புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_m10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10 
21 Posts - 66%
heezulia
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_m10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_m10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10 
63 Posts - 64%
heezulia
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_m10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_m10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_m10தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 14, 2012 12:14 pm

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி Tamil_News_large_564911

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த காய்ச்சல், தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது; மதுரையில் மட்டும் இதுவரை, ஐந்து பேர், பலியாகியுள்ளனர்.

சென்னை, ஐஸ் அவுஸ் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் சாம்ஜி, 26; முதுநிலை பட்டதாரியான இவர், கை, கால்கள் செயலிழந்து, கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த, 11ம் தேதி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சாம்ஜி, நேற்று காலை, இறந்தார்.

இதுகுறித்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது: சாம்ஜி, இங்கு அனுமதிக்கப்படுவதற்கு முன், தனியார் மருத்துவமனை ஒன்றில், 20 நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார். ரத்தத்தில் நோய் எதிர்ப்பு அணுக்கள் மிகவும் குறைந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட அவர், பல உறுப்புகள் பாதிப்பால் இறந்துள்ளார். டெங்கு காய்ச்சலை உறுதி செய்வதற்காக, சாம்ஜிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள், இன்னும் வரவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


இதுவரை பலி 5:

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல், வேகமாக பரவி வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில், கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கப்பட்டவர்களில், 20 பேருக்கு, டெங்கு இருப்பது தெரிந்துள்ளது. இதுவரை, ஐந்து பேர் இறந்துள்ளனர்.இங்கு, கடந்த வாரத்தில் மூன்று குழந்தைகள் இறந்தனர். ரத்தப் பரிசோதனை முடிவுகள் வரும் முன் இறந்ததால், டெங்கு காய்ச்சலால் இறந்தனர் என, பதிவு செய்யப்படவில்லை. பரிசோதனை ஒரு பக்கம், சிகிச்சை ஒரு பக்கம், அறிக்கை ஒரு பக்கம் என, மூன்று முனைகளில் செயல்படுவதால், பரிசோதனை முடிவுகள், இறப்பிற்கான காரணத்தில் குறிப்பிடப் படுவதில்லை.தற்போது, அரசு மருத்துவமனையில், 20 பேர், டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுகின்றனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு, 304வது வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூன்று பெண்கள் வேறு வார்டுகளில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனைக்கு வரும், டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மதுரை மாவட்டம் மேலூரில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்தப் பரிசோதனை செய்ததில், 13 பேருக்கு, டெங்கு என, தெரிந்தது. குழந்தை முதல், 13 வயதுக்கு உட்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், பெற்றோர் பீதியில் உள்ளனர்.மேலூரில், 300 பேருக்கு தொடர் காய்ச்சல் உள்ளது. இதில் பலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; மற்றவர்கள்,மேலூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்து சென்றவர்களில், ஐந்து பேருக்கு, டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது; அவர்களிடம் பெயர் முகவரி பெறாததால், தகவல் தர முடியவில்லை.

டெங்கு காய்ச்சல், ஏற்கனவே நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளது. இப்போது, வடமாவட்டங்களிலும், இந்த காய்ச்சல் பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.


மாணவன் பலி?

காய்ச்சலுக்கு, மேல்சிகிச்சை பெற, அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட, பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.சென்னை, திருவேற்காட்டைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். மேஸ்திரி பணி புரிந்துவரும் இவரின் மகன் சுதாகர், 18. அரும்பாக்கத்தில் உள்ள, அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தான். கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுதாகர், இரு தினங்களுக்கு முன், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேலப்பன்சாவடியில் உள்ள, தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக, நேற்று மாலை, சென்னை, ராஜிவ்காந்தி, அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான். சுதாகரை பரிசோதித்த மருத்துவர்கள், "ஏற்கனவே, அவன் இறந்துவிட்டான்' என, தெரிவித்தனர். காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சுதாகருக்கு, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததா என்பதை, கடைசிவரை, மருத்துவர்கள் உறுதி செய்யவில்லை என, அவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஒரே நாளில் 14 பேருக்கு "டெங்கு' பாதிப்பு:

சென்னையில், 11 சிறுவர்கள் உட்பட 14 பேர், "டெங்கு' காய்ச்சல் அறிகுறியுடன், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 12 நாட்களில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.நாகை, தஞ்சை, வேலூர் மாவட்டங்களை தொடர்ந்து, சென்னையிலும், "டெங்கு' தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் நிலவரப்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 26 பேர், "டெங்கு' அறிகுறிகளுடன், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில், வில்லிவாக்கம், மேடவாக்கம்,திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து, டெங்கு காய்ச்சல் பாதிப்புடன், சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், ஆறு பேருக்கு, நேற்று முன்தினம், "டெங்கு' உறுதிச் செய்யப்பட்டது. இந்நிலையில், இங்கு சிகிச்சை பெற்றுவரும், செம்மஞ்சேரி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த, 13 வயது சிறுமிக்கு, நேற்று, "டெங்கு' கண்டறியப்பட்டுள்ளது.மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 12 வயதிற்குட்பட்ட, சிறுவர், சிறுமியர், ஏழு பேர், "டெங்கு' அறிகுறியுடன், எழும்பூர், குழந்தைகள் நல மருத்துவமனையில், சேர்க்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, குழந்தைகள் வார்டில் நான்கு பேர்; கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று பேர், "டெங்கு' காய்ச்சல் பாதிப்புடன், நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 12 நாட்களில், "டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, சிறப்பு வார்டில் 12 பேர், "டெங்கு' காய்ச்சலுக்கு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

நன்றி :- தினமலர்

ரசித்த கமெண்டுகள்

Ishan Mohamed Mothi - chennai,இந்தியா

கொசு இல்லாத சிங்கப்பூர் ல டெங்குக்கு தினம்தோறும் அதன் விளைவுகளை விளம்பரம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.... நம்ம நாட்டுல நாசமா போறதுக்கு மட்டும்தான் விளம்பரம் இருக்கு.

Nava Mayam - newdelhi,இந்தியா

ஒட்டு போட்ட குத்தத்துக்கு , தமிழக சிங்கங்களை இப்படி கொசு வலைக்குள்ள சிக்க வச்சு , அடிமை போல அடைச்சு போட்டுடிங்களே ...

Amalraj Penigilapati - castries,செயின்ட் லூசியா

இந்த கொசுக்களை உற்பத்தி செய்வதன் பின்னணியில் கருணாநிதி இருக்கிறார் என்று சுகாதார அமைச்சர் விரைவில் அறிக்கை வெளியிடுவார்..

kochadaiyan - ,இந்தியா

தமிழ்நாட்டில் எங்கு காய்ச்சல் என்று எட்டி பார்த்த இடமெல்லாம் டெங்கு காய்ச்சல்.




ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுகிறது : மதுரையில் இதுவரை ஐந்து பேர் பலி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 14, 2012 1:44 pm

நம்ம நாட்டுல நாசமா போறதுக்கு மட்டும்தான் விளம்பரம் இருக்கு...

எப்டி பாதிக்க பட்டு இருகாரு பாருங்க..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 14, 2012 2:22 pm

ஊழலுக்கு அப்புறம் இதுதான் அதிகமா பரவுது போல!!!




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக