புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயங்கி கிடக்கும் மனிதன் Poll_c10மயங்கி கிடக்கும் மனிதன் Poll_m10மயங்கி கிடக்கும் மனிதன் Poll_c10 
21 Posts - 66%
heezulia
மயங்கி கிடக்கும் மனிதன் Poll_c10மயங்கி கிடக்கும் மனிதன் Poll_m10மயங்கி கிடக்கும் மனிதன் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயங்கி கிடக்கும் மனிதன் Poll_c10மயங்கி கிடக்கும் மனிதன் Poll_m10மயங்கி கிடக்கும் மனிதன் Poll_c10 
63 Posts - 64%
heezulia
மயங்கி கிடக்கும் மனிதன் Poll_c10மயங்கி கிடக்கும் மனிதன் Poll_m10மயங்கி கிடக்கும் மனிதன் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
மயங்கி கிடக்கும் மனிதன் Poll_c10மயங்கி கிடக்கும் மனிதன் Poll_m10மயங்கி கிடக்கும் மனிதன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மயங்கி கிடக்கும் மனிதன் Poll_c10மயங்கி கிடக்கும் மனிதன் Poll_m10மயங்கி கிடக்கும் மனிதன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயங்கி கிடக்கும் மனிதன்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Sep 12, 2012 7:56 am


,
அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து முடித்த பிறகு இறைவன் மனிதனை படைத்தான் தனது கடேசி படைப்பு மனிதன் என்பதனால் அவனை சிருஷ்டிப்பதில் மட்டும் அவன் தனிக்கவனம் செலுத்தினான் அதனால் தான் மனிதர்கள் அனைவரும் ஏறக்குறைய இறைவனை போலவே இருக்கிறார்கள். கடவுளிடம் இருக்கும் ஒரே ஒரு சக்தி மட்டுமே மனிதனிடம் இல்லை மனிதன் நீரில் மிதக்க படகினை கண்டான் வானில் பறக்க விமானம் கண்டான் பூமியை அகழ்ந்து பார்க்க சுரங்கம் கண்டான் அன்னை பூமியில் சாதித்தது போதுமென்று வானமண்டலத்தை அளக்க துவங்கினான் சந்திரனில் மிதித்து செவ்வாயை எட்டிபிடித்திருக்கும் மனிதன் இதுவரை பெறாத ஒரே சக்தி புதிய உயிர்களை படைப்பது மட்டுமே படைக்கும் தொழிலை மட்டும் மனிதன் கண்டறிந்து விட்டால் அவனும் இறைவனும் ஒன்றாகி விடுவார்கள் இது நடக்குமா? நடக்க முடியுமா? என்ற வாதங்கள் தொன்றுதொட்டு வருகின்றன அவைகள் நமக்கு வேண்டாம். நாம் அறிந்து கொள்வது மனிதனாகிய நாம் சாதாரண பிறவிகள் இல்லை சற்றேற குறைய இறைவனுக்கு நிகரான பிறவிகள் என்பதை உணர வேண்டும்.

மனிதனை விட நரி தந்திரமானது மனிதனை விட புலியும் சிங்கமும் வீரம் பொருந்தியது அப்பாவி மான் கூட மனிதனை விட அதிவேகமாக ஓட கூடியது. யானையின் பலத்தின் முன்னே மனிதன் ஒரு சிறு துரும்பு இப்படி பலம் பொருந்திய மனிதனை விட பல தகுதிகள் வாய்ந்த விலங்குகள் எதுவுமே மனிதனை அடிமைபடுத்திவிட முடியாது. காரணம் அவைகள் எவற்றிடமும் இல்லாத அறிவு பலம் மனிதனிடம் மட்டும் தான் உள்ளது. இந்த அறிவை வைத்து மனிதன் தன்னை விடவும் பல மடங்கு சக்தி மிகுந்த எதை வேண்டுமென்றாலும் அடக்கி விடுவான் அடிமையாக்கி விடுவான். அப்படி பட்ட அறிய படைப்பான மனிதன் எப்படி இருக்கிறான்? என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

காட்டு விலங்குகள் ஒருபருவ காலம் மழை பொய்த்து விட்டாலும் குடிக்க தண்ணீர் இல்லாமலும் உண்ண ஆகாரம் இல்லாமலும் போய்விட்டாலும் வருத்தபடுவது இல்லை மரணம் கண்ணுக்கெதிரே தெரிந்தாலும் கூட அவைகள் அஞ்சுவது இல்லை ஆனால் மனிதன் அப்படி அல்ல பத்து வருடம் பஞ்சம் ஏற்பட்டாலும் காலத்திற்கு ஏற்றவாறு உணவுகளை சேகரித்து கொள்ள அவனால் முடியும். கொடிய நோய் வந்தாலும் ஆக்ரோஷமான இயற்க்கை சீற்றம் வந்தாலும் தனது அறிவை வைத்து முடிந்த வரையில் தப்பித்து கொள்ள இயலும் ஆனாலும் மனிதன் விலங்குகளை போல மகிழ்ச்சியாக இல்லை அது ஏன்?

ஒரு சமயம் ஏசுநாதர் தனது சீடர்களை நோக்கி வானத்து பறவைகளை பாருங்கள் அவைகள் விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை ஆனாலும் அவைகள் மகிழ்வோடு பறக்கின்றன என்று சொன்னார். இதன் அர்த்தம் என்ன? தனது வாழ்நாளை நாளைக்கும் நடத்தி செல்ல எதாவது வேண்டுமே என்று சேமித்து வைக்காத பறவைகள் கூட ஆனந்தமாக பறக்கின்றன. ஆனால் எல்லாம் இருந்தும் அற்ப மனிதனே நீ ஏன் துன்பம் என்ற இருண்ட காட்டில் கிடந்தது தவிக்கிறாய் என்பது தான். மனிதன் மனிதனாக படைக்க பட்டதனுடைய மூலகாரணமே அவன் துன்பம் இல்லாதவனாக இன்ப மயமானவனாக இருக்க வேண்டும் என்பதே ஆனால் மனிதன் தன்னிடமுள்ள மிதமிஞ்சிய அறிவால் சந்தோசத்தை தொலைத்து விட்டு மூலையில் கிடந்தது அழுகிறான்.

உண்மையில் ஒவ்வொரு மனிதனும் எதை எதிர் பார்க்கிறான்? தனது படைப்பின் நோக்கமான தனது பிறவியின் இயல்பான இன்பத்தையே எதிர்பார்க்கிறான் ஆனால் பாவம் அவனுக்கு எப்போதும் அழிவில்லாத ஆனந்தத்தை தருவது எது நீர் குமிழி போல நிரந்தரம் இல்லாதது அழிந்து போகும் ஆனந்தம் எது என்று தெரியவில்லை ஒருவன் நினைக்கிறான் மலையளவு பணத்தை பெற்றால் தனக்கு இன்பம் கிட்டுமென்று வாழ்நாள் முழுவதும் உழைத்து உழைத்து நிறைய பணத்தை சம்பாதித்து குவித்து வைத்து விட்டு பார்க்கிறான் ஆகா இவ்வளவு பணத்தை சம்பாதித்து விட்டேனா? என்று ஆனந்த ஊற்று பெருக்கெடுத்து ஓட துள்ளி குதிக்கிறான்.

அந்த குதிப்பும் கும்மாளமும் ஒரே ஒரு நொடி மட்டுமே நீடிக்கிறது அடுத்த கணமே இந்த பணத்ததை யாரவது நம்மிடமிருந்து பிடுங்கி விடுவார்களோ என்று பயப்படுகிறான் அதனால் துக்கம் பணத்தை பாதுகாக்க ஆள் அம்பு படை வேண்டும் அவைகளை தருவது அதிகாரமிக்க பதவியே என்று முடிவு செய்து பதவியை நோக்கி நடக்கிறான் அதையும் பெற்று விட்டால் தன்னை போன்று பதவி ஆசை உடையவர்கள் அதை பிடுங்கி விடுவார்களோ என்று உறக்கம் வராமல் தவிக்கிறான் அதனாலும் துக்கம். பணம் பதவி இரண்டும் இருக்கிறது கூடவே பொறமை குணம் கொண்ட எதிரிகளும் கூடி விட்டார்கள் இவர்களிடமிருந்து தப்பிக்க தனது சொந்த பந்தங்களை அருகில் வைத்து கொள்ள வேண்டுமென்று அவர்களை நாடுகிறான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வித விதமான ஆசைகள் அவைகளை நிறைவேற்ற முடியாமல் மீண்டும் துடிக்கிறான் அதனாலும் துக்கம்.

பட்டம், பதவி, பணம், சொந்தபந்தம், அந்தஸ்து இப்படி எல்லாமே நிரந்தரம் இல்லாதது ஆனால் மனிதன் இவைகள் தான் நிரந்தரம் என்று நினைக்கிறான். அதற்கு காரணம் என்ன? கண்ணால் காண்பது இன்பம், காதுகளால் கேட்பது இன்பம், நுகர்வது இன்பம், சுவைப்பது இன்பம், பரிசம் செய்து பார்ப்பது இன்பமென்று புலனுக்கு கட்டு படுகின்ற வஸ்துக்கள் மட்டுமே நிஜமென்று நினைக்கிறான். இதனால் தான் ஆனந்தமாக இருக்க வேண்டிய மனிதனின் வாழ்வு துக்கமாக இருக்கிறது. நிரந்தரம் என்பது கண்களுக்கு தெரிவது மட்டுமல்ல அதற்கும் அப்பாலும் உள்ள பொருள்களும் நிரந்தரம் தான். அன்பு, கருணை, நிறைவு, திருப்தி, சாந்தி இவைகள் எதுவுமே கைகளால் தொட்டு பார்க்க கூடியது அல்ல ஆனால் நமது உணர்வுகளால் அவைகளை நுகர முடியும்.

நம் முன்னால் ஒருவன் நடந்து வருகிறான் அவன் கைகளில் எதுவோ இருக்கிறது அது இன்னவென்று நமக்கு தெரியாது அவன் அருகில் வரட்டும் வந்த பிறகு அது என்னவென்று பார்ப்போம் என்று காத்திருக்கிறோம் அவனும் வருகிறான் வந்தவன் நம்மை கண்டவுடன் தன் கைகளில் இருப்பதை மறைத்து கொள்கிறான் அவன் தூரத்தில் வந்த போதும் அருகில் வந்த போதும் அவனிடம் இருப்பது என்னவென்று நமக்கு தெரியாமலே போகிறது இதனால் அதை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் பிறக்கிறது ஆவல் விரிந்து விரிந்து கடேசியில் துக்கமாக மாறி விடுகிறது. இதை போலவே நிரந்தரமாக நமக்கு சந்தோசம் தருவது எது என்று தேடி தேடி அடையாளம் தெரியாமலே அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம். நம்மில் பெருவாரியானவர்கள் இதை போலவே வாழ்நாளை கழித்து விடுகிறோம்.

பலபேருடைய வாழ்க்கையானது எந்தவிதமான அர்த்தமும் இல்லாமல் ஒரு சாம்பலை போல இருந்த அடையாளமே இல்லாமல் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. இதனால் அவர்களின் பிறந்த பலனை அவர்களால் அறியமுடியமலே போய்விடுகிறது. எவனொருவன் தான் எதற்க்காக பிறந்தோம் என்பதை தெள்ள தெளிவாக தெரிந்து கொள்கிறானோ அவனே சாதனையாளனகவும் இருக்கிறான் சரித்திர ஏடுகளில் மறையாமல் நிரந்தரமாக இடம்பிடித்து விடுகிறான். உண்மையில் நாம் அனைவருமே சாதிக்க பிறந்தவர்கள் அதற்காக தான் இறைவன் நம்மை படைத்திருக்கிறான். ஆனால் நாம் அதை தெரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து கொண்டே இருக்கிறோம். நாம் யார்? நாம் பெற வேண்டியது என்ன? நிரந்தரமான நித்தியமான மகிழ்ச்சி என்பது எது என்று இன்றுமுதல் ஆராய துவங்குவோம். சற்று முயற்சி செய்தாலே பல ரகசிய கதவுகளை கடவுள் நமக்காக திறந்து விடுவான். வாருங்கள் அந்த வாசல் வழியாக சென்று நம் வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்


http://www.ujiladevi.in/2012/09/blog-post_12.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மயங்கி கிடக்கும் மனிதன் 1357389மயங்கி கிடக்கும் மனிதன் 59010615மயங்கி கிடக்கும் மனிதன் Images3ijfமயங்கி கிடக்கும் மனிதன் Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக