புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
68 Posts - 53%
heezulia
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
1 Post - 1%
Shivanya
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
15 Posts - 3%
prajai
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
9 Posts - 2%
jairam
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_m10உறைந்த உறவுகள்   சிறு கதை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறைந்த உறவுகள் சிறு கதை


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon Jul 16, 2012 4:19 pm

உறைந்த உறவுகள்



வியாழன் இரவு. துபாய். ராசுவுக்கு 9 மணிக்கே தூக்கம் வந்தது. வழக்கமாக வியாழன் இரவு கூத்து தான். பிறகு வெள்ளி விடுமுறை என்பதால் பாதி நாட்கள் தூக்கம்.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை விடுமுறை மற்றும் இலவச விமான பயணம் தாயகம் செல்வதற்கு. வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. முதல் விடுமுறைக்கு சென்றதோடு சரி. மூன்று வருடங்கள் ஆகியும் போகவில்லை. சென்ற முறை விடுமுறைக்கு தந்தையை விசிட் விசாவில் அழைத்து வந்திருந்தான் இரண்டு வாரங்களுக்கு.

இந்த முறை வந்தால் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவன் தந்தை நிச்சயமாக இருந்தார். உன் கல்யாணத்தை பாத்துட்டா நிம்மதியா சாவேன் என்பார் அவனுடயை 60 வயது தந்தை. அப்பா, நீ சாகப்போறின்னா எனக்கு கல்யாணமே வேண்டாம் என்பான் இருபதெட்டு வயது குழந்தை. அவனுக்கு தந்தை என்றால் உயிர். இன்று அவருடைய நினைவு அதிகம் வாட்டியது.

அழைப்பு மணி அடித்து. கதவை திறந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அவன் தந்தை உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தார்.

என்னப்பா திடீர்னு, தனியாவா வந்தே

ஆமான்டா உன்னை பாக்கனும்போல இருந்தது என்றார்

அவரை அப்படியே கட்டி தழுவினான். அவரும் அவனை உச்சி மோர்ந்தார்.

என்னப்பா என்னை கூப்பிட்டிருந்தா நான் ஏர்போர்டுக்கு வந்திருப்பேன்ல

உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமே தான்.


இப்ப எந்த ப்ளைட்டுபா நம்ம ஊர்லேந்து. ஆச்சர்யமா இருக்கே.

அதுவா மஸ்கட்லேர்ந்து வந்து வந்தது.

பரவாயில்லை பா ஒரு தடவை துபாய் வந்துட்டு போயிட்டு எல்லா விஷயமும் தெரிஞ்சிகிட்டியே என்றான் மகிழ்ச்சியுடன்.

அவர் தன் கால்களிலிருந்து கட் ஷூவை விடுவித்துக் கொண்டார். சென்ற முறை வந்த போது வாங்கி தந்தான். அப்பா, துபாய்க்கு வரும்போது செருப்பெல்லாம் போட்டுட்டு வராதே. மானமே போயிடும். ஷூ தான் என்றான். அதற்கு அவன் தந்தையோ டேய் நான் லேசுல்லாம் போட்டுகிட்டு இருக்க முடியாது என்று பதில் தர, கவலைபடாதேப்பா இப்ப கட் ஷூ இருக்கு, செருப்பு மாதிரி போட்டுக்கெல்லாம் ஆனா ஷூ தான்.

அதுபோலவே சென்ற முறை ஜூயான்ட் மார்கெட்டில் 1000 திராமுக்கு பொருள் வாங்கினால் இலவசம் என்று ஒரு கைப்பை கொடுத்தார்கள், அதை எடுத்து வந்திருந்தார். சோபாவில் வைத்துவிட்டு அமர்ந்தார்.

உள்ளே ஓடிச் சென்று தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்தான். படுக்கையறைக்கு சென்று வேட்டியை எடுத்து வந்து கொடுத்தான்.

நல்ல வேளையாக இன்று விடுமுறை என்பதால் வீட்டை நன்றாக சுத்தம் செய்து காலி மது பாட்டில்களை கறுப்பு பின் பாகில் போட்டு கீழே போட்டுவிட்டு வந்திருந்தான். அதுபோலவே ஆஷ்ட்ரேயையும் சுத்தம் செய்துவிட்டு வந்திருந்தான்.

என்னப்பா, இருந்தாலும் நீ இப்படி பண்ணியிருக்க கூடாது. ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாமே. எனக்கு சந்தோஷத்துல ஹார்டே நின்னுடும் போலிருக்குது என்றான் ராசு, தலைகால் புரியாத மகிழ்ச்சியுடன்.

கண்ணனுக்கு போன் போட்டு நீங்க வந்துட்டீங்க சேஃபான்னு சொல்லட்டுமா என்றான். கண்ணன் அவனுடைய அண்ணன். ஒரு வயது தான் வித்தியாசம். அதனால் வாடா போடா என்று பேசிக் கொள்வார்கள்.

வேண்டாம்பா விடு. ராத்திரி ஆயிடுத்து அங்கே. நாளைக்கு காலையிலே சொல்லலாம்.

அவன் தந்தை வேட்டியை மாற்றிக் கொண்டதும், அவன் படுக்கையை சரி செய்து கொடுத்தான்.

சாப்பிட்டியா

அது ப்ளைட்ல கொடுத்தாங்க. இப்ப பசிக்கலை.

அப்ப வந்து படு. களைப்பா இருக்கும்.

இருப்பா, கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாம். உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு அம்மா ரொம்ப ஆசைபடறா.

அப்பா, உனக்கு களைப்பா இருக்கும். 9.30 மணி ஆயிடுத்து. இந்தா தண்ணி குடிச்சிட்டு படு. நாளைக்கு எனக்கு லீவ் தான். நிறைய பேசலாம் என்று அவர் சொல்லச் சொல்ல கேட்காமல் விளக்கை அணைத்தான். அதற்கு முன் அவருக்கு இரவில் எழுந்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்தால் இரண்டு டம்ளர்களில் தண்ணீர் வைத்து சிறிய தட்டுகளால் மூடினான்.

தன் வலது கையை அவர் மீது போட்டு அணைத்தபடி உறங்க துவங்கினான். சிறிய வயதிலிருந்து வந்த பழக்கம். அவரும் அவருடயை வலது கையால் அவன் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டார்.


அவனுக்கு சொர்க்த்தில் இருப்பது போன்ற ஒரு மகிழ்ச்சி. பாரேன் இந்த வயசிலேயும் தைரியமா கிளம்பி வந்துட்டாரே.

தனிமை விடுத்த பல நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினான் ராசு.

திடீரென்று அவன் செல்பேசி அழைக்க விழித்தெழுந்தான். அண்ணா காலிங்க் என்று அந்த சின்ன திரையில் தோன்றியது. சரிதான் கண்ணன் போன் பண்ணி அப்பா நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டாரா என்று கேட்கத்தான் என்று நினைத்து, போனை எடுத்து சொல்லுடா கண்ணா என்றான்.

கண்ணனின் குரல் மறுபுறம் கரகரத்திருந்தது. அப்பா போயிட்டாருடா என்றான் அழும் குரலில். என்ன இவன் அப்பா வந்து சேர்ந்துட்டாரா என்று கேட்காமல் போயிட்டாரா என்கிறான் என்று நினைத்துக் கொண்டே, என்னடா உளர்றே, அப்பா தான் துபாய்க்கு வந்திருக்காரே என்றான்.

டேய் என்னடா உளர்றே. தண்ணி கிண்ணி போட்டுட்டியா. அப்பா நம்மளவிட்டுட்டு போயிட்டாருடா. எங்க முன்னாடி பிணமா கிடக்குறாருடா என்றான்.

அவனுக்கு பகீரென்றது. எத்தனை மணிக்கு என்றான் பதட்டத்துடன்.

நேத்து ராத்திரி 9.30 மணிக்கு என்றான் கண்ணன். நீ என்னமோ சொன்னியேடா என்றான் குழப்பமாக.

விடு நான் ஊருக்கு வந்து பேசிக்கிறேன் என்று போனை துண்டித்து எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். தன்னருகில் அவன் தந்தை படுத்திருந்த பகுதி கலைந்திருந்தது. அவன் நேற்றிரவு அவருக்கு தந்த வேட்டி மடித்து வைக்கப்பட்டிருந்தது.

இரண்டு தண்ணீர் டம்ளர்களில் ஒன்று காலியாக இருந்தது. ஓடிச் சென்று சோபாவை பார்த்தான். அதில் அவர் கொண்டுவந்திருந்த சிவப்பு நிற ஜீயான்ட் பை இருந்தது. வெளியில் அவருடைய கட் ஷூ.

உடம்பில் மின்னல் பாய்ந்து செல்ல அவன் உறைந்து நின்றான்.

-மோகன் கிருட்டிணமூர்த்தி



செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 5:50 pm

அருமையான தந்தை மகன் பாசம் சூப்பருங்க அவர் பாசம் உலகத்தை விட்டு சென்றாலும் தன் மகனின் உள்ளத்தை விட்டு செல்லாது
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக