புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_c10ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_m10ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_c10ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_m10ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_c10ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_m10ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_c10ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_m10ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_c10ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_m10ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_c10ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_m10ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும்


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 18, 2013 5:10 pm



வணக்கம் !

லயோலா திரி ஏற்றி தொடங்கி வைத்து, இப்போது தமிழகம் முழுதும் காட்டுத்தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கும் மாணவர்களின் ஈழப் போராட்டத்தைப் பற்றின முன்னுரை எவருக்கும் தேவையில்லை. அதனால் நான் நேரடியாக விடயத்திற்கு வருகிறேன்.

தொலைகாட்சியின் வாயிலாக நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஈழப் போராட்டத்தைப் பற்றி சிலர் அறிந்திருப்பீர்கள். அந்தப்போரட்டத்தை ஆரம்பித்து ஒருங்கிணைத்தவன் என்ற முறையில் எனது அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.

வெள்ளிகிழமை (15/3/13) காலை 11 மணியளவில், அலுவலகம் கிளம்பும் முன்பாக சற்றென்று ஒரு விடயம் எனக்குப்பட்டது. ஞாயிறன்று மே - 17 இயக்கம் ,மற்றும் மாணவர் அமைப்பு மெரினா கடற்கரையில் நடத்தவிருக்கும் மிகப்பெரும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாகவும், தமிழகத்துள் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தை மற்ற மாநிலங்களிக்கும் பரப்பும் விதமாகவும் ஒரு விடயத்தை ஏன் செய்யகூடாது என்று எண்ணினேன்.

அதன் விளைவாகவே ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்தை நடத்தும் முடிவிற்கு வந்தேன். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை பற்றிய உணர்வலைகள் தமிழகம் தாண்டியும் இருக்கிறது என்பதை முன்வைக்கவும், மற்ற மாநிலங்களில் இருக்கும் தமிழர் அல்லாத மக்களுக்கு ஈழத்தில் நடந்த கொடுமைகளை விளக்கவும், மற்ற மாநிலங்களில் இருக்கும் தமிழர்களும் அவர்கள் இருக்கும் இடத்தில் போராடும்படி தூண்டி, போராட்டத்தை இந்தியா முழுதும் பரப்பவேண்டும் என்ற விடயங்களை முக்கியக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு, அலுவலகம் போகாமல் அன்று போராட்டத்திற்கு நண்பர்களைத் திரட்டும் வேலையில் இறங்கினேன்.

என்னோடு தங்கி இருக்கும் இரண்டு கல்லூரி நண்பர்களுடன் களத்தில் இறங்கினேன். மிகச் சில நண்பர்களே தெரிந்த ஹைதராபாத்தில், பெரும்திரளான தமிழர்களை அணிதிரட்ட, முதலில் நாங்கள் எடுத்துக்கொண்ட ஆயுதம் - முகநூள். அதன் வழியாக வெள்ளிக்கிழமை மதியம், ஞாயிற்றுக்கிழமை (17/3/13) நடத்தவிருக்கும் போராட்டத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டு நண்பர்களை கலந்து கொள்ளுமாறு அழைத்தோம். தொலைபேசி மூலம் பலர் ஆதரவு தெரிவிக்கவே,அடுத்த கட்டமாக எங்களுக்கு தெரிந்த நண்பர்களைத் தொலைபேசி மூலமாக அழைத்தோம். புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு கூறினோம். அவர்கள் தந்த ஆதரவும் ஒருங்கிணைப்பும் ஆச்சரியப்படும் படியாகவே இருந்தது.

ஒரே நாளில் திட்டமிட்டு அடுத்த நாளே போராட்டம் நடத்த வேண்டும் என்ற நெருக்கடியில், சனிக்கிழமை காலை முகநூள் பார்க்காத ஹைதராபாத் நண்பர்களை அணி சேர்க்கும் விதமாக, போராட்டத்தை பற்றிய சுவொட்டி தயாரித்து, அருகில் உள்ள தமிழ் உணவு விடுதிகளின் ஒட்டினோம். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஆந்திராவில் தமிழர் போராட்டத்திற்கு அனுமதி கிடைப்பது மிகவும் அரிது. இருந்தும், மாதாப்பூர் காவல் நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்து, ஹைடெக் சிட்டி அருகே போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம்.
எதிர்பார்த்தது போலவே அனுமதிக் கடிதத்தை தொட்டுக்கூட பார்க்காமல் அனுமதி மறுக்கப்பட்டது.

அனுமதி மறுக்கப்பட்டாலும் போராட்டத்தை நடத்தியாக வேண்டும் என்று அனுமதி கேட்பதற்கு முன்பே நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஒருநாளில் பேனர், தேவையான துண்டுப்பிரசுரங்கள் தயார் செய்வது சற்று கடினம். இருந்தும் அதைத் தயாரிக்கும் முயற்சியில் இறக்கினோம். போராட்டத்திற்கு புகைப்படங்களைச் சேகரித்தோம். மே - 17 இயக்கத்துடன் தொடர்புகொண்டு அவர்கள் தயாரித்து வைத்திருந்த சில பிரசுரங்களை மின்னஞ்சல் மூலம் பெற்றோம். அனுமதி மறுக்கப்பட்ட செய்தியை முகநூளில் பதிந்தோம். இருந்தும் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என்று அறிவித்தோம்.

தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட ஒரு நண்பர் பேனரை தயார் செய்தார். ஒரு நண்பர், நமது கோரிக்கைகளை இங்குள்ள மக்களுக்கு புரியும் விதமாக தெலுங்கு, ஆங்கிலம் மொழிகளில் மொழிபெயர்த்து அதைப் பல பிரதிகள் எடுத்துவருவதாகச் சொன்னார். நாங்கள் முகநூள் நிலவரங்களைக் கூறிக் கொண்டே, துண்டுப் பிரசுரங்கள், புகைப்படங்களை அச்சடித்து அட்டைகளை வெட்டி ஒட்டும் பணியில் ஈடுபட்டோம். சார்ட்டில் சில வாசங்கங்களை எழுதினோம். முடிந்தவரை தயார் செய்துவிட்டு, இரவு சுமார் ஒரு மணிக்கு உறங்கி காலை 5.30 எழுந்து மீண்டும் வேலைகளைத் தொடர்ந்தோம்.

காலை 9 மணிக்கு திட்டமிட்டபடி மாதாபூர் ஷில்பாராம் முன்பு நாங்கள் ஒன்று கூடினோம். நண்பர்கள் தொடந்து வந்தனர். ஆதரவு பெருகியது. போராட்டம் தொடந்தது. சில தொலைகாட்சிகள் நிகழ்சிகளை ஒளிபரப்பின. மற்ற மாநிலங்களுக்கும் இந்த போராட்டத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சிகளை பரப்பும் எங்களது நோக்கம் நிறைவேறும் விதமாக, நாங்கள் முகநூளில் ஹைதராபாத் போராட்டத்தைப் பற்றி வெள்ளிக்கிழமையன்று அறிவித்ததும், பெங்களூர் நண்பர்கள் தொடர்புகொண்டு அங்கும் போராட்டம் நடத்த முடிவு செய்ததாகக் கூறினார்கள். பின்பு முகநூள் வழியாக மும்பை, டெல்லி என செய்திகள் பரவி அங்கும் தமிழ் நண்பர்கள் போராட்டத்தை நடத்தினர்.

ஹைதராபாத் உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிர்பார்க்காத சிறப்பம்சங்கள்:

1. காவல்துறை அனுமதி மறுக்கபட்ட பின்னும் திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு மாதாப்பூர், ஹைதராபாத்தில் போராட்டம் தொடங்கியது.

2. மதியம் 2 மணிக்கு காவல்துறை போராட்டத்தைக் களைக்க நிர்பந்திக்கவே, போராட்டம் இந்திரா பூங்காவிற்கு மாற்றப்பட்டு மாலை 5 மணிவரை தொடந்தது.

3. 60 க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

4. புதியதலைமுறை, GTV , போன்ற தமிழ் தொலைக்காட்சிகளோடு, டிவி 9 என்ற தெலுங்கு தொலைகாட்சி நிருபர்களும் செய்தி சேகரித்து ஒளிபரப்பினர்.

5. அப்துல்காதர் என்ற தோழர், தனது 60 வயது தாய், மனைவி, மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார். போராட்டம் இடமாற்றம் அடைந்தபோது, இவர்கள் கஷ்டப்படாமல் வீட்டிற்கு போகச் சொல்லியும், அதை மறுத்து போராட்டம் முடியும்வரை உண்ணாவிரதத்தில் ஆர்வமுடன் பங்கெடுத்தனர்.

6. அந்த சிறு குழந்தைகளும் உண்ணாவிரதத்தைக் கடைபிடித்தனர்.

7. கொடூரமாக கொல்லப்பட்ட இசைப் பிரியாவின் படத்தைப் பார்த்ததும், சுமார் 8 வயது நிரம்பிய தோழர் அப்துல் காதர் அவரின் குழந்தை அழுதுவிட்டது

8. 450 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து இரவு முழுதும் பயணித்து ஒரு தமிழ் நண்பர் உண்ணா விரதத்தில் கலந்து கொண்டார்.

9. புதியதலைமுறை தொலைக்காட்சி மாலை 3 மணிக்கு ஒளிபரப்பிய செய்தியை பார்த்து, 50 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து ஒரு தோழர், போராட்டம் முடியும் நேரத்தில் கலந்து கொண்டார்.

10. நமது கோரிக்கைகள் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அச்சிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

11. ஈழம் தொடர்பான கொடுமைகளை ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் மக்களுக்கு தோழர்கள் விவரித்தனர்.

12. ஈழக் கொடுமைகளை கேட்டறிந்தபின், இரண்டு வடமாநில மற்றும் தெலுங்கு நண்பர்கள் சிறிதுநேரம் போராட்டத்தில் அமர்ந்து பங்கெடுத்தனர்.

13. ஹைதராபாத் திருக்குறள் தமிழ்ச்சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.

14. ஈழம் தொடர்பான உணர்வுப் பூர்வமான கருத்துக்களையும் அவரவருக்கு தெரிந்த ஈழ வரலாற்று நிகழ்வுகளையும் 2 மணி நேரம் மற்ற நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

15. அழுத அந்த குழந்தை கடைசியில் எங்களிடம் கேட்டது, அடுத்த போராட்டம் எப்போது என்று ?

மிகப்பெரும் குறை:

IT யில் வேலைபார்க்கும் தமிழ்ப் பெண்கள் நிறைந்த பகுதியில், விடுமுறை நாளான ஞயிற்றுக் கிழமையன்று போராட்டம் நடத்தியும், ஒரு தமிழ்ப் பெண் கூட கலந்துகொள்ளவில்லை. அதோடு, தொலைபேசி வாயிலாகக் கூட ஆதரவு தரவில்லை. மிகவும் வருந்தினேன்.

முகநூள்:

ஒரே நாளில் மூன்றே பேர் இந்த போராட்டத்தை முன்னெடுக்க மிகப்பெரும் பலமாக இருந்தது எனது முகநூள்ப் பக்கம். ஈழத்திற்கான மாணவர் புரட்சியைப் பற்றி முகநூளில் பகிர்வதால் என்ன நடந்துவிடப் போகிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் ஒருவர் பகிர்வதை நூறு பேராவது பார்ப்பன், அதில் பத்து பேராவது சிந்திப்பான். ஒருவனாவது செயல்படுத்துவான். அந்த ஒருவனே நமது இலக்கு என்ற வகையில் எங்கள் போராட்டத்தை முகநூள் வழியாக நடத்தி முடித்தோம். அடுத்த கட்ட போராட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

அதோடு மட்டுமில்லாமல்,

2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரானிய குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏமாற்றி வெற்றி பெற்ற ஈரானியக் குடியரசுத் தலைவர் மஹ்மௌத் அஹ்மதினெஜாத்துக்கு எதிராக நடைபெற்ற புரட்சி

2011 எகிப்தியப் புரட்சி, குடியரசுத்தலைவர் ஓஸ்னி முபாரக்கை வீழ்த்திய புரட்சி

2011 துனீசியப் புரட்சி, சைன் எல் அபிதைன் பென் அலியினை வீழ்த்திய புரட்சி

போன்ற புரட்சிகளை நடத்தி வெற்றி கண்டது இந்த முகநூள் வழியாகத்தான். இதன் மூலம் மாணவர் புரட்சியும் நமது ஈழமக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அதனால் தொடந்து முகநூள் வழியாக ஈழம் சார்ந்த போராட்டங்களைப் பகிருங்கள். எனது முகநூள்ப் பக்கத்தில் முடித்தவரை மற்ற இடங்களில் நடைபெறும் போராட்டச் செய்திகளைத் தொடர்ந்து பகிர்கிறேன். முடிந்தால் இணைந்து கொள்ளுங்கள்.

எனது முகநூள் பக்கம்: https://www.facebook.com/KakkaiSirakinile?bookmark_t=page

உணர்ச்சி மிகுந்த புகைப்படங்களை இங்கே காணலாம்: http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_18.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Mar 18, 2013 5:25 pm

இப்பேரணி வெற்றி பெற வாழ்த்துகள்...



சதாசிவம்
ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 18, 2013 6:33 pm

சூப்பருங்க நன்றி வாழ்த்துகள் அகல்.

தொடங்கியிருக்கும் இந்த மாணவர் போராட்டம் ஈழ மக்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என உறுதியுடன் தொடர்வோம்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 18, 2013 8:09 pm

பகிர்வுக்கு நன்றி அகல் , தொடர் மாணவர் போராட்டம் மூலம் ஈழ மக்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவருவோம் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Mar 19, 2013 12:21 pm

இதைப் படித்து, ஆதரவு தெரிவித்த உங்கள் மூவருக்கும் எனது நன்றிகள்... ஆனால் அனைவருக்கும் போய்ச் சேரவேண்டிய மிக முக்கியமான பதிவைப்பற்றி ஈகரையில் பெரிதாக யாரும் கவனத்தில் கொள்ளாமல் விட்டதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்... இது எனது தனிப்பட்ட ஆதங்கம்... தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 19, 2013 12:25 pm

கவலை வேண்டாம் அகில் கண்டிப்பாக நிறைவேறும் நம் கோரிக்கைகள், பயணங்கள் தொடரட்டும். என் வாழ்த்துக்கள் அனைவருக்கும்




அன்புடன்
சின்னவன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 19, 2013 12:32 pm

அகல் wrote:இதைப் படித்து, ஆதரவு தெரிவித்த உங்கள் மூவருக்கும் எனது நன்றிகள்... ஆனால் அனைவருக்கும் போய்ச் சேரவேண்டிய மிக முக்கியமான பதிவைப்பற்றி ஈகரையில் பெரிதாக யாரும் கவனத்தில் கொள்ளாமல் விட்டதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்... இது எனது தனிப்பட்ட ஆதங்கம்... தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்...

என்னுடைய முகநூள் வழியாக போராட்டம் பற்றிய தகவல்களை பகிர்ந்தேன் ,

கவலை வேண்டாம் அகில் . வெற்றி வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 19, 2013 1:10 pm

தோல்வி வந்தால் நீங்கள் வெற்றியை நெருங்கி கொண்டு இருக்கிறீர்கள் நண்பர்களே .

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Mar 20, 2013 11:25 am

நன்றிகள் பாலாஜி அண்ணா.. கண்டிப்பாக நாளை நமதே...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 20, 2013 12:05 pm

அகல் wrote:நன்றிகள் பாலாஜி அண்ணா.. கண்டிப்பாக நாளை நமதே...


நிச்சயம் , காயம் மற்றும் வடு போன்றவற்றை நிச்சயம் நீக்குவோம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக