புதிய பதிவுகள்
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
70 Posts - 45%
ayyasamy ram
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
69 Posts - 44%
mohamed nizamudeen
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
1 Post - 1%
சிவா
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
1 Post - 1%
bala_t
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
1 Post - 1%
prajai
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
300 Posts - 42%
heezulia
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
6 Posts - 1%
prajai
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_m10மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat 24 Dec 2011 - 14:42

மக்கள் திலகம்...
மக்கள் திலகம்... சில நிகழ்வுகள்  49445580

எம்.ஜி.ஆர். அன்றைய தமிழ் சினிமாவில் 'புரட்சித் திலகம்'. அரசியலில் 'மக்கள் திலகம்'. தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தவர். இன்றும் இவர் படங்கள் தியேட்டரில் வெளியானால், கண்டிப்பாக 'ஹவுஸ் புல்' போர்டு வைப்பார்கள். அவர் மறந்தாலும் அவர் புகழ் மறையவில்லை என்பதற்கு இந்த ஒரு விஷயமே போதும். இன்று புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் சொல்லும் ஒரே விஷயம் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியை கொண்டு வருவோம்' என்பது தான். இப்படி இந்த 'பொன்மனச் செம்மலை' பற்றி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். இன்று அவரின் நினைவு நாள். எம்.ஜி.ஆர் வாழ்ந்தபோது அவருக்கு சொந்த மெய்காப்பாளராக இருந்தவர் திரு.கே.பி.ராமகிருஷ்ணன். இவர் விகடன் பிரசுரம் வெளியிட்ட 'எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்' என்ற புத்தகத்தில் எம்.ஜி.ஆருடன் இருந்தபோது நடந்த பல சம்பவங்களை இந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு இரண்டு சம்பவங்களை நான் இந்த பதிவில் பகிர்கிறேன்.

என் ரத்தத்தின் ரத்தமே:
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக, ஜூலை 30, 1977 -இல் பதவி ஏற்றார் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் சரித்திரத்தில் புதிய சகாப்தம் உருவான நாள் அது. அண்ணா சமாதியில் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விழாவுக்கு வந்தார். தமிழக கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி, சென்னை ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதை அடுத்து, அதுவரை தமிழகத்தில் எந்த முதல்வரும் செய்திராத சாதனையை செய்தார் எம்.ஜி.ஆர். பல லட்சக்கணக்கான மக்களை ஒருங்கே சந்தித்து, அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களின் நல் ஆசியுடன் தன் ஆட்சியை ஆரம்பித்தார்.

ராஜாஜி ஹால் நிகழ்ச்சியை அடுத்து, அண்ணா சாலையில், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து, அருகே அமைக்கப்பட்டிருந்த பெரிய மேடைக்கு வந்தார். பதவி ஏற்றதுமே, மக்களைச் சந்திக்கவேண்டும், அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் அங்கே இருந்தனர். தமிழகமெங்கும் இருந்து மக்கள் பலர் லாரி, வேன் பிடித்து சென்னை வந்து சேர்ந்தனர்.

ஜெமினி மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை வரை; மறுபக்கம் காசினோ தியேட்டர் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை; இன்னொரு பக்கம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் வரையிலும் எம்.ஜி.ஆரின் முகத்தை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் காலை 11 மணி வெயிலில் தார் ரோட்டில் மக்கள் உட்கார்ந்திருந்தனர்.

பெரும்பான்மையினர் எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க முடியாத நிலைமை இருந்தாலும், அவர் பேசுவதை நன்றாக கேட்கும் வகையில் மைக் ஏற்பாடுகள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. பேச ஆரம்பிப்பதற்கு முன்னர், மேடையின் எல்லா பக்கங்களுக்கும் சென்று, மக்களைப் பார்த்து கை அசைத்தார். அவர் கை அசைத்ததும், விசில் சத்தம், கை தட்டல், ஆரவாரம் பல நிமிடங்கள் தொடர்ந்து வானை பிளந்தன.

குறைந்தபட்சம் என்று கணக்கெடுத்தாலும் பத்து லட்சம் பேருக்கு அதிகமாக இருக்கும் தார் ரோடுகளிலும் கட்டிடங்கள் மேலேயும், மரங்களிலும், தரையிலும் எங்கிருந்தெல்லாம் எம்.ஜி.ஆரை அன்று பார்க்க முடியுமோ, அவர் பேசுவதை கேட்க முடியுமோ, அங்கெல்லாம் வேறு எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாது மக்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருந்தார்கள்.

'மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய தமிழக அமைச்சர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, சட்டசபை அங்கத்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே' என்று எம்.ஜி.ஆர் பேச ஆரம்பித்தார். அடுத்து 'என் ரத்தத்தின் ரத்தமான என் அன்பு உடன்பிறப்புக்களே' என்று எம்.ஜி.ஆர் சொன்னதும் மீண்டும் கரகோஷம் விண்ணைத் தொட்டன. எங்கும் மகிழ்ச்சி, எங்கும் ஆரவாரம்.

கே.ராஜாராம், காளிமுத்து, ராஜா முகமது, பி.டி.சரஸ்வதி, அரங்கநாயகம், ராகவானந்தம், நாஞ்சில் சம்பத், எட்மன்ட் உட்பட அனைத்து அமைச்சர்களும், எம்.ஜி.ஆரின் பர்சனல் டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் அங்கு இருந்தார்கள்.

மேடையில், 'இந்த வெற்றி என் வெற்றி இல்லை; இது உங்கள் வெற்றி. நான் உங்களில் ஒருவன்; உங்களுக்காகவே பாடுபடுவேன். இது உங்கள் ஆட்சி; மக்கள் ஆட்சி. மக்களுக்கு செய்கிற தொண்டே, மகேசனுக்கு, ஆண்டவனுக்கு செய்கிற தொண்டு என்று நான் நம்புகிறேன். தமிழகமும், தமிழக மக்களும் செழிப்பாக இருக்க வேண்டும்; அது தான் என் லட்சியம். என் லட்சியத்தில் நான் வெற்றி பெற, உங்களுடைய ஆசிகளை வேண்டுகிறேன்...' என்று பேசினார் எம்.ஜி.ஆர்.

மக்களின் பெருத்த ஆரவாரத்தின் இடையே அவர் பேசிக்கொண்டு இருந்தார். அவ்வளவு மக்கள் பாசத்துடன், அன்புடன் அவரைப் பார்க்க, பேசுவதை கேட்க கூடி இருந்தது எம்.ஜி.ஆர் வாழ்க்கையிலேயே அவருக்கே மறக்க முடியாத நாள் என்றே நான் சொல்வேன்.

மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, முதல்வர் பதவியை ஏற்க முதல்முறையாக அங்கிருந்து, தமிழக அரசின் நிர்வாக மையமும், தலைமைச் செயலகமான கோட்டைக்குச் சென்றார் எம்.ஜி.ஆர். தன் அறையில், சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை சந்தித்து நிர்வாகம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணிக்குத் தான் வீட்டுக்கு திரும்பினார்.

தமிழகத்தின் முதல்வராக மூன்றாம் முறையாக எம்.ஜி.ஆர் பதவி ஏற்ற நிகழ்ச்சியும், அதற்க்கு சில தினங்களுக்கு முன் பரங்கிமலையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டதும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள்...

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ப்ரூக்ளின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, Feb 1985 இல் சென்னை திரும்பினார் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆர் உடல்நிலை பற்றி தவறான வதந்திகள் பரவி கொண்டிருந்த நேரம்.

அமெரிக்காவிலிருந்து திரும்பியதும், ஒரு பொதுக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்கிறார் என்று அறிந்ததும், பல மாதங்களாக அவரை பார்க்க முடியாத மக்கள், தமிழகம் முழுவதும் இருந்து பஸ், லாரி, வேன் பிடித்து வந்துவிட்டனர். சென்னை பரங்கிமலையில், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான மிகப்பெரிய மைதானத்தில், பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஆர்வத்தோடு கூடியிருந்தனர்.

அவரால் நடக்க முடியாது; கை, கால்கள் செயலிழந்து விட்டன என்றெல்லாம் அவரது அரசியல் எதிரிகள் புரளிகளை கிளப்பிவிட்டிருந்த நேரம் அது. விமானம் வந்து நின்றதும், தானே விமானப் படிகளில் யார் துணையும் இன்றி இறங்கி வந்தார். அவர் முழு பொலிவுடன், சிரித்த முகமாக விமான படிகளில் இறங்கி வந்த காட்சி இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

விமான நிலையத்திலிருந்து நேராக மிலிட்டரி மைதானத்திற்கு எம்.ஜி.ஆரும், அவரது துணைவி ஜானகியும் காரில் வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு செல்லும் படிகளில் எப்போதும் போல வேகமாக ஓடி ஏறினார். அவர் நன்றாக இருக்கிறார், உடல் வலிமையோடு இருக்கிறார் என்பதையெல்லாம் பார்த்ததும் அங்கிருந்த லட்சக்கணக்கான மக்கள் மிகவும் உற்சாகமாயினர்.

புரட்சித்தலைவரின் மனிதநேயம்:
1977 இல் எம்.ஜி.ஆர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றிருந்த சமயம். எம்.ஜி.ஆருக்கு எல்லா மட்டங்களிலும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆரின் உயர்மட்ட விசிறிகளில் குறிப்பிடத்தக்கவர் கர்நாடக மாநிலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டுராவ்.

பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று குண்டுராவ் எப்போதும் அழைத்துக்கொண்டே இருப்பார். குண்டுராவின் பிறந்த நாளன்று, பெங்களூருக்கு நேரில் சென்று, அவரை வாழ்த்தவேண்டும் என்று முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.

பிற்பகலில் TMX 4777 என்ற எண்ணுள்ள பச்சை அம்பாசிடர் காரில் கிளம்பினார் எம்.ஜி.ஆர். அவருடன், அவரது மனைவி ஜானகி அம்மா, ஜானகி அம்மாவின் சகோதரர் நாராயணனின் மகள் லதா இருவரும் வந்தனர். மற்றொரு வேனில் நாங்கள் அவர் வண்டியை பின்தொடர்ந்தோம்.

பெங்களூரை அடைந்ததும் எம்.ஜி.ஆரும், அவரது குடும்பத்தினரும் அங்கு 'வெஸ்ட் எண்ட்' என்கிற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். நாங்கள் அதற்க்கு அருகே வேறொரு ஹோட்டலில் தங்கினோம்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு கர்நாடக முதல்வர் குண்டுராவ் வீட்டுக்கு சென்றோம். பெரிய பார்சல் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பரமசிவம், செக்யுரிட்டி ஆபிசர் கண்ணுசாமி உடன் இருந்தனர். பால் பாயாசத்தோடு எங்கள் அனைவருக்கும் நன்றாக சைவ சாப்பாடு அளிக்கப்பட்டது. சாஷ்டாங்கமாக எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து நமஸ்கரித்தார் குண்டு ராவ். அவரை மனதார வாழ்த்தினார் எம்.ஜி.ஆர்.

பத்து மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினோம். அப்போது எம்.ஜி.ஆர் தான் வரும் அம்பாசிடர் காரில் என்னை வரச் சொன்னார். 11 மணிக்கு மேல் ஓசூர் வரும்போது நல்ல வெயில். காரில் பயணம் செய்யும்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் படிய பாடல்களை எப்போதும் ரசித்துக் கேட்பார் எம்.ஜி.ஆர்.

ஓசூர் தாண்டியிருப்போம். இடது பக்கம் நெடுஞ்சாலை ஓரத்தில் வயதான கிழவி மற்றும் பத்து வயது சிறுமி இருவரும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறே காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் நடந்து, பிறகு வெயிலுக்காக ஓரமாக நின்று மீண்டும் நடை.

'ராமசாமி, காரை நிப்பாட்டு...' என்று டிரைவர் ராமசாமியிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். 'ராமு, போய் அவங்களை விசாரித்துவிட்டு வா...' என்றார் என்னிடம். ராமகிருஷ்ணன் என்ற என் பெயரை பல நேரத்தில் 'ராமு' என்று சுருக்கியே அவர் கூப்பிடுவார்.

'கால் சுடுதய்யா நிற்கிறோம்...' என்றார் அந்தக் கிழவி. 'தூரத்திலிருந்து புல்லை அறுத்து, கட்டி சுமந்து சென்று விற்றால் தலைச்சுமைக்கு பன்னிரெண்டு அணா கிடைக்கும்...' என்றார். எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.

தன் மனைவி ஜானகி அம்மா, லதா இருவரிடம் அவர்கள் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றச் சொன்னார். காரில் பயணம் செய்யும்போது எப்போதும் ஒரு கருப்பு பேட்டியில் பணம் வைத்திருப்பார். அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து, 'அவர்களிடம் கொடு...' என்றார்.

இரு ஜோடி செருப்புகளையும் எடுத்துக் கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்து, எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னார் என்று ஆயிரம் ரூபாயையும் கொடுத்தேன். அப்படியே நெகிழ்ந்து போயினர். எதிர்பாராமல் பணம் கிடைத்ததில் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நன்றிகூட சொல்லாமல் அப்படியே நின்றனர்.

காரின் கண்ணாடியை இறக்கி வணக்கம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.

தன்னிடம் உதவி கேட்டவருக்கு மட்டும் என்று இல்லாமல், உதவி கேட்காதவர்களுக்கும் குறிப்பறிந்து உதவி செய்வதுதான் எம்.ஜி.ஆரின் குணம். இந்த மனிதநேயம் தான் அவரை உயரத்தில் வைத்தது. தனக்கு உதவியவர் தமிழக முதல்வர் என்று அந்த கிழவிக்குத் தெரியுமா, தெரியாதா? எனக்குத் தெரியவில்லை. எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்யப்பட்ட மனிதநேய செயல் அது.




தகவல்களுக்கு நன்றி: 'எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்', விகடன் பிரசுரம்.



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக