புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
68 Posts - 53%
heezulia
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
1 Post - 1%
Shivanya
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
15 Posts - 3%
prajai
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
9 Posts - 2%
jairam
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
4 Posts - 1%
Rutu
மாமனோட மனசு Poll_c10மாமனோட மனசு Poll_m10மாமனோட மனசு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமனோட மனசு


   
   
mukildina@gmail.com
mukildina@gmail.com
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 24/11/2010

Postmukildina@gmail.com Tue Feb 26, 2013 4:53 pm

மாமனோட மனசு
(சிறுகதை)

எது நடக்கக் கூடாது என்று ஆனந்த் நினைத்திருந்தானோ…அது நடந்தே விட்டது. 'போச்சு….என் வாழ்க்கையே போச்சு…இப்படியெல்லாம் ஏடாகூடமா ஏதாச்சும் நடந்துடும்னுதான்…மூணு வருஷமா இந்தக் கிராமத்துப் பக்கமே வராம இருந்தேன்…இந்த அம்மாதான்…'பாட்டி ரொம்ப சீரியஸா இருக்குடா…உன் பேரைத்தான் ஈனஸ்வரத்துல கூட முனகிக்கிட்டிருக்கு….அநேகமா அந்த உசுரு உன்னைப் பார்க்கறதுக்காகத்தான் காத்திட்டிருக்குன்னு நினைக்கறேன்…அதனால உடனே புறப்பட்டு வந்து…உன் பாட்டியோட முகத்தை கடைசியா பார்த்துக்கடா…” என்று போனில் அழாக்குறையாகக் கெஞ்சி, என்னைய வரவழைச்சு…இப்படியொரு இக்கட்டுல மாட்டி விட்டுடுச்சு”

விஷயம் வேறொன்றுமில்லை,

அம்மாவின் கெஞ்சலுக்கு மதிப்புக் குடுத்து சென்னையில் ரயிலேறிய ஆனந்த் மறுநாள் காலை தன் கிராமத்தை அடைந்த போது, பாட்டி கடைசி மூச்சில் காத்துக் கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும் கை நீட்டி அழைத்தாள். அருகில் வந்தவனின் கையைப் பற்றி, தலை மாட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த தன் மகன் வயிற்றுப் பேத்தியான அருக்காணியின் கையுடன் இணைத்து விட்டு தலை தொங்கிப் போனாள்.

அந்த நொடியில் மொத்தக் கூட்டமும் 'ஹோ” வென்று கத்தி அழுதது.

ஆனந்தின் மனம் அதைக் காட்டிலும் பெரிய குரலில் ஓங்கியழுதது. 'அய்யய்யோ…இந்தப் பட்டிக்காட்டுச் சனியன் பெரிய மாமன் வீரய்யாவின் மூத்த பொண்ணாச்சே…அவனொரு மொரட்டு முட்டாளாச்சே…'என்னைப் பெத்தவளோட கடைசி ஆசையை நிறைவேத்தாமல் விட மாட்டேன்னு மார்தட்டி ஆடுவானே…அவனுக்கு சப்போர்ட்டா ஏகப்பட்ட சொந்தக்காரங்க நிற்பாங்களே..இந்தப் பிரச்சினை பெரிசாகும் போது வெட்டுக் குத்து கூட நடக்க வாய்ப்பிருக்கே…”

சவமாய்க் கிடக்கும் பாட்டியின் முகத்தைக் கடுங் கோபத்தோடு பார்த்தான் ஆனந்த், அந்த முகத்தில் ஒரு சிரிப்பு பாதியில் உறைந்து போய்க் கிடந்தது. 'செய்யறதையும் செஞ்சிட்டு…சிரிச்சுக்கிட்டே செத்துக் கிடக்கறதைப் பாரு”

பார்வையை மெல்ல அந்த அருக்காணியின் பக்கம் திருப்பினான். அது அசிங்கமாய் வெட்கப்பட்டு…அலங்கோலமாய் நெளிந்து…அவலட்சணமாய்ச் சிரித்தது.

'அய்யோ…காப்பாத்துங்க” என்று உள்ளுக்குள் கூக்குரலிட்டபடி, வெளியே ஓடி வந்தான்.

”என்ன செய்யறது….எப்படி இந்தக் கிராமத்தானுக கிட்டயிருந்து தப்பிக்கறது?” தீவிர யோசனையுடன் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.

ஒரு புறம் சவத்தை எடுப்பதற்கும், சடங்குகள் செய்வதற்குமான ஏற்பாடுகள் நடந்து கொண்டேயிருக்க, மறுபுறம் உள்ளுர்க் கிழவிகளும்…உறவுக்காரப் பெண்மணிகளுமாய்ச் சேர்ந்து ஒப்பாரியில் உச்சம் தொட்டுக் கொண்டிருந்தனர்.

'அள்ளிக் கொடுத்திடவா …ஆத்தா ஆலாய்ப் பறந்து வந்தேன்…
வாரிக் கொடுத்திடவா…….ஆத்தா வண்டாய்ப் பறந்து வந்தேன்…
கத்தரிக்காய் விற்ற இடத்தில்….ஆத்தா கடலூரான் சொன்னானே….
வெண்டைக்காய் விற்ற இடத்தில்….ஆத்தா வேலூரான் சொன்னானே…
பூசணிக்காய் விற்ற இடத்தில்…ஆத்தா புத்தூரான் சொன்னானே…
அருவிப்புலத்தில்….ஆத்தா ஆளோசை கேட்டு வந்தேன்…
குருவிப்புலத்தில்….ஆத்தா குரலோசை கேட்டு வந்தேன்…”

அந்த ஒப்பாரி கோரஸில் அம்மாவின் குரலும் கேட்க. பற்களை ‘நற…நற‘ வென்று கடித்தான் ஆனந்த். 'ஹும்…எல்லாம் இந்த அம்மாவால் வந்தது”

சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லோரும் அவரவர் வேலையில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தனர். 'யாரும் கவனிக்காத நேரம் பார்த்து நைஸா ஓடிடுவோமா?” யோசித்தான்.

அப்போது,

சற்றுத் தொலைவில் நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்த பெரிய மாமன் வீரய்யா ஆனந்தைப் பார்த்துப் புன்னகைக்க,

'அடக் கடவுளே…இந்த ஆளு இங்க நின்னுட்டிருக்கானே….எப்படி ஓடுறது?”

அந்த வீரய்யா தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவனிடம் ஆனந்தைக் காட்டி எதுவோ சொல்ல, அந்த மனிதனும் இவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.

'என்ன சொல்லியிருப்பான்?...'அதுதான் என் மாப்பிள்ளை….என்னைப் பெத்தவ போற போக்குல சொல்லிட்டுப் போயிருக்கா!”ன்னு பெருமையாச் சொல்லியிருப்பான்…எல்லாம் விதி…சென்னைல ஒரு பெரிய ஐ.டி.கம்பெனில சீனியர் ஸாப்ட்வேர் என்ஜினீயரா வொர்க் பண்ற எனக்கு அந்தப் பட்டிக்காட்டு அருக்காணி மனைவியா?...ஓ…காட்…ப்ளீஸ்…ஸேவ் மீ”

அந்த வீரய்யாவின் மனைவி….ராமாயணத் தாடகையின் ஜெராக்ஸ் காபி போலிருந்தவள் ஆனந்தின் அருகில் வந்து, ' தம்பீ…காப்பித் தண்ணி கீது குடிக்கறியா சாமீ?” என்று தணிவான குரலில் கேட்க,

இட, வலமாய்த் தலையாட்டினான்.

'அப்ப…சருவத்து?'

'என்ன?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டான் ஆனந்த்.

'சர்பத்து…சர்பத்;'

'ப்ச்…எதுவம் வேணாம்” என்றான் இறுகிய முகத்துடன்.

'சரி..சாமி” அவள் நகர, மௌனமாய்த் தலையிலடித்துக் கொண்டான் ஆனந்த். 'இவள் என் மாமியாரா?...கொடுமை…கொடுமை”

மாலை ஆறு மணிவாக்கில் பாட்டியின் சவ அடக்கம் முடிந்த பின் ஓரளவிற்கு கூட்டம் குறைந்திருந்தது. 'அம்மாவைப் பார்த்து ஒரு டாட்டா சொல்லிவிட்டு அப்படியே எஸ்கேப் ஆகி விட வேண்டியதுதான்” என்று காத்திருந்த ஆனந்தின் எண்ணத்தைக் குலைப்பது போல் அவனருகில் வந்து நின்ற அந்த வீரய்யா, 'தம்பி…கொஞ்சம் அப்படி வர்றியா…உன் கூடப் பேசணும்” என்றார்.

வெளிறிப் போன முகத்துடன் அவரைத் தொடர்ந்த ஆனந்தின் நினைவில் அவனது ஸாப்ட்வேர் கம்பெனியும் …அதில் பணிபுரியும் சுரிதார் சுந்தரிகளும் வந்து போக…அழுகை பொங்கியது.

'அவ்வளவுதான் இனி எந்தக் கடவுளாலும் என்னைக் காப்பாத்த முடியாது…” மொத்தமாய் நம்பிக்கை இழந்து போயிருந்தான்.

ஒரு ஓட்டு வீட்டின் முன்னால் நின்று, அங்கிருந்த திண்ணையைத் தன் தோள் துண்டினால் தட்டி விட்டு, 'உட்காருங்க தம்பி” என்றார் அந்த வீரய்யா.

உட்கார்ந்தான்.

நிதானமாய் அவனருகில் அமர்ந்தவர், 'தம்பீ…என்னைப் பெத்தவ தன்னோட ஜீவன் பிரியற அந்த கடைசி நேரத்துல செஞ்சிட்டுப் போன அந்தக் காரியத்தை நினைச்சா…எனக்கு மனசுக்கு ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கு தம்பீ”

'இருக்காதா பின்னே?...அருக்காணிக்கு அடிச்ச யோகம் ஐ.டி.பீல்டாச்சே?” உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்.

'ஆனா…எங்காத்தா….அந்தக் காலத்து மனுசி தம்பி..அவளுக்கு நடப்புக்கால நடைமுறைகள் அவ்வளவாத் தெரியாது…பழைய பஞ்சாங்கம்!...அதனாலதான் பழைய கால நினைப்புலேயே…மகள் வயித்துப் பேரனோட கையையும்….மகன் வயித்துப் பேத்தியோ கையையும்…சேர்த்து வெச்சிட்டுச் செத்துப் போயிட்டா….!...ஆனா…நாம அதுக்கெல்லாம் பெரிய முக்கியத்துவம் குடுக்க வேண்டிய அவசியமில்லை தம்பி…ஏன்னா…நீங்க பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு டவுன்ல…அதென்ன?...கம்பியோட்டறதா?...”

'கம்ப்யூட்டர்…ங்க!”

”ஆமா…ஆமா…அதேதான்!…அதுல வெலை பார்க்கறீங்க…ஆனா எம்பொண்ணு அருக்காணி இங்க…அழுக்குத் தாவணியோடவும்….ஆட்டாம்புழுக்கையோடவும்…கிடக்குற மவராசி…..உங்க ரெண்டு பேரையும்…நெனப்புல கூடச் சேர்த்துப் பார்க்க முடியாது…சேர்த்துப் பார்க்கவும் கூடாது…”

ஆனந்தைச் சுற்றி பட்டாம்பூச்சிகள் மெலடி பாடி வட்டமிட்டன.

'அதனால…அந்த நிகழ்ச்சியை நீங்க மறந்திடுங்க தம்பி…நாங்களும் மறந்திடறோம்…மத்த உறவுக்காரங்களுக்கும் நானே நைச்சியமாச் சொல்லிடறேன்…என்ன நான் சொல்றது சரிதானே தம்பி?”

தன் அரிவாளோடுதான் இப்பிரச்சினையை கையாளுவார் பெரிய மாமா என்று எதிர்பார்த்திருந்த ஆனந்த். தன் அறிவாற்றலோடு அவர் கையாண்ட விதத்தில் மயங்கி அவர் காலைத் தொட்டு வணங்கி நிமிர்ந்தான்.

இதுவரை ஒரு கிராமத்தானாகவும்…காட்டானாகவும்…மொரட்டு முட்டாளாகவும் தெரிந்த அந்தப் பெரிய மாமன் வீரய்யா ஆனந்தின் கண்களுக்கு இப்போது ஒரு ஞானியாக…மகானாக…தெரிய ஆரம்பித்தார்.
---------------------------------------------------------------------
முகில் தினகரன்
கொயமுத்தூர்
9894125211



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 26, 2013 4:57 pm

நல்ல கதை முகில். வாழ்த்துகள் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



மாமனோட மனசு Uமாமனோட மனசு Dமாமனோட மனசு Aமாமனோட மனசு Yமாமனோட மனசு Aமாமனோட மனசு Sமாமனோட மனசு Uமாமனோட மனசு Dமாமனோட மனசு Hமாமனோட மனசு A
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 4:57 pm

அருமையான கதை, நடைமுறையிலும் நிறைய இம்மாதிரி நல்ல மனிதர்கள் உண்டு, படித்தவர்கள் தான் நிறைய தவறு செய்கின்றனர். மனதை தொட்ட கதை பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்




அன்புடன்
சின்னவன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Feb 26, 2013 5:21 pm

வழக்கு மொழியில் கதை மிக அற்புதம்.

ஆனால் தொலைபேசி எண்ணை எதற்க்காக குறிபிட்டிருக்கிறீர்கள் ........?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக