புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
68 Posts - 53%
heezulia
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
15 Posts - 3%
prajai
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
4 Posts - 1%
jairam
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_m10பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Feb 18, 2012 1:21 pm

பண்ருட்டி அருகே மறைந்த அம்பலமும், மறையாத அதிட்டானமும் Omsivasiva
ஆடும் தம்பிரானார் கோயில் அழிவுற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்து கல்வெட்டு. - வடவாம்பலத்தில் உள்ள ஸ்ரீ ஆத்மபோதேந்திரர்.

தமிழகத்தில் மாமன்னர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களைப் பற்றி கூறும் வரலாற்றுச் செய்திகள் மற்றும் தடயங்களில் சில பதிவு செய்யப்படாமல் மறைந்துவிட்டன. மேலும் சில பதிவு செய்யப்பட்டும் காலப்போக்கில் மறைந்து போய்விட்டன.

இவ்வகையில் விழுப்புரம் மாவட்டம் வடவாம்பலம் கிராமத்தில் இருந்த அம்பலத்து ஆடும்தம்பிரானார் கோயில் இருந்து மறைந்ததையும், காஞ்சி முனிவரின் அதிட்டானமம் கண்டுபிடிக்கப்பட்டதையும் கூறுகின்ற 500 ஆண்டுகள் பழமை வாய்ந்து மறைந்துபோய்விட்ட ஒரு வரலாற்று உண்மையை தான் கண்டு பிடித்த ஒரு கல்வெட்டின் மூலம் நிலைநிறுத்தி வரலாறு கூறும் நல்லுலகிற்குத் தெரியப்படுத்தி இருக்கிறார் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன்.

இனி அவர் கூறும் ஆச்சரியம் கலந்த வரலாற்று உண்மையைக் காண்போம்.

தமிழகத்தை ஆண்ட மாமன்னர்கள் நாடு எங்கிலும் எழுப்பிய ஆயிரக்கணக்கான கோயில்கள், மறைந்தும், மறையாமலும் காட்சி அளிக்கின்றன. தென்பழனி முருகன் கோயிலைப் போன்று சென்னையிலும் முருகனுக்கு கோயில் எழுப்பி வடபழனி என்ற பெயரில் புகழ்பெற்றுள்ளது ஒரு உதாரணமாகும்.

இதேபோன்று பல்வேறு ஊர்களில் சிவபெருமானுக்கும், திருமாலுக்கும் கோயில்கள் எழுப்பி திசைகளின் பெயரில் ஊர்ப் பெயரை இணைத்து திசைகளைச் சுட்டும் திருத்தலங்களாக அமைந்துள்ளன. காசிக்கு தெற்கில் இருப்பது தென்காசி, தென்கயிலாயம்-வடகயிலாயம், வடதிருப்பதி-தென்திருப்பதி(திருவந்திரபுரம்) என்கிற பெயர்களை போன்று சிதம்பரமான தில்லை அம்பலத்து நடராசப்பெருமான் கோயிலுக்கு நிகராக வடஅம்பலம் என்கிற பெயரில் ஆடும் தம்பிரானார் திருத்தலம் இருந்து மறைந்துவிட்ட வரலாற்று உண்மை நம்மில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

தென்திசையில் புகழ்பெற்று விளங்கும் தில்லை அம்பலத்து நடராசப்பெருமான் கோயிலுக்கு வடக்கில் நடுநாடான திருமுனைப்பாடி நாட்டுத் தென்பெண்ணை ஆற்றங்கறையில் இத்தலைத்தை அமைத்ததால், வட-அம்பலம்-வடவாம்பலம் என்கிற பெயரைச் சூட்டி உள்ளனர்.


இத்தலம் சோழர் காலத்தில் மிகவும் சிறப்புற்றிருந்து கி.பி.17-ம் நூற்றாண்டுவரை குறையேதுமின்றி ஆறுகால பூஜைகளும் நடைபெற்று வந்துள்ளன. என்ன ஆனதோ தெரியவில்லை இக்கோயிலுக்கு இன்று அடிச்சுவட்டைக் கண்டுபிடிக்க இயலாத அளவிற்கு சிதைந்து ஒரே ஒரு சிவலிங்கம் மட்டும் எஞ்சியிருக்கிறது. கோயிலின் உடைந்த தூண்களும், கருங்கற்களும் வெகு தொலைவுவரை ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.சிவலிங்கத்திற்கு 10 அடி தொலைவில் தலைக்கீழாகப் படுத்து மண்ணுக்கள் மறையக் காத்திருந்த ஒரு கருங்கற் பலகையைப் புரட்டிப்போட்ட போதுதான் ஒரு வரலாறே புரண்டு போய் இருப்பதை கண்டறிய முடிந்தது. புரட்டிய பக்கம் அற்புதமான செய்தியைக் கூறும், கல்வெட்டுப் பொறிப்பு அது. கி.பி.16-ம் நூற்றாண்டில் அரசு புரிந்த விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயருடையது. ரக்தாக்ஷி வருடம், சித்திரை மாதம் 5-ம் தேதி (17.4.1525)-ல் இக்கல்வெட்டு பொறிக்கப்ட்டுள்ளது.

திருவெங்களை என்ற பெயருடைய இவர், கிருஷ்ணதேவராயரின் உறவினராகவோ அல்லது அமைச்சர் போன்ற அரசுப் பொறுப்புகளிலோ இருந்திருக்க வேண்டும். இவர் இறந்து போகிறார். ஆனால் இவர் எப்படி இறந்தார் என்கிற விபரம் காணப்படவில்லை.

இவரின் ஆன்மா புண்ணிய சாந்தி அடைவதற்காக வடவாம்பலத்து ஆடும் தம்பிரானார் கோயிலுக்கு சர்வமானியத் தானமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த நத்தத்தில் வாழ்ந்த செக்காடுவோர் மற்றும் தறிநெய்வோர் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிப்பணத்தை அளித்தான் என்பதை விளக்கும் இக்கல்வெட்டில் திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது. இப்படி ஓர் கோயில் இருந்ததைக் கூறும் முதல் கல்வெட்டு இதுதான்.

காஞ்சி காமகோடி பீட ஆச்சாரியார்களின் வரிசையில் 58-ஆவது பட்டத்திற்கு உரியவராயிருந்த ஸ்ரீ ஆத்ம போதேந்திர சரசுவதி சுவாமிகள் கி.பி.16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர். இவரது காலம் 1586-1638 ஆகும். விருத்தாசலத்தில் பிறந்த இவர் பாரத பூமி முழுவதும் ஆன்மிகச் சுற்றுப் பயணம் செய்தவர். காசியில் சில காலம் தங்கியிருந்த போது உருத்திர மந்திரத்திற்கு உரை எழுதிப் புகழ்பெற்றவர். இவர் தென்னாட்டுத் திருத்தலங்களைத் தரிசித்து வரும் சமயத்தில் வடவாம்பலத்து ஆடும் தம்பிரானார் திருத்தலத்தின் அருமை பெருமைகளை அறிந்து தரிசித்துவிட்டுச் செல்ல வருகை புரிந்தவர், என்ன நினைத்தாரோ... வேறெங்கும் செல்ல மனமின்றி அங்கேயே தங்கிவிட்டார். வாழ்நாளில் இறுதி வரை இங்கேயே தங்கி வாழ்ந்து மறைந்தார்.
இம்மகானைப் பற்றிய செய்திகள் காஞ்சி மடத்தில் குருபரம்பரைக் குறிப்பில் இருந்ததைக் கண்டறிந்த காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சங்கராச்சாரிய சுவாமி அவர்கள் 1926-ஆம் ஆண்டில் புதுச்சேரிக்குச் செல்லுவதற்கு முன்னர் வடவாம்பலத்திற்கு வருகை பரிந்து ஆத்மபோதேந்திரர் சித்தி அடைந்த இடத்தைக் கண்டறிய ஆவல் கொண்டார்.

300 ஆண்டுகள் கடந்து விட்டதால், அந்த இடம் இதுதான் என்று குறிப்பிட முடியாத அளவிற்கு தடயங்கள் தெரியாமல் மறைந்து விட்டிருந்தன. என்றாலும் பெரியவர் தம்முயற்சியைக் கைவிடாமல் அவ்வூரிலேயே முகாமிட்டு வயல் வெளிகள், தோப்புத் துரவுகள், புதர் மண்டியகாடுகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்தார். ஒரு நாள் இரவு பூஜைகளை முடித்துவிட்டு கண்ணயர்ந்த போது இதுவரை பார்த்த இடங்களில்
ஒரு இடத்தை மட்டும் குறிப்பால் உணர்ந்தார். மறுநாள் காலையில் ஊர் மக்களுடன் அந்த இடத்திற்குச் சென்று அகழ்ந்தெடுக்க கூறினார். ஆச்சர்யத்துடன் கூடிய அதிசயம் அங்கு நிகழ்ந்தது. 10 அடி ஆழத்தின் கீழ் மண்டை ஓடு, எலும்பு துண்டுகள் மக்கிய நிலையில் உருத்திராட்சங்கள், கிண்டி மற்றும் பூஜைப் பொருட்கள் கிடைத்தன. இன்னும் சற்று விரிவாக அகழ்ந்தபோது கட்டிடம் மற்றும் கிணறு இருந்ததற்கான தடயங்கள் இருந்தன.

இதுதான் ஆத்மபோதேந்திரர் சித்தியடைந்த இடம் என்பது உறுதி செய்யப்பட்டது.

கிடைத்த பொருட்களை எல்லாம் அங்கேயே வைத்து சிறிய கோயில் கட்டப்பட்டு 17.1.1927-ஆம் நாளில் காஞ்சிப் பெரியவரின் திருக்கரங்களால் சிவலிங்கப் பிரதிட்டை செய்யப்பெற்று, வழிபாடுகள் தொடங்கி இன்று வரை பூஜைகள் நடபெற்று வருகின்றன.

இந்த அதிட்டானத்திற்குத் தெற்கே சற்றுத் தொலைவில் பெண்ணையாற்றின் வடகரையில் ஆடும்தம்பிரானார் கோயில் அழிவுற்று தன் வரலாற்றுப் பெருமைகளை மூடி மறைத்துக்கொண்டிருக்கின்றது.
கோயில் மறைந்தாலும் வடவாம்பலம் என்ற பெயரைமட்டும் இன்றுவரை நிலையாகக் கொண்டிருக்கும் இந்த வரலாற்று மையம், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், கோலியனூர்-கண்டரக்கோட்டைக்கு இடையில் பெண்ணையாற்றின் வடக்கே 3 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக