புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள் Poll_c10குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள் Poll_m10குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள் Poll_c10குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள் Poll_m10குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள் Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள் Poll_c10குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள் Poll_m10குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள் Poll_c10குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள் Poll_m10குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Oct 15, 2011 2:01 pm

குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள்


நம் குழந்தைகள் (ஏன் நாமும் கூட) ஒவ்வொருவரும் அனுதினமும் சந்த்தித்துக்கொண்டிருக்கும் ஞாபகமறதியைப் பற்றி விரிவாக அலசுவோம்.

ஞாபகமறதி எல்லோரையும் பாதிக்கும் ஒன்றுதான் என்றாலும் மாணவர்களை சற்று அதிகமாகவே பாதிக்கிறது. ஏனெனில் இக்காலத்தில் கற்கும் கல்வியே நினைவாற்றலால்தான் என்றாகிவிட்டது. நல்லாதான் படிச்சுட்டு போனேன். ஆனா பரீட்சை ஹால்ல எல்லாம் மறந்து போச்சு. என்ன படிச்சாலும் மனசில பதிய மாட்டேங்குதுப்பா எதுவுமே எனக்கு ஞாபகத்திலே இல்ல….’ என்று கண் கலங்கி குழந்தைகள் நம்மிடம் காரணங்களாய் கூறுகின்றன.

‘பேனாவை எங்கே வைத்தோம்’ என்று பள்ளிக்கு கிளம்புகிற நேரத்தில் வீடு முழுக்க தேடித் திரியும் போதும், பள்ளிக்கு வந்து பையை திறந்ததும் அன்றைய வகுப்புக்கு தேவையான புத்தகங்களை கொண்டு வரவில்லை என்பது ஞாபகத்திற்கு வரும்போதும், செய்யவேண்டிய ஹோம் ஒர்க்கை மறந்துவிட்டு ஆசிரியரிடம் வாங்கிக்கட்டிக் கொள்ளும்போதும்… எக்ஸாம் ஹாலில் நன்றாக படித்த பாடம் சட்டென்று நினைவிற்கு வராத போதும்… என பல சந்தர்ப்பங்களில்… இவ்வளவு மறதியாக இருக்கிறோமே என்று மாணவர்கள்தங்களைத் தாங்களே எரிச்சல் பட்டுக் கொள்வதுண்டு.

அப்படிப்பட்ட நேரங்களில் எரிச்சல்படுவதற்கு பதில், ஏன் மறக்கிறது? எப்படி நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது என்று பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களை யோசிக்க வையுங்கள்.சிலருக்கு மட்டும் ஞாபகசக்தி நன்றாக இருக்கிறதே? சிலருக்கு மறதி அதிகமாக இருக்கிறதே? ஏன் இந்த வித்தியாசம்? – பலருக்கும் இந்தக் கேள்வி உண்டு.இயற்கையில், நினைவாற்றல் திறன் அனைவருக்கும் சமமாகவே உள்ளது. ஆனால், அதை முறையாகப் பயன்படுத்தாததால்தான் இந்த வித்தியாசம்.

சில வியாதிகளினால் மறதி வருவதுண்டு என்றாலும் மறதி ஒரு வியாதியல்ல.மறதி என்பதே கிடையாது. ஏனெனில் நினைவில் பதிந்தவை எதுவும் அழியாது என்பார்கள். உங்கள் சட்டையில் ஐநூறு ரூபாய் பணத்துடன் கடைக்குச் செல்கிறீர்கள். கடைக்குச் சென்ற பிறகு சட்டையில் வைத்திருந்த பணம் காணாமல் போய்விடுமா என்ன? வைத்திருந்தால் கட்டாயம் இருக்கத்தானே செய்யும். சட்டைப்பையில் வைக்காமலோ அல்லது ஓட்டைப்பையில் வைத்துவிட்டோ காணவில்லை என்று தேடினால் எப்படி?


அது போல உங்கள் மூளையில் உள்ள நினைவகத்திலிருந்து ஏதாவது ஒரு தகவல் உங்களுக்குத் தேவையான நேரத்திற்கு நினைவிற்கு வர வேண்டுமென்றால், முதலில் அந்தத் தகவலை நீங்கள் சரியான முறையில் பதிவு செய்திருக்க வேண்டும்.மறதிக்கு முக்கிய காரணம் நினைவாற்றல் குறைவாக இருப்பது அல்ல. தகவல்களைப் பதிந்து வைக்கும் திறன் குறைவாக இருப்பதுதான்.இந்த இடத்தில் எல்லா பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டியது, உங்கள் குழந்தைகளின் மதிப்பெண் குறைவிற்கு நிச்சயம் நினைவாற்றல் குறைபாடு காரணம் கிடையாது.

உண்மையில் பெரும்பாலான குழந்தைகளுக்கு நினைவாற்றலில் எந்தப் பிரச்சனையும் இல்லை. இதனை நீங்களே உங்கள் குழந்தையிடம் சோதித்துப் பாருங்கள் உண்மை புரிய வரும்.கடந்த வருடம் அவர்கள் படித்த பள்ளிப் பாடங்களில் இருந்து ஏதாவது சில பகுதிகளை சொல்லச் சொல்லுங்கள் அல்லது திருக்குறளை சொல்லச் சொல்லுங்கள். பெரும்பாலும் பதில் தெரியாமல் விழிப்பார்கள். இப்பொழுது நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில் உள்ள பாடல்களை சொல்லச் சொல்லுங்கள். அல்லது கடந்த இரண்டு வருடத்தில் வந்த ரஜினி படங்களை வரிசையாகச் சொல்லச் சொல்லுங்கள். விரைவாக பதில்கள் வரும்.திரைப்படம் மனதில் பதிகிற அளவிற்கு கற்கின்ற கல்வி மனதில் பதிவதில்லை.


மனதில் பதியாததற்கு முக்கியமான காரணங்கள் :

ஆர்வமில்லாதது
கவனமில்லாத்து
ஒழுக்கமில்லாதது
பதட்டமடைவது

முதலில் ஆர்வமில்லாதது :


நம் குழந்தைகள் கிரிக்கெட்டில், எந்த மேட்சில், எந்த வீரருடைய ஸ்கோர் கேட்டாலும் சொல்வார்கள். அல்லது சினிமா பற்றிய புள்ளி விபரங்களை துல்லியமாக தருவார்கள்.இன்னும் சிலர் ஒரு சில பாடத்தில் சட்டென்று பதில் தருவார்கள்.இதிலிந்து குழந்தைகளுக்கு அந்தப் பாடத்தில் அல்லது அந்த விளையாட்டில் மட்டுமே நினைவாற்றல் உண்டு என்றும், மற்றதில் நினைவாற்றல் இல்லை என்றும் அர்த்தமாகிவிடாது. இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்ககூடம் பிரச்சனை நினைவாற்றலில் இல்லை. ஆர்வத்தில்தான் என்று.எதில் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமோ, அதில் கண்டிப்பாக ஆர்வம் இருக்க வேண்டும். நினைவாற்றலுக்கு ஆர்வமே அடிப்படை காரணமாகிறது.

கவனமில்லாதது :

இந்த காரணத்தை விளக்க ஓர் எளிய சோதனை. உங்கள் குழந்தையிடம் அவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள அட்டைப்படத்தை வரையச் சொல்லுங்கள். அல்லது அவர்கள் விரும்பி பார்க்கும் டிவி சேனலின் லோகோவையும் வரையச் சொல்லுங்கள்.அட்டையில் உள்ள படங்களுக்கு என்னென்ன வண்ணம் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதையும் குறிக்கச் சொல்லுங்கள். பிறகு ஒப்பிட்டுப் பாருங்கள். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் பெரும்பாலான விஷயங்களை தவறாக குறித்திருப்பார்கள். அல்லது குறிக்காமல் விட்டிருப்பார்கள். தினமும் பார்க்கிற புத்தகம்தான் அல்லது தினமும் பார்க்கிற டிவி தான். இருந்தாலும் சரியாக எழுத முடியாததற்கு காரணம் நாம் பார்க்கிறோமே தவிர கவனிப்பதில்லை. நினைவாற்றலின் அடிப்படையே இந்த கவனிக்கும் திறன்தான்.

ஒழுக்கமில்லாதது

நம் குழந்தைகள் பல நேரங்களில் ‘கணக்குப் புத்தகம் எங்க கிடக்குன்னு தெரியலையே’ என்று நாள் முழுவதும் புலம்பிக் கொண்டும் தேடிக்கொண்டும் இருப்பார்கள். இருபது அல்லது முப்பது புத்தகங்கள் உள்ள ஒரு சின்ன அறையிலே நம்மால் நமக்கு தேவையான புத்தகத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லையே. லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ள நூலகத்திற்க்கு அழைத்துச் சென்று, அங்கே பணியாற்றுபவர்கள் மட்டும் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? என்பதை அவர்களை விட்டே கண்டறியச் சொல்லுங்கள். காரணத்தினை ஆராய்ந்தால், வீட்டில் புத்தகங்கள் கிடைக்காததற்கு காரணம் புத்தகங்கள் ”இரைந்து கிடப்பதே”. நூலகத்தில் கிடைப்பதற்கு காரணம் ”அடுக்கி இருப்பதே”. கிடப்பது என்றால் வைக்கும்போதே கவனமின்றி வைக்கப்படுவது அல்லது தூக்கி எறியப்படுவது. இருப்பது என்றால் சரியான முறையில் அடுக்கி வைப்பது.நம் குழந்தைகள்தான் என்றில்லை, நாமே கூட பல நேரங்களில் எங்க கிடக்குன்னு தெரியலையே என்று புலம்பிக் கொண்டே நமக்கு தேவையானவற்றை தேடி இருக்கிறோம். ஞாபகம் இருக்கிறதா? இப்பொழுது அதற்கான காரணம் உங்களுக்கே புரிய வந்திருக்கும்.

பதட்டமடைவது :

இதற்கு கீழ்காணும் பதிவுகள் கண்டிப்பாய் உதவும் என்றே எண்ணுகின்றேன்.

1 குழந்தைகளும் பதட்டமும்

2. படிக்கும் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் செய்ய வேண்டியது

3. நல்ல ஆலோசகர்களை அறிமுகப்படுத்துவது


நண்பர்களே தெரிந்த எண்ணங்களில் சில :

குழந்தைகளுடன் வெளியில் எங்காவது சென்று வந்த பின் அங்கே பார்த்தவற்றைப் பற்றி கேள்வி கேளுங்கள். உதாரணத்திற்கு நூலகத்தில் அவர்கள் பார்த்த புத்தக அலமாரியின் வரிசையை அல்லது தெருவில் உள்ள கடைகளின் வரிசையை எழுதச் சொல்லுங்கள். அல்லது இன்று வகுப்பில் ஆசிரியர் முதலில் சொன்ன வார்த்தை எது என்று கேளுங்கள். இதனால் அனைத்தையும் ஆர்வத்துடன் உன்னிப்பாக கவனிக்கத் தோன்றும்.

உங்கள் உள்ளே ஓர் ஒழுங்கு ஏற்பட வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யும் வெளிச் செயல்களிலும் ஓர் ஒழுங்கு நிச்சயம் வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் ஒழுங்கோடு செய்யச் சொல்லுங்கள்.

பள்ளியிலிருந்து வந்ததும் ஷுவை நிதானமாக கழற்றி ஒழுங்காக அதற்குரிய ஸ்டாண்டில் வைக்க வேண்டும். சாக்ஸை கழற்றி துவைப்பதற்கென்று உள்ள பக்கெட்டில் போட வேண்டும். பெல்ட், டை ஆகியவற்றை அதற்கென்று உள்ள இடத்தில் மாட்டி வைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு செயலையும் ஓர் ஒழுங்கோடு செய்தால், உள்ளேயும் அதாவது மனதின் செயல்பாடுகளிலும் ஒழுங்கு ஏற்படத் துவங்கும்.

மேலே சொன்னவற்றை எல்லாம் தவறாமல் பின்பற்றினால் படிக்கும் ஒவ்வொருவரும் சொல்லலாம் மறதிர்கோர் குட்பை. உங்கள் குழந்தைகளின் மறதியையும் மறக்கடிக்கலாம்.

http://www.tamilparents.com/2011/10/blog-post_14.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக