புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_c10முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_m10முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_c10 
49 Posts - 53%
heezulia
முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_c10முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_m10முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_c10 
41 Posts - 44%
mohamed nizamudeen
முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_c10முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_m10முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_c10முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_m10முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_c10 
91 Posts - 57%
heezulia
முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_c10முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_m10முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_c10 
62 Posts - 39%
mohamed nizamudeen
முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_c10முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_m10முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_c10முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_m10முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா


   
   
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Nov 27, 2011 3:29 pm

1985 ல் தேனிக்கு வந்த போது நான் பள்ளி மாணவன்.தேவகோட்டை கந்தக பூமி, அதற்கு நேர்மாறாக இருந்தது தேனி.எங்கு நோக்கினும், பச்சைப் பசேல் காடுகள்,குட்டி கரடுகள், வயல் வெளிகள், நீரோடைகள் என என் மனதிற்கு பிடித்தவாறு விரவி பரவி இருந்தது. முல்லை ஆற்றுத் தண்ணீரில் குளித்து மகிழலாம். நண்பன் புஷ்பராஜூடன் ஆறா மீன் பிடிப்பது, தண்ணீரில் அறிவை நிரூபிக்கும் உத்தி. ஒரு நாள் வெள்ளம் வந்தது.

பாலத்தை உரசி ஓடிய தண்ணீர் எல்லோரையும் மிரட்டியது.இன்னதென்று இல்லாமல் எல்லாம் மிதந்து வந்தன.மிதந்து வந்த பாம்புகள் அடித்துக் கொல்லப் பட்டன.திக்கித் தவித்த ஆமைகளை சிறுவர்களும், நாரைகளும் வஞ்சித்து மகிழ்ந்தனர். ஒரு நாள் குட்டி யானையும் மிதந்து வந்தது. உடல் முழுதும் காயங்களுடன் சின்னாபின்னமாக மிதந்து வந்தது. இரண்டு நாள் கழித்து, கவிழ்ந்த நிலையில் ஒரு பெண்ணும் மிதந்து வந்தாள். அவளும் அகோரமாக காட்சி தந்தாள்.இப்போதெல்லாம் இப்படி வெள்ளம் வருவதே இல்லை. கழுத்தளவு செல்லும் நீரே பெருமைக்குரிய விஷயமாகிவிட்டது. ஓட்டத்தை அளக்கும் நீரோட்ட மானியும், குட்டி படகும்,மேலே இருந்து உற்று கவனிக்க வின்ச்சும், துருபிடித்துஙப் போய் விட்டது. அலுவலக ஊழியர்களும் பொழுது போகாமல் துவைக்க வரும் பெண்களை, புகைத்துக் கொண்டே பார்த்து ஏதோ தங்களுக்குள் பேசி மகிழ்கின்றனர்.....

பக்கத்து கிராமமான, பூதிபுரத்தில் பாம்பு பிடிப்பவரோடு "மரைக்கா மலையை" சுற்றி வரலாம். வீரப்ப ஐயனார் மலை போகலாம், சிற்றோடையில் குளித்தவாறு நூற்றுக் கணக்கான வண்ணத்துப் பூச்சிகளை கண்டு மகிழலாம்.துத்திப் பூ தேன் உறிஞ்சலாம். ராட்சச பழம் தின்னும் வவ்வால்களை காண சற்று மிரட்சியை தரும். ஆற்று நீரில் ஐரை மீன் பிடிக்கலாம். பிராமண குடும்பத்தில் பிறந்த மாணவனது செய்கை பிறருக்கு ஆச்சரியத்தை தந்தாலும் உடனடி அங்கீகாரத்தையும் பதவி உயர்வையும் பெற்று தந்தது. இப்பொழுது என் மகளுக்கு இந்த வாய்ப்பெல்லாம் தட்டிப் பறிக்கப்பட்டு விட்டது.முல்லை ஆற்றுத் தண்ணீர் தேனியின் ஜீவாதாரம். வருசநாடில் உருவாகும் "மூல வைகை"யோடு ,மேற்கே குரங்கனியில் உருவாகும் கொட்டக்குடி ஆறும், அரண்மை புதூர் பாலத்தில் இணைந்து வைகை அணை சேருகிறது. முல்லை ஆற்றுத் தண்ணீரோடு பிரச்சினையும் வந்து 35 வருடங்கள் ஆகின்றன. தி.மு.க ஆட்சிக்கு அன்று பிரச்சினை குறித்து அக்கறை இருந்ததாக கூற முடியாது. அப்போது கலைஞர் நன்றாகவே நடப்பார் வீல் சேர் இல்லை. பொதுக் கூட்டத்தில் "நிறைய பேர் கூட்டமாக கூடுகிறீர்கள். ஓட்டு மட்டும் போடமாட்டேன் என்கிறீர்கள்" என்று அங்கலாய்ப்பார். அதற்கு ஏற்றார் போல் எம்.ஜி. ஆரும் படுத்த படுக்கையாய் இருந்து கொண்டே ஜெயித்து விடுவார். ஜெயலலிதா சேவல் சின்னத்தில் வெற்றி கண்டு "வி" வடிவில் விரலைக் காட்டினார். கல்லூரி காலம் அது .அப்போது மாநில அளவில் அனைத்து கல்லூரி கட்டுரைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன். பெண்கள் சண்டையில் இடை புகுந்து கலைஞரும் முதல்வர் ஆனார். விழா அவர் தலைமையில் சென்னையில் நடந்தது. பதக்கத்தை கழுத்தில் தொங்கவிட்டு என் முதுகில் தட்டி " பாராட்டுக்கள், தம்பி எந்த ஊர்?" என அவர் கேட்க நான் "தேனி" என்ற உடன் தேனியா? என ஒரு ஏற்ற இறக்க குரலுடன் என்னைப் பார்த்தார். ஊர் மீதான கோபம் இன்னும் தணியவில்லையோ? என்ற எண்ணமே எனக்கு தோன்றியது. முல்லை பெரியாறு விஷயத்திலும், இந்த எண்ணமே எனக்கு இப்போதும் தோன்றுகிறது!!

முல்லையாறும், பெரியாறும் கேரளத்தில் இணைந்து முல்லை பெரியாறு உருவாகிறது. "பென்னி குக்" என்ற ஆங்கிலேய பொறியாளர், தனது சொத்து பத்துக்களை மொத்தமாக கொட்டி தீர்க்க தரிசன பார்வையோடு கட்டப் பட்ட அமுத சுரபி இது. பல கோடி மக்களின் உயிர் நீரான இவ்வணையின் உரிமை தமிழக அரசிற்கும், அணைக்குண்டான இடம் கேரள அரசிற்கும் சொந்தம். 999 வருட அனுபவ பாத்தியம் பிரச்சினையின் முதல் முளை.அடிப்படையிலேயே மின்சார பற்றாக் குறையால் அவதிப்படும் கேரளாவிற்கு விடிவு தர " பரமேஷ்வரன் நாயர்" என்ற பொறியாளர் விரும்பி பெரியாறு நீரை இடுக்கி அணைக்கு திருப்பி விட கூடுதல் மின்சாரம் பெறலாம் என்ற அறிக்கை சமர்பித்தார் இந்த மகானுபாவன். இங்கிருந்து பிரச்சினை தீவிரம் அடையத் துவங்கியது. அறிக்கையை ஏற்ற கேரள அரசும் " அணை பலகீனமாக உள்ளது .அதை பலப்படுத்த வேண்டும். அது வரை நீர் தேக்க அளவை கட்டாயம் குறைக்க வேண்டும்" என்ற வேண்டுகோள் விடுத்தது. வேண்டுகோளுக்குப் பின் இருக்கும் சூழ்ச்சி அறியாத அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரும், உண்மை என நம்பி நீர் தேக்க அளவை 153--142--136 என படிப்படியாக குறைத்தார். சிவ கங்கை, திருப்புவனம் வரள ஆரம்பித்தது. இடைக்காலத்தில் அவ்வரசு தமிழகத்திற்கு தெரியாமல் நீரை இடுக்கி அணைக்கு திருப்பி விட்டது. நீர் பிடிப்பு பகுதிகள் வெளியே தெரியத் துவங்க அம்மாநில "பிக் பி" க்கள் ரிசார்ட்ஸ், ஹோட்டல்களை கட்டி ஆக்கிரமிப்பு செய்யத் துவங்கினர். ஆச்சரியமூட்டும் வகையிலே அங்கே ஆட்சிக்கு வரும் எல்லா அரசுகளும் அவர்களுக்கு ஆதரவு அளித்தது. அவர்களிடம் குறைந்த வரியே வசூலித்தது. இத்தனைக்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும், தண்ணீர் தேங்கும் இடத்திற்கும் தமிழக அரசு பணம் செலுத்துகிறது. 23 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து அணையும் நேற்று வரை பலப் படுத்தப்பட்டு தான் வருகிறது. "பிக் பி" களின் கைப் பாவையாக இருக்கும் அம் மாநில அரசு ,50 லட்சம் பேர் முங்கிப் போவர், எனவே நீர் தேக்க அளவை உயர்த்த முடியாது என அடம் பிடிக்க ஆரம்பித்தனர். நாடகத்தின் கிளைமாக்ஸாக அணை இன்னும் பலகீனமாகத்தான் உள்ளது ,ஒட்டு மொத்தமாக இடித்து விடலாம் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தரலாம். இது உறுதி, என்று புதுக் கச்சேரி துவங்கி உள்ளது.

மத்திய அரசின் வேடம்,மாநில அரசின் அரசியல், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வெறும் பேப்பர் வரிகளாகவே வைத்திருக்க, கேரள அரசின் சூழ்ச்சி,அவை வேத வரிகள் என கூறும் கருணாநிதி என்று தங்களது பராக்கிரமங்களை இரு மாநில அரசியல் வாதிகளும் மிக கொடூரமான முறையில் பயன் படுத்துகின்றனர். நம் மாநில அரசு தான் வயதானவர் தலைமையில் அலட்சிய போக்கோடும், மெத்தனத்தோடும் இயங்குகிறது , என்றால் கேரள அரசு அசிங்கமான பிரச்சார உத்திகளையும், அராஜக வழிகளையும் மற்றொரு வயதானவரின் தலைமையில் அரங்கேற்றுகிறது. கிராபிக்ஸ் ஸி.டி.களை மக்களிடம் விநியோகித்து மக்களிடம் பீதியை கிளப்புதல், உள்ளூர் பத்திரிக்கைகளை மோசமாக எழுத தூண்டுதல், அதிகார வரம்பை மீறி கடற்படை வீரர்களை காவலுக்கு வைத்திருத்தல் போன்ற செயல்களில் துவங்கி, குழாயடி சண்டை போன்று அணைக்கு தரும் மின்சாரத்தை ரத்து செய்தல்,அணைக்கு செல்லும் பாதையை வேலி கொண்டு அடைத்தல்,தேக்கடி வனத்துறையினரை தூண்டி தமிழக பொது பணித் துறையினரின் படகை கண்காணிக்க விடாமல் தடுத்தல், அசந்தர்ப்பங்களை ஏற்படுத்தி வாக்கு வாதங்களில் ஈடுபட்டு தமிழக அதிகாரிகளுடன் கைகலப்பில் இறங்குதல்
என கீழ்த்தரமான அத்து மீறல்களில் தற்போதைய கேரள அரசு நாட்டம் காட்டுகிறது.

மாவட்ட மக்களின் பாசன பரப்புக்குரிய நீர் குறைக்கப் பட்டாலும், பருவ மழை தவறிய போதும் தமிழக மக்கள் பொறுப்புணர்வோடும், புத்திசாலித்தனத்தோடும் விவசாயம் செய்கின்றனர். எழுத்தாளர் "சக்காரியா", "கேரள மக்களின் மட்டரகமான குறுகிய புத்தி நீர் ஆதாரத்தை குறைப்பது! தமிழக மக்கள் புத்திசாலிகள் அவர்களும் சரி, அவர்களது நிலமும் சரி சொல் தவறாதவர்கள். பரந்த மனம் படைத்தவர்கள்.இரண்டு நாட்கள் தங்கள் பொருட்களை கேரளாவிற்கு அனுப்பவில்லை என்றால் கேரளாவே ஸ்தம்பித்து விடும்." என்று உரக்க கூறிய போது அவரது இல்லம் தாக்கப் பட்டது.மத்திய அமைச்சர் கே.வி தாமஸ் ஒரு மலையாளி,பரந்த மனம் கொண்டவர்.இப்பிரச்சினை குறித்து கூறும் போது "இது மிகவும் சிக்கலானது.இரு மாநில அரசுகளும் விட்டுக் கொடுக்கும் மனதோடு பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கேரள மக்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் ஏனெனில் அவர்கள் தான் தமிழ்நாட்டை அதிகம் சார்ந்துள்ளனர். நஷ்டம் என வந்தால் அது கேரள பொருளாதாரத்தை நிலை குலைய செய்யும் ".என்கிறார்.வீணாக வழிந்தோடும் நீரை அரபிக் கடலில் கலக்க அனுமதிப்போம் ,மற்றுமொரு நீர் பங்கீட்டிற்கோ, நதிகள் இணைப்பையோ நினைத்து கூட பார்த்தது கிடையாது என்கிறார் அம்மாநில நீர்வள அமைச்சர் பிரேமச் சந்திரன்.நாங்கள் எடுக்கும் முடிவை தமிழகம் கட்டாயம் ஏற்றுதான் ஆக வேண்டும் என குச்சி எடுத்து மிரட்டுகிறார் அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன். நமது முதல்வரோ கோர்ட் தீர்ப்பு நிலுவையில் இருக்கும் போது நாம் ஒன்றும் செய்யலாகாது என பொறுப்பை தட்டி கழிப்பதில் முனைப்பாக உள்ளார்.

ஜெயலலிதா ஏதாவது கூறப் போக "பொறாமையில் பிதற்றுகிறார் அம்மையார்" என இவர் கூற "கோமாளித்தனமான பகுத்தறிவாளர்" என அவர் கூற இடைக்காலத்தில் கூட்டணி அமைச்சரான ஜெய்ராம் ரமேஷை எதிர்த்து மதுரையில் கூட்டம் என ஒன்றுக்கும் ஆகாத நடவடிக்கையில் நம்மவர்கள் ஈடுபடுவது வேதனைக்குரிய ஒன்று .நீர் குறைபாடு துவங்கியதில் இருந்து மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய் நஷ்டம் . தேனி மாவட்ட மக்களுக்கு சென்ற மாதங்களில் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகிக்கப் பட்டது. பருவ மழையும் பொய்த்த நிலையில் ஆழ் குழாய் கிணறுகள் வற்றிப் போயின. சென்ற ஜூலை மாதம் தேனி பாரஸ்ட் ரோடில் மட்டும் 236 ஆழ் குழாய் கிணறுகள் துளையிடப் பட்டன. 250 அடிக்கு கீழ் சென்றும் தண்ணீர் வரவில்லை. 330 அடி சென்ற பிறகு தான் 3 குழாய்களில் மட்டும் தண்ணீர் ஊறியது. மாவட்டத்தின் வறட்சிக்கு இது ஒரு உதாரணம் என்றாலும், மனம் தளராத விவசாயிகள் வறட்சி தாங்கும் பயிர்களான மொச்சை, தட்டாம் பயறு, கம்பு, கேப்பை, சோளம் போன்ற பயிர்களை விளைவிக்கின்றனர். உள்ளூரில் நெல் விளைச்சல் படுத்துவிட்டது, வெளியூர் வரவும் புயல், வெள்ளம், வரட்சி என காரணங்களால் குறைந்து வருகிறது.கிடைக்கும் பச்சரிசியும் கிலோ 40 ரூபாய் என்கிறார்கள். ஒரு ரூபாய்க்கு அரிசி ரேஷனில் உண்டு. இலவச கலர் டீ.வி உண்டு, சாத்தியமே படாத காப்பீடு திட்டம் உண்டு, தேர்தல் என வரும் போது எதிர் கட்சியினருக்கும் சேர்த்து வாரி இறைக்க பணமும் உண்டு என மேஜிக் ஆட்சி நடத்துகிறார் கலைஞர்.

நடுவண் அரசில் "ஏ" வகை உயர் அதிகாரிகள் 52 பேரில் 36 பேர் மலையாளிகள். குறிப்பிட்டு சொன்னால் சிவ சங்கர் மேனன், கே.ஆர் நாராயணன் இன்னும் பலர். கேரள அரசியல் வாதிகள் தங்களது திட்டங்களை பிரதம மந்திரி அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் அளவிற்கு இவ்வதிகாரிகள் துணை புரிகிறார்கள். மந்திரி சபையில் இடம் பெற்றிருக்கும் நம்மவர்களோ, 20,000 கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழல் புரிவதில் ஆர்வம் கொள்கிறார்கள். இப்போதைய நிலையே இன்னும் 20-30 வருடங்களுக்கு நீட்டிக்க கேரள அரசு பிரயத்தனப் படுகிறது. பெரியாறு அணையில் முங்கிக் கிடக்கும் சூழ்ச்சிகளை கலைஞரும் அறிவார். "பெண் சிங்கம்" பட வசனம் எழுதுவதில் ஆர்வம் காட்டும் கலைஞர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி வளர்ச்சியிலும் ஆர்வம் கொள்ள வேண்டும். வளமான பகுதி வீணாகி விடாமல் பாதுகாப்பதில் துணைபுரிய வேண்டும். கடந்த 5 நாட்களாக குடிக்க தண்ணீர் வரவில்லை இயற்கையின் கருணையால் பருவ மழை துவங்கியது போல் தெரிகிறது. பொய்த்து விடக் கூடாது என மனம் பதறுகிறது. மதுரையில் வைகை குடிநீர் 2ம் தேக்க திட்டத்தை ஸ்டாலினும் அழகிரியும் துவக்கி மட்டற்ற மகிழ்ச்சியோடு இனி மதுரை வாழ் மக்களுக்கு தினம்தோறும் குடிக்க
தண்ணீர் வழங்கப்படும் என வரலாற்று பிரகடனம் செய்துள்ளனர்.

மதுரை மக்களுக்கு மட்டும் தாகம் எடுப்பதில்லை ,எங்களுக்கும் தாகம் எடுக்கிறது. நாங்களும் தண்ணீர் அருந்த வேண்டும். எங்களுக் கென்று உருப்படியான தேக்க திட்டங்கள் எல்லாம் கிடையாது. மதுரை சகோதரர்களுக்குண்டான தண்ணீர் எங்கள் ஊர் வழியாக தான் செல்கிறது. எங்களூர் எம்.பியும் கலைஞர் ஆதரவாளர் தான். ஜெயலலிதாவும் இப்போதெல்லாம் வருவதில்லை. 5 மாவட்ட மக்கள் சாகுபடிக்குண்டான நீர்ப் பாசன வசதியை நிரந்தரமாக பெறவும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது குடி நீர் விநியோகம் வேண்டும் என்பது தான் என்னை போன்ற சாமானியனின் தாழ்மையான கோரிக்கை. பகுத்தறிவு பாசறை போர் வாள்களும், பீரங்கிகளும் தயவு கூர்ந்து செவி மடுக்க வேண்டும்!!

நன்றி உயிர்மைக்காக எஸ். கிருஷ்ணன் ரஞ்சனா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 27, 2011 3:46 pm

முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா 440806... ம்ஹூம் என்று தான் இந்த அரசியல் ஓநாய்களின் சதிவலைகளில் இருந்து தமிழக மக்கள் தப்பிப்பார்களோ

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 27, 2011 4:47 pm

இந்த அரசியல் வியாதிகளின் கையில் மாட்டிக்கொண்டு தமிழகம் படும் பாட்டுக்கு என்றுதான் விடிவு காலம் கிடைக்குமோ?
இந்த கட்டுரையில் சொல்லி இருப்பது போல முல்லை பெரியார் அணையில் பிரச்சினை செய்தால் தமிழகத்தில் இருந்து ஒரு பொருளும் அவங்களுக்கு போய் சேராது என்று அவர்கள் மனதில் படும்படி உரக்க கூறி செயலில் இறங்கினால் ஒழிய இதற்கு தீர்வு என்றுமே எட்டபடாது.ஆனால் தமிழகத்தில் இருக்கும் எத்தனை வியாபாரிகள் இதை செய்ய தயாராக இருக்கிறார்கள்?
இதுவே இது போல ஒரு சந்தர்ப்பம் அவங்களுக்கு இருந்து இருந்தா இந்நேரம் நம்ம குடுமி அவன் கையில் இருந்து இருக்கும்,அவன் இழுத்த இழுவைக்கெல்லாம் நாம ஆடிட்டு இருப்போம்



முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Uமுல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Dமுல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Aமுல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Yமுல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Aமுல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Sமுல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Uமுல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Dமுல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Hமுல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 27, 2011 5:01 pm

நம்ம அரசியல் வியாதிங்க எதுக்குமே சரி பட்டு வரமாட்டாங்க என்ன கொடுமை சார் இது




முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Power-Star-Srinivasan
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 6:11 pm

என்று தணியும் இந்த அடிமை தாகம் சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Nov 27, 2011 7:13 pm

உதயசுதா wrote:இந்த அரசியல் வியாதிகளின் கையில் மாட்டிக்கொண்டு தமிழகம் படும் பாட்டுக்கு என்றுதான் விடிவு காலம் கிடைக்குமோ?
இந்த கட்டுரையில் சொல்லி இருப்பது போல முல்லை பெரியார் அணையில் பிரச்சினை செய்தால் தமிழகத்தில் இருந்து ஒரு பொருளும் அவங்களுக்கு போய் சேராது என்று அவர்கள் மனதில் படும்படி உரக்க கூறி செயலில் இறங்கினால் ஒழிய இதற்கு தீர்வு என்றுமே எட்டபடாது.ஆனால் தமிழகத்தில் இருக்கும் எத்தனை வியாபாரிகள் இதை செய்ய தயாராக இருக்கிறார்கள்?
இதுவே இது போல ஒரு சந்தர்ப்பம் அவங்களுக்கு இருந்து இருந்தா இந்நேரம் நம்ம குடுமி அவன் கையில் இருந்து இருக்கும்,அவன் இழுத்த இழுவைக்கெல்லாம் நாம ஆடிட்டு இருப்போம்
முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா 677196 முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா 677196 முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா 677196.

நமக்கு தோனுறது ஏன் இந்த பாழாய்போன தலைவர்களுக்கு தெரிய மாட்டேங்குது???? முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா 440806

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Nov 28, 2011 10:02 am

அனைவருக்கும் நன்றி அன்று இடுக்கி மாவட்டத்தை காமராஜர் நாட்டு ஒற்றுமைக்காக கேரளாவுடன் இணைத்தார். இன்று அதுவே நாட்டு ஒற்றுமைக்கு சவாலாக அமைத்துள்ளது!!

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Dec 05, 2011 3:14 pm

ராஜா wrote:முல்லை பெரியாறு ---தீதும் நன்றும் பிறர் தர வாரா 440806... ம்ஹூம் என்று தான் இந்த அரசியல் ஓநாய்களின் சதிவலைகளில் இருந்து தமிழக மக்கள் தப்பிப்பார்களோ

நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 05, 2011 3:27 pm

கொடுமை கொடுமை சோகம் அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக