புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
21 Posts - 66%
heezulia
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
63 Posts - 64%
heezulia
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_m10 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 06, 2012 5:28 pm

 என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்...  E_1336023125

எல்லாருக்குமே வெளிநாடுகளுக்குப் போகணும், சுற்றிப் பார்க்கணும் என்ற ஆர்வமும், ஆசையும் இருக்கும். அதற்கான வாய்ப்பு, சமய சந்தர்ப்பம், விடுமுறை மற்றும் பொருளாதாரம் அமையப் பெற்றவர்கள் பறக்கின்றனர்.

இல்லாதவர்கள், சினிமா, பத்திரிகை, "டிவி'யில் பார்த்து, படித்து மகிழ்ந்து கொள்கின்றனர்.

வேலைக்காக குவைத் போன பின், வசதி வாய்ப்புகள், பணப்புழக்கம் இருந்தாலும், லீவு முழுக்க, ஊர், உறவுகள், நட்பு, எழுத்து என்ற ஆக்கிரமிப்பிலிருந்து மீள முடிவதில்லை. அத்துடன் சமூக சேவை என்ற, "முள்கிரீடம்!' நண்பர்களில் பலரும் மேலைநாடு, கீழை, வடக்கு, தெற்கு என்று சுற்றிவந்து, கதைகதையாய் வலியவந்து சொல்லும் போது, அந்தத் தருணத்தில் மட்டும், "நாமும் சுற்றணும்' என்ற ஆவேசம் எழுந்து, அப்புறம், அடுத்த விடுமுறைக்குள், அது நமத்து விடும்.

இந்தச் சுழற்சிக்கிடையில், எழுத்தோடு சம்பந்தப்பட்டு புத்தக வெளியீடு, படப்பிடிப்பு என்று தேவை ஏற்பட்டதால், பக்கத்தில் துபாய் மட்டும் பயணித்திருக்கிறேன். அப்புறம் மலேசியா!

இந்தத் தருணத்தில், சகோதரரின் மகன், மகள்கள் அமெரிக்காவில் வேலையும், குடும்பம், குழந்தையுமாய் இருந்து, அழைத்துக் கொண்டேயிருந்தனர்.

சரி... அமெரிக்கா போய்தான் பார்ப்போமே என, ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன். பயணம் என்றால், நமக்கு மகிழ்ச்சி இருக்க வேண்டும். உல்லாசம்; சிலிர்ப்பு! அமெரிக்கா விஷயத்தில் அதெல்லாமில்லை. முழுக்க முழுக்க சங்கடம்! அவன் ஒழுங்காய் விடுவானா, குடைவானா, நம் பேச்சைக் கேட்பானா, என்ன கேட்பான், என்ன பதில் சொல்லணும்?

பாஷையும், பரிமாணமும் புரிந்தாலும், புரியாவிட்டாலும், "யெஸ்... யெஸ்... நோ... நோ... தாங்க்ஸ்... சாரி!' என்று ஒப்பேற்ற வேண்டும் என்று நண்பர் சம்பத் சொல்லியிருந்தார்.

"ஏர்போர்ட்டில் உள்ள, "அக்கா' லக்கேஜ்ஜில் உள்ள சமாச்சாரங்கள் பற்றியெல்லாம் கேட்பர். தைரியமாய் பேசுங்கள்...' என்று அமெரிக்கா ஆனந்த் பாடம் எடுத்திருந்தார்.

என்ன தான் உருட்டல், மிரட்டல், உச்சிமுதல், உள்ளங்கால்வரை, "செக்கிங்' என்றாலும் கூட, அவர்களின் அணுகுமுறை, வனப்பு, நளினம், நயமான பேச்சு, கொடுக்கும் மரியாதை, இவற்றைப் பாராட்டியே ஆக வேண்டும்.

அமெரிக்கா - ஜரோப்பிய நாடுகளில், பொது மக்களை மிகவும் மதிக்கின்றனர். பணிவான, கனிவான பேச்சு. திட்டுவதென்றாலும் கூட, மிக அன்போடுதான்; கத்துவதில்லை. புரியாதவர்களுக்கு, ஒருமுறைக்குப் பலமுறை சொல்கின்றனர், புன்னகையோடு.

அந்த புன்னகையும், மரியாதையும் செயற்கையாய் இருக்கலாம். ஆனால், அது, அந்தந்த தருணத்திற்குப் பலமாய், நமக்கு பாலமாய் இருப்பது உண்மை.

அடுத்து, என்னதான் படித்து, வெளுத்து, பணச் செழிப்பிலிருந்தாலும் கூட, அவர்களிடம் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு விஷயம்,

"கியூ!'

ஏர்போர்ட், ரயில், பஸ், டாய்லெட், மளிகைக்கடை என, எங்கும் அழகாய் வரிசை பிடிக்கின்றனர்; முந்துவதில்லை, முட்டி மோதுவதில்லை.

அபுதாபிக்கு ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து, ஆறு மணி நேர காத்திருப்பு.

அப்புறம் ஒன்பது மணி நேரம் பயணித்து, பெல்ஜியம் நாட்டின் புரொல்சில், ஆறு மணி நேரம் காத்திருப்பு!

பசியில் மயங்கித் தூங்கும் வரை காத்திருந்து, அப்புறம்தான் சாப்பாட்டு வண்டியைத் தள்ளி வந்து உசுப்புவர்.

விமானம் புறப்பட்டதிலிருந்தே, இதோ, ஏதாச்சும் தருவர், குடிக்க தண்ணீராவது கிடைக்காதா என ஏங்கி, வீங்கி, நொந்து கொண்டிருக்கும் போது, பணிப் பெண்கள், ஐயோ... நம்மூரில் பரவாயில்லை... பாட்டிகளோடு விட்டனர்... அங்கே அமெரிக்கன் ஏர்லைன்சில், தாத்தா - பாட்டி என, பணிப் "பெண்கள்...' கொடுமைடா சாமி!

அவர்கள் பாட்டிற்கு, இங்குமங்கும் நடப்பர், போவர், வருவர். உணவு வாசம் மட்டும் மூக்கைத் துளைக்கும். ஆனால், கண்ணில் காட்ட மாட்டார்கள்.

எட்டிப் பார்த்தால், நம் வரிசையைத் தவிர வெகுதொலைவில், எல்லாருக்கும் எல்லாம் கிடைத்திருக்கும். "அது கிடக்குது போ' என்று கண் மூடினால் வந்து நிற்பர். அப்புறம், "இதுக்கா இத்தனை ஆசைப்பட்டாய்?' சாப்பாட்டை ஸ்பரிசித்த பின், தூக்கம் போய் விடும். படம் பார்க்கலாம், இசை கேட்கலாம் என்று, எதையும் உருப்படியாய் செய்ய முடியாமல்.

பக்கத்து உள் சீட்காரரின், "எக்ஸ்க்யூஸ்மி'க்கு எழுந்து வழி கொடுத்து, அவர் பத்து முறை டாய்லெட் செல்வதற்கும், புன்னகைத்து முன் சீட்டு நபர் இருக்கையை, நம் காலில் விரித்து, "ஏசி' குளிரடித்து அப்படியிப்படி தூங்க முய<லும்போது. "விமானம் (கரடுமுரடான பாதையில்) மாறுபட்ட சீதோஷ்ணத்தில் பயணிப்பதால் குலுங்குகிறது; உடன் பயணிகள் பெல்ட்டை போட்டுக் கொள்ளுங்கள்...' என்று மணியடித்து அறிவிப்பு வரும்.

அதுவரை கண்ணிலேயே படாத பணியாட்கள், வேகமாய் ஓடிவந்து, பெல்ட்டை செருகுவர்; சீட்டை நிமிர்த்துவர். அப்புறம் கொஞ்ச நேரத்தில் தூக்கம் வரும்போது, ஜூஸ் கொண்டு வந்து உணர்த்துவர். பின் டாய்லெட்டிற்கு வேவு பார்த்து, காலியானதும், ஓடி வருவதற்குள், விமானம் தரை இறங்கத் தயாராகி விடும்.

புரொல்சில் விமான தளம், ஐரோப்பிய வனப்பிற்கு வந்தனம் சொல்கிறது. அங்கேயே அமெரிக்க கருப்பர்களின் ஆக்கிரமிப்பு. இறங்கி அடுத்த விமானத்திற்கான போர்டிங் பாஸ் பெற்று தூங்கலாம்.

அதற்குமுன், முகம் கழுவி, வயிறை கிளீயர் செய்து கொள்ளலாம் என்று தோன்றும். சும்மா சொல்லக் கூடாது... ஏர்போர்ட்டிலும் சரி... அமெரிக்காவிலும் சரி, ரெஸ்ட் ரூம்கள் ஏக பளபளப்பு!

ஆனால் -

அங்கே முகம் கழுவ நின்றிருந்தபோது, நம்மூர் பெரியவர் ஒருவர் டாய்லெட்டிலிருந்து முனகிக் கொண்டே வந்தது கவனத்தை ஈர்த்தது. "எல்லாம் சரிதான்! சுத்தமா வச்சிருக்கான். குப்பைகளையெல்லாம் தொட்டில ஒழுங்கா போடறான். ஒடம்புக்கு சென்ட் அடிச்சுக்கிறான். ஆனா... குண்டி கழுவ தண்ணி தர மாட்டேன்றானே... துடைச்சுக்கச் சொல்றான்! ஒரு குவளை வச்சுட்டாத்தான் என்னவாம்...' என்று விசனப்பட்டார்.

இந்த அத்தியாவசியப் போராட்டத்தை சமாளிக்க, அந்துமணி அவர்கள் சில டிப்ஸ் கொடுத்திருந்தார். எனக்கு கைகொடுத்திருந்தது அது... அப்புறம்! விமான காக்கும் அறையில் கொஞ்சம் தூங்கலாம் என்று, கைப்பெட்டியை காலுக்கடியில் வைத்துவிட்டு அமர்ந்து, ஐந்து நிமிடம் தூங்குவதற்குள், "அங்கே பாருங்களேன்!' என்று தோளைத் தட்டினாள் மனைவி.

"என்ன!' என்றேன் கடுப்பாய்.

"முழிச்சுத்தான் பாருங்களேன்!'

"உன் தொணதொணப்பிற்கு அளவேயில்லையா... என்னன்னு சொல்லித்தான் தொலையேன்...'

"இப்போ பார்க்கலேன்னா, பெரிய ஒரு இன்பத்தை இழக்கப் போறீங்க. அதுமட்டுமில்லை, எழுத அருமையான விஷயத்தையும்...'

"எழுத' என்றதும் புளுக்கென விழித்து, எதிர் வரிசையில் பார்க்க, அங்கே ஒரு பெண்... ஆஹா!

— தொடரும்.


என்.சி. மோகன்தாஸ்

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக