புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
25 Posts - 69%
heezulia
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
11 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
62 Posts - 63%
heezulia
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 21 Mar 2012 - 21:55

சிலருக்கு தேர்வு நாளன்று பதற்றம் வருவதுண்டு. சிலர் இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படித்து விட்டு, காலையில் தேர்விற்கு செல்ல காலதாமதமாக்கி விடுவர். அதனால், அவர்களை பதற்றம் வந்து தொற்றிக் கொள்ளும். பதற்றம் வந்து விட்டால் போதும். தவறுகள் வரிசையாக வந்துவிடும். தேர்வறையைச் சென்று அடைந்ததும்தான் அவர்களுக்கு நினைவிற்கு வரும். `ஐயோ, ஹால் டிக்கெட்டை மறந்து விட்டோமே' என்று. தலையில் அடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடுவர். இதனால், தேர்வு தொடங்கி தாமதாமாக வரவேண்டிய சூழ்நிலை உண்டாகி விடும். அந்த அவசரத்தில் தெரிந்த கேள்விகளுக்கும், தவறான பதில்களை எழுதிவிடுவர். இந்த பிரச்சினைகள் எல்லாம் தீர என்ன வழி என்று பார்ப்போமா...

* தேர்வு நடப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே தேர்வறைக்குச் சென்று விடுங்கள். அதேபோல் தேர்வு நடப்பதற்கு முந்தைய நாளே தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்துத் தயாராக வைத்து விடுங்கள்.

* தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றதும், நேராக தேர்வறைக்குச் சென்றுவிடுங்கள். வழியில் நிற்கும் நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது கவலையையும், தேவையற்ற பயத்தையும் உண்டாக்கி விடும்.

* எல்லா கேள்விகளுக்கும் நன்றாக விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் தேர்வெழுத ஆரம்பியுங்கள்.

தேர்வறையில் கவனிக்க வேண்டியவை

* தேர்வறைக்குள் நுழையும் முன்னர், சட்டை பை, பேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பேப்பர்கள் இருந்தால், அவற்றைத் தூக்கி எறிந்து விடுங்கள். தேர்வறைக்குள் நுழைந்ததும், தேர்வு எழுதும் பெஞ்சின் மீது ஏதாவது எழுதியிருந்தால், அதை அழித்து விடுங்கள். அழிக்க முடியவில்லை என்றால், தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.

* கேள்வித்தாள் வந்ததும் கவனமாக படியுங்கள். தெரியாத கேள்விகள் முதலில் வந்தால், மனம் தளர்ந்து விடாதீர்கள்.

* முதலில் நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். அதன்பின்பு, ஓரளவு தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு, தெரிந்த பதிலை எழுதுங்கள். எழுதியது தவறாக இருக்குமோ என்று பயப்படாதீர்கள். எந்த கேள்வியையும் விடாமல், எல்லா கேள்விகளுக்கும், (வினாத்தாளில் குறிப்பிட்டபடி) விடை எழுதுங்கள்.

* பக்கம் பக்கமாக பதில் எழுதாதீர்கள். குறிப்புகளாக எழுதுங்கள். முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள். அது விடைத்தாள் திருத்துபவர்களது வேலையை எளிதாக்கும்.

* சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் கட்டத்திற்குள் எழுதுங்கள். தேவைப்படும் போது வரைபடத்தின் மூலமும், அட்டவணையின் மூலமும் பதிலை விளக்குங்கள்.

* புதிய பேனாவை வைத்து எழுதாதீர்கள். அதைக் கொண்டு, வேகமாக எழுத முடியாது. எழுதி, பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.

* பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள், அதிக நேரம் பிடிக்கும். அதனால், முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்திற்குள் எழுத முயற்சி செய்யுங்கள்.

* ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ, அதை எழுதி முடித்து விடுங்கள். ஒரு கேள்விகான நேரம் முடிந்ததும், உடனே அடுத்த கேள்விக்குச் சென்று விடுங்கள். ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்காதீர்கள். அதனால், நன்கு தெரிந்த கேள்விகளுக்குக் கூட விடை எழுத நேரம் இல்லாமல் போய்விடும்.

* விடைத்தாளை கொடுப்பதற்கு முன், பக்க எண், கேள்வி எண், பதில் எண் ஆகியவற்றை சரிபாருங்கள்.

* தவறாக விடை எழுதி விட்டால், அதை அதிகமாக கிறுக்கியோ, அல்லது ரப்பரால் அழித்தோ விடைத்தாளை அலங்கோலமாக்கி விடாதீர்கள். சிலநேரங்களில் ரப்பரால் வேகமாக அழிக்கும்போது விடைத்தாள் கிழிந்துவிடும் நிலையும் கூட ஏற்படும். விடைத்தாளை அதிகமாக மடக்கி விடாதீர்கள்.

தேர்வு எழுதி முடித்தபிறகு

தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்கு சென்று விடுங்கள். நண்பர்களுடன் வினா-விடை பற்றி விவாதிக்காதீர்கள். அவர்கள் நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளைச் சுட்டிகாட்டி, வீண் மன உளைச்சலை உண்டாக்கிவிடுவர். இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். அதனால் நாம் அடுத்த தேர்வுக்கு உற்சாகமாக தயாராக முடியாமல் போய்விடும்.

தினதந்தி



தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed 21 Mar 2012 - 22:02

நல்ல பகிர்வு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை 1357389தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை 59010615தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Images3ijfதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu 22 Mar 2012 - 9:28

பயனுள்ள பதிவு சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu 22 Mar 2012 - 13:32

சூப்பருங்க நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 22 Mar 2012 - 14:44

பது wrote: சூப்பருங்க நன்றி
பதுவுக்கு சந்தோஷத்த பாரேன் - பக்கத்து பய்யன் பேப்பர கவனிங்கன்னு சொன்னா மாதிரி இருக்கோ?




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 22 Mar 2012 - 15:39

பயனுள்ள பகிர்வு சிவா. இனி தேர்வு எழுத போகும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்



தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Uதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Dதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Aதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Yதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Aதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Sதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Uதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Dதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Hதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu 22 Mar 2012 - 20:08

நன்றி அண்ணா பகிர்விர்க்கு. அருமையிருக்கு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu 22 Mar 2012 - 20:25

நன்றி அண்ணா பகிர்விர்க்கு.

வயசான காலத்தில புள்ள குட்டிய படிக்க வைக்கிறத விட்டுபுட்டு இதெல்லாம் எதுக்கு செல்வகுமார் அண்ணா உங்களுக்கு மண்டையில் அடி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 22 Mar 2012 - 20:31

பயனுள்ள பதிவு அண்ணா! மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று..! சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri 23 Mar 2012 - 1:03

///தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றதும், நேராக தேர்வறைக்குச் சென்றுவிடுங்கள். வழியில் நிற்கும் நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது கவலையையும், தேவையற்ற பயத்தையும் உண்டாக்கி விடும்.///

உண்மை...இதுதான் நிறைய நடக்கும்...

நல்ல பயனுள்ளப் பதிவு சிவா...பகிர்விற்கு நன்றி...



தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை 224747944

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Rதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Aதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Emptyதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை Rதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக