புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
39 Posts - 48%
heezulia
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
3 Posts - 4%
jairam
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
1 Post - 1%
சிவா
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
14 Posts - 4%
prajai
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
9 Posts - 3%
Jenila
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
4 Posts - 1%
jairam
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
3 Posts - 1%
Rutu
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_m10மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம் வெட்டியும் தங்க ஊசியும்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 11, 2011 3:21 pm

ஓரு காலத்தில் மரம்வெட்டி ஒருவர் இருந்தார். அவர் பக்கத்தில் இருக்கும் காடுகளுக்குச் சென்று மரங்களை வெட்டித் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்.

ஒருநாள் பக்கத்திலிருக்கும் காட்டிற்கு மரம் வெட்டச் சென்றார். அந்தக் காட்டில் இருக்கும் பூஞ்ச மரம் அருகே சென்றார் மரம்வெட்டி.

இதைப் பார்த்த பூஞ்ச மரம் "எனக்கு மிகவும் சின்ன வயசு. ஆகவே என்னை நீங்கள் வெட்ட வேண்டாம். அப்படி என்னை வெட்டிவிட்டால் எனது குழந்தைகள் அனாதைகள் ஆகிவிடுவார்கள்' என்றது. இதைக் கேட்ட மரம்வெட்டி "சரி' என்று சொல்லி அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றார்.

சிறிது தூரம் சென்ற பிறகு ஓக் மரம் ஒன்றைப் பார்த்தார். கையில் கோடலியுடன் தன்னை நோக்கி மரம்வெட்டி வருவதைப் பார்த்த ஓக் மரம், "தயவுசெய்து என்னை வெட்டி விடாதீர்கள். நான் இப்போதுதான் காய் வைத்திருக்கிறேன். இந்தக் காய்கள் பழுத்து, கீழே விழுந்து புதிய மரம் வளர வேண்டும். நீங்கள் என்னை வெட்டிவிட்டால் புதிய மரங்கள் இந்தக் காட்டில் வளராது. ஆகவே, என்னை வெட்டிவிடாதீர்கள்' என்று கெஞ்சியது.

இதற்கும் அந்த மனிதர் தலையை ஆட்டியபடி அடுத்த மரத்தை நோக்கிச் சென்றார்.

காட்டு மரமான ஆஷ் குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடியது. அந்த மரத்தை வெட்டுவதற்காக அதனருகே சென்றார் அவர். அவரைப் பார்த்த ஆஷ் மரம், "நேற்று என் மனைவிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அவளுக்கு என்னைவிட்டால் வேறு யாரும் இல்லை. ஆகவே நீங்கள் பெரிய மனசு வைத்து என்னை விட்டுவிடுங்கள்' என்றது.

அடுத்ததாக ஐந்துகூர் இலைகளைக் கொண்ட மரம் ஒன்று இருந்தது. அதனருகே சென்றபோது, அந்த மரம், "எனக்குச் சின்னச் சின்ன கிளைகள் இருக்கின்றன. அவற்றிற்கு பாலூட்டிக் கொண்டிருக்கிறேன். அவர்களை வளர்த்துப் பெரியவர்களாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது. அந்தக் கடமை முடிந்தபிறகு நீங்கள் என்னை வெட்டிக் கொள்ளலாம். அதுவரை என்னை விட்டு விடுங்கள்' என்று கேட்டுக் கொண்டது.

இதற்கும் சரியென்று சொல்லிவிட்டு, யோசித்தபடியே செர்ரி மரத்தை நோக்கிச் சென்றார் அந்த இரக்கமுள்ள மனிதர்.

அவரைப் பார்த்தவுடன் செர்ரி மரம், "இங்குள்ள பறவைகள் எல்லாம் என்மீது உட்கார்ந்து பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, பாட்டுப்பாடி மகிழ்கின்றன. நீங்கள் என்னை வெட்டிவிட்டால் அவற்றுக்கு உணவும் கிடைக்காது, நீங்களும் அந்தப் பாட்டைக் கேட்க முடியாது' என்றது.

இதுவும் சரிதான் என்று நினைத்தார் மரம்வெட்டி. இதனால் இனி மரங்களை வெட்ட வேண்டாம் செடி கொடிகளை வெட்டுவோம் என்று முடிவெடுத்து தூரத்திலிருந்த செடியை நோக்கிச் சென்றார்.

ஆனால் அது செடி இல்லை. ஒரு தாவரம் கொடியாகப் படர்ந்திருந்தது. அதுவும் முரட்டுத்

தனமாக படர்ந்திருந்தது. அதை மகிழ்ச்சியுடன் பார்த்தார்.

அப்போது அந்தக் கொடி, "இரவில் கள்வர்கள் வழிதவறி வரும்போது என்மீது பட்டு கால் இடறி விழுந்து விடுவார்கள். இதனால் அப்பாவிகள் காப்பாற்றப்படுகிறார்கள். நீங்கள் என்னை வெட்டிவிட்டால் அப்பாவி ஜனங்கள் கஷ்டப்படுவார்கள். ஆகவே என்னை வெட்டாமல் விட்டுவிடுங்கள். அவர்களும் நானும் வாழ்நாள் முழுவதும் உங்களுக்குக் கடமைப்பட்டவர்களாவோம்' என்றது.

இனிமேல் எதை வெட்டிக் கொண்டு வீட்டுக்குச் செல்வது என்ற யோசனையில் நடந்தார் அந்த நல்ல மனிதர். அப்போது ஒரு பைன் மரம் கண்ணில் பட்டது.

"எப்படி இருந்தாலும் சரி! இந்த மரத்தை வெட்டிவிடுவோம்' என்று எண்ணியபடியே அதனருகில் சென்றார்.

அவரைப் பார்த்தவுடன் பைன் மரம், "நான் ரொம்பச் சின்னப் பையன். இப்போதுதான் வளர்ந்து வருகிறேன். நான் வளர்ந்தபிறகு என்னைப் பார்த்தாலே எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். ஆகவே என்னை நீங்கள் வெட்டினால் மற்றவர்களுடைய மகிழ்ச்சியைக் கெடுத்த மனிதர் என்ற அவப்பெயர் உங்களுக்குக் கிடைக்கும். அதனால் தயவுசெய்து அந்தப் பாவத்தை நீங்கள் செய்யாதீர்கள்' என்று கூறியது.

இதைக் கேட்ட மரம்வெட்டி, "நான் பேசுகிற மரங்களைப் பார்த்ததே இல்லை. மரங்களும் செடிகளும் சொல்வது சரிதான்! இதனால் எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் என் மனைவிக்கு நான் என்ன பதில் சொல்வது' என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டே நடந்தார்.

அப்போது தாடி வைத்த வயதான மனிதர் ஒருவர் எதிரில் வந்தார். அவர் மரம்வெட்டியைப் பார்த்துச் சிரித்தார். உடனே மரம்வெட்டி, அந்தக் காட்டில் தனக்கு நடந்தவற்றை அவரிடம் கூறினார்.

இதைக் கேட்டவுடன் அந்தத் தாத்தாவுக்குச் சிரிப்பு வந்தது.

"கவலைப்படாதே... நான் உனக்கு நல்லது செய்கிறேன். ஆனால் உனக்குப் பேராசை மட்டும் ஏற்படக்கூடாது, சரியா?'ற என்று சொல்லியபடி, ஒரு தங்க ஊசியை எடுத்து மரம்வெட்டியிடம் கொடுத்தார்.

"உனக்கு கஷ்டம் வரும்போது, உனக்கு வேண்டியதைக் கேட்டு இந்தத் தங்க ஊசியை கையில் வைத்துத் தேய்த்தால், உனக்கு எல்லாம் கிடைக்கும்' என்றார்.

அந்த ஊசியை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றார் மரம்வெட்டி.

அவருடைய கதையைக் கேட்ட மரம்வெட்டியின் மனைவி கோபம் கொண்டு அவரைத் திட்டினாள்.

அவள் பேராசை பிடித்தவளாகவும் இருந்தாள். இதனால் அவளுடைய பேச்சைக் கேட்டு மரம்வெட்டி மனம் நொந்து போனார்.

உடனே, தங்க ஊசியை எடுத்து, "என் மனைவியைத் திருத்துவதற்கு ஏதாவது செய்!' என்றார். அதைக் கேட்டவுடன், தங்க ஊசி ஒரு மரத்தைப் பெரிதாக வளர்த்தது.

அந்த மரத்தின் கை அவருடைய மனைவியைச் சுற்றிக் கொண்டது.

பயந்துபோன அந்தப் பெண், "என்னைக் கொடுமைப்படுத்தாதே! நான் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன்' என்று அலறினாள்.

சில நாட்கள் சென்றன. "என்னுடைய கோடலி மிகவும் பழசாகிவிட்டது. புதிய கோடலி ஒன்று எனக்கு வேண்டும்' என்று தங்க ஊசியிடம் கேட்டார் மரம்வெட்டி.

சிறிது நேரத்தில் வீடு முழுவதும் விதவிதமான கோடலிகள் தோன்றின.

நாட்கள் இப்படியே சந்தோஷமாகச் சென்று கொண்டிருந்தது. தங்க ஊசியின் தயவால், சிலந்திப் பூச்சிகள் மரம்வெட்டிக்கும் அவரது மனைவிக்கும் விதவிதமான ஆடைகளை நெய்து கொடுத்தன. எறும்புகள் நிலத்திலிருந்து கோதுமை மணிகளைக் கொண்டு வந்த கொடுத்தன.

இதையெல்லாம் பார்த்த அக்கம்பக்கத்திலுள்ள மக்கள் நமக்கும் இதுபோன்று ஒரு தங்க ஊசி கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்குமே என்று எண்ணி ஏங்கினார்கள்.

மரம்வெட்டியின் காலம் மகிழ்ச்சியுடன் சென்றது. அவருடைய பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டனர். வாழ்க்கை நன்றாக இருந்தது. இதனால் அந்த மரம்வெட்டியும் அவருடைய பிள்ளைகளும் அந்தத் தங்க ஊசியை மறந்தே போய்விட்டார்கள்.

அவருடைய பிள்ளைகள் அந்த ஊசியைப் பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படாதவர்களாக வளர்ந்தார்கள்.

ஆண்டுகள் பல சென்றன. மரம்வெட்டியின் காலத்துக்குப் பிறகு, அந்தத் தங்க ஊசி, தற்செயலாக மூடன் ஒருவனின் கையில் கிடைத்தது.

அவன் அந்த ஊசியிடம், "சூரியனை எனக்கு அருகில் கொண்டு வந்து கொடு' என்று கேட்டான். தங்க ஊசிக்குத் தயக்கமாக இருந்தது. அதனால் அந்த ஆசையை அது நிறைவேற்ற யோசித்தது.

ஆனால் அந்த மனிதன், "முட்டாள் ஊசியே, நான் சொன்னதைச் செய்' என்று கோபத்தில் கத்தினான்.

வேறு வழியில்லாமல் தங்க ஊசி சூரியனை அவனருகில் கொண்டு வந்தது.

சூரியனின் வெப்பம் தாங்காமல் அவன்

கருகிப் போனான். தங்க ஊசியும் கருகி மறைந்து போனது.

முத்தையா வெள்ளையன்



மரம் வெட்டியும் தங்க ஊசியும்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Nov 11, 2011 3:45 pm

அவசர காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள் அது போலவே கடைசில் அவன் கேட்ட வாரமே சாபம் ஆகியது.
கதை நல்லா இருந்தது அண்ணா...எல்லாம் கிடத்தைதும் பழையதை மறக்கும் மனிதன் இருக்க தானே செய்கிறான். புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 11, 2011 3:51 pm

கதை நல்லாயிருக்கு ,, தாங்க்ஸ் அங்கிள் ... மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Nov 11, 2011 3:55 pm

வை.பாலாஜி wrote:கதை நல்லாயிருக்கு ,, தாங்க்ஸ் அங்கிள் ... மகிழ்ச்சி

அதிர்ச்சி கன்னத்தில் அறை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 11, 2011 3:58 pm

dsudhanandan wrote:
வை.பாலாஜி wrote:கதை நல்லாயிருக்கு ,, தாங்க்ஸ் அங்கிள் ... மகிழ்ச்சி

அதிர்ச்சி கன்னத்தில் அறை

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


செபஸ்டின் லீலாஆனந்தம்
செபஸ்டின் லீலாஆனந்தம்
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 24/10/2011

Postசெபஸ்டின் லீலாஆனந்தம் Fri Nov 11, 2011 4:00 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க கதை நன்றாக விடுகிறீர்கள் .... போங்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 11, 2011 4:00 pm

நல்ல பாடம் கற்று கொடுக்கும் கதை மரம் வெட்டியும் தங்க ஊசியும்... 677196 மரம் வெட்டியும் தங்க ஊசியும்... 677196 மரம் வெட்டியும் தங்க ஊசியும்... 677196 மரம் வெட்டியும் தங்க ஊசியும்... 677196 மரம் வெட்டியும் தங்க ஊசியும்... 677196 மரம் வெட்டியும் தங்க ஊசியும்... 677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Nov 11, 2011 4:34 pm

பேராசை பெருநஷ்டம் சூப்பருங்க

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Nov 11, 2011 5:06 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக