புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
68 Posts - 53%
heezulia
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
1 Post - 1%
Guna.D
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
1 Post - 1%
Shivanya
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
15 Posts - 3%
prajai
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
9 Posts - 2%
Guna.D
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
4 Posts - 1%
Jenila
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
4 Posts - 1%
jairam
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
புடிச்சா படிங்க Poll_c10புடிச்சா படிங்க Poll_m10புடிச்சா படிங்க Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புடிச்சா படிங்க


   
   
babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Tue Oct 20, 2009 2:43 am

புடிச்சா படிங்க Bullet2இதுவரை சொல்லாதாது! -இந்த வாரம் சசிகுமார்
புடிச்சா படிங்க Bullet%20Purple1கொலுசுச் சத்தம்... மல்லிப்பூ... வெள்ளைப் பறவை... கலகல சிரிப்பு!
புடிச்சா படிங்க White_spacer

ருள், ஈரம் இரண்டும் விலகாத அதிகாலை மெரினா. ''சார்... நீங்கதான் இப்பப் பின்றீங்க. சூப்பர் சார்!'' என்று பைக்கை நிறுத்தி ஒருவர் கை கொடுத்துச் செல்ல, ''இப்படித்தாங்க பயமுறுத்துறாங்க!'' எனச் சிரிக்கிறார் சசிகுமார். அலைத் தடம் நோக்கி நடப்பவர், தான் கடந்து வந்த தடம் பற்றி பகிர்ந்துகொண்டது இங்கே...
புடிச்சா படிங்க P105aமறக்க முடியாத நாள்: ''ஜூலை 4, 2008. ஏழாவது படிக்கும்போது ஸ்கூல்ல, 'என்னடா ஆகப்போறே?'ன்னு டீச்சர் கேட்டதுக்கு, 'டைரக்டராகணும்'னு சொன்னேன். அந்தக் கனவு நிறைவேறிய நாள். 'சுப்ரமணியபுரம்' ரிலீஸ் ஆன நாள். ஒவ்வொரு மனுஷனும் ரெண்டு தடவை பிறக்கிறான். ஒண்ணு அம்மா வயித்துல இருந்து சிசுவா வெளிவரும்போது. அடுத்து அவன் வாழ்க்கைக் கனவு நிறைவேறும்போது. உலகத்துலயே உச்சபட்ச வலி பிரசவம்தான். அதிகபட்ச சந்தோஷமும் அதுதான். அப்படி வாழ்க்கையில ஒவ்வொருத்தரும் அம்மாவாகிற தருணங்கள் வரும். 'சுப்ரமணியபுரம்' ரிலீஸ் ஆன நாள் எனக்கு அப்படியான தருணம். பப்ளிசிட்டி ஆரம்பிச்சு, டிஸ்ட்ரிபியூஷன் வரை பார்த்து, பெட்டி போய் 'வெற்றி'ன்னு செய்தி வர்ற வரைக்கும் அந்த நாளின் தவிப்பும் தடதடப்பும் இருக்கே... மறக்கவே முடியாது சார்!''
நன்நம்பிக்கை முனை: '' 'சுப்ரமணியபுரம்' படத்தின் ஒரே ஒரு பாட்டை மட்டும் பார்த்துட்டு, 'நீ பெரிய டைரக்டர்டா. அடுத்து எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடு'ன்னு என் மேல் நம்பிக்கைவெச்சு ஒரு பெரிய தொகைக்கு செக் நீட்டினார் விக்ரம். அதுதான் என் கண்ணுக்குத் தெரிஞ்ச முதல் வெளிச்சம். அந்த நம்பிக்கையை மறக்க முடியாது!''







google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);
மிகச் சிறந்த நண்பன்: '' 'சம்போ சிவ சம்போ' பாட்டுல வர்ற 'நட்பே ஜெயிக்கட்டும்'கிற வார்த்தைதான் என் வாழ்க்கை. நடந்து வர்ற பாதைஎல்லாம் நண்பர்கள். ஒவ்வொரு படியிலும் பரஸ்பரம் கை தூக்கிவிட்டது நட்புதான். பள்ளிக்கூடம், காலேஜ், சினிமான்னு அந்த நண்பர்களைப் பட்டியலிட்டா நீங்க எனக்கு மட்டுமே தனியா 'நட்பு விகடன்'னு ஒரு சப்ளிமென்ட் போடணும். 'மிகச் சிறந்த நண்பன்'னு யாரும் கிடையாது. 'நண்பன்'னாலே மிகச் சிறந்தவன்னுதான் அர்த்தம்!''
அடிக்கடி வரும் கனவு: ''ஐயோ... அது டெரர் காமெடிங்க. கொலுசுச் சத்தம், மல்லிப்பூ, வெள்ளைப் புடவை, கலகல சிரிப்புன்னு 'நானே வருவேன்'ல ஆரம்பிச்சு 'சந்திரமுகி' வரைக்கும் நடமாடுமே ஒரு மோகினி. அதுதான் அடிக்கடி என் கனவுல வரும். ரொம்ப அழகாவும் இருக்கும். பக்கத்துல போனா பட்டுனு மறைஞ்சுரும். சடார்னு எழுந்து ஏ.சி-யை ரெண்டு பாயின்ட் ஜாஸ்திவெச்சுட்டுத் தூங்கிருவேன். அந்தக் கனவுக்கு என்ன பலன்னு எனக்குத் தெரியலை. ஆனா, பயம் மட்டும் நிறைய இருக்கு!''
புடிச்சா படிங்க P105bபிடித்த தத்துவம்: '' 'கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பணி தானாக வரும்!'னு அமீர் அண்ணன் ஆபீஸ்ல இந்த வரிகளை எழுதிப் போட்டிருக்கார். வாழ்க்கையோட கடைசி நொடி வரை இந்த வரிகளை ஃபாலோ பண்ணணும்கிறது என் ஆசை. என் அசிஸ்டென்ட்டுகளுக்கு நான் சொல்றதும் இதைத்தான்!''
10 வருடங்கள் கழித்து... ''எங்க ஊர் புதுத்தாமரைப்பட்டியில விவசாயம் பார்த்துட்டு இருப்பேன். அப்படி ஓர் அமைதியான, அழகான வாழ்க்கைதான் எப்பவும் என் ஆசை. ஆளுக்கொரு திசையில பிழைக்க வந்துட்டோம். வயல் வரப்பை எல்லாம் ப்ளாட் போட்டு 'அன்னலட்சுமி நகர்'னு பேர்வெச்சு வித்துட்டு இருக்கோம். விவசாயம் போயிட்டா, அன்னமும் கிடையாது... லட்சுமியும் கிடையாது. நஞ்சையிலும் புஞ்சையிலும் ப்ளாட் போட்டு விக்கிறோம். இயற்கை விவசாயத்தோட அருமை இன்னும் கொஞ்ச நாள்ல நமக்குப் புரிஞ்சுடும். அந்த உண்மை சுடும். அப்போ எங்க ஊர்ல நானும், உங்க ஊர்ல நீங்களும் விவசாயம் பார்க்கப் போயிரலாம்!''

கடைசியாக அழுதது: ''என் அக்கா கணவர் சிவக்குமார் இறந்தப்போ! மச்சான் மட்டும்இல்லை அவர்... எனக்கு நண்பனாகவும் இருந்தார். 'குடும்பத்தைப்பத்திக் கவலைப்படாம உன் சினிமாவைப் பாருடா. நான் பார்த்துக்கிறேன்... நீ பெருசா வருவே!'ன்னு அவர் தந்த உற்சாகம் பெருசு. திடுதிப்புனு ஒருநாள் அவருக்கு கேன்சர்னு தெரிஞ்சது. 'வீட்ல யாருக்கும் தெரிய வேணாம். கஷ்டப்படுவாங்க'ன்னு சத்தியம் வாங்கிட்டார். எவ்வளவோ போராடியும் காப்பாத்த முடியாம 'சுப்ரமணியபுரம்' ஷூட்டிங் சமயத்துல இறந்துட்டார். அன்னிக்கு மாதிரி நான் அழுததே இல்லை. இப்போ இந்த வெற்றிகளைப் பார்க்க அவர் இல்லாத பாரத்தை எப்பவும் என்னால இறக்கிவைக்க முடியாது!''
ரசிக்கும் எதிரி: ''ராம்கோபால் வர்மா. கலர்ஃபுல், பவர்ஃபுல்னு நீங்க ரைமிங்கா எழுதுவீங்களே... அதுக்கு அந்த ஆள்தான் சரி. 'ரங்கீலா' ரகளை, 'உதயம்' உறுமல், 'கம்பெனி' கலவரம், 'சர்க்கார்' கம்பீரம்னு அவர் ஆச்சர்யமான கிரியேட்டர். வெற்றிகளுக்குச் சமமா தோல்விகளைப் பார்த்த பிறகும் அவர் பின்னாடி பணத்தைத் தூக்கிட்டு பாலிவுட் அலையுதே... அங்கேதான் நிக்கிறான் கிரியேட்டர்!''
மறக்க முடியாத திட்டு : ''அமீர் அண்ணன்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தப்ப வாங்கின திட்டுகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. அதைஎல்லாம் எழுத முடியாது. சென்ஸார் கட்ல போயிரும். ஆனா, அதெல்லாம்தான் என்னை வளர்த்தெடுத்து உருவாக்கியது. அந்த அக்கறை தகப்பன்களுக்கானது!''
பிடித்த டீச்சர்: ''அகஸ்தா. கொடைக்கானல் 'செயின்ட் பீட்டர்ஸ்' ஸ்கூல்ல என் டீச்சர். பரீட்சையில மார்க் குறைஞ்சா ஸ்டூடன்ட்தானே அடி வாங்கி அழுவான். எங்க அகஸ்தா டீச்சர் பேப்பர் கொடுத்துட்டு அவங்க அழுவாங்க. 'இப்படி மார்க் வாங்கினா, நான் உங்களுக்குச் சரியாச் சொல்லிக் கொடுக்கலைன்னுதானே எல்லோரும் பேசுவாங்க'ன்னு அழுவாங்க. அவங்க அழக் கூடாதுன்னே நாங்க அக்கறையாப் படிப்போம். அப்படி அபூர்வமான அன்பு. அப்புறம் சாந்தா டீச்சர்... என் தமிழ் குரு. என் தமிழ்த்தாய் வாழ்த்து எப்பவும் அவங்களுக்குத்தான். பெரிய ஆளாவதைவிட இவங்க முன்னாடி சின்னப் பையனா நிக்கிறதுதான் சந்தோஷம். என் டீச்சர்களைப் பார்க்கணும் போல இருக்கு... எங்கே இருந்தாலும் ஒரு போன் பண்ணுங்க டீச்சர்!''
புடிச்சா படிங்க P106a
சொல்லாத ஐ லவ் யூ : ''அதே செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கூல்ல என் மேல் ஒரு பெண்ணுக்கு வந்தது காதல். நம்புங்க... நான் ரொம்பக் கூச்ச சுபாவி. அப்ப பொண்ணுங்கன்னாலே கொஞ்சம் பயம். ஃப்ரீக்கான பசங்களுக்கு நடுவே நாம 'டவுசர் பாண்டி'தான். ஆனா, உள்ளுக்குள்ளே ஃபீலிங் இருக்கும். 'இதயம்' முரளி ஹீரோ மாதிரி பார்வையிலேயே கொஞ்ச நாள் நனைஞ்சோம். 'பாரன்'னு ஒரு இரானியப் படத்துல, கடைசி வரை பேசாமலேயே அந்தப் பொண்ணும் பையனும் பிரிஞ்சிடுவாங்க. அப்போ அந்தப் பெண்ணோட கால் தடத்துல மழை பெய்து நிறையறதோட படம் முடியும். அப்படி ஒரு காதல் அது. ஸ்கூல் கடைசி நாளில் 'ஐ லவ் யூ' சொல்லலாம்னு தவிச்சு... முடியாமல் பிரிஞ்சுட்டோம். இப்போ அந்தப் பொண்ணு எங்கேயோ வெளிநாட்டில் இருக்கு. முடிஞ்சா ஒரு தடவை முகம் பார்க்கணும். மழை வரும் போகும். மனசுல அந்தக் கால் தடம் அழியாதுல்ல!''
புடிச்சா படிங்க White_spacer


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 2:54 am

நாம புடிக்காவிட்டாலும் படிப்போம்ல.. படிப்போம்..



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 20, 2009 3:14 am

" ஒவ்வொரு மனுஷனும் ரெண்டு தடவை பிறக்கிறான். ஒண்ணு அம்மா வயித்துல இருந்து சிசுவா வெளிவரும்போது. அடுத்து அவன் வாழ்க்கைக் கனவு நிறைவேறும்போது. உலகத்துலயே உச்சபட்ச வலி பிரசவம்தான். அதிகபட்ச சந்தோஷமும் அதுதான். அப்படி வாழ்க்கையில ஒவ்வொருத்தரும் அம்மாவாகிற தருணங்கள் வரும்."

'மிகச் சிறந்த நண்பன்'னு யாரும் கிடையாது. 'நண்பன்'னாலே மிகச் சிறந்தவன்னுதான் அர்த்தம்!''

பிடித்த தத்துவம்: '' 'கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பணி தானாக வரும்!'னு

என்னை கவர்ந்த வரிகள்....... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பாபுவிஜய்.



புடிச்சா படிங்க Eegaraitkmkhan
புடிச்சா படிங்க Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக