புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா செய்திகள் .............. Poll_c10சினிமா செய்திகள் .............. Poll_m10சினிமா செய்திகள் .............. Poll_c10 
306 Posts - 42%
heezulia
சினிமா செய்திகள் .............. Poll_c10சினிமா செய்திகள் .............. Poll_m10சினிமா செய்திகள் .............. Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
சினிமா செய்திகள் .............. Poll_c10சினிமா செய்திகள் .............. Poll_m10சினிமா செய்திகள் .............. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சினிமா செய்திகள் .............. Poll_c10சினிமா செய்திகள் .............. Poll_m10சினிமா செய்திகள் .............. Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சினிமா செய்திகள் .............. Poll_c10சினிமா செய்திகள் .............. Poll_m10சினிமா செய்திகள் .............. Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சினிமா செய்திகள் .............. Poll_c10சினிமா செய்திகள் .............. Poll_m10சினிமா செய்திகள் .............. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சினிமா செய்திகள் .............. Poll_c10சினிமா செய்திகள் .............. Poll_m10சினிமா செய்திகள் .............. Poll_c10 
6 Posts - 1%
prajai
சினிமா செய்திகள் .............. Poll_c10சினிமா செய்திகள் .............. Poll_m10சினிமா செய்திகள் .............. Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சினிமா செய்திகள் .............. Poll_c10சினிமா செய்திகள் .............. Poll_m10சினிமா செய்திகள் .............. Poll_c10 
4 Posts - 1%
manikavi
சினிமா செய்திகள் .............. Poll_c10சினிமா செய்திகள் .............. Poll_m10சினிமா செய்திகள் .............. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா செய்திகள் ..............


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:07 pm

மாஸ்கோவில் 'மாற்றான்' படக்குழு!

தமிழ் சினிமா அதிகம் பார்த்திராத லொகேஷன்கள்தான் இயக்குநர் கே.வி. ஆனந்தின் இலக்கு. 'அயன்' படத்துக்காக நைஜீரியா, காங்கோ என ஆப்ரிக்காவில் முகாமிட்டவர், 'கோ' படத்துக்கு சீனாவுக்கும், நார்வேக்கும் போனார்.

இப்போது, சூர்யா நடிக்கும் 'மாற்றான்' படத்துக்காக அடுத்து ரஷ்யா சென்றுள்ளனர் ஆனந்த் குழுவினர். கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே மாஸ்கோ சென்றுவிட்டனர். ஹீரோ சூர்யாவும் இவர்களுடன் சென்றுள்ளார். அடுத்த மூன்று வாரங்களுக்கு சூர்யா குழுவினர் இங்குதான் முகாமிட்டிருப்பார்கள்.

ரஷ்ய நகரங்களை விட, அங்குள்ள கிராமங்கள் மற்றும் இயற்கைக் காட்சிகளை மையப்படுத்தி அதிக காட்சிகளை எடுத்து வருகிறாராம் கே.வி. ஆனந்த். கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

நன்றி TMT நன்றி நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:09 pm

தூம் 3' படத்தில் முத்தக் காட்சிகள் வேண்டாமே என்று நடிகை கத்ரீனா கைப் இயக்குநர் ஆதித்யா சோப்ராவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

'தூம் 3' படத்திற்கு ஊரெல்லாம் அலசி இறுதியில் கத்ரீனா கைப்பை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். கத்ரீனா, அமீர் கான் ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் அவர் நிபந்தனை மேல் நிபந்தனை விதித்து வருகிறார். முதலில் பிகினி உடையில் வர மாட்டேன் அதனால் அதுபோன்ற காட்சியை வைக்காதீர்கள் என்றார். அதற்கு இயக்குநர் சம்மதித்தார். தற்போது படத்தில் முத்தக் காட்சிகள் எதுவும் வேண்டாமே என்று கத்ரீனா கூறியுள்ளார். 'தூம் 2' படத்தில் ரித்திக்கும், ஐஸ்வர்யா ராயும் சேர்ந்து ஹாட்டான முத்தக் காட்சியில் நடித்தனர். அது போன்ற காட்சியைத்தான் கத்ரீனா வேண்டாம் என்று கூறியுள்ளார்.

முதல் படத்திலேயே பிகினியில் வந்த கத்ரீனா தற்போது பிகினிக் காட்சிகளை தவிர்க்கிறார். தற்போது அந்த பட்டியலில் முத்தக் காட்சியும் சேர்ந்துள்ளது. இதற்கு இயக்குநர் ஆதித்யா என்ன சொல்லப் போகிறார்? இத்தனை நிபந்தனைகள் போடும் கதாநாயகியை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறார் ஆதித்யா? என்று பாலிவுட்டில் 'கவலையோடு' பேசிக் கொள்கிறார்கள்!



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:10 pm

'அவன் இவன்' படத்தில் வித்தியாசமாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற விஷால் பிரபு தேவாவுடன் கை கோர்த்து தன் வழக்கமான ஆக்ஷன்
பார்முலாவிற்கு திரும்பியிருக்கும் படம்தான் 'வெடி'.

காவல் துறையில் ஐ.பி.எஸ், பதவியில் இருக்கும் விஷால் (பிரபாகரன்), சிறு வயதில் தொலைத்து விட்ட தன் தங்கையை தேடி, தூத்துக்குடியிலிருந்து கொல்கத்தாவிற்கு போகிறார். அதற்கு முன்பு தூத்துக்குடியில் தாதாவாக வலம் வரும் ஷாயாஜி ஷிண்டேவை அடித்து, உதைத்து சிறைக்கு அனுப்பி விட்டு கொல்கத்தாவிற்கு போகிறார்.

சிறுவயதில் வறுமையின் காரணமாக, தன் தங்கையாவது நன்றாக இருக்கட்டுமே என்று மிஷினரி ஒன்றில் சேர்த்து விட்டுப் போகும் விஷாலின் மனதை புரிந்து கொள்ளாமல் அவரை வெறுக்கிறார் அவரது தங்கையான பூனம் கவுர். ஜெயிலில் இருந்து வெளியே வரும் ஷாயாஜி ஷிண்டே, கொல்கத்தாவில் இருக்கும் விஷாலின் தங்கையைப் பற்றி அறிந்து கொண்டு, அங்கே தன் படை பரிவாரங்களுடன் வருகிறார். பூனம் கவுரின் தோழியாக வருகிறார் சமீரா ரெட்டி. தங்கையை சந்திக்க வரும் விஷால் மீது காதல் கொள்கிறார் சமீரா.

இதனிடையே கொல்கத்தா வரும் ஷாயாஜி ஷிண்டே, அங்கே உள்ள லோக்கல் ரவுடியுடன் சேர்ந்து கொண்டு, விஷாலின் தங்கையையும், சமீராவையும் சிறைபிடிக்கிறார். விஷாலோடு அவரது தங்கை சேர்ந்தாரா? சமீராவின் நிலை என்ன? வில்லன்களின் கதி என்ன? என்பதை நீங்களே யூகித்து விடும் அளவிலான கிளைமாக்ஸை சொல்லி படத்தை முடித்திருக்கிறார்கள்.

இப்படம் தெலுங்கில் 2008-ல் வெளிவந்த 'சௌரியம்' படத்தின் தமிழ் ரீமேக். இப்படத்தை விஷாலின் அண்ணன் தயாரித்திருப்பதால் விஷாலின் ஆட்டம் அதிகமாகவே இருக்கிறது. அடிக்கடி சண்டை போடுகிறார். அவ்வப்போது சமீராவுடன் ஆடிப் பாடுகிறார். என்ன ஒரு கூடுதல் அம்சம் என்றால், 'அவன் இவன்' படத்திற்குப் பிறகு விஷாலிற்கு நடிக்க வருகிறது என்பதுதான். சண்டை காட்சிகளில் நன்றாகவே செய்திருக்கிறார்.

இவர் உயரத்திற்கு பொருத்தமான சமீரா ரெட்டியை ஹீரோயினாக்கியது நடனக் காட்சிகளில் விஷாலுக்கு நிம்மதி கொடுத்திருக்கும்.. சமீரா ஆறடியில் கொஞ்சம் ஆண்மை சாயலில் இருந்தாலும் அசத்தல்.. க்ளோஸ் அப் காட்சிகள் பயமுறுத்துகின்றன.. மேக் அப் மேன் யாரோ? இந்த மாதிரி படத்துல ஹீரோயினுக்கு நடிக்கறதுக்கு பெரிசா என்ன இருக்கும்?

விவேக் யாரையாவது இமிடேட் செய்து இரிடேட் செய்யாமல் நடித்தது நலம். இவர் பேசுவதை விட உடலெங்கும் பலூனை சுத்திக் கொண்டு இளைய திலகம் பிரபு போல இவர் செய்யும் சேட்டைகள் சிரிக்க வைக்கின்றன.. படத்தின் முதல் பாதி நகர்வதற்கு இவர் காமெடி கொஞ்சம் கை கொடுக்கிறது..

விஷாலின் தங்கையாக வரும் பூனம் கவுர் அழகாக இருப்பதோடு நடிக்கவும் செய்கிறார்.. ஷாயாஜி ஷிண்டே நன்றாக நடித்திருந்தாலும் வட இந்திய தோற்றம் அவருடைய தூத்துக்குடி வில்லன் கேரக்டரை துவம்சம் செய்கிறது.. என்று தணியும் இந்த தமிழ் பட வில்லன் பஞ்சம்?

பெரிய சண்டை வருமோ என எதிர்பார்க்கும் இடத்தில் அதை தவிர்த்திருப்பது உத்தமம்.. விஷால் வில்லனுக்கு விஷ ஊசி போட்டதாக சொல்லி உயிரை காப்பாற்றி கொள்வதற்காக அலைய விடும் காட்சிகளில் ஊர்வசி, ஸ்ரீமன், பாண்டு இவர்கள் மூவரையும் வைத்து பிரபு தேவா நன்றாக கிச்சு கிச்சு மூட்டுகிறார்..

கதை பழசாக இருந்தாலும் அதை புதுசு போல விறுவிறுப்பாக காட்டுவதே ஆக்ஷன் படங்களின் ஆணிவேர்.. அதரப் பழைய கதைக்கு பிரபு தேவா தன் பாணியில் காமெடி, ஆக்ஷன் மருந்தை ஆங்காங்கே கலக்கியிருந்தாலும் நிறைவாக இல்லாததால் வெடி முழுசா வெடிக்கல.. 'போக்கிரி' படத்திற்கு பிறகு தமிழில் எதுவும் ஹிட் கொடுக்காத பிரபு தேவா தெலுங்கு படமான 'சௌர்யம்' கதையை தேர்ந்தெடுத்தது சௌர்யமாக இல்லை.

இந்த மாதிரி படங்களில் லாஜிக் பார்க்க கூடாது என்றாலும் போலீசாக இருந்து கொண்டு ஒரு தகவலும் சொல்லாமல் தங்கைக்காக திடீரென விஷால் கொல்கொத்தா சென்று விடுவது, கிளைமாக்சில் ஏ.சி.பி.யான விஷால் இறந்து விட்டதாக வில்லன் டி.வி.யில் விளம்பரம் கொடுத்து அவர் தங்கையை பிடிப்பது என்று லாஜிக் சொதப்பல்கள் ஏராளம்.

பிரபு தேவா - விஜய் ஆண்டனி கூட்டணியில் பாடல்களும் சொல்லும்படி பெரிதாக இல்லாததும் ஒரு குறை. ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை. இரண்டே மணி நேரத்தில் முடிந்து விடுவதால் பொழுதுபோக்கை மட்டும் மனதில் வைத்து பார்ப்பவர்களுக்கு படம் ஓரளவு பிடிக்கலாம்.. இருப்பினும் காவல்துறையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட 'சாமி', 'சிங்கம்', 'தபாங்' (ஹிந்தி) போன்ற கமர்ஷியல் ஆட்டொம் பாம்களை பார்த்த நமக்கு இந்த 'வெடி' வெறும் பிஜிலி வெடியாகவே தெரிகிறது.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 04, 2011 4:11 pm

நல்லது....இதை தினமும் நீ ஒரே திரியில் போட்டு விடு கார்த்திக்...
அப்போ முழு நேரமும் சினிமா தான் பார்ப்ப போல....சினிமா செய்திகள் என்றாள் அவ்வளவு விருப்பமா கார்த்திக்...... ஜாலி .





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:12 pm

"முரண்" : விமர்சனம்

வாழ்க்கை பயணத்தில் நாம் சந்திக்கும் முரண்பட்ட மனிதர்களை பற்றிய கதை.

வாழ்க்கையில் ஏதோ ஒரு நாள்.. ஏதோ ஒரு சம்பவம்.. யாரோ ஒருவரால் நமது நிம்மதி தொலைந்தது அல்லது வசந்தம் வந்தது என்று சொல்லக் கேட்டிருப்போம். அல்லது நமக்கே அது போன்ற அனுபவங்கள் கிடைத்திருக்கும். கிடைத்த அனுபவத்தினால் இனிமை கிடைத்திருக்குமானால் அதில் சுவாரஸ்யம் அதிகமிருக்காது. ஆனால் அதுவே துன்பமயமெனில்.. இதைதான் ஊரே மெல்லும்.. அப்படியொரு அனுபவச் சிக்கலுக்குள்ளாகும் படம்தான் இந்த 'முரண்'.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு போகும் சேரனின் கார் நடுவழியில் கோளாறு காரணமாக நின்றுவிட, அவருக்கு லிப்ட் கொடுக்கிறார் பிரசன்னா. எது செய்தாலும் அதில் ஒரு த்ரில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பிரசன்னாவின் குணத்தைப் பார்த்து வியக்கும் சேரன், போகப் போக ரசிக்கவும் செய்கிறார். ஒரு வழியாக இரண்டு பேரும் தாங்கள் யார்? தங்களுடைய வாழ்க்கை எப்படி போகிறது என்பதை பகிர்ந்துகொள்கிறார்கள். இதில் சேரனுக்கு அவருடைய மனைவி பிரச்சினையாகவும், பிரசன்னாவுக்கு அவருடைய அப்பா பிரச்சினையாகவும் இருக்கிறார்.

சென்னையை நெறுங்கும் தருவாயில் பிரசன்னாவுக்கு ஒரு யோசனை வருகிறது. "உங்களுடைய மனைவியை நான் கொலை செய்கிறேன். என்னுடைய அப்பாவை நீங்கள் கொலை செய்கிறீர்களா? இப்படி செய்தால் நாம் இருவரும் தப்பித்துகொள்ளலாம்." என்று சேரனிடம் சொல்கிறார். இதை கேட்டு அதிர்ந்துபோகும் சேரன், "மனநல மருத்துவரை போய் பாருங்கள்" என்று பிரசன்னாவிடம் கூறிவிட்டு சென்று விடுகிறார்.

இதற்கிடையில் சேரனுடைய மனைவியின் அட்டகாசம் எல்லையை மீற, "இவளை கொலை செய்தால் தான் என்ன?" என்று சேரன் யோசிக்கும் தருவாயில், பிரசன்னா சேரனின் மனைவியை கொலைசெய்துவிடுகிறார். அதற்கு பதிலாக தனது அப்பாவை நீங்கள் கொலை செய்யுங்கள் என்று சேரனை வற்புறுத்த, வேண்டாவெறுப்பாக கொலை செய்ய சம்மதிக்கும் சேரன், பிரசன்னாவின் அப்பாவை கொலை செய்தரா இல்லையா? என்பதை எதிர்பார்க்காத திருப்பங்களுடன் சொல்லியிருக்கும் படம் தான் 'முரண்'.

ஆர்ப்பாட்டம் இல்லாமல் படம் ஆரம்பித்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் ஏதோ ஒரு சுவாரஸ்யத்தை வைத்து விறுவிறுப்பாக படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். அதுவும் பிரசன்னாவின் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு முழுப்படத்தையும் ரசிக்கும்படி செய்திருப்பது சுவாரஸ்யம்.

தமிழ்த் திரைப்படத்துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் தகுதியுடைய நடிகராகப் பிரசன்னா மிளிர்கிறார். டிடிஎஸ் எஃபெக்டில் கத்தவெல்லாம் இல்லை. பிரபல காமெடி நடிகர்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு அவர்களது முதுகில் சவாரி செய்யவில்லை. தன்னுடைய முக பாவனைகளிலேயே அத்தனை பாவங்களையும் காட்டி நம்மைக் கட்டிப்போடுகிறார். மொத்தத்தில் பிரசன்னாவின் திறமையை இந்த படம் வெட்டவெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. இனியாவது முன்னணி ஹீரோவின் பட்டியலில் பிரசன்னாவின் பெயர் இடம்பெறுமானு பார்ப்போம்.

இயக்குநர் சேரனை இயக்குநர்களின் நடிகர் என்று சொல்லலாம். ஸ்டேட்டஸூக்கும் சொத்துக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் தன் முதல் மனைவியுடன் வாழாமல் வாழ்கிறார். ஹரிப்பிரியா மூலம் ஒரு வசந்தம் வருகிறது. பிரசன்னா மூலம் பயமும் வருகிறது. இறுக்கம், தயக்கம், மகிழ்ச்சி, பயம் அனைத்தையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகள் அவர் கொடுக்கும் பின்னணிக் குரல், 'ஐயோ..அம்மா..ஹா..' ரசிக்க முடிகிறது.

முதற்பாதியில் படத்தினை நகர்த்துவதே வசனங்கள்தான்.. சேரனின் ஈகோவை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கும் பிரசன்னாவின் அந்த நக்கலையும், பிரசன்னாவை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் அப்பாவியாக சேரனின் நடிப்பும் ஏ ஒன்..! அதிலும் மாங்கா பறிக்கும் காட்சிக்குப் பின்பு 'நாயை உசுப்பிவிட்டது நீங்கதானே..' என்று சேரன் கேட்குமிடம் செம டச்சிங்..!

சேரனின் மனைவியாக நிகிதா... காதலியாக ஹரிபிரியா.. இருவருக்கும் அதிகம் வேலையில்லை என்றாலும், ஹரிபிரியாவின் அந்த மார்க்கெட்டிங் காட்சி குபீரென்று சிரிப்பை வரவழைக்கிறது. 'நீங்க என்ன சோப்பு யூஸ் பண்றீங்க..?' என்று ஹரிபிரியா கேட்கும் கேள்வியில் சிரிக்காமல் எப்படி இருப்பது..? இதேபோல் 'சொதப்பிட்டா..' என்று சேரன் கேட்கும்போதும், பிரசன்னா மேப் போட்டு விவரிக்கும்போதும், 'கமிஷனரும் அங்கதான் வாக்கிங் வருவாரு..' என்று சொல்லும்போதும் அப்ளாஸ் போட்டுத்தான் ஆகவேண்டியிருந்தது..!

பிரசன்னா வேண்டுமென்றே வம்பு சண்டைக்குப் போக, சேரன் இடையில் புகுந்து தாக்குதல் தொடுக்க.. கடைசியில் அவர்களது காரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு கவலைப்படாமல் தப்பிக்கும் காட்சியிலேயே சேரன், பிரசன்னாவின் குறைந்தபட்ச எல்லைக் கோட்டுக்குள் வந்துவிட்டார் என்பதை உணர்த்திவிட்டார் இயக்குநர்.

சுமா பட்டாச்சார்யாவின் தமிழ் கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. ஜெயபிரகாஷ், சுமாவை கற்பழிக்கும் காட்சியை, ரஜினிகாந்த் நடித்த 'நெற்றிக்கண்' படத்திலிருந்து சுட்டிருக்கிறார்கள்.

ஜெயபிரகாஷை, சேரன் கொலை செய்திருந்தால்கூட சேரன் மீது எவருக்கும் குற்றவுணர்வு வந்திருக்காது என்று நினைக்கும் அளவுக்கு பிரசன்னாவின் டார்ச்சர் காட்சிகளை ஸ்டெப் பை ஸ்டெப்பாக வைத்து 'பெப்' ஏற்றியிருக்கிறார் இயக்குநர்.

சேரன், பிரசன்னா, ஹரிபிரியா, ஜெயப்பிரகாஷ் நால்வரையே படத்தின் பின்பாதி முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தாலும், எப்படி இருவரும் கதையை முடிக்கப் போகிறார்கள் என்று திரில்லிங்கில் 'பெப்'பை ஏற்றிக் கொண்டேயிருக்கிறது திரைக்கதை. அந்த சப் இன்ஸ்பெக்டர் இறக்கும்போதுதான் பிரசன்னாவின் கேரக்டர் மீது கொஞ்சம் சந்தேகம் வந்தது. பிற்பாடு உறுதியானபோது திரைக்கதையின் இறுக்கம் புரிந்தது.

இவ்வளவு பெரிய கோடீஸ்வரரின் மகன் சொந்த அலுவலகத்தில் சாதாரண டைப்பிஸ்ட்டை போல அமர வைக்கப்பட்டிருப்பதும், அப்பாவால் வெறுத்து ஒதுக்கப்பட்டும் இத்தனை ஆடம்பரமாக வலம் வந்தும், கொலை செய்ய சேரனை ஏன் கேட்க வேண்டும் என்ற லாஜிக் கேள்வியெல்லாம் எழாமல் இல்லை. இருந்தாலும் அப்பாவியாய் தோற்றமளிக்கும் சேரன் போன்றவர்கள் கிடைத்தால், எந்த அயோக்கியனுக்கும் பயன்படுத்திக் கொள்ளத்தான் தோன்றும் என்பதையே நாம் லாஜிக்காக எடுத்துக் கொள்வோம்..!

ஒளிப்பதிவாளர் பத்மேஷின் கேமரா தேசிய நெடுஞ்சாலைகளை அக்குவேரா ஆணிவேரா காட்டியிருக்கிறது. ராஜசேகர் வடிவமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் எதார்த்தம் என்றால் அதை படம் பிடித்திருக்கும் விதம் அபாரம். சாஜன் மாதவின் பின்னணி இசையும், பாடல்களின் இசையும் கேட்கும் ரகம். பாடல் காட்சிகள் படத்தின் தொய்வுக்குக் காரணமாகிவிடும் என்பதை உணர்ந்து அரை பாடல், முக்கால் பாடல் என்று 2 பாடல்களைத் தாண்டி கிளைமாக்ஸில் வரும் குத்துப் பாடல் ஒரு புதிய வரவு.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே முரண்பட்டால் வாழ்க்கை என்னாகும், காதலால் தந்தையும் மகனும் முரண்பட்டால் என்ன ஆகும் என்பதை கதைக்கருவாக எடுத்து கொண்டு படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர், சில காட்சியமைப்புகளுக்கு அழுத்தமான காரணங்களை சொல்லாமல் இருப்பது படத்தில் மிகப் பெரிய குறையாக உள்ளது.

முரண் - ரன் குவிக்கும்!



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:14 pm

உமா wrote:நல்லது....இதை தினமும் நீ ஒரே திரியில் போட்டு விடு கார்த்திக்...
அப்போ முழு நேரமும் சினிமா தான் பார்ப்ப போல....சினிமா செய்திகள் என்றாள் அவ்வளவு விருப்பமா கார்த்திக்...... ஜாலி .
இல்லை அக்கா தற்போது tmt க்கு சென்றேன் அதனால தான் சிரி சிரி சிரி சிரி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:16 pm

அப்பா-மகன் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கதை.

பெயரைக் கேட்டால் மதுரையே நடுங்கும் தாதா லிங்கம் (சத்யராஜ்). அவர், திடீரென்று பாசத்துக்கு ஏங்க ஆரம்பிக்கிறார். தனக்கொரு மகன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று இண்டர்வியூ வைத்தெல்லாம் மகனை தேடுகிறார். ஆனால், இவர் பெயரைக் கேட்டாலே விழுந்தடித்து ஓடுகிறார்கள்.

இந்நிலையில் தான் தேடும் தகுதிகள் கொண்ட சாந்தனுவை கண்டுபிடிக்கிறார். அவரோ, லிங்கத்தின் வலதுகரம் என்ற பொய் பந்தாவுடன் வலம் வருபவர். வேறொரு பெயரில் சாந்தனுக்கு அறிமுகமாகி அவரது அன்புக்கு பாத்திரமாகிறார் சத்யராஜ். இவருக்கு அவர் உதவி செய்ய, அவருக்கு இவர் உதவி செய்ய என்று பாசப்பயிர் வளர்கிறது. சத்யராஜின் எதிரியான சுமன், சத்யராஜை போட்டுத்தள்ள நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது சாந்தனுவும் அவருடன் சேர்ந்து விட்டதால் அவரையும் போட்டுத்தள்ள திட்டம்போடுகிறார். மீண்டும் சத்யராஜ் ஆயுதத்தை எடுத்தால் என்கவுன்டர் செய்ய போலீஸ் காத்திருக்கிறது. ஆனால் சாந்தனுவுக்காக அவர் ஆயுதம் எடுக்க வேண்டிய நிலையும் வருகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, விக்கு வைக்காத தலை என்று ரவுடி லிங்கமாகவும், அப்பாவி கண்ணாயிரமாகவும் தனக்கு கொடுத்த வேலையை சத்யராஜ் சரியாக செய்திருக்கிறார். ஆங்காங்கே சில காட்சிகளில் தனது முந்தைய படங்களையும் ஞாபகப்படுத்துகிறார்.

சாந்தனு கோபால் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஃபைட், காமெடி, காதல், செண்டிமென்ட் என அனைத்திலும் அசத்தியிருக்கும் சாந்தனுவுக்கு ஆக்ஷன் சப்ஜெக்ட்டும் பொருந்தும் என்பது புரிகிறது. அவ்வப்போது பாக்யராஜ் போல நடித்து காட்டுகிறார். என்னதான் பாக்யராஜ் அவருடைய அப்பாவாக இருந்தாலும், அவர் நடிக்கிற படங்களில் எல்லாம் இப்படி செய்வது போரடிக்கிறது.

சனாகான் உதட்டை குவித்து காதல் வசனம் பேசுவது, சாந்தனு நல்லவர் என்பதை உணர்ந்து ஓடிவந்து கட்டிப்பிடித்து காடு மலையெங்கும் டூயட் பாடுவது என ஹீரோயின் கடமையைச் செய்கிறார். ஆனால் வடக்கத்திய முகத்துடன் இருக்கும் அவருக்கு மதுரை வழக்கு டப்பிங் கொடுத்திருப்பதுதான் கொடுமை.

சுமன், சதா சத்யராஜை கொல்ல திட்டமிடுகிறார். கத்தி கத்தி வசனம் பேசுகிறார். இறுதியில் பொசுக்கென்று செத்துப்போகிறார். "லிங்கம் நல்லவன்பா, நான் கமிஷனரா இருக்கிற வரைக்கும் அவன் வன்முறையில இறங்க மாட்டான். அப்படி இறங்கினா, என்கவுன்டர்ல போடுறேன்" என்று போலீஸ் பணிக்கு புதிய பரிமாணம் கொடுத்து காமெடி பண்ணுகிறார் 'பிதாமகன்' மகாதேவன்.

'நாயகன்' படத்தில் கமலுக்கு உதவியாய் இருப்பது போல, இப்படத்தில் சத்யராஜிற்கு உதவியாளராய் வந்து போகிறார் டெல்லி கணேஷ். கஞ்சா கருப்பு, தீப்பெட்டி கணேசன் ஆகியோரின் காமெடி காட்சிகள் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றன. சில இடங்களில் எரிச்சலூட்டுகின்றன.

லிங்கத்தை முன்னபின்ன பார்க்காத சாந்தனு, அவருடைய வலது கை நான் தான் என்று ரீல் விடும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், படம் முழுக்க சாந்தனுவுடன் சுற்றும் லிங்கத்தை யாருக்கும் தெரியாமல் இருப்பது சலிப்பு தட்டுகிறது.

கவிப்பேரரசு வைரமுத்து இப்படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதியிருக்கிறார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 'மதுர மதுர' பாடல் தாளம் போட வைக்கிறது. 'என்ன தவம்' பாடலில் கே.ஜே.யேசுதாஸின் குரல் நம் மனதை பதம்பார்க்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம். கண்ணனின் ஒளிப்பதிவு கதையோடு நகர்ந்திருக்கிறது.

தாதாவுக்கு ஏற்படும் மகன் பாசம் என்ற ஒன்லைன் ஒ.கே. ஆனால் திரைக்கதையாக்கி இருக்கும் விதத்திலும், படமாக்கியிருக்கும் விதத்திலும் வெளிச்சம் இல்லை. ஊரே நடுங்கும் தாதாவை ஊருக்குள் யாருக்கும் தெரியவில்லை, தான் தந்தையாக பாவிக்கும் ஒருவர், விருந்தினர் போல தினமும் வந்து போவதைப் பற்றி சாந்தனு கவலைப்படவில்லை. சத்யராஜ் மீது பாசம் பொழிபவர் உயிருக்கு போராடும் அவரது கற்பனை மகனை பார்க்க வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. இப்படி பல லாஜிக் விளக்குகள் எரியவில்லை.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 04, 2011 4:17 pm

ந.கார்த்தி wrote:
உமா wrote:நல்லது....இதை தினமும் நீ ஒரே திரியில் போட்டு விடு கார்த்திக்...
அப்போ முழு நேரமும் சினிமா தான் பார்ப்ப போல....சினிமா செய்திகள் என்றாள் அவ்வளவு விருப்பமா கார்த்திக்...... ஜாலி .
இல்லை அக்கா தற்போது tmt க்கு சென்றேன் அதனால தான் சிரி சிரி சிரி சிரி

சரிடா.... சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:17 pm

ரஜினி, தீபிகா படுகோன் நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பூஜை போடப்பட்ட படம் 'ராணா'. பட பூஜை அன்றே ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்சினையால் படப்பிடிப்பு இன்று வரை தொடங்கப்படவில்லை. அவ்வப்போது 'ராணா' படம் கைவிடப்பட்டது என்ற தகவல் வெளிவர, அந்த தகவலை 'ராணா' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனம் மறுத்து வந்தது.

'ராணா' படத்தில் குதிரை சவாரி, சண்டை காட்சிகள் என நிறைய இருப்பதால் ரஜினி அக்காட்சிகளில் பங்கேற்று நடிக்கும் அளவுக்கு இன்னும் உடல்நிலை சரியாகாததால் ரஜினியும் கே.எஸ்.ரவிக்குமாரும் உட்கார்ந்து பேசி, படத்தை கைவிட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின. 'ராணா' படத்தினை கைவிட்டுவிட்டு 'முத்து', 'படையப்பா' மாதிரி விரைவில் படப்பிடிப்பு முடியக் கூடிய ஒரு கதையை தயார் செய்து இருவரும் இணைய இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின.

இத்தகவல் குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியதாவது, "ரஜினி முழுமையாக குணமடைந்து விட்டார். படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். 'ராணா' படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாலும், நிறைய சண்டை காட்சிகள் இருப்பதாலும் நாங்கள்தான் இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகட்டும் என்று முடிவு செய்து இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஈராஸ் நிறுவன தயாரிப்பாளர் சுனில் "ராணா படத்திற்காக காத்திருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ரஜினிக்கு இன்னும் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. டிசம்பர் மாதத்தில்தான் எப்போது படப்பிடிப்பு தொடங்குவது குறித்து முடிவு செய்ய இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 4:18 pm


இந்திய சினிமாவில் சிகரம் தொட்ட படம் என்றால் இன்றைய தேதிக்கு ரஜினியின் எந்திரன்தான்.

மொழிகளைத் தாண்டி, மாநில எல்லைகள் கடந்து ஏபிசி என 'ஆல் க்ளாஸிலும்' வசூலில் பின்னியெடுத்த படம் இது. முதல் 10 வாரங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலாகக் குவித்தது எந்திரன். வெளிநாடுகளில் ரூ 75 கோடிக்கும் மேல் வசூலித்த ஒரே இந்தியப் படமும் எந்திரன்தான்.

33 நாடுகள், மொத்தம் 3000 திரையரங்குகள், இந்தியாவில் மட்டுமே 2000 அரங்குகளுக்கு மேல், ஆந்திரத்தில் மட்டும் 700 திரைகள்.... என இந்தியத் திரையுலகே அதிரும் வகையில் வெளியான படம் எந்திரன்.

வெளியாகி முதல் ஷோ முடிந்ததுமே படத்தின் பிரமாண்ட வெற்றி பறைசாற்றப்பட்டது இந்தப் படத்துக்கு மட்டுமே.

எந்திரன் படம் இந்தியாவில் வெள்ளிவிழா கண்டது. வெளிநாடுகளில் பலவற்றில் 50 நாட்களும், இரு நாடுகளில் 100 நாட்களும் ஓடியது. இத்தனை அரங்குகளில் வெளியாகிய பிறகும் இவ்வளவு நாட்கள் ஓடுவது எத்தனை பெரிய அதிசயம் என்பது சினிமாக்காரர்களுக்குத்தான் தெரியும்!

இந்தப் படம் வெளியாகி கடந்த அக்டோபர் 1-ம் தேதியுடன் ஒரு வருடம் பூர்த்தியானது. இதையொட்டி, ரஜினியின் ரசிகர்கள் இந்தப் படத்தை பல்வேறு அரங்குகளில் சிறப்புக் காட்சியாக திரையிடவைத்து பார்த்து மகிழ்ந்தனர்.

சென்னை தவிர்த்து, திருச்சி போன்ற நகரங்களிலும் எந்திரனை மறுபடியும் திரையிடக் கோரி, முதல் நாள் முதல் காட்சியின் போது காட்டிய அதே உற்சாகத்துடன் பார்த்தனர்.

ரசிகர் மன்றத்தினர், எந்திரன் முதல் ஆண்டு நிறைவு தினத்தை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். சினிமா ஒன்றுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை!



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சினிமா செய்திகள் .............. Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக