புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_m10ஆற்றாது அழுத கண்ணீர்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆற்றாது அழுத கண்ணீர்!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 27, 2012 10:16 am



"விவசாயிகள் தற்கொலை'யில் முன்னணியில் உள்ளவை மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்கள்தான். இந்த மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட காலகட்டத்தில்கூட, தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் குறைவாகவே இருந்தன.

அண்மைக்காலமாக தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலைச் சம்பவங்கள் தொடங்கியுள்ளன. பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின்றன. "சம்பா பொய்த்ததால் தற்கொலை' என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் வாரத்திற்கு இரண்டு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

காவிரி நீர் கிடைக்காத காரணத்தால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும், கடைமடைப் பகுதியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுகின்றன என்பதும் உண்மை. இருப்பினும், தமிழக அரசு டெல்டா விவசாயத்துக்காக ரூ.70 கோடியில் திட்டம் அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்த பிறகும், "வேளாண்மை பொய்த்ததால் விவசாயி தற்கொலை' என்ற செய்திகள் சற்று கூடுதலாகியுள்ளன.

தற்கொலை செய்துகொள்ளும் விவசாயி, ""விவசாயம் பொய்த்ததால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன்'' என்று எழுதிவைத்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்று சொன்னால் அதைவிடக் கேவலம், இரக்கமற்ற தன்மை வேறு எதுவுமே இருக்க முடியாது. இருந்தாலும், ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டபோது அவரது குடும்பத்தின் சூழல், பயிரிட்ட பரப்பு, தற்போதைய பாதிப்பு, வாங்கிய கடன், வருவாய்க்கான வேறு ஆதாரங்கள், அன்றைய தேதியில் அவரது வங்கிக் கணக்கின் இருப்பு அனைத்தையும் கருத்தில்கொண்டுதான், ஒரு தற்கொலையின் பின்னணியை வகைப்படுத்த முடியும்.

இந்தத் தற்கொலைகளின் காரணம் வேளாண்கடன்தான் என்பதை உறுதிப்படுத்த வேண்டியவர்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களும், வேளாண்மை அலுவலர்களும்தான். அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் சார்புடைய விவசாய சங்கத் தலைவர்களோ அல்ல.

இவை, விவசாயம் பொய்த்ததால் நேரிட்ட தற்கொலைதான் என்பதை முறையாகப் பதிவு செய்து, அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கக் கோருவதும், விரைந்து இழப்பீடு கிடைக்கச் செய்வதுமே தற்போது எதிர்க்கட்சிகளும் விவசாய அமைப்புகளும் செய்ய வேண்டிய கடமை. வெறுமனே அறிக்கைவிட்டு ஒதுங்கிக்கொள்வது அல்ல.

"நெற்பயிர் காய்ந்ததால் மாடுகளை மேயவிட்டார்' என்று பத்திரிகைகளுக்குச் செய்தி தருவது பரபரப்பைத் தரலாம். ஆனால், அந்த விவசாயி அந்த இடத்தில் சம்பா சாகுபடிதான் செய்திருக்கிறார் என்பதை நிரூபிக்க அது உதவாது. இதற்கு தொடர்புடைய அதிகாரிகளை அங்கே நேரில் வந்து ஆய்வு நடத்த வைப்பதுதான் விவசாய அமைப்புகளின் கடமையாக இருக்க முடியும்.

சம்பா சாகுபடி பொய்த்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. பயிர்க் காப்பீடு திட்டத்தின் சந்தாவை அரசே செலுத்தும் என்றும், இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.8,692 இழப்பீடும், அத்துடன் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5,000-ம் சேர்த்து மொத்தம் ரூ.13,692 விவசாயிக்கு இழப்பீடாகக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இழப்பீடு குறைவு என்பது வேண்டுமானால் நியாயமான வாதமாக இருக்கலாம். ஆனால், அதைவிட முக்கியம் இந்த இழப்பீடு உரிய விவசாயிக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதாகத்தான் இருக்க முடியும். யார் உண்மையான விவசாயி, யார் குத்தகைக்குப் பயிரிட்டு நட்டப்பட்டவர் என்பதை விசாரிக்காமல் "சிட்டா' பதிவின்படி இழப்பீடு கொடுத்தால், யாரோ சிலர் பயன் அடைவார்கள். உண்மையான விவசாயி பயன்பெற மாட்டார். உண்மையான விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கச் செய்வதில்தான் இன்றைய விவசாய அமைப்புகளின் பங்கு மிக முக்கியமானது.

விவசாயிகளின் தற்கொலைகள் அச்சம் தரும் எண்ணிக்கையைத் தொடவில்லை என்று தமிழக அரசு மெத்தனமாக இருப்பது கூடாது. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பு, அவற்றில் தண்ணீர் கிடைக்காமல் வேளாண்மை பாதித்த பகுதி, நெற்பயிர்கள் வாடிய பரப்பு அனைத்தையும் இப்போதே கணக்கிடவும், அந்தப் பயிரைச் சாகுபடி செய்த உண்மையான விவசாயி யார் என்பதையும், அவர் யாரிடம் கடனுதவி பெற்றார் என்ற விவரங்களையும் சேகரிக்க வேண்டியது அவசியம். இத்தகைய நடவடிக்கைகள், அரசின் இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையை விவசாயிகளிடம் ஏற்படுத்தும். அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்கு ஆளாக மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் "விவசாயிகள் தற்கொலை'யே இல்லை என்று சொல்வதைக் காட்டிலும், விவசாயிகளின் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு கிடைக்கும்; அச்சம் தேவையில்லை என்று உறுதிசெய்வதுதான் தமிழக அரசின் முதல் கடமை!

எல்லா விவசாயிகளும் வங்கியில்தான் கடன் பெற்றிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. வங்கியில் கடன்பெற்ற விவசாயிகளை வங்கி அதிகாரிகள் மிரட்ட மாட்டார்கள். உண்மையில் மிகவும் பாதிக்கப்படும் விவசாயிகள் தனியார் கொள்முதல் வியாபாரிகளிடமும், உர வியாபாரிகளிடமும் சிக்கியவர்கள்தான். அரசு தரக்கூடிய இழப்பீட்டுத் தொகையை விவசாயிகள் இந்த வியாபாரிகளிடம் கொட்டியழும் துர்பாக்கிய நிலைமை தற்கொலையைவிட துயரமானது. அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

காவிரி நீரால் தமிழகம் எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதைத்தான் இந்தத் தற்கொலைகள் வெளிச்சம் போட்டுகாட்டுகின்றன. ஒவ்வொரு விவசாயியின் மரணத்திற்கும், கர்நாடக அரசியல்வாதிகளும், வாளாவிருக்கும் மத்திய அரசும்தான் பதில் சொல்ல வேண்டும். இத்தனைக்குப் பிறகும் தமிழகத்தின் நியாயமான கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு, விவசாயம் பாதிக்கப்படுமானால், விவசாயிகளின் தற்கொலை தொடருமானால், அதன் விளைவுகள் தேசத்தின் ஒற்றுமையையேகூட வருங்காலத்தில் பாதிக்கக்கூடும். இதை ஏன் மத்திய அரசு உணர மறுக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

தினமணி


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 27, 2012 9:40 pm

தற்கொலை செய்துகொள்ளும் விவசாயி, ""விவசாயம் பொய்த்ததால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன்'' என்று எழுதிவைத்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்று சொன்னால் அதைவிடக் கேவலம், இரக்கமற்ற தன்மை வேறு எதுவுமே இருக்க முடியாது.

சோகம் என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை



ஆற்றாது அழுத கண்ணீர்! 224747944

ஆற்றாது அழுத கண்ணீர்! Rஆற்றாது அழுத கண்ணீர்! Aஆற்றாது அழுத கண்ணீர்! Emptyஆற்றாது அழுத கண்ணீர்! Rஆற்றாது அழுத கண்ணீர்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 27, 2012 9:58 pm

அழுகை அழுகை அழுகை

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Dec 27, 2012 11:20 pm

ரா.ரா3275 wrote:
தற்கொலை செய்துகொள்ளும் விவசாயி, ""விவசாயம் பொய்த்ததால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன்'' என்று எழுதிவைத்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்று சொன்னால் அதைவிடக் கேவலம், இரக்கமற்ற தன்மை வேறு எதுவுமே இருக்க முடியாது.

சோகம் என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை
கொடுமை மிகக்கொடுமை.



நேர்மையே பலம்
ஆற்றாது அழுத கண்ணீர்! 5no
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Dec 27, 2012 11:34 pm

அகிலன் wrote:
ரா.ரா3275 wrote:
தற்கொலை செய்துகொள்ளும் விவசாயி, ""விவசாயம் பொய்த்ததால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன்'' என்று எழுதிவைத்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்று சொன்னால் அதைவிடக் கேவலம், இரக்கமற்ற தன்மை வேறு எதுவுமே இருக்க முடியாது.

சோகம் என்ன கொடுமை சார் இது அநியாயம் அழுகை
கொடுமை மிகக்கொடுமை.

ஆமோதித்தல்



ஆற்றாது அழுத கண்ணீர்! 224747944

ஆற்றாது அழுத கண்ணீர்! Rஆற்றாது அழுத கண்ணீர்! Aஆற்றாது அழுத கண்ணீர்! Emptyஆற்றாது அழுத கண்ணீர்! Rஆற்றாது அழுத கண்ணீர்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக