புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_c10இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_m10இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_c10 
30 Posts - 50%
heezulia
இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_c10இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_m10இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_c10இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_m10இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_c10இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_m10இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_c10 
72 Posts - 57%
heezulia
இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_c10இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_m10இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_c10இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_m10இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_c10இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_m10இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பமான வாழ்க்கையின் மூலதனம் எது?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 29, 2012 5:28 pm

வாழ்க்கை என்பது மனப்பக்குவம் அடைவதுதான். வாழ்க்கையை நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு சிறைச்சாலை அல்ல. வாழ்க்கை ஒரு வெகுமதி. யார் தகுதியுடையவர்களோ அவர்களுக்கும், யார் உழைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இது கடவுளால் ஆசிர்வதித்துக் கொடுக்கப்படுகின்றது. உழைப்பவர்கள் அனைவருக்கும் அதை அனுபவிக்கும் உரிமையும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. புத்தர் கூறுகின்றார், உங்கள் வேலையை ஒருபோதும் அடுத்தவர்களின் தேவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் அதற்காக அலட்சியப்படுத்தாதீர்கள். இந்த வரி நமக்கு ஒருவேளை சுயநலம் போல் தோன்றலாம். இதுதான் உங்களை தவறான பாதையிலிருந்து நேர்மையான பாதைக்கும், நேர்மையான பாதையிலிருந்து உள்ளார்ந்த ஆத்ம திருப்திக்கும் உயர்த்தும் என்று கூறுகின்றார். இது அதிகச் சுமையுடன் உயரமான மலை உச்சிக்கு ஏறும் செயலுக்கு ஒப்பானது. இதை நீங்கள்தான் செய்ய வேண்டும். வேறு யாரும் நம்மைத் தோளிலே சுமந்து செல்ல மாட்டார்கள். நீங்கள்தான் உங்கள் உழைப்பால் வாழ்க்கையின் உச்சத்தை அடையமுடியும்.

வாழ்க்கை என்பதின் முதல் எழுத்து வா. உலகிற்கு வா! வந்து என்ன செய்வது? அதன் முதல் எழுத்தும் இரண்டாம் எழுத்தும் நம்மைப் பார்த்து வாழ் என்று கூறுகிறது. வாழ்ந்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டால், அதன் முதலெழுத்தும் கடைசி எழுத்தும் சேர்ந்து, வாகை கிடைக்கும் என்று சொல்கிறது. வாகை - வெற்றி, எப்படிக் கிடைக்கும்? வாக்கு அதாவது சொற்சுத்தம் உடையவராக இருந்தால் வாகை கிடைக்கும். வாக்கு மட்டும் சுத்தமாக இருந்தால் போதுமா? இறுதி எழுத்து கை உழைப்பை வலியுறுத்துகிறது. இப்படி வாழ்வில் வாகை சூட <உழைப்பு அவசியம். மின்மினிப் பூச்சிகூட பறந்தால்தான் ஒளிர்கிறது. உழைப்பும் ஊக்கமும் சேரும் சமயம், நம் கைகளிலே வரும் இமயம், தொட்டதெல்லாம் சீராய் அமையும், மகிழ்ச்சியில் பூக்கும் இதயம். மனிதனின் வாழ்வில் பல நிலைகள் உள்ளன. அவன் குழந்தையாக உள்ளபோது, நான், எனது என்கிறான். அவன் பெரியவனாகிப் பிள்ளைகள் பெறும்போது நாம், நமது என்பான். பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து முதுமையில் அவர்கள் தனிமையாய் இருக்கும் போது, அவர்கள், அவர்களுடையது என்கிறான். அவர்கள், அவர்களுடையது என்று மற்றவர்கள் நலனைப் பற்றிச் சிந்திக்கின்ற முதிர்ச்சியை இளமையிலேயே ஒருவன் பெற்றுவிட்டால் வாழ்வில் முடியாதது என்று ஒன்றுமில்லை. இந்த மாற்றத்தைக் கொண்டு வர ஒவ்வொருவரும் முயல வேண்டும். இந்த முயற்சி வெற்றி அடைய நம்முள் நம்பிக்கை பிறக்க வேண்டும். இதற்கு முதலில் இறை நம்பிக்கை வேண்டும்.

பூமியை விடப் பெரியது சூரியன். ஆனால் அது பூமியை விட்டு வெகு தூரத்தில் இருப்பதால் சிறிய தட்டுப் போலத் தெரிகிறது. அப்படித்தான் இறைவனை விட்டு நாம் தொலைவில் உள்ளபோது, அவரது அருளை முழுமையாக அறிந்துகொள்ள முடிவதில்லை. இறைவனின் அருகில் உள்ளபோது நமக்கு அவரின் அருமை நன்கு புரியும். பழமானது தன் தசையைக் கத்திக்குத் தந்து மனிதனுக்குச் சுவையைத் தருகிறது; நிலம் தன்னை அகழ்பவரைப் பொறுத்துக் கொண்டு அவருக்கே நீரைத் தருகிறது. அப்படி மனிதனும் சோதனைகளைச் சாதனைகளாக்க வேண்டும். முடியுமா? முடியும் என்பதே வாழ்க்கையின் மூலதனம், முடியாது என்பது மூடத்தனம். ஏழைத் தொழிலாளியின் மகன் ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க அதிபர் ஆனது போல, முடியும் என்ற நம்பிக்கையால் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இன்று நீ ஒருவனுக்கு மீனை உண்ணக் கொடுத்தால் நாளையும் நீ தரமாட்டாயா என எதிர்பார்க்கும் மனோபாவம் வளரக் கூடும். அதைவிட அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தால் அவன் தன் வாழ்க்கையை அதன் மூலம் நடத்தக் கூடும். இந்த மாற்றம் காலப்போக்கில் ஏற்படுமேயானால் எதுவும் முடியும் என நமக்குப் புரியும். இப்படிப்பட்ட ஏமாற்றம் இன்பத்தைத் தரும். லட்டு கொடுத்தால் இன்பம் வருமா? பட்டு கொடுத்தால் இன்பம் வருமா? நகை நட்டு கொடுத்தால் இன்பம் வருமா? துட்டு கொடுத்தால் இன்பம் வருமா? இல்லை; விட்டுக்கொடுத்தால்தான் இன்பம் வரும். உண்மைகளையும், யதார்த்தங்களையும், புரிந்து கொண்டு வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்ள மனம் பக்குவப்பட வேண்டும். மனம் பக்குவப்பட நமக்கு வாழ்க்கையில் விழிப்பு உணர்வு அவசியமாகின்றது. தெளிவோடு இறைநம்பிக்கை சேரும் போது தன்னம்பிக்கை பிறக்கும். மாற்றங்களைக் கொண்டு வர இயலும். மாற்ற முடியாதது என ஒன்றுமில்லை என்று வாழ்ந்து காட்டுவோம்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக