புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனதின் சர்க்கஸ்! Poll_c10மனதின் சர்க்கஸ்! Poll_m10மனதின் சர்க்கஸ்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
மனதின் சர்க்கஸ்! Poll_c10மனதின் சர்க்கஸ்! Poll_m10மனதின் சர்க்கஸ்! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
மனதின் சர்க்கஸ்! Poll_c10மனதின் சர்க்கஸ்! Poll_m10மனதின் சர்க்கஸ்! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மனதின் சர்க்கஸ்! Poll_c10மனதின் சர்க்கஸ்! Poll_m10மனதின் சர்க்கஸ்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதின் சர்க்கஸ்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 22, 2012 7:37 pm

சர்க்கஸ் தெரியும், அதென்னமனதின் சர்க்கஸ்?
முதலில் சர்க்கஸ் என்பது என்ன?
:-
மிக நேர்த்தியாய் ஒழுங்குபடுத்தப்பட்ட, அதேநேரம் பெரும் குழப்பம் நேர்வதைப்போல் தோன்றக் கூடிய செயல்களின் ஒருங்கிணைப்பு. ஒரு விதத்தில் பெருங்குழப்பம், இன்னொரு விதத்தில் வெகு நேர்த்தி!
:-
மனித மனதிலும் மூளையிலும் அதேதான் நிகழ்கிறது. மூளையில் நியூரான்களின் நடனத்தைப் பார்த்தால், அசாத்தியமான ஒழுங்கும் திட்டமிடலும் அதில் உள்ளன.அவையே உடலசைவாகவும் செயல்களாகவும் வெளிப்படுகின்றன. மூளையில்உள்ள நியூரான்கள் ஒருங்கிணைக்கும் அற்புத நாடகத்தின் விளைவாக, மனித உடலுக்குள் கோடிக்கணக்கானவிஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மனிதர்களின் அனுபவத்தில், மனம் என்பது குழப்பங்களின் குவியலாகத்தோன்றுகிறது.
:-
சர்க்கஸில் பாருங்கள், அங்கிருக்கும் கோமாளிகூட வித்தைகளில் தேர்ந்தவர்தான். ஆனால் ஒருகோமாளி போல் நடந்துகொள்கிறார். வெளித் தோற்றத்தில் ஒரு கோமாளி போலவும் வித்தையில் திறமையும் சமநிலையும் கொண்டவராக இருக்கிறார். மனதுக்குள் ஏற்படும் செயல்களின் அடிப்படையில் பல பேருடைய அனுபவமும் அப்படித்தான் இருக்கிறது.
:-
மனம் நடத்தும் வித்தைகளில் என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன? அவை உங்களை உயர்ந்த சிகரங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.அல்லது உங்களுக்குள்ளேயே ஆழ்ந்த நரகங்களை உருவாக்கலாம். உங்கள் ஒவ்வொருவருக்குமே இந்த இரண்டு வாய்ப்புகளும் உள்ளன. எனவே, இந்த வித்தையைஎப்படி நடத்தப் போகிறீர்கள், அதற்கு எப்படிப் பொறுப்பேற்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்தே எல்லாம் இருக்கிறது. உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மிகஅற்புதமான கருவியாகவும் மிக அற்புதமான வாய்ப்பாகவும் இருக்கிற மனமே, உங்களுக்கான துயரங்களை உற்பத்தி செய்யும் இயந்திரமாகவும் மாறிப்போனது எப்படி?
:-
மனிதர்களின் அத்தனை துயரங்களும் மனதிலேயே உருவாகின்றன. ஒருவருக்கு மனம் ஓர் இனிய அனுபவமாய் இருக்கிறது. இன்னொருவருக்கோ, அது தாங்கமுடியாத துயரமாய் இருக்கிறது. அந்தத் துயரத்தைத் தாள முடியாமல் அதிலிருந்து தப்பிக்க, சிலமன வக்கிரங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். அவை தற்காலிக நிம்மதி தந்துவிடும். பிறகு துயரத்தை இரண்டு மடங்கு பெருகச் செய்யும்.
:-
உங்கள் தர்க்க அறிவு எல்லாவற்றையும் இரண்டாகப்பகுத்துக்காட்டுகிற தன்மைகொண்டது. தர்க்க அறிவு இப்படி தனித்தனியாகப் பகுத்துத் தருவதே, உங்களுக்குள் ஒருவிதமான புரிதலை ஏற்படுத்தத்தான். ஒரு கத்தி எதையும் இரண்டாகவெட்ட வேண்டுமென்றால், வெட்டப்பட்டது கத்தியில் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். நீங்கள் வெங்காயத்தை வெட்டுகிறீர்கள். பிறகு அதே கத்தியால் ஆப்பிள்களையும் மாம்பழங்களையும் நறுக்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த கத்தியில் வெங்காயச் சாறு ஒட்டியிருந்தால், ஆப்பிளும் மாம்பழமும் வெங்காயத்தின் சுவையோடிருக்கும். ஏதேனும்ஒன்றின் சாறு கத்தியில் ஒட்டிக்கொண்டால், அதன் பிறகு கத்தி உங்களுக்கு உதவியாக இருக்காது. உபத்திரவமாகத்தான் இருக்கும். அதுபோல உங்கள் தர்க்க அறிவு தன்னை எதனோடாவது அடையாளப்படுத்திக் கொண்டால், பிறகு அந்த அடையாளங்களோடு பிணைக்கப்பட்டுவிடும். மனதின் அனுபவம் முழுவதுமாகச் சிதைந்துவிடும்.
:-
புனிதத்தைச் சென்றடையும் ஏணியாய் இருக்க வேண்டிய உங்கள் மனம், பல்வேறு விஷயங்களுடன் தன்னை அடையாளப் படுத்திக்கொண்ட காரணத்தாலேயே நரகத்துக்கான படிக்கட்டுகளாய் மாறிவிட்டது.
:-
பலரும் என்னிடம் “சத்குரு!வாழ்வின் மகத்தான ஒரு விஷயம் நீங்கள் கேளாமலேயே உங்களுக்கு இயல்பாக நேர்ந்துவிட்டது. நீங்கள் அதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறீர்கள். எங்களுக்கு அது எப்போது நேரும்?” என்று கேட்பார்கள்.
:-
இது தேர்ந்தெடுப்பதால் நிகழ்வதில்லை. அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு நிற்பதால் நிகழ்கிறது. உங்கள் உடலோடு, ஆண் பெண் என்னும் பாலின பேதத்தோடு, உங்கள் குடும்பத்தோடு, உங்கள் தகுதிகளோடு, உங்கள் சமூகத்தோடு, உங்கள் ஜாதி, இனம், மொழி, தேசம் என்ற விதவிதமான அடையாளங்களோடு உங்கள் தர்க்க அறிவு தன்னைஇனம் காணும்போது, எந்தவொருமனிதரும் தன் இயல்பான தன்மையின் உச்சத்தைத் தொட முடியாது.
:-
ஈஷா பள்ளியை நாம் துவங்கியபோது “இது ஆன்மீகப் பள்ளியா? மாணவர்களுக்கு ஆன்மீகம் போதிப்பீர்களா?” என்பதுதான் முதல் கேள்வியாகக் கேட்கப்பட்டது. அதை நாங்கள் செய்யவே மாட்டோம் என்று பதில் சொன்னேன். இந்த உலகில் பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. ஆனால் பெரும் சேதங்களையும் சீரழிவையும் ஏற்படுத்துவது மதம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த முறைகேடுகள்தான். ஏனெனில் அவற்றோடு மிக உறுதியாக உங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள். அதைத்தாண்டி உங்களால் பார்க்க முடிவதில்லை. எனவே, இத்தகைய அடையாளங்களைத் தாண்டி குழந்தைகள் வளர்க்கப்படும்போது, தன்னை உணர்தலை நோக்கி அவர்கள் இயல்பாக வழிநடத்தப்படுவார்கள். எனவே மனம் என்னும் சர்க்கஸை குழப்பமானதாய் உணராமல் ஓர் அற்புதமாக நீங்கள் உணர வேண்டுமானால்,உங்கள் அறிவு தன்னை எதனோடும் அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடாது. அத்தகைய அடையாளங்கள் வாழ்க்கை பற்றிய உங்கள் புரிதலை உருக்குலைத்துவிடும்.
:-

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 22, 2012 7:48 pm

அக்பர் – பீர்பால் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்:-
அக்பர் குழந்தையாக இருந்தபோது வேறொரு பெண்ணிடம் பாலருந்தி வளர்ந்தார். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் உண்டு. அக்பர் ஒரு பேரரசராக வளர்ந்த பிறகு, தனக்கு பால் கொடுத்த அன்னைக்கு ஒரு கிராமத்தையே எழுதிக்கொடுத்தார். ஆனால் அந்த பெண்ணின் மகன் ஊதாரியாகச் சுற்றித் திரிந்து எல்லாவற்றையும் இழந்து வறுமையில் இருந்தார். ஒருநாள் அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. ‘சக்ரவரத்திக்கு என் அன்னைதான் பால் கொடுத்தார். அவர் எனக்குக்கடமைப்பட்டவர். ஒருவகையில்அவர் எனக்கு சகோதரர் முறை. ஏதாவது கேட்டால் அவரால் மறுக்க முடியாது’. இந்த எண்ணம் தோன்றியதால் அவர் அக்பரைக் காண வந்தார். அக்பரும் அவரை வரவேற்று மரியாதை செய்து, அனைவருக்கும் தன் சகோதரர் என்று அறிமுகப்படுத்தி அரண்மனையில் தங்கவைத்தார்.அவரும் அரச உடைகள் அணிந்துபல கூட்டங்களில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு எதுவுமே புரியவில்லை.
:-
சில வாரங்கள் போயின. அவருக்கு இன்னொன்றும் தோன்றியது. என்னைச் சுற்றிநல்லவர்கள் யாரும் இல்லாததால்தான் எனக்கு சிரமங்கள் வந்தன. அக்பரைச்சுற்றி அருமையான மனிதர்கள் இருக்கிறார்கள்.அனைவருக்கும் மேலாக பீர்பால் இருக்கிறார். அக்பர் சிறந்து விளங்க இதுதான் காரணம். பீர்பால் போல் ஒருவர் உடனிருந்தால் நானும் சிறந்து விளங்குவேன் என்று நினைத்தார். அக்பரிடம் சென்று, ‘உங்களுடன் பீர்பால் இருப்பதால் நீங்கள் சிறந்து விளங்குகிறீர்கள். உங்களுடன் பலர் இருக்கிறார்கள். எனவே என்னுடன் பீர்பாலை அனுப்பிவையுங்கள்’ என்று கேட்டார். அவரைத் தனது மூத்த சகோதரராக அக்பர் கருதியதால் எதுவும் மறுத்துச் சொல்ல இயலவில்லை. எனவே அக்பர், ‘நீங்கள் பீர்பாலை அழைத்துச் செல்லுங்கள்’ என்று சொன்னதோடு மாலையில் அவையிலும் அதனை அறிவித்தார். ஒரு முட்டாளோடு போக நேர்வதை உணர்ந்த பீர்பால், “உங்கள்அண்ணனுக்கு அறிவார்ந்த துணை அவசியம்தான். எனக்கு ஒரு யோசனை. அவரோடு என் அண்ணனை அனுப்பி வைக்கிறேன் என்றார்”. பீர்பால் இவ்வளவு அற்புதமான மனிதராக இருந்தால், அவரது சகோதரன் இன்னும் அற்புதமானவராக அல்லவா இருப்பார் என்று கருதிய அக்பரின் அண்ணன் அதற்குச் சம்மதித்தார். அக்பருக்கும் மகிழ்ச்சி.
மறுநாள் வழியனுப்பு விழாவுக்கு ஏற்பாடானது. பீர்பால், ஒரு காளை மாட்டுடன் வந்தார். ஆச்சரியமடைந்த அக்பரிடம் சொன்னார். ‘இதுதான் என் அண்ணன், நாங்கள் இருவரும் ஒரே தாயிடம்தான் பாலருந்தினோம்’ என்று.
பெரிதாகவும் சிறிதாகவும் சில அடையாளங்களை மனித மனம்பற்றிக்கொள்வதால் வருகிற குழப்பங்கள் இவை. உங்கள் அடையாளங்கள் பல அடுக்குகளில் இருப்பதால், உங்கள் குழப்பங்களும் பல அடுக்குகளில் இருக்கின்றன.அப்படியிருந்தால் உங்கள் மனம் எந்த உயரத்தையும் நோக்கி எழாது.
:-
நீங்கள் பிறந்த நாளிலிருந்தே குடும்பத்தோடு உங்கள் அடையாளத்தைத் தீவிரப்படுத்த, உங்கள் பெற்றோர் கடும்முயற்சி மேற்கொள்கின்றனர். உங்கள் சமூகத்துக்கும், ஜாதிக்கும், மதத்துக்குமான உங்கள் விசுவாசத்தை அதிகரிக்க இன்னும் சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். தேசத்துக்காக நீங்கள் உயிரையே தரவேண்டுமென்றும்பிரசாரங்கள் நிகழ்வதுண்டு.வெவ்வேறு நிலைகளால் வெவ்வேறு தன்மைகளுடன் உங்கள் அடையாளம் உறுதிப்பட வேண்டி எத்தனையோ பிரசாரங்கள் நிகழ்கின்றன. நீங்கள் சுதந்திரமான மனிதராக இருப்பதை யாரும் விரும்புவதில்லை. சுதந்திரம் கிடைத்தால் நீங்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறார்கள். உண்மையில், ஒருவருக்கு மனதளவில் சுதந்திரம் இல்லாதபோதுதான், ஏதேனும் ஒன்றோடு ஆழமாக அடையாளப்படுத்திக் கொள்கிறபோதுதான், அவரால் இன்னொருவருக்குத் தீமை செய்ய முடியும். உங்களுடனேஉங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளாதபோது யாருக்கும் நீங்கள் தீமை விளைவிக்க முடியாது.
:-
இந்தப் பிரசாரங்களோடு உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்வதால், உங்கள் தன்மையே சிதைகிறது. உங்களை நம்பச் செய்வதற்காக எந்தப் பிரசாரத்தையும் செய்யத் தயாராகிறீர்கள். ஒன்றை நீங்கள் வணங்கவும் மற்றொன்றை வெறுக்கவும் என உங்களைத் தக்க வைத்துக்கொள்ள எந்த அளவுக்கும் போகத் துணிகிறீர்கள். அப்படியிருந்தால் மனம் ஒழுங்குப்பட்ட வித்தைக் கூடமாய் இராது. குழப்பமாகத்தான் இருக்கும்.
:-
இப்போது ஈஷா யோகாவில் உள்நிலை பொறியியல் என்று நாங்கள் வழங்குவது, ஒரு போதனையோ, தத்துவமோ, கொள்கையோ, நம்பிக்கையோ, மதமோ அல்ல. அடிப்படையில் உங்களுக்கும் உங்கள் உடலுக்கும், உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் நடுவில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துவதுதான் அதன் நோக்கம். இந்த இடைவெளி ஏற்பட்டுவிட்டால் உங்கள் மனதில் குழப்பம் இருப்பதில்லை. மகத்தான ஒருங்கிணைப்பு நிகழ்கிறது.
:-
இந்த இடைவெளியை துறவுநிலை என்று பலரும் தவறாகக் கருதுவது துரதிர்ஷ்டவசமானது. அனுபவ நிலையில் உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் இடைவெளி ஏற்படுமே தவிர, உங்கள் குடும்பத்திலிருந்தோ, உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் இருந்தோ நீங்கள் விலக மாட்டீர்கள். உடல் என்று நீங்கள் அழைப்பதிலிருந்தும், மனம் என்று நீங்கள் அழைப்பதிலிருந்தும் உங்கள் பிணைப்பை விடுவிக்கிறீர்கள். ஏனெனில் இவையிரண்டுமே வெளியிலிருந்து நீங்கள் சேகரித்தவை.
:-
காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளும் திரும்பத் திரும்பச் சாப்பிட்டதால் உங்களுக்குக் கிடைத்தது இந்த உடம்பு. ஐம்புலன்கள் மூலமாக நீங்கள் சேகரித்த அவ்விஷயங்கள்தான் உங்கள் உணர்வுகள். ஆனால் நான் என்று எதனை அழைக்கிறீர்களோ, அது நீங்கள் சேகரித்த விஷயங்களைக் கடந்ததாக இருக்க வேண்டும். இந்த வித்தியாசம் உங்களுக்குள்எழுந்தால்தான், உங்கள் மனதை அதன் அடையாளங்களிலிருந்து அகற்றினால்தான், மனம் ஓர் அற்புதம் என்பது விளங்கும்.
ஏனெனில் மனம் என்பது குழப்பங்களின் கூடாரம் இல்லை… அது ஒழுங்குபடுத்தப்பட்ட வித்தைக் கூடம்!
:-
நன்றி tamilblog.ishafoundation.org

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக