புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
56 Posts - 46%
heezulia
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
3 Posts - 2%
prajai
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
12 Posts - 2%
prajai
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
4 Posts - 1%
jairam
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பயம் Poll_c10பயம் Poll_m10பயம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Feb 26, 2012 3:57 pm

பயம் E_1329871446
டாக்டர் சார், எனக்குப் பயமா இருக்கு சார். என்னுடைய நடவடிக்கைகளை யாரோ கண்காணிக்கிற மாதிரி இருக்கு. என்னைக் கண்காணிச்சு யாருக்கு என்ன ஆகப் போகிறதுன்னு கல்யாணி கேட்கிறாள். ஆனால், எனக்குப் பயமா இருக்கு சார்.

என் வீட்டிலேயும், ஆபீஸ்லேயும் ஓட்டுக் கேட்கிற கருவியை வைச்சு ஒட்டுக் கேட்கிறாங்கன்னு தோணுது. நான் பேசறதை ஒட்டுக் கேட்டு யாருக்கு என்ன லாபம்னு மனைவி கேட்கிறாள். ஆனால், இப்படி நினைக்கிறதைத் தவிர்க்க முடியலை சார்.

நான் எங்கே போனாலும் போலீஸ் வருது. வீட்டுக்கு முன்னாலே, தெருவிலே போலீஸ் ஜீப் சதா நின்னு என்னைக் கண்காணிக்குது. நான் ஆபீஸுக்கு போனா அங்கேயும் போலீஸ் ஜீப் அல்லது வேன் வந்த நிற்கிறது. ஆனால், இத்தனை வருஷமா போலீஸ் என்னைச் சுத்திச் சுத்தி வந்தாலும் என்னை அவங்க எதுவும் பண்ணலை. ஆனால், சைலன்ட்டா என்னைப் போலீஸ் மிரட்டுற மாதிரி இருக்குது.

கம்யூனிஸ, சோசலிஸ நாடுகள்லேதான் அரசாங்கம் கண்காணிக்கும்ன்னு படிச்சிருக்கேன். பிக் பிரதர் ஈஸ் வாட்சிங்ன்னு சொல்வாங்க. அந்த நாடுகள்லே அரசாங்கம் தான் பிக் பிரதர். ஆனால், நம் நாடு ஜனநாயக நாடு. சுதந்திர நாடு. இங்கே கூட அரசாங்கம் என்னை மாதிரி பத்திரிகையிலே வேலை பார்க்கிறவனைக் கண்காணிக்குமா டாக்டர் சார்? ஆபீஸ்லேயும், வீட்டிலேயும் ஃபோன்லே ஒட்டுக் கேட்கிற கருவியை வச்சு ஒட்டுக் கேட்கிறாங்க சார்.

என் சின்ன மகள் இரண்டாவது வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு - குரங்கு, அப்பத்தைப் பிரிச்சுக் கொடுத்த கதைப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்தேன். காலையிலே ஆபீஸுக்குப் புறப்பட்டேன். எங்க அபார்ட்மெண்ட் வாசலிலே ஒரு குரங்காட்டி குரங்கோட உட்கார்ந்திருந்தான். நான் என் மகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தது காலையிலே ஏழு, ஏழே கால் மணிக்கு. நான் பேசறதை ஒட்டுக் கேட்டு அதற்குள்ளே, நான் ஆபீஸ் புறப்படுகிறதுக்குள்ளே ஒரு குரங்காட்டியையும், குரங்கையும் தேடிக் கண்டுபிடிச்சு அபார்ட்மெண்ட் வாசலிலே கொண்டு வந்து நிறுத்திட்டாங்க சார்.

அதனாலேதான் சார் சொல்றேன். நான் பேசறதை ஒட்டுக் கேட்கறாங்கன்னு. அதுவும் அரசாங்கம்தான் இவ்வளவு வேகமா, என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இரண்டு மணி நேரத்துக்குள்ளே இவ்வளவு பெரிய ஊரிலே குரங்கை வைச்சிருக்கிற குரங்காட்டியைத் தேடிக் கூட்டிட்டு வந்து என் அபார்ட்மெண்ட் வாசலிலே நிறுத்தி, என்னைப் பயமுறுத்தறதுன்னா அது அரசாங்கத்தாலேதான் முடியும். சாதாரண மனுஷனாலே முடியற காரியமா டாக்டர் சார்?

நான் ஒண்ணும் புரட்சிக்காரன் இல்லை சார். புரட்சிங்கிற சொல்லே எனக்குப் பிடிக்காது சார். ஆனால் கொஞ்ச நாளைக்கு முன்னாலே, எந்தப் புத்தகத்தைப் பார்த்தாலும் படிக்கிற ஆசையினாலே, மார்க்ஸியம் சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் படிச்சேன் சார். ஒருவேளை விமர்சகனான என்னைக் கொஞ்சம் அடக்கி வைக்கணும்ங்கிறதுக்காக பத்திரிகை முதலாளியும் அரசாங்க மேலிடமும் சேர்ந்து என்னைப் பயமுறுத்தறதுக்காக இப்படியெல்லாம் பண்றாங்களோன்னு தோணுது சார்.

ஒருநாள் நான் வீட்டிலே பேசிக் கொண்டு இருக்கிறபோது, சினிமா பாடலாசிரியர் ராமலிங்கத்தோட சினிமா பாடல்களைக் கிண்டல் பண்ணினேன். கொஞ்ச நேரம் கழிச்சு வெளியே கடைக்குப் போனேன். அங்கே சினிமா பாடலாசிரியர் ராமலிங்கம் எதிரே வந்துக்கிட்டு இருந்தார் சார். நான் பேசறதை ஒட்டுக் கேட்காம இது முடியுமா?

அந்தத் தெருவுக்க ராமலிங்கம் வர வேண்டிய அவசியமே இல்லை. அவர் வீடு அந்தப் பக்கமே இல்லை. நான் வீட்டிலே பேசியதை ஒட்டுக் கேட்டு, நான் வீட்டை விட்டு வெளியே வரும் போது என்னைப் பயமுறுத்தறதுக்காக, ராமலிங்கத்தை வீட்டிலே போய்க் கூட்டிட்டு வந்த, எனக்கு எதிரே வர விட்டிருக்காங்க.
ஆனா ஒட்டுக் கேட்கிறதை யார் செய்கிறாங்கன்னுதான் தெரியலை. போலீஸோ, சி.பி.ஐ.யோ இல்லை ரா வோதான் செய்யணும். இதை என் வீட்டுக்குப் பக்கத்திலேயே யாரோ ஒருத்தன் சம்பளம் வாங்கிட்டு, ஒட்டுக் கேட்டு, உடனுக்குடனே சம்பந்தப்பட்டவங்களுக்குத் தகவல் சொல்லி என்னைப் பயமுறுத்தறாங்க.
ரொம்பப் பெரிய வி.வி.ஐ.பி.க்களை விமர்சிச்சு ஏதாவது பேசினா, அவங்களைத் தான் நான் வெளியே போகும்போது எனக்கு எதிரே கூட்டிட்டு வந்து பயமுறுத்த முடியலை சார். மற்றபடி யாரைப் பத்திப் பேசினாலும் அவங்களை உடனே கூட்டிட்டு வந்திடுவாங்க.

ஒருவேளை நான் மார்க்ஸியமெல்லாம் படிச்சதினாலே என்னை இடது சாரின்னு நெனைச்சுக்கிட்டு, என்னை வலதுசாரியா மாத்தறதுக்காக இந்த மாதிரி எல்லாம் பண்றாங்களோன்னு சில சமயம் தோணும். இதைப் பத்தி ஒரு லாயர்கிட்டே பேசி கோர்ட்டிலே சட்டபூர்வமா ஏதாவது தீர்வு காணலாம்னு நெனைச்சு, ஒரு வக்கீல் ஃப்ரெண்டைப் பார்த்தேன். அவன் என்னோட படிச்சவன்.

ரோட்டிலே போலீஸ் ஜீப், போலீஸ் வேன் நின்னா உனக்கென்ன? அவங்க ரோந்து போகிறதுக்காக வந்திருப்பாங்க. அவங்களைப் பார்த்த நீ ஏன் பயப்படணும்னு கேட்டான்.

பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்பதாகத் தகவல் வெளியானது. நீ என்ன பிரணாப் முகர்ஜி பெரிய வி.வி.ஐ.பி.யா? என்று என் தங்கை என்னைக் கேலி செய்கிறாள். கேலி பேசுகிறவர்களுக்கு என்ன வந்தது? என் அவஸ்தை எனக்கல்லவா புரியும்?

வீட்டில் உள்ளவர்களுக்கோ, நண்பர்களுக்கோ, ஒட்டுக் கேட்க முடியும் என்பதையே நம்ப முடியவில்லை. அதனால் அவர்கள் சுதந்திரமாக இயங்குகிறார்கள். எங்கே வேண்டுமானாலும் சுதந்திரமாகச் சென்று வருகிறார்கள். யாரைப் பற்றி, எதைப் பற்றி வேண்டுமானாலும் சுதந்திரமாகப் பேசுகிறார்கள். அவர்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை.

ஆனால், கருத்துச் சுதந்திரத்தின் மையமான பத்திரிகையில், ஒரு விமர்சனப் பத்திரிகையாளனாகப் பணி புரிகிற எனக்குத்தான் இத்தனை தொல்லையும். யாரைப் பற்றியும் விமர்சமிக்கவே பயமாக இருக்கிறது சார். தீபாவளிக்குச் சட்டையைச் சரியாகத் தைக்காத தையல்காரரை விமர்சிக்கக் கூடப் பயமாக இருக்கிறது. அதை ஒட்டுக் கேட்டு, அந்தத் தையல்காரரிடம் போய்ச் சொல்லிவிட்டால் நான் என்ன செய்வேன் டாக்டர்.
வீடு, ஆபீஸ், கடைத்தெரு, கோயில் என்று எங்கே போனாலும் இந்த ஜனநாயக பிக் பிரதர் என்னை வாட்ச் பண்ணுகிறார் சார். சுதந்திரமாக ஒரு இடத்துக்குப் போக முடியவில்லை. சுதந்திரமாகப் பேச முடியவில்லை சார்.

இது ஏதோ மனப்பிராந்தி, மனவியாதின்னு எங்க அப்பா உங்களை மாதிரி ஒரு மனோதத்துவ டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போனார். அவர் எனக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தார். ஊசி போட்டு ஒரு வாரம் தூங்க வச்சார். தினசரி சாப்பிடறதுக்கு மாத்திரைகள் எல்லாம் கொடுத்தார்.

மாத்திரை சாப்பிட்டா தூக்கம் தூக்கமா வருதுன்னு மாத்திரை சாப்பிடறதை நிறுத்திட்டேன். ட்ரீட்மெண்ட் எல்லாம் எடுத்த பிறகும் போலீஸும் அரசாங்கமும் என்னைக் கண்காணிக்கிறது நிற்கவில்லை. அதற்கப்புறமா சைக்காலஜி பற்றி ஏராளமான புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பிச்சேன். மூளையிலே ஏற்படற கெமிக்கல்ஸ் சேஞ்சுனாலேதான் இதெல்லாம் வருதுன்னு டாக்டர் சொன்னது சரிதானோன்னு தோணுது. எனக்க வந்திருக்கிற மனோ வியாதிக்க நியூரோஸிஸ்னு அந்த டாக்டர் சொன்னார்.

ஆனால் அந்த டாக்டர் வீட்டுக்குப் போனா அங்கேயும் போலீஸ் வேன் வருது. அதனாலே வேறே டாக்டரைப் பார்ப்போம்னு உங்ககிட்டே வந்தேன். வீட்டிலே கூட இதைப் பற்றிப் பேசலை. எந்த டாக்டர்கிட்டே போகப் போறேன்னு வீட்டிலே பேசினா, அதை ஒட்டுக்கேட்டு போலீஸ் வேனை அனுப்பிடுவாங்கன்னு, யார்கிட்டேயும் எதுவும் சொல்லாமே உங்ககிட்டே வந்திருக்கேன் சார்.

இது வியாதியா, இல்லை சட்டபூர்வமா நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயமான்னு நீங்கதான் சொல்லணும் டாக்டர்.

-வண்ணநிலவன்

கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக