புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
37 Posts - 49%
heezulia
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
17 Posts - 2%
prajai
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
5 Posts - 1%
Jenila
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
4 Posts - 1%
jairam
சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_m10சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 17, 2011 12:28 am

சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு?
[ ஞாயிற்றுக்கிழமை, 16 ஒக்ரோபர் 2011, 12:04.16 PM GMT ]
இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மாத்தாயின் இலங்கைப் பயணத்தை அடுத்து, சீனப் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தது.

மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தலைமையிலான சீன இராணுவ உயர்மட்டக் குழுவினர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச'வையும், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய'வையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

இதன்போது, 10 மில்லியன் யுவான் பெறுமதியான கருவிகளை கொழும்பு பாதுகாப்புச் சேவைகள் கல்லூரிக்கு வழங்குவதற்கான உடன்பாடு ஒன்றும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

அதைவிட சீன இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அதிகளவில் இடம் ஒதுக்கவும், இலங்கையில் மேற்கொள்ளப்படும் போர்ப் பயிற்சிகளில் சீனப் படை அதிகாரிகளுக்கு அதிக இடங்களை வழங்கவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இந்த இணக்கப்பாடுகள் இந்தியாவுக்கு இன்னும் வெறுப்பேற்றும் ஒன்றாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைப்பதற்காகவே இந்தியா பெருமளவு முதலீடுகளை இங்கு மேற்கொண்டு வருகிறது.

அதுபற்றி நேரில் ஆராய இந்திய வெளி விவகாரச் செயலர் ரஞ்சன் மாத்தாய் வந்து சென்ற கையோடு சீன இராணுவ அதிகாரிகள் குழு கொழும்பு வந்தது.

இப்போது தெற்காசியாவில் இந்தியாவின் கட்டுப்பாடுகளை மீறி, அதன் செல்வாக்கை உடைத்துக் கொண்டு சீனா தனது பிடியை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது.

முன்னர் இந்தியாவின் இசைவின்றி எந்த நாடும் எதுவும் செய்யாத நிலையொன்று இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

இலங்கையை அடுத்து மாலைதீவும் இப்போது சீனாவின் பிடிக்குள் மெல்ல மெல்ல வந்து கொண்டிருப்பதான செய்தி இந்தியாவின் பாதுகாப்புத் தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அடுத்த மாதம் மாலைதீவில் சார்க் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கவுள்ளது.

அங்கு வலுவான படைகள் இல்லாததால், சார்க் தலைவர்களின் பாதுகாப்புக்காக இலங்கையில் இருந்து விசேட அதிரடிப் படையினர் மாலைதீவு செல்லவுள்ளனர்.

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் சார்க் மாநாட்டுப் பாதுகாப்புக்காக மாலைதீவுக்கு உதவிகளை வழங்கியுள்ளன.

இந்த மாநாட்டின் பாதுகாப்புக்காக சீனா சி.சி..வி. எனப்படும் வீடியோ கண்காணிப்புக் கருவிகளை மாலைதீவுக்கு வழங்கியுள்ளது. பாகிஸ்தான், சீனா, இலங்கை, பங்களாதேஷ் இவையனைத்துமே சார்க் நாடுகள்.

சார்க் தலைவர்களின் பாதுகாப்புக்கு இந்த நாடுகள் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதில் சந்தேகம் இல்லை.

ஆனால் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்காத சீனா எதற்காக மாலைதீவுக்கு சி.சி..வி. வீடியோ கண்காணிப்புக் கருவிகளை வழங்க வேண்டும் என்ற கேள்வி முன்னரே எழுந்தது.

இந்த நிலையில் மாலைதீவில் நீர்மூழ்கிக் கப்பல் துறைமுகம் ஒன்றை நிறுவும் இரகசிய முயற்சியில் இறங்கியுள்ளதான தகவல் ஒன்றும் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

இலங்கையின் பாணியில் மாலைதீவின் மீதும் சீனாவின் கண் விழுந்துள்ளது.

இலங்கையில், அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை நிறுவியது சீனா. அங்கு விமான நிலையம் ஒன்றையும் அமைக்கிறது.

அதுபோலவே மாலைதீவிலும் விளையாடத் தொடங்கியுள்ளது.

மாலைதீவின் ஹவன்டு மற்றும் அதற்கு 10 கி.மீ தொலைவில் உள்ள மாறன்டு ஆகிய தீவுகளில் துறைமுகங்களை அமைக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.

1192 தீவுகளைக் கொண்ட மாலைதீவு நாட்டை தனது கைக்குள் போட்டுக் கொள்வதற்கு சீனா எடுத்துள்ள முதல் நடவடிக்கை இதுவாகும்.

அடுத்து மாலைதீவின் தலைநகர் மாலியில் உள்ள சர்வதேச விமானநிலையத்துக்கு அடுத்ததாக, இரண்டாவது விமான நிலையம் ஒன்றை ஹனிமன்டு தீவில் அமைப்பதற்கும் சீனா திட்டமிட்டுள்ளது.

மாலைதீவின் வடக்கு மாகாணத்தில் உள்ள 42 தீவுகளில் ஒன்றான இது இந்தியா மற்று இலங்கைக்கு மிகவும் நெருக்கமானது.

இந்தியாவுக்குத் தென்மேற்கே 250 மைல் தொலைவில் தான் இது இருக்கிறது.

இதைவிட மறாவோ தீவில் நீர்மூழ்கித் துறைமுகம் ஒன்றையும் சீனா அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

எனினும் இதுபற்றிய தகவல்கள் இரகசியமாகவே பேணப்பட்டு வருகின்றன.

கடந்த மே மாதம் சீன மக்கள் தேசிய காங்கிரஸின் நிலையியல் குழுத் தலைவர் மாலைதீவுக்குப் பயணம் மேற்கொண்ட பின்னரே இந்த அதிரடியான மாற்றங்கள் அங்கு நிகழத் தொடங்கியுள்ளன.

கிழக்கு ஆபிரிக்கா, சிசெல்ஸ், மொறிசியஸ், மாலைதீவு, இலங்கை, பங்களாதேஷ், மியான்மார், கம்போடியா என்று இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளிலும் சீனா கடல்சார் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கி, உறவுகளை வலுப்படுத்தி வருகிறது.

பாகிஸ்தானில் இன்னும் வலுவாக பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவதார் என்ற இடத்தில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றையும் சீனா அமைத்து வருகிறது.

இவையெல்லாம் இந்தியாவைக் கலக்கம் கொள்ள வைக்கின்ற விடயங்களாகவே இருக்கின்றன.

மாலைதீவு முன்னர் இந்தியாவின் கைக்குள் இருந்த நாடு தான்.

1989ஆம் ஆண்டில் புளொட் அமைப்பின் ஒரு குழுவினர் மாலைதீவுக்குக் கப்பலில் சென்று அதனைக் கைப்பற்ற முயன்றனர்.

அப்போது இந்தியாவே தனது படைகளை அனுப்பி பாதுகாத்தது.

அதன் பின்னர் கடற் கண்காணிப்பு சாதனங்கள், டோனியர் கண்காணிப்பு விமானம், ரேடர்கள் என்று இந்தியாவே மாலைதீவுக்கு வழங்கியது.

ஆனால் இவற்றுக்கு அப்பால் சீனா தனது அதிகாரத்தை மாலைதீவின் மீது செலுத்த ஆரம்பித்துள்ளது ஆச்சரியம் தான்.

மாலைதீவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நெருக்கம் அதிகம்.

அண்மையில் கூட ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்காக பிரசாரம் செய்வதற்கு மாலைதீவு அதிபர் சென்றிருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை காப்பாற்றும் நகர்வுகளை மாலைதீவு அதிபர் இரகசியமாக மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு கடந்த வாரம் கொழும்பில் தங்கியிருந்த போது, மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சரும் இங்கு தங்கியிருந்தார் என்பதும் இன்னொரு கதை.

மாலைதீவுக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு உறவுகள் பலப்படுவதற்கு இலங்கை துணை நின்றதா என்ற சந்தேகங்களும் உள்ளன.

அப்படியானதொரு நிலை இருந்தால், இந்தியா இந்த விவகாரத்தை கடும் சினத்துடன் பார்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தன்னைச் சுற்றி சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவதை இந்தியாவினால் எந்த வகையிலும் ஜீரணிக்க முடியாது.

ஏனென்றால் சீனாவின் இந்த வியூகம் இந்தியாவின் கடல்சார் திறன்களை ஒட்டு மொத்தமாக முடக்கிப் போட்டு விடும்.

இதனால்தான் இது இந்தியாவை கடுமையாக கவலை கொள்ளச் செய்துள்ளது.

சீனாவின் ஆதிக்கம் தெற்காசியாவில் வலுப் பெறுவதற்கு இந்தியாவின் இராஜதந்திரத் தவறுகளும் ஒரு காரணம்.

ஏனென்றால் இப்போது சீனாவின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ள நாடுகள் அனைத்துமே, முன்னர் இந்தியாவுடன் நெருக்கமான வரலாற்றுக் காலத் தொடர்புகளைக் கொண்டவை.

இத்தகைய பெரும்பாலான நாடுகளில் இந்திய வம்சாவளியினரே வாழ்கின்றனர்.

ஆனால் இந்த நாடுகளை இந்தியாவினால் தனது கைக்குகள் வைத்திருக்க முடியவில்லை.

போரின் போது தமிழருக்கு விரோதமான நிலைப்பாட்டை இந்தியா எப்படி எடுத்ததோ, அப்படித் தான் தனது நண்பர்களை தக்க வைத்துக் கொள்ளும் இராஜதந்திரத்தை இந்தியா சரிவரக் கையாளவில்லை.

இனிமேலும் இந்தத் தவறை இந்தியா களையாது போனால், தெற்காசியாவில் சீனாவின் பிடி மேலும் இறுகி விடும்.

சுபத்ரா
தமிழ் வின்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சீனாவின் பிடிக்குள் இலங்கை, மாலைதீவு, இந்தியா சுற்றிவளைப்பு? Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 17, 2011 8:54 am

இந்தியாவுக்கு இன்னமும் அறிவு வரவில்லை. வெளியுறவுத்துறையில் மலையாளிகளின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. நேரு காலத்தில் கிருஷ்ணமேனன் என்பவன் இருந்தான். அவனுடைய மோசமான கொள்கையினால்தான் இந்தியா சீனாவிடம் அடிவாங்கியது. ஈழத்தமிழரின் இழிநிலைக்கும் நிறைய மலையாளிகளின் பங்கு அதிகமாக உள்ளது. சீனாவிடம் இந்தியா மீண்டும் அடிவாங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை .

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 17, 2011 10:24 am

இந்தியாவை அழிக்க எப்படியெல்லாம் திட்டம் போடுகின்றனர்......... சோகம்

ஆனால் இந்தியா இவையனைத்திற்கும் இன்னும் எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 17, 2011 12:23 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இந்தியாவுக்கு இன்னமும் அறிவு வரவில்லை. வெளியுறவுத்துறையில் மலையாளிகளின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. நேரு காலத்தில் கிருஷ்ணமேனன் என்பவன் இருந்தான். அவனுடைய மோசமான கொள்கையினால்தான் இந்தியா சீனாவிடம் அடிவாங்கியது. ஈழத்தமிழரின் இழிநிலைக்கும் நிறைய மலையாளிகளின் பங்கு அதிகமாக உள்ளது. சீனாவிடம் இந்தியா மீண்டும் அடிவாங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை .
உண்மை உண்மை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 17, 2011 12:49 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:இந்தியாவுக்கு இன்னமும் அறிவு வரவில்லை. வெளியுறவுத்துறையில் மலையாளிகளின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. நேரு காலத்தில் கிருஷ்ணமேனன் என்பவன் இருந்தான். அவனுடைய மோசமான கொள்கையினால்தான் இந்தியா சீனாவிடம் அடிவாங்கியது. ஈழத்தமிழரின் இழிநிலைக்கும் நிறைய மலையாளிகளின் பங்கு அதிகமாக உள்ளது. சீனாவிடம் இந்தியா மீண்டும் அடிவாங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை .

இலங்கை தமிழர் இழிநிலைக்கும் நிறைய மலையாளிகள்தான் காரணம் .

முற்றிலும் உண்மை நீங்கள் சொல்லுவது .. போரின் போது எப்பொழுதுயெல்லாம் பிரதமரின் பாதுகாப்பு செயலர் இலங்கை சென்றரோ ,அடுத்த நாள் அங்கு தாக்குதல் அதிகமாக இருக்கும் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக