப்பொருட்கள் உட்பட பிரயோசனங்களை பட்டியல் போடலாம். இதன் காரணமாக பனை ஒரு கற்பகதரு அல்லது கற்பகவிருட்சம் என அழைக்கப்படுகிறது. பனைமரத்தின் உபயோகங்களை நுனியிலிருந்து அடிமரம் வரை பார்ப்போம்.

1. குருத்து

பனைமரத்தை, அதனது மரத்தேவைக்காக அல்லது நிலங்கள் தேவைப்படும் போது வெட்டி வீழ்த்துவார்கள். சிலசமயம் பலத்த காற்றோடு கூடிய மழைக் காலங்களில் அல்லது சூறாவளிகளின் போது பன மரங்கள் பாறி விழுவதுண்டு. அப்படியான சமயங்களில் மரத்தின் முடிப்பகுதியைப் பிளந்து அதன் நடுவில் இருக்கும் இளம் குருத்துப் பகுதியை வெளி மட்டைகளிலிருந்து பிரித்து எடுப்பார்கள். இந்த இளம் குருத்து விருத்தியடையாத குருத்தோலைகளையும் மட்டைகளையும் கொண்டிருக்கும். இது வெள்ளை நிறமுடையதும் மென்மையானதாகவும், இனிமையாகவும் இருக்கும். பலர் இதனை விரும்பிச் சாப்பிடுவர்.

2. குருத்தோலை

பனைமரத்தின் முடியின் நடுவிலுள்ள இளம், விரியாத நிலையில் உள்ள ஓலை குருத்தோலை எனப்படும். இது மெல்லிய மஞ்சள் நிறமுடையது. இதனை வெட்டி வெய்யிலில் காயவைத்து ஈக்கிலை நீக்கியபின் கடினமாக வரும் பகுதியை பல பாவனைகளுக்கு உபயோகிக்கலாம்.

2.1 ஏடு

காய வைத்து எடுக்கப்பட்ட குருத்தோலைகளை சிறு துண்டங்களாக வெட்டி ஏட்டுச்சுவடிகளாக முந்தைய காலங்களில பாவித்திருக்கிறார்கள். இவற்றில் பலருடைய ஜாதகக் குறிப்புகள், காண்டங்கள் என்பன எழுதப்பட்டுள்ளன. இன்றும் கூட சிறு பிள்ளைகளுக்கு அரிச்சுவடியை அறிமுகப் படுத்துவதற்கு ஏடு தொடக்கல் என்ற முறையை பின்பற்றுகிறார்கள். அப்போது கொத்து என அழைக்கப்படும் ஒரு மரப்பாத்திரத்தில் நெல்லை நிரப்பி ஒரு பனை ஓலைத்துண்டை கம்பியில் குத்தி வைப்பார்கள்.

2.2 கைப்பணிப்பொருட்கள்

காயவைக்கப்பட்ட குருத்து ஓலைகளை ஈக்கிலிருந்து பிரித்தெடுத்து மெல்லிய நார்களாக வெட்டிப் பின்னி பனம் ஓலைப் பெட்டிகள், பனங்கட்டிக் குட்டான்கள், நீற்றுப்பெட்டி, பாய்கள் போன்றவை செய்வதற்கு பாவிப்பர். கைப்பைகள், தொப்பிகள் போன்றவையும், காற்றாடி உட்பட பல வகையான விளையாட்டுப் பொருட்களும் தற்போது நவீன முறையில் செய்யப்படுகின்றன. சில சமயம் இவ்வோலைகளை பச்சை, நீலம், சிவப்பு போன்ற நிறங்களால் சாயமூட்டுவார்கள். சாயமூட்டப்பட்ட ஓலைகள் சாயவோலை எனப்படும். இவையையும் பாவித்து அலங்காரமாக செய்யப்படும் பொருட்கள் அழகாகவிருக்கும். பனம்பெட்டிகள் அரிசி, பருப்பு போன்றவைகளை கொண்டு செல்வதற்கும், சேமிப்பதற்கும், பனங்கட்டிக்குட்டான்கள் வெவ்வேறு அளவுகளில் செய்யப்பட்டு பனங்கட்டிகளைப் போடுவதற்கும், நீற்றுப்பெட்டி பிட்டு, மா போன்றவற்றை அவிப்பதற்கும், பாய்கள் பந்திகளில் சாப்பிடுவதற்கு விரிப்பதற்கும், படுப்பதற்கும், புகையிலை, கருவாடு போன்றவற்றை சுருட்டி வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் பாவிக்கப்படுகின்றன. முன்பு பனம் ஓலையினால் செய்யப்பட்ட குடை, உமல், பறி என்ற பைகளும், மடிப்பெட்டி என அழைக்கப்பட்ட purse ம் இப்போது பாவனையில் அதிகம் இல்லை.
பனம் ஓலைகளும், ஈக்கில்களும் கடற் தொழிலாளர்களால் இறால், மீன், கணவாய் போன்றவைகளை சேர்த்துப் பிடிக்க உதவுகின்றன.

3. பச்சை ஓலை

பனை மரத்தின் முடியிலுள்ள முக்கிய பகுதி பச்சை ஓலைகள். இவை பல பயன்களையுடையவை.

3.1 கொள்கலன்கள்

பச்சை ஓலைகளை பனம்மட்டையிலிருந்து வெட்டியெடுத்து, மடித்து கொள்கலங்களாகச் செய்து மீன், இறைச்சி போன்றவற்றை கொண்டு செல்வதற்கு பயன்படுத்துவர். மேலும் இவ்வோலைகள் பிளா, தட்டுவம் என அழைக்கப்படும் பாத்திரங்களை செய்வதற்கும் உதவும். இவை கள்ளு, கஞ்சி போன்றவை குடிப்பதற்கும் தண்ணீர் மெள்ளுவதற்கும் உபயோகமானவை.

3.2 கூரை, வேலி

பச்சைஓலைகளை பனம் மட்டையுடன் வெட்டி வெய்யிலில் வாடவிட்டு ஒன்றன்மேல் ஒன்றாக நீளவாட்டில் அடுக்கி தட்டையாக்குவர். இவ்வாறு தட்டையாக்கப்பட்ட ஓலைகளிலிருந்து பனம் மட்டைகள் வெட்டப்பட்டு வீட்டுக் கூரைகளுக்கும், பனமட்டையுடன் கூடிய ஓலைகள், வேலிகள் அடைப்பதற்கும் பாவிக்கப்படும். ஓலைகளை சிலசமயம் தட்டி எனப்படும் மறைப்புகளை செய்வதற்கும் பாவிப்பர்.

3.3 கால்நடையுணவு

பச்சை ஓலைகளிலிருந்து ஓலைப்பகுதியை ஈக்கிலிருந்து நீக்கி, மெல்லிய வார்களாக அரிந்து மாடுகளுக்கு உணவாக பயன் படுத்துவர். இவ்வாறு ஓலை கிழித்து எடுக்கப் பட்டபின் மட்டை உட்பட மிஞ்சிய ஈக்குடன் கூடிய பகுதி மூரிமட்டை என அழைக்கப்பட்டு வேலிகளுக்குப் பயன்படும். சில சமயம் ஈக்குகள் எதுவுமில்லாமல் பனம் மட்டைகள் மட்டும் வேலிகளுக்கு பாவிக்கப்படும்.

3.4 உரம்

பச்சை ஓலைகள் தோட்டங்களுக்கு உரமாகவும் உபயோகமுள்ளன. குறிப்பாக மண் பரப்பான நிலங்களுக்கு இவைகள் தாழ்க்கப்படும்போது இவை உரமாவது மட்டுமல்லாமல் நீரை தேக்கி, பயிர்களை வளர்ச்சியடையவும் வைக்கின்றன.

3.5 எரிபொருள்

வேலிகளுக்கும், கூரைகளுக்கும் பாவிக்கப்படும் ஓலைகள், மட்டைகள் என்பன சிறிது காலத்திற்கு பிறகு உக்கத் தொடங்கும். இதனால் இவற்றை புது ஓலைகளினால் மாற்றவேண்டும். இவ்வாறு மாற்றும் போது பழைய ஓலைகள் எரி பொருளாக உபயோகிக்கப்படுகின்றன.

4. பனம் ஈக்கு

பனை ஓலைப்பெட்டிகளின் விளிம்புகளை பலப்படுத்த ஈக்குகளைப் பாவிப்பர். பனம் ஈக்கிலிலிருந்து கூடைகள், தூரிகைகள் என்பன செய்யப்படுகின்றன. வெங்காயங்களை பழுதுபடாமல் தூர இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு பனம் ஈக்கினால் பின்னப்பட்ட காற்றோட்டமுடைய வெங்காய கூடைகள் இன்னும் பாவனையில் உள்ளன.

5. காவோலை

பனை ஓலைகள் முதிர்ச்சியடைய காய்ந்து, கபிலநிறமாக மாறி முடியிலிருந்து தொங்கி கொண்டிருக்கும். இவை காற்று வீசும்போது ஆடி மரத்தோடு உரசும் ஒலி கேட்பதற்கு ரம்மியமாக இருக்கும். காவோலை என அழைக்கப்படும் இவ்வோலைகள் நன்றாக காய்ந்தபின் மரத்திலிருந்து தானாக விழும். இவ்வோலைகளை எரிபோருளாகவும் பச்சை ஓலைகளைப் போலவே, மணல் தன்மை கூடிய தோட்ட மண்ணுக்கு இவைகளைத் தாழ்ப்பதன் மூலம் அவை உக்கி உரமாவதோடு நீரையும் தேக்கி வைக்கும்.

6. பனம் மட்டை

பனம்மட்டை வலிந்த நார்களைக் கொண்டது. கருக்கு நீக்கப்பட்டபின் நார்களைத் தனிப்படுத்தி வலிமையான பொருட்களான கடகம், பட்டை, சுளகு, போன்றவை செய்யப்படுகின்றன. இவ்வகை கொள்கலன்கள் மேலும் பலமாக இருப்பதற்காக அவற்றின் விளிம்புகள் தடித்த நார்களால் செய்யப்பட்டிருக்கும். கடகம் கல், மண் போன்ற பாரமான பொருட்ளை கொண்டு செல்வதற்கு உகந்தது. சுளகு அரிசி, நெல் போன்றவற்றை புடைப்பதற்கு பிரயோசனமானது. பட்டை அகலமானது, கீழ்ப்பகுதி எண்கோண வடிவுள்ள முனைகளைக் கொண்டது. கிணற்றிலிருந்து தண்ணீரை அள்ளி பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு பாவிக்கப்படும். தற்போது நீரிறைக்கும் இயந்திரங்கள் இருப்பதால் பட்டைகளின் பாவனை அற்றுப் போய்விட்டது எனச் சொல்லலாம்..

உறி, திருகணை, இடியப்பத்தட்டு, கயிறு போன்றவை செய்வதற்கும் பனம் மட்டையிலிருந்து பெறப்படும் நார்கள் பிரயோசனமானவை. வடலி போன்ற சிறிய பனைகளிலிருந்து மட்டையுடன் பெற்ற சிறிய, இளம் ஓலைகளப் பாவித்து பனை விசிறிகள் செய்யப்படுகின்றன.

பனை மரமேறிகள் பனம் நாரை கால் பாதங்களில் வட்டமாகக் கோர்த்து பனை மரமேறுவதற்கு உபயோகிப்பார்கள். விளக்கீடு சமயங்களில் பனம் நார் தடிகள் தீப்பந்தம் செய்வதற்கு உகந்தன.

7. கங்கு மட்டை

பனம்மட்டையின் மரத்தோடு சேர்ந்திருக்கும் கங்கு மட்டை எனப்படும் பகுதி மிகவும் வலிமையான சிராம்பு போன்ற நார்களைக் கொண்டது. இந்நார்கள் கடுமையான நிலங்களை துப்பரவாக்கக் கூடிய பனந்தும்புத்தடிகள், துடைப்பங்கள என்பனவற்றிற்கும், கயிறு என்பன செய்வதற்கும் உபயோகமானவை.

கங்கு மட்டை

ஒரு நல்ல எரிபொருள். இவற்றை சேகரித்து வீட்டில் மழை படாத ஒரு பகுதியில் தூக்கி கட்டி விடுவார்கள். இவை மழைகாலங்களில் அடுப்பெரிப்பதற்து மிகவும் பிரயோசனமானவை.


8. பன்னாடை[[சிபி அல்ல]]

கங்குமட்டையை பனைமரத்துடன் ஒட்டவைத்திருக்கும் வலை போன்ற பன்னாடை சிலசமயம் கள்ளு வடிப்பதற்கு வடியாக உபயோகிக்கப்படும். அத்துடன் பன்னாடை அடுப்பை மூட்டுவதற்கு சிறந்த எரிபொருள்.

9. பாளைகள்

ஆண், பெண் இரண்டு பனைகளிலும் பூக்கள் பாளைகளில் தோன்றுகின்றன. இவை இவற்றின் பயன்கள் முடிந்தபின் காய்ந்து மரத்திலிருந்து விழும். இவ்வாறு பெறப்படும் காய்ந்த பாளைகளும் எரிபொருளாக பயன்படுகின்றன.

10. பதநீர்

ஆண், பெண் இருவகையான மரங்களிலிருந்தும் அவற்றின் பூந்துணரான பூம்பாளைகளிலிருந்து பதநீர், கள்ளு போன்ற பானங்கள் பெறப்படுகின்றன. ஆண் பனையிலிருந்து அரிபனை, வள்ளுபனை முறைகளிலும், பெண்பனையிலிருந்து தட்டுபனை, காய்வெட்டி முறைகளிலும் பாளைகள் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டு மென்மையாக தட்டப்படும். இப்படித் தட்டும்போது அவற்றின் திசுக்கள் சிதைபடும். இதனால் அவற்றிலிருந்து சாறு வெளியேறும். வெட்டப்பட்ட பாளைகளின் நுனியில் பானை போன்ற முட்டிகளைக் கட்டிவிடுவார்கள். இவற்றில் வெளியேறும் திரவம் சேகரிக்கப்படும். இத்திரவம் மெல்லிய வெள்ளை நிறமுடையது, இனிமையானது. இதுவே பதநீர் அல்லது கருப்பணி என அழைக்கப்படும் திரவம். முட்டியின் உட்பகுதியில் சுண்ணாம்பை பூசி வைப்பார்கள். இது பதநீர் கள்ளாக நொதித்து மாறுவதை தடுக்கும். சுண்ணாம்பைத் தவிர Acronuchia pendunculata, Vateria capillata என்ற மரங்களின் பட்டைகளும் நொதித்தலைத் தடுக்கும் ஆற்றலையுடையவை.

பதநீர் அதிக அளவில் சீனித்தன்மை கொண்டதினால் ஒரு சுவையான பானமாகவுள்ளது. கருப்பநீரில் 12-16% சீனித்தன்மை உள்ளதெனவும், அதில் சுக்கிரோசு வெல்லம் 11% எனவும் அதைத்தவிர குளுக்கோசு, பிரக்ரோசு, புரதம் என்பனவும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தவிர பதநீர் அதிகளவில் பொட்டாசியம், கல்சியம், போஸ்பரஸ், மக்நீசியம் போன்ற கனிப்பொருட்களையும் கொண்டுள்ளது. மேலும் பல முக்கியமான அமினோ அமிலங்களும், உயிர்ச்சத்துக்களான அஸ்கோபிக் அமிலம் (vitamin C) பன்ரோதீனிக் அமிலம் (vitamin B5), ரைபோபிளேவின் (vitamin B1) என்பனவும் இதில் உண்டு.

பதநீர் ஒரு குளிர்மையான பானம் என்றமைவதால் சிலசமயம் பொக்குளிப்பான், சின்னமுத்து போன்ற நோயை உடையவர்களுக்கு நோய்த்தன்மையை குறைப்பதற்கு கொடுக்கப் படுகின்றது. சருமவியாதிகளான தோல்நேய், அக்கி போன்றவற்றிற்கும் பதநீர் நல்லது. பதநீரில் குரோமியம் போன்ற கனிப்பொருள் இருப்பதால் நீரிழிவுள்ளவர்களின் இரத்த அளவை இது குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

11. சர்க்கரைப் பெருட்கள்

பனை மரத்திலிருந்து பெறப்படும் பதநீரை காய்ச்சி அதனிலிருந்து நீரை அகற்றி பனஞ்சீனி, கல்லக்காரம், பனங்கட்டி, கருப்பட்டி போன்ற இனிப்புடைய பதார்த்தங்கள் பெறப்படுகின்றன. பனங்கட்டியில் 70% சுக்கிரோசு வெல்லம் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பனங்கட்டிகள் வேவ்வேறு அளவிலான பனங்கட்டி குட்டான்களில் அடைக்கப்படுகின்றன. கோவில் திருவிழாக் காலங்களில் கடலை, கச்சான் போன்றவற்றுடன் சிறிய பனங்கட்டிக் குட்டான்களும் விற்கப்படுவதுண்டு.

தற்போது பனந்தேன், பனம்பாணி என்பன பதநீரிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பனை வெல்லம், சில்லுக்கருப்பட்டி, பனங்கற்கண்டு, chocolate, ginger toffee என்பனவும் உற்பத்தி செய்யப் படுகின்றன. பதநீரை அரிசி, பயறு என்பனவற்றுடன் சேர்த்துக் காய்ச்சி கருப்பணிக்கஞ்சி செய்வதும் உண்டு.

12. கள்ளு[[பன்னிகுட்டி கவனத்திற்கு]]

முட்டியின் உட்பகுதியில் சுண்ணாம்பை பூசாமல் விட்டால் பதநீரை காற்றிலுள்ள மதுவங்கள் (yeasts) போன்ற நுண்ணங்கிகள் நொதித்து (fermentation) அதனை வெள்ளை நிறமுடைய பனங்கள் அல்லது கள்ளு என்னும் பதார்த்தமாக மாற்றும். கள்ளு 5-6 வீதம் மது (ethyl alcohol) வைக்கொண்டிருக்கும். இது பலரால் விரும்பிப் பருகப்படும் ஒரு பானம்.

பனங்கள்ளு வேறு பாவனைகளுக்கும் உபயோகமானது. அப்பம் போன்ற உணவுப்பண்டங்களை புளிக்க வெப்பதற்கு சிறிது கள்ளை சேர்ப்பார்கள். இதிலுள்ள மதுவங்களின் தொழிற்பாட்டால் நொதித்தலின் போது தோற்றுவிக்கப்படும் காபனீரொட்சைட் என்னும் வாயு அப்பத்தை பொங்க வைக்கும். உடம்பில் புண்களால் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதற்கும் கள்ளு உதவுகின்றது. வறுத்த பிஸ்கோத்தை கள்ளில் ஊறவிட்டு புண்ணை மூடி கட்டினால் osmosis மூலம் வீக்கத்திலுள்ள நீர் வெளியேறி வீக்கம் குறையும். பனங்கள் நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்திலுள்ள வெல்லத்தின் அளவையும் கட்டுப்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

13. வினாகிரி

கள்ளை முற்றாக நொதிக்க வைத்தால் அது அமிலமாகி (acetic acid) புளித்த கள்ளாக மாறும். இதிலிருந்து வினாகிரி தயாரிக்கலாம். வினாகிரி, இறைச்சி வகைகளை மென்மையாக்குவதற்கு பாவிக்கப்படும். கள்ளு முட்டிகளின் அடியில் இறந்த மதுவங்களும், மிச்சமுள்ள பொருட்களும் சேர்ந்து மண்டி எனப்படும் அடைசலைத் தோற்றுவிக்கும்.

14. பனஞ்சாராயம்

கள்ளை வடிகட்டி தூர்மையாக்கி பனஞ்சாராயம் பெறலாம். பனஞ் சாராயத்தின் மணத்திற்கு அது கொண்டுள்ள ethyl acetate எனப்படும் இரசாயனப் பதார்த்தம் காரணம். சிலர் கள்ளுடன் பல வகையான உடம்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களைச் சேர்த்துக் காய்ச்சுவர். இது கசிப்பு எனப்படும். இது நல்ல பானமல்ல.

15. நுங்கு [[கக்கு மாணிக்கம் கவனத்திற்கு]]

பெண் பனையின் பாளையிலிருந்து உண்டாகும் இளம் பனங்காய்கள் கொத்தாக குலைகளில் தோன்றும். இவை சில குறித்த மாதங்களிலேயே தோன்றத் தொடங்கும். இக்காய்கள் பொதுவாக மூன்று கண்கள், என அழைக்கப்படும் குழிகளைக் கொண்டிருக்கும். சில இரண்டு கண்களையும் இன்னும் சில ஒரு கண்ணையும் உடையவை. இவற்றில் ஜெலி போன்ற திரவப்பதார்த்தம் உண்டு. இது நுங்கு அல்லது நொங்கு என்று அழைக்கப்படும். இது சுவைப்பதற்கு ருசியானது. காயை வெட்டி நுங்கை உறிஞ்சிக் குடிப்பார்கள். நுங்கின் மேல்பகுதியில் மூன்று, கோது போன்ற செவியமைப்பையுடைய அமைப்புக்கள் உண்டு. இவை பணிவில் அல்லது பணுவில் என அழைக்கப்படும். நுங்கை குடிப்பதற்கு சிலர் இதனைப் பாவிப்பர். பணிவிலைப் பாவித்து சிலர் கஞ்சி, கூழ் போன்றவற்றையும் குடிப்பது உண்டு.
நுங்கு 10-11% வெல்லத்தையும், 2% புரதத்தையும், கொண்டுள்ளது. காயை நுங்குக்காக வெட்டியபின் சிறிது நேரத்தில் வெட்டிய மேற்பரப்பு மண்ணிறமாக மாறும். இதற்கு காரணம் இதிலுள்ள polyphenols என்னும் பதார்த்தங்கள் காற்றிலுள்ள ஒக்சிஜனினால் ஒக்சியேற்றப்பட்டு மண்ணிறமான quinone என்னும் பதார்த்தங்களை தோற்றுவிப்பதினால். நுங்கு சாப்பிட்டபின் மிகுதியாக இருக்கும் பகுதி கோம்பை என அழைக்கப்படும். இதனை சிறு துண்டுகளாக வெட்டி மாடுகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள்.
காய் முதிர்ச்சி அடைய அடைய நுங்கு நீர்த்தன்மையை இழந்து கெட்டியானதாக மாறும். இந்நிலையில் காய்களை சீக்காய் என அழைப்பார்கள். சீக்காய் சாப்பிடக்கூடியது அல்ல என்றாலும் சிலர் இது முற்றாக வைரமாகுமுன் சீவிச் சாப்பிடுவதுமுண்டு. இவை விருத்தியடைந்து பனம்பழமாகவும் நுங்கு இருந்த பகுதி பனம் விதையாகவும் மாறும்.

15. பனம்பழம்

ஒவ்வொரு பனம்பழத்திலும் பொதுவாக பனம்விதைகள் மூன்று காணப்படும். சிலவேளை இரண்டு விதைகளுடனும் அல்லது ஒரு விதையுடனும் பனம் பழங்கள் காய்ப்பதுண்டு. சிலர் பனம்பழத்தைச் சூப்பி சாப்பிடுவதுண்டு. பனம் பழத்தை அடுப்பில் சுட்டுச் சாப்பிடுவதும் உண்டு. பனம்பழங்களை மாடுகளும் விரும்பிச் சூப்பிச் சாப்பிடும்.

பனம்பழத்தின் தோல் கருமை நிறமுடையதும் நார்த்தன்மை கொண்டதுமாகும். இதன் உள்ளே மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறமுடைய மிகவும் நார்த்தன்மை கொண்ட பழக்கூழ் உள்ளது. பனம்பழத்தின் இந்நிறங்களுக்கு carotene, lycopene எனப்படும் நிறப் பொருள்கள் காரணம். பனங்கூழைப் பிழிந்து பனங்களி எடுப்பார்கள். பனங்களி சத்துள்ளது. இதில் வெல்லம் 14-16%, புரதம் 4% மற்றும் கரட்டின், உயிர்ச்சத்து A, C, E என்பவை உள்ளன. உயிர்ச்சத்து A கண்களுக்கு நல்லது. உயிர்ச்சத்து C ம், E ம் சிறந்த ஒக்சியேற்ற எதிரிகள் ; (antioxidants). எமது உடம்பில் அனுசேப தாக்கங்கள் காரணமாக பல free radicals என்னும் பதார்த்தங்கள் தோன்றுகின்றன. இவை எமது உடம்பிலுள்ள கலங்களை அழிக்க வல்லன. ஒக்சியேற்ற எதிரிகள் இந்த free radicals இன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும். அத்துடன் இவை இரத்தத்திலுள்ள கொலஸ்ரரோலயும் குறைக்க வல்லன.

பனங்களி உவர்ப்பு கலந்த இனிமையைக் கொண்டது. இதன் உவர்ப்புத் தன்மைக்கு flabelliferins என்னும் இராசயானப் பதார்த்தங்கள் காரணமாகும். இவை நுண்ணுயிர் கொல்லித் தன்மை கொண்டவையென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

16. பனம்பழப் பொருட்கள்

பனங்களியிலிருந்து தயாரிக்கப்படும் பனங்காய்ப் பணியாரம் பலருக்கு விருப்பமான, சுவையான சிற்றுண்டி. பனம்பழத்திலிருந்து பனம்பாணி, பனம்ஜாம், palmyrah cordial, palmyrah crush போன்ற பொருட்களும் தற்போது தயாரிக்கப் படுகின்றன.

பனங்களியைப் பாயில் ஊற்றி, வெயிலில் காயவைத்து அதனிலிருந்து பனாட்டு என்னும் பதார்த்தத்தைப் பெறுவார்கள். சில சமயம் இதனைப் புகை போட்டு வைத்தால் நீண்டகாலம் வைத்து பாவித்து உண்ணலாம். பனாட்டை தேனில் தோய்த்து காயவைத்து பாணிப்பனாட்டு தயாரிக்கப் படுகின்றது. தற்போது palmyrah nectar எனப்படும் பனம்குளிர்பானம் பனங்களியிலிருந்து தயாரிக்கப் படுகின்றது. பனம் ஐஸ்கிறீம், பனம் biscuits, chocolates, fruit bars என்பனவும் தற்போது செய்யப்படுகின்றன.

பனம்பழத்தில் saponins என்னும் பொருட்கள் உள்ளன. இவை நுரைக்கும் சக்தியைக் கொண்டன. இதனால் பனங்களியைப் பாவித்து உடுப்புகள் தோய்த்ததும் உண்டு. பனங்களியின் இந்த குணாதிசயத்தைப் பாவித்து shampoo, சவர்க்காரம் போன்றவை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பனங் களியில் அதிகளவு pectin உள்ளது. இதனைப் பிரித்தெடுத்து ஐஸ்கிறீம், soup போன்ற உணவுப்பண்டங்களுக்கு ஒரு தடிப்பாக்கியாக (thickner) பாவிக்கலாம்.

17. பனம் விதை

பனம் விதை ஓரளவிற்கு நீள் வட்டமானது, ஆனால் தட்டையானது. விதையின் மேற்பரப்பு முழுவதும் மென்மையான நார்களால் சூழப்பட்டிருக்கும். இந் நார்கள் மெத்தைகள், வாசல் பாய்கள் போன்றவை செய்வதற்கு உகந்தன. பனம் விதையை எரிபொருளாகவும் பாவிக்கலாம்.

18. பூரான்

சிலர், பனங்கொட்டைகளை அவை முளைக்குமுன் சேகரித்து அவற்றை இரண்டாகப் பிளப்பார்கள். இவற்றின் உள்ளே சாம்பல் நிறமுடைய பகுதியிருக்கும். இதன் நடுவில் வெள்ளை நிறமான, மென்மையான விதையின் முளையத்தைக் (embryo) கொண்ட பகுதி இருக்கும். இது பூரான் எனப்படும். இது மிகச் சுவையானது, பலரால் விரும்பி உண்ணப்படுவது. பூரான் முளைக்கும் பனை விதைக்கு உணவாகப் பயன்படுவது. பனம் விதைகள் முளைத்து பனங்கிழங்குகள் தோன்றியபின் இப்பூரானின் சத்துக் குறைந்து, சுருங்கி, நீர்த்தன்மையாக மாறும். இந்நிலையில் இதனை சீத்தல், சிதவல் அல்லது சீந்தல் என அழைப்பர்.

19. பனங்கிழங்கு

பனம்மரத்திலிருந்து தானாக கனிந்து விழுந்த விதைகள் நாளடைவில் முளைத்து பனங்கிழங்குகளைத் தோற்றுவிக்கும். இதைத்தவிர, பனம் விதைகள் சேகரிக்கப்பட்டு நிலத்தில் படைபடையாக அடுக்கப்பட்டு மண்ணால் மூடப்படும். இது பனம்பாத்தி எனப்படும். மூன்று, நாலு மாதங்களில் விதைகள் முளைத்து அவற்றிலிருந்து பனங்கிழங்குகள் தோன்றும். பனங்கிழங்கு பனைமரத்தின் வேர்ப்பகுதியல்ல. இது உண்மையில், முளைத்த விதையிலிருந்து உண்டான முதல் இலையின் இலை மடலாகும். இது பருத்து அதிகளவில் மாச்சத்தைக் (starch) கொண்டிருக்கும். அத்துடன் அதிகளவில் நார்களைக் கொண்டவை. இவற்றின் தோல் கடற்பஞ்சு போல் மென்மையாக இருக்கும். இவற்றை தோலை நீக்கியபின், நீரில் அவித்து இரண்டாகப் பிளந்து, நார்களை நீக்கிச் சாப்பிடுவார்கள். சிலர் பனங்கிழங்கை உப்பு, வெங்காயம், மிளகு என்பனவற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவதுமுண்டு. பனங்கிழங்கு அதிக நார்ச்சத்தைக் கொண்டிருப்பதால் உடம்பிற்குத் தேவையான நார்ச்சத்தைக் கொடுப்பதோடு ஒரு நல்ல மலம் இளக்கியாகவும். தொழில் படும். மேலும் வயிற்றுளைவு, நெஞ்சு நோய் போன்ற பல நோய்களுக்கு அருமருந்தாகவும் உள்ளது. பனங்கிழங்கைச் சாப்பிட்டு பலர் நீண்டகாலம் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகின்றது.

20. ஒடியல்

முதிர்ந்த பனங்கிழங்கின் தோலை நீக்கியபின் அவற்றைப் பிளந்து வெய்யிலில் காயவைப்பார்கள். இது காய்ந்து கடினமாக மாறும். இது ஒடியல் எனப்படும். ஒடியலை அரைத்து பெறப்படும் மா ஒடியல் மா எனப்படும். ஒடியல் மாவில் 82% காபோவைதரேற், 3% புரதம், அத்துடன் கல்சியம், பொற்றாசியம் என்பன இருப்பதாக அறியப்பட்டுள்ளது. ஒடியல் மாவை சிலசமயம் முருங்கை இலையுடன் சேர்த்து ஒடியல்புட்டு செய்வார்கள்;. ஒடியல் மாவின் முக்கிய பாவனை ஒடியல் கூழ் தயாரிப்பு. ஒடியல் கூழ் செய்யமுன் ஒடியல் மாவை நீரில் கரைத்து பல முறை கழுவி, கழுவிய நீரை வெளியே ஊற்றுவார்கள். இது ஒடியலிலுள்ள கசப்பத் தன்மையைக் குறைக்கும். பல வகையான சைவ, மாமிச ஒடியல் கூழ்கள் தயாரிக்கப் படுகின்றன. ஒடியல் மாவை வேறு மா வகைகளுடன் சேர்த்து தோசை, இட்டலி, இடியப்பம், பாண் என்பனவும் செய்ய முயற்சிக்கப்படுகின்றது.

21. புளுக்கொடியல்

பனங்கிழங்கை அவித்து காய வைத்தபின் அது புளுக்கொடியல் எனப்படும். இது ஒடியலிலும் பார்க்க வைரமானது. இதனை நேரடியாகவே சாப்பிடலாம் அல்லது புளுக்கொடியல் மாவாக்கி சிற்றுண்டியாகப் பயன்படுத்தலாம். புளுக்கொடியலை உரலில் இடித்து தேங்காய்ப்பூ, சர்க்கரையுடன் சேர்த்து பெறப்படும் துவையல் மிக ருசியானது. புளுக்கொடியலை தேங்காய் சொட்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதும் உண்டு. சில சமயம் பனங்கிழங்கை சிறிய சில்லுகளாக வெட்டிக் காய வைத்து புளுக்கொடியல் சில்லுகள் செய்வர்.

22. ஊமல் கொட்டை

பனங்கிழங்கை நீக்கியபின் மிஞ்சி இருக்கும் பனம்விதை ஊமல் கொட்டை எனப்படும். இதனுடைய சுவர்கள் lignin என்னும் தடித்த, வைரமான பதார்த்தினாலானவை. இதனால் இது ஒரு சிறந்த எரிபொருளாகப் பாவிக்கப் படுகின்றது. ஊமல் கொட்டையிலிருந்து பனங்கரியும் (charcoal) தயாரிக்கலாம்.

23. அடிமரம்

பனைமரத்தின் அடிமரப்பகுதி மிகவும் வைரமானது. நீன்ட காலம் பாவிக்கக்கூடியது. இதில் உள்ள இரசாயனப் பொருட்கள் பங்கசுக்களால் தோற்றுவிக்கப்படும் உக்கலையும், பூச்சி அரித்தலையும் தடுக்கும் வல்லமை உள்ளன. இதன் காரணமாக, வைரமான மரம் பல வீட்டு, கட்டிட வேலைகளுக்கு பரவலாக பாவிக்கப்படுகின்றது. இதனுடைய வைரத்தின் தடிப்பு மேல்நோக்கி குறைந்து கொண்டு போகும். சிலர் வைரமுடைய அடிமரத்தை நீள்பாகமாக இரண்டு பகுதியாக பிளந்து உள்ளேயுள்ள மென்மையான பகுதியை நீக்குவர். இதன்பின் இரண்டு பகுதியையும் ஒன்றாக்கி கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்க பாவிக்கப்படும் துலா செய்வதற்கு உபயோகிப்பார்கள். தற்போது துலாவின் பாவனை குறைந்து கொண்டு வருகின்றது.

வைரத்தின் தடிப்பு குறைந்த மரப்பகுதி அவற்றின் தடிப்பைப் பொறுத்து தீராந்தி, வளை, துலாவின் அச்சு, மாட்டு வண்டிலின் பார் சட்டம் போன்றவை செய்ய பாவிக்கப்படும். இன்னும் வைரம் குறைந்த மரம் சிலாகை செய்ய பாவிக்கப்படும். இவ்வாறான மரங்கள் மண், கல் வீட்டுக்கூரைகளில் அதிகளவில் பாவிக்கப்படுகின்றன. இவ்வாறாக பாவிக்கப்படும் மரங்கள் 100 வருடம் வரை இருக்கும் எனச் சொல்லப்படுகின்றது.
விழாக்காலங்களிலும், திருமணம் போன்ற வைபவங்களின் போதும் பந்தல்கள் போட பனம் வளைகளும், சிலாகைகளும் பெருமளவில் உதவுகின்றன.

வைர மரத்திலிருந்து ஏணி, விளையாட்டுப் பொருட்கள், மரச் செதுக்கல்கள், சிற்பங்கள், குவளைகள், உணவுத்தட்டுகள், பென்சில்கள், வளையல்கள் போன்ற பல விதமான பொருட்கள் தற்போது தயாரிக்கப்படுகின்றன.

24. சோத்தி

பனை மரத்தின் வைரமாகாத உட்பகுதி வெள்ளையாகவும் மென்மையாகவும் இருக்கும். இது சோத்தி எனப்படும். ஒரு காலத்தில் இப்பகுதியை மக்கள் உணவாக சாப்பிட்டதாகவும் கதைகள் உண்டு. சிலர் இவற்றை காயவைத்து எரிபொருளாக பாவிப்பர்.

பனமரத்தின் வைரம் குறைந்த மேல் மரப்பகுதி மரக்குற்றியாக வெட்டப்பட்டு தூண்களாகவும், பாலங்கள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதே வகையான குற்றிகளைப் பிளந்து சோத்தியை நீக்கி நீர்த் தொட்டி போல் செய்து, நீரை நிறைத்து மாடுகள் நீர் குடிப்பதற்கு உபயோகித்ததுண்டு. இவை பனம் கொட்டு எனப்படும். சிலர் இவ்வாறு சோத்தி நீக்கப்பட்ட நீள் மரத்துண்டுகளை பீலிகளாகப் பாவித்து நீர் பாய்ச்சுவதற்கும் உபயோகித்திருக்கின்றார்கள். பனைமரத்தின் வைரத்தை கட்டுமானப் பொருட்கள் செய்யும்போது அவற்றின் பட்டையை செதுக்கி நீக்குவார்கள். சிராய் என அழைக்கப்படும். இவை சிறந்த எரிபொருள். வெட்டிய பனைமரத்தின் அடிப்பகுதியை (stump) சிலர் அதன் நடுவிலுள்ள மென்மையான பகுதியை நீக்கி குண்டாளம் போல் செய்வார்கள். பின் இதனுள் சுண்ணாம்புச் சிப்பிகளைப் போட்டு சுண்ணாம்புக் கொப்பரைகளாகப் பாவிப்பார்கள். சில சமயம் இந்த அடிப்பகுதி வெட்டிப் பிளக்கப்பட்டு எரிபொருளாகவும் பாவிக்கப்படும்.

25. பனம்வேர்

பனை மரத்தின் வேர் கருமையானது, பென்சில் அளவு தடிப்புடையது. வெட்டிய மரங்களிலிருந்து சிலர் இவற்றை எடுத்து எரிபொருளாகப் பாவிப்பர். பனம்வேரையும் மருந்து மூலிகையாகப் பயன்படுத்தலாம் எனச் சொல்லப்படுகிறது.

இவ்வாறு பனை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மனித குலத்திற்கு உணவாகவும், இன்னபிற தேவைகளுக்காகவும் பயன்படுகின்றது. தேவையற்றது என்றோ, வீணானது என்றோ வீசி எறிவதற்கு பனை மரத்தில் ஒன்றுமேயில்லை. பனை மரத்தைப் போல எல்லா விதத்திலும் பிரயோசனமான மரம் வேறெதுவுமில்லை. அது ஒரு கற்பகத்தரு.
பனை மரம் இவ்வளவு உபயோகங்களைக் கொண்டிருந்தாலும் இன்னும் இதன் பாவனைகள் முழுமையாக உபயோகிக்கப்படவில்லை என்றே சொல்லலாம். பனைமரத்தை பொருளாதார ரீதியில், வர்த்தகத்திற்குரிய முறையில் வளப்படுத்துவதற்கு என்ன காரணங்கள் தடையாக உள்ளன, என்ன முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என ஆராய வேண்டும்.
முதலாவதாக, பனை மரம் முற்றாக பயனைத்தர நீண்ட காலம் எடுக்கின்றது. தென்னை மரத்தைப் போல குறுகிய காலத்தில் பயனைத் தரக்கூடிய புதிய வகைகள் இன விருத்தி செய்யப்ப



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 21, 2011 5:47 pm

அடப் பாருப்பா இதையும் கவிதை பகுதியில் பதிந்திருக்கிறார்
உதயசுதா வாங்க வாங்க உங்களுக்கு வேலை வச்சிட்டே இருக்கார் முகைதீன்

நல்ல தகவல் நன்றி சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Sep 21, 2011 6:20 pm

மிக அருமையான, அறிய தகவல் இது......

தமிழ் கூறும் மூன்று வகை நட்பின் முதல் இடத்தில் இருப்பது பனை மரம் தான். பனையை பற்றிய குறிப்புகள் கொண்ட சங்கப்பாடல்கள் ஏராளம்,

நான் இது வரை மூன்று ஆண் பனை மரங்களைத்தான் தான் கண்டிருக்கிறேன். அனைத்தும் அறிய தகவல்கள்.....

பதிந்தமைக்கு நன்றி






சதாசிவம்
பனைமரம்....!!!  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக