புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
59 Posts - 50%
heezulia
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
13 Posts - 3%
prajai
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_m10இது கவனக்குறைவல்ல,அலட்சியம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது கவனக்குறைவல்ல,அலட்சியம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Apr 01, 2013 7:44 am

மழை வெள்ளத்தால் குடிசைகள் அடித்துச் செல்லப்படுவதும் மனித உயிர் இழப்புகள் ஏற்படுவதும் இயற்கைப் பேரிடர். இதையும்கூட சரியான திட்டமிடல் மூலம் தடுக்க முடியும். இருப்பினும் எந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பும் இல்லாமல், அணைநீரைத் திறந்து மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தினால் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? அதை ஒரு விபத்துஎன்று விட்டுவிட்டால் போதுமா? அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டாமா?
-
மார்ச் 27-ஆம் தேதி, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ஒரு தையலர் குடும்பத்தினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, அவர்களில் 5 பேர் இறந்துள்ளனர். இதற்குக் காரணம், பில்லூர் அணையிலிருந்து திடீரென 6,000 கனஅடி தண்ணீர் மின்உற்பத்திக்காகத் திறந்துவிடப்பட்டதுதான். இவர்கள் பவானி ஆற்றின் நடுவே இருந்த பாறையில் ஏறிநின்று தப்பிக்க முயன்றும் முடியாத அளவுக்கு வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது.
-
இதேபோன்று கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம், வண்டிப்பாளையம் அணை நீர் திடீரென 8,000 கனஅடி திறக்கப்பட்டு, அங்கே ஞாயிறு விடுமுறைக்காக குழந்தைகளுடனும் சவுதி அரேபியாவிலிருந்து வந்த நண்பரின் குடும்பத்துடனும் மகிழ்உலா வந்திருந்த இரண்டு குடும்பத்தினரில் 9 பேர் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 6 பேர் இறந்தனர்.
இந்தச் சம்பவத்திலும் சொல்லப்பட்ட காரணம், மின்உற்பத்திக்காகத் தண்ணீரைத் திறந்துவிட்டோம். எதிர்பாராத வகையில் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள் என்பதுதான்.
-
இவ்வாறு அணையின் நீர் திறக்கும்முன்பாக சங்கொலிஎழுப்புவது மரபு."அதிகாரிகள் ஏன் அவ்வாறு செய்யவில்லை?' என்ற கேள்விக்கு, அன்றைய ஆட்சியர் அளித்த பதில்,"உள்ளூர் மக்களுக்கு அணை நீர் திறக்கப்படும் நேரம் தெரியும். பராமரிப்புப் பணிக்காகத்தான் அணையைச் சிறிதுநேரம் மட்டுமே மூடி வைத்திருந்தனர்' என்பதுதான். அணையை பலநாள் மூடிவைத்து திறப்பு விழா செய்தால் மட்டுமே சங்கொலி ஒலிக்கும் என்பதுபோல சித்திரிக்கப்பட்ட இந்தப்பதில், அதிகாரிகளையும் தொடர்புடைய ஊழியர்களையும்காப்பாற்ற வேண்டுமானால் உதவலாம். அப்பாவி மக்களின்உயிர்களைக் காப்பாற்ற உதவாது.
-
2011-ஆம் ஆண்டு மத்தியப்பிரதேசம், இந்தூர் அருகே ஒரு சுற்றுலாத் தலத்தில் மழையினால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, 5 பேர் உறவினர்கள் கண்ணெதிரே அடித்துச் செல்லப்பட்டனர். எங்கோ பல கிலோமீட்டர் தொலைவில் பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்து, இந்தச் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவிதமான தகவலோ, எச்சரிக்கையோ இல்லை. அதை வேண்டுமானால் இயற்கை இடர் என்றோ, விதிப்பயன் என்றோ எடுத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டதா, அணைகளிலிருந்து நீரைத் திறந்து விடும் செயல்?
-
ஒரு ரயில் வண்டி ஓட்டுநர்கூட, ஆளில்லா சாலைக்குறுக்குத்தடம் நெருங்கி வரும் முன்பாக ஒலி எழுப்புகிறார். சுமார்ஒரு மைல் தூரத்துக்கும் மேலாக அந்த ஒலி கேட்கும். ஆனால், அணையில் பல ஆயிரம் கனஅடி நீரைத் திறந்துவிடும்போது எந்த எச்சரிக்கையும் இல்லாமல் திறந்துவிடுவார்கள் என்றால், இதை எப்படி அனுமதிப்பது? ஒரு துயரச் சம்பவம் நடந்தபிறகும் அதிகாரிகள் பொறுப்பில்லாமல் நடக்கிறார்கள் என்றால், தவறிழைத்தவர்களை மேலதிகாரிகளும், அரசும் தண்டிக்காமல் காப்பாற்ற முற்படுவதுதான் காரணமாக இருக்க முடியும்.
-
எல்லா அணைகளிலும் நீர் திறக்கும்போது எவ்வாறு குறைந்த அளவில் தொடங்கி, நீர்அளவைப் படிப்படியாக உயர்த்த வேண்டும் என்றும்,எச்சரிக்கை ஒலி எழுப்பத் தேவையான வசதிகளை உருவாக்கித் தருவதற்கும் சட்டப்பேரவை நடைபெறும் இந்த நேரத்தில், பேரவை உறுப்பினர்கள் இதுகுறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து வழி காண வேண்டும். முறையான முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை ஒலி இல்லாமல் அணை நீர் திறக்கப்பட்டு அசம்பாவிதம் நேர்ந்தால், அதற்கு அணையின் பொறியாளரைப் பொறுப்பாக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
மழைக்காலத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, கரையோரத்திலும் தாழ்வான பகுதிகளிலும் வசிப்போர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறுங்கள் என்று மட்டுமே அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்துகிறார். ஆனால்,அவர்கள் அவ்வாறு வெளியேறினார்களா? வெளியேறினால் அவர்கள் எங்கே தங்க வைக்கப்பட வேண்டும் என்பது குறித்த எந்தவித நடவடிக்கையையும் முன்னெச்சரிக்கையாகச் செய்வதில்லை. குடிசைகளும் மனிதர்களும் அடித்துச்சென்ற பிறகுதான்அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டு, அவர்களுககு அரிசி, உணவு, உடை எல்லாமும்வழங்கப்படுகின்றன. முன்னதாகவே இவர்களைக் கட்டாயமாக வெளியேற்றி தங்க இடமும் உணவும் தந்தால், உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியுமே!
ஜனநாயக இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை, எந்த அசம்பாவிதத்திற்கும் யாரும் பொறுப்பேற்கவோ அல்லது பொறுப்பாக்கப்படுவதோ இல்லை என்பதுதான். ஓர் அரசு ஊழியர் தவறு செய்தால், அவரைத் தண்டிக்காமல் எப்படி காப்பாற்றுவது என்பதில்தான் அதிகாரவர்க்கமும், ஆட்சியாளர்களும் முனைப்பாக இருப்பார்களே தவிர, பொதுமக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றியோ, நிர்வாகம் சீர்கெடுவதைப் பற்றியோ கவலைப்படுவது கிடையாது என்பதுதான் யதார்த்த உண்மை.
-
அரசு ஊழியரின் குடும்பம் பாதிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படுவார்களேதவிர, பொதுமக்கள் அவதிப்படுவதைப் பற்றிய அக்கறையே இல்லாமல் இருக்கும் போக்கு பரவலாகவே காணப்படுகிறது. எதிர்ப்பு வலுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போதுகூடக் கடைநிலை ஊழியர்கள் பலிகடா ஆக்கப்படுவார்களே தவிர, தலைமைப் பொறுப்பில் இருப்பவர் தவறுக்கு தார்மிகப் பொறுப்பேற்றதாகசம்பவம் இதுவரை இல்லை. இந்த நிலைமை மாறாதவரை, அப்பாவி இந்தியக் குடிமகனுக்காக அனுதாபப்படுவதைத் தவிர நமக்கு வேறு வழியேதும் தோன்றவில்லை.
( தினமணி தலையங்கம்)



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக