புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
34 Posts - 51%
heezulia
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
30 Posts - 45%
T.N.Balasubramanian
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
313 Posts - 46%
ayyasamy ram
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
17 Posts - 2%
prajai
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
4 Posts - 1%
jairam
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் - சைவமா ? அசைவமா ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon May 13, 2013 9:01 pm

எனது அலுவலகத்தில் சில நண்பர்கள் நீங்கல்லாம் நான்-வெஜ் சாப்படுறிங்க, நாங்கல்லாம் பியூர் வெஜிடேரியன்ஸ் என்று விளையாட்டாக அடிக்கடி கேலி செய்வார்கள். அதோடு மதிய உணவின்போது இந்தத் தலைப்பில் இரண்டு குழுக்களுகிடையே அடிக்கடி விவாதம் நடக்கும். சைவ உணவு அசைவத்தைவிட உடலுக்கு நல்லது பல உயிர்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்படுகிறது என்ற கூற்றை ஒத்துக் கொண்டு, அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.

மாட்டுக்கறி சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். மாட்டின் ரத்தம் சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். ஒட்டுமொத்த மாடு சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றே மீண்டும் பதில் வந்தது. சரி, பசுவும் அதன் உடல் பாகங்களும் அசைவம் என்றால், பசுவின் உடலில் இருந்து பிரியும் அதன் பால் மட்டும் எவ்வாறு சைவமாகும் ? என்ற எனது கேள்விக்கு யாரும் இன்னும் பதிலளிக்கவில்லை. (விளக்கம் இருந்தால் சொல்லுங்கள் எனக்கும் தெரியாது).

இதிலிருந்து நான் புரிந்துகொண்ட ஒரு அடிப்படை என்னவென்றால், இக்கால மனிதர்கள் சிலர் முட்டையை சைவம் என்றும் கல்கத்தாவில் வாழும் மக்கள் மீனை சைவம் என்றும் தங்கள் வசதிக்கும் பயன்பாட்டிற்கும் தகுந்தவாறு வரையறுத்துக் கொண்டார்கள். இதே போல் முந்தைய காலத்திலும் பாலை சைவம் என்றும் வரையருத்திருப்பார்களோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

ஒவ்வொரு பொருளிலுமுள்ள (உதாரணம்: ரத்தம், பால்) மூலக்கூறுகளின் அடிப்படையில் சைவம் அசைவம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்த மூலக்கூறுகளும் மனிதனின் பயன்பாட்டிற்கேற்ப வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். எனவே எனது புரிதலின்படி, பசு அசைவம் என்றால் பாலும் அசைவமே.

குறிப்பு:

இந்தக் கேள்வியை கேட்டதால் நான் மாட்டுக்கறி உண்பவன் என்றோ, அசைவம் உண்பதை நியாயப்படுத்துகிறேன் என்றோ நினைத்துக் கொள்ளவேண்டாம். சைவமா ? அசைவாமா ? இதில் எது உயர்ந்தது என்பதல்ல எனது பார்வை. அந்த சைவமும் அசைவமும் எவ்வாறு வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்.

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_13.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 1:13 am

உணவு பழக்கம், சாதி, மதம், அரசியல் இதுபோன்ற விஷயங்கள் என்றுமே அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை சார்ந்ததாக இருக்க வேண்டும்.

அப்படி இருந்து விட்டால் நாட்டில் அன்பு, அமைதி தானாக வந்து விடும்.

சைவம், அசைவம் என்ற சர்ச்சைகளுக்கு இடமே குடுக்கக் கூடாது - அதே போல் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதன் பின்னே ஆராய்ச்சிக் கட்டுரை இருக்கா, அது நிரூபிக்கப் பட்டுள்ளதாவென்று தேடி ஓடினால் நம்ம வாழ்க்கையை வாழவே முடியாது.

பிடிச்சிருக்கா சாப்டுங்க, பிடிக்கலையா சாப்பிடாதீங்க - இதுவே நம்ம பாலிசி அகல்.




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 14, 2013 9:03 am

உங்களின் கருத்தை முன்பே நான் ஒரு கலிவெண்பாவில் எழுதியுள்ளேன். அதன் ஒரு பகுதியை கீழே கொடுத்துள்ளேன். (மேற்கொண்டு முழுமையாகப் படிக்க இந்தப் பதிவுக்குச் செல்லுங்கள்
http://www.eegarai.net/t85144-topic )

நல்லியற்கை தந்தபல நல்லுணவை விட்டொழிக்க
இல்லாத நோயெல்லாம் இங்கிப்போழ் வந்ததுபார்.
நல்லுணவெ சைவமென்றே நாற்புறமும் சொல்லுகிறார்
நெல்லுணவை வேகவைக்க நீங்கிடுதே சத்தெல்லாம்?

மாட்டுப்பால் மாட்டுக்கே மானிடர்நாம் கள்வரன்றோ?
ஆட்டுப்பால் அவ்விதமே, அத்துள்ளும் குட்டிகள்பார்!

முட்டைதனைச் சைவமென்றே முன்வைத்தே பேசிடுவார்
பெட்டைதனை வைத்தடைவை, பின்வருமே குஞ்சுகளும்!

தொட்டிவளர் மீனிவர்க்கோ தோன்றுதுபார் வெள்ளரிபோல்!
வெட்டிவிற்கும் வெள்ளிறைச்சி, வேறென்ன சொல்வோம்யாம்?

உங்களுக்கு வி.பொ.பா அகல் மகிழ்ச்சி

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue May 14, 2013 9:17 am

யினியவன் wrote:உணவு பழக்கம், சாதி, மதம், அரசியல் இதுபோன்ற விஷயங்கள் என்றுமே அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை சார்ந்ததாக இருக்க வேண்டும்.

சைவம், அசைவம் என்ற சர்ச்சைகளுக்கு இடமே குடுக்கக் கூடாது - அதே போல் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதன் பின்னே ஆராய்ச்சிக் கட்டுரை இருக்கா, அது நிரூபிக்கப் பட்டுள்ளதாவென்று தேடி ஓடினால் நம்ம வாழ்க்கையை வாழவே முடியாது.


அண்ணே எனது நோக்கம் சர்ச்சையைக் கிளப்புவதுமல்ல, இதைத்தான் உண்ணவேண்டும் என்று வற்புறுத்துவதுமல்ல... எனது சிந்தனையை கடைசி வரியில் தெளிவாக பதிவு செய்துள்ளேன் "சைவமா ? அசைவாமா ? இதில் எது உயர்ந்தது என்பதல்ல எனது பார்வை. அந்த சைவமும் அசைவமும் எவ்வாறு வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்"

எல்லா விடயங்களையும் முன்னோர் சொன்னார்கள் என்பதால் பின்பற்றாமல் அதன் உள்நோக்கத்தை அறிந்துகொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைக்கிறேன்.



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 9:37 am

அதை கவனித்தேன் - வீணா இதப் பத்தி எல்லாம் சீரியஸா ஆகவேண்டாம்ன்னு தான் சொல்றேன் அகல். நீங்கள் விவாதத்தை கிளப்பவில்லை என்று நன்கு தெரியும்.

நண்பர்கள் மத்தியில் இதெல்லாம் சர்ச்சை செய்வது அனாவசியம் என்று நினைக்கிறேன் - பிடிவாதமா பேசுறாங்களா போகட்டும் விடுங்க.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 14, 2013 10:47 am

என்ன கொடுமை சார் இது

அப்படி பார்த்தால் இந்த உலகத்தில் தாய்ப்பால் குடித்து வளரும் அனைத்து உயிரினங்களும்(மனிதன் உட்பட) மாமிசபட்சினி தான்.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue May 14, 2013 11:01 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:உங்களின் கருத்தை முன்பே நான் ஒரு கலிவெண்பாவில் எழுதியுள்ளேன். அதன் ஒரு பகுதியை கீழே கொடுத்துள்ளேன். (மேற்கொண்டு முழுமையாகப் படிக்க இந்தப் பதிவுக்குச் செல்லுங்கள்
http://www.eegarai.net/t85144-topic )

நல்லியற்கை தந்தபல நல்லுணவை விட்டொழிக்க
இல்லாத நோயெல்லாம் இங்கிப்போழ் வந்ததுபார்.
நல்லுணவெ சைவமென்றே நாற்புறமும் சொல்லுகிறார்
நெல்லுணவை வேகவைக்க நீங்கிடுதே சத்தெல்லாம்?

மாட்டுப்பால் மாட்டுக்கே மானிடர்நாம் கள்வரன்றோ?
ஆட்டுப்பால் அவ்விதமே, அத்துள்ளும் குட்டிகள்பார்!

முட்டைதனைச் சைவமென்றே முன்வைத்தே பேசிடுவார்
பெட்டைதனை வைத்தடைவை, பின்வருமே குஞ்சுகளும்!

தொட்டிவளர் மீனிவர்க்கோ தோன்றுதுபார் வெள்ளரிபோல்!
வெட்டிவிற்கும் வெள்ளிறைச்சி, வேறென்ன சொல்வோம்யாம்?

உங்களுக்கு வி.பொ.பா அகல் மகிழ்ச்சி
முழுவதும் படித்தேன்... அருமை ஐயா... பெரிய ஆராய்ச்சி செய்து பல செய்திகளுடன் கவிதையை படைத்திருக்கிறீர்கள்... பதிவிற்கு நன்றிகள்....

ஒரு சந்தேகம் ஐயா... வி.பொ.பா வின் பொருள் என்னவோ ? புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 11:03 am

மபோசி யோட தம்பி தான் விபொபா - அகல் புன்னகை

(விருப்பப் பொத்தானை பாவித்தேன்)




பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue May 14, 2013 12:30 pm

ஒரு உணவை நாம் பெறுவதற்காய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு உயிர் கொல்லப்படுமானால் அந்த உணவை அசைவம் எனக் கொள்ளலாம். மாட்டின் பால் அதன் இரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, பாலைக் கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலைச் சைவம் என உணரலாம். மாறாக மாட்டுக்கறி சாப்பிடவேண்டுமென்றால் மாட்டைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அதை அசைவமெனப் பாவிக்கலாம்.
முட்டையைப் பொருத்தவரையில் கருவென்ற ஒரு உயிர் அழிக்கப்படுவதால் அதுவும் அசைவமே. இந்தக் கோட்பாட்டின்படிதான் சைவத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றும் சிலர், தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்கு வகைகளையும் அசைவமாகப் பாவித்து உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் வேரிலிருந்து அப்பொருட்களைப் பெறவேண்டுமானால், அந்தத் தாவரத்தை வேரோடு பறிக்க வேண்டும். அதனால் அத்தாவரம் எனும் உயிர் அழிக்கப்படுகிறது. (இதற்கு வாழைத்தண்டும் விதிவிலக்கல்ல).
அதே சமயம் தாவரங்களிலிருந்து பெறப்படும் மற்ற காய் கறிகளை அத்தாவரத்தை கொன்று பெறுவதில்லை என்பதால் அதைச் சைவமாக பாவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை இனியவன் போன்றவர்களின் கருத்துதான் எனது கருத்தும். எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 14, 2013 12:43 pm

பார்த்திபன் wrote:ஒரு உணவை நாம் பெறுவதற்காய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு உயிர் கொல்லப்படுமானால் அந்த உணவை அசைவம் எனக் கொள்ளலாம். மாட்டின் பால் அதன் இரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, பாலைக் கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலைச் சைவம் என உணரலாம். மாறாக மாட்டுக்கறி சாப்பிடவேண்டுமென்றால் மாட்டைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அதை அசைவமெனப் பாவிக்கலாம்.
முட்டையைப் பொருத்தவரையில் கருவென்ற ஒரு உயிர் அழிக்கப்படுவதால் அதுவும் அசைவமே. இந்தக் கோட்பாட்டின்படிதான் சைவத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றும் சிலர், தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்கு வகைகளையும் அசைவமாகப் பாவித்து உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் வேரிலிருந்து அப்பொருட்களைப் பெறவேண்டுமானால், அந்தத் தாவரத்தை வேரோடு பறிக்க வேண்டும். அதனால் அத்தாவரம் எனும் உயிர் அழிக்கப்படுகிறது. (இதற்கு வாழைத்தண்டும் விதிவிலக்கல்ல).
அதே சமயம் தாவரங்களிலிருந்து பெறப்படும் மற்ற காய் கறிகளை அத்தாவரத்தை கொன்று பெறுவதில்லை என்பதால் அதைச் சைவமாக பாவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை இனியவன் போன்றவர்களின் கருத்துதான் எனது கருத்தும். எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.
உங்கள் கருத்தை ஏற்றுகொள்கிறேன் நன்றி



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக