புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
68 Posts - 45%
heezulia
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
5 Posts - 3%
prajai
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
Jenila
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
jairam
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
M. Priya
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
kargan86
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
9 Posts - 4%
prajai
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
6 Posts - 3%
Jenila
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
4 Posts - 2%
Rutu
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
jairam
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Baarushree
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_m10  தமிழே என் அமுதே! (கவிதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே என் அமுதே! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 21, 2013 4:48 pm

தமிழே என் அமுதே!


திங்கள் பிழிந்ததில் தேனெடுத்து வந்தே
தீந்தமிழ் ஆக்கிடவா- அன்பு
பொங்கும் இளந்தமிழ் பஞ்சணையிற் துயில்
கொள்ளெனப் பாட்டிடவா -சுற்றி
எங்கும் மலரிறைத் துன் நடை மென்மையின்
இன்ப மெழச் செய்யவா - எழில்
தங்குமென் னின்பத் தமிழ் மகளே உன்னைத்
தாயெனப் போற்றிடவா

கண்கள் சிரிக்குது புன்னகை பூத்தெழில்
காணுது மென் தமிழே - உனை
யெண்ணில் மனத்திடை இன்பநதி யெழுந்
தோடுது பொங்கியுமே - பல
வண்ண விளக்குகள் மின்னிஎரியுது
வந்து நீ நிற்கையிலே - நினைத்
தண்ணமுதே உண்ண உண்ணத் திளைக்குது
தாகத்தில் நீரெனவே

புண்படு மென்நெஞ்சு பொல்லா வலிகொண்ட
போதிலும் இன்தமிழே - நல்ல
பண்ணிசைத் தேநடம் ஆடிடப் போகுது
பக்கமில்லா தொழிந்தே - பலர்
மண்ணிலுன் மாபுகழ் பாடினும் கண்டிலேன்
மானிடனாய் வரவே - முதல்
அண்ணளவாய் வய தைந்தாமென் அன்னையும்
ஆவென்று பேர் சொல்லவே

விண்ணில் மலர்ந்திடும் பொன்னெழிற் தாரகை
வெண்ணிலவின் அருகே - நின்று
கண் சிமிட்டுமெழில் வண்ணக் கவித்தமிழ்க்
கன்னியுன் பொன்னெழிலே
தண்ணெழிற் பொய்கையில் நீரையள்ளிமுகந்
தன்னில்விடும் குளிரே - உந்தன்
பண்சுவைப் பாடலில் பட்டது மேனியும்
புல்லிற் பனிதுளி நேர்

கூவுங் குயிலுண்ணும் மாவின்பழுத்த செம்
மாங்கனி துண்டுசெய்தே - நல்ல
ஆவிற் கறந்த பால் தீயிலிட்டே பின்னை
ஆற வைத்து மெடுத்தே - நறும்
பூவின் இதழிடை தேன் கவர்ந்தேயதை
பூசி அடைகள் செய்தே - எந்தன்
நாவும் இனித்திட நல்கியுமுண்பனோ
நீதமி ழென்சுவைத் தேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 21, 2013 4:49 pm

அழகான நாட்கள்

நேராக நிமிர்தோங்கும் தென்னை பனையோடு
நேருயர்ந்து நின்றதெங்கள் ஈழம்
தேரோட மணியோசை தெய்வ வலமென்று
திருவருள் பொலிந்தாடும் காலம்
ஏரோடி உழுதவயல் எழுந்தபயிர் பச்சை
இசைபாடுங் குயில் தோகை நடமும்
காரோட வளைந்தோடும் கரும்வீதி பக்கம்
கனிதூங்கும் மா நின்ற ஈழம்

பழமை கொண் டிருந்தாலும் பழுதின்றி ஓடும்
பாதைவிரை வண்டிகளின் தோற்றம்
இளமாலை சொரிகின்ற இதமான பூக்கள்
எழுந்த மரச்சோலைகளில் பறவை
மழை தூறிப் பெய்தாலும் தமிழ்சந்தம்போடும்
மனமெங்கும் சுகபோதைக் கானம்
துளைகுண்டு தினமோலம் எனவாக்கிஇறைவா
தெருவெங்கும் பிணம் போட்டதேனோ
.
அதிகாலைப் பொழுதேனும் அந்தியிருள் நேரம்
அமைதிகொள் இயற்கையின் தோற்றம்
புதிதாக விடிந்தாலும் போய் மறையும் கதிரின்
பின்னெழும் முன்பனிக் கூதல்
விதிமாறி வேற்றுமொழி வைக்கின்ற சட்டம்
விடியலில் எழும் அச்சம் இல்லை
சதியேதுமில்லை ஒருதனியான பிள்ளை
சற்றும் மனம் அச்சமின்றி ஏகும்

வீராதி வீரரென வெகுண்டெழும் பகைமை
விளையாடி வெல்லும் இள மாந்தர்
போராக எம்மீது படைகொண்டுதேசம்
பலிகொள்ள வந்த நிலையாதும்
பேராக எதிர்நின்றும் அணிகொண்டதாலே
பெரும் வீர த் திறன் கண்டு அச்சம்
வேரொடுவெட்டி இனம் முற்றாக வீழ்த்த
வெறி கொண் டிணைந்த முழு உலகும்

குளம்மீது அலர்கின்ற தாமரைகள் போலும்
குடிமக்கள் விழி பூத்தெழுந்து
தளம்புமலை மீது துள்ளும் சிறுமீன்துடிப்பில்
தன் வேலை கல்வியென்று ஓடும்
வளம் மிகுந்த திருநாடு விளங்கிய தோர்காலம்
வந்ததெங்கள் ஈழமகன்வம்சம்
உளம் மீதுநஞ்சுடனே உருவான எதிரி
ஒன்றாகிச் சிதைக்க விடலாமோ

*********

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue May 21, 2013 4:54 pm


கண்டதென்ன? !!

நீரைக் கண்டேன் நெருப்பைக் கண்டேன்’
நீந்தும் பூக்கள் நீரில் கண்டேன்
ஊரைக் கண்டேன் உறவைக் கண்டேன்
உறங்கும் விழியுள் இருளைக் கண்டேன்
நாரை கண்டேன் நாணல் புதருள்
நெளியும் பாம்பும் நில்லா துள்ளும்
தேரை கண்டேன் தமிழாம் அன்னை
தேசம் காக்கும் திறனைக் காணேன்

வானைக் கண்டேன் வானில் வில்லாய்
வண்ண ஏழும் வளையக் கண்டேன்
தேனை ஊற்றும் திங்கள் ஒளியும்
தேயும் வளரும் தன்மை கண்டேன்
பானை வயிற்றில் பலரைக் கண்டேன்
பாவை சிரிக்கும் அழகைக் கண்டேன்
ஏனோ எந்தன் இன்பத் தமிழ்மண்
இறைமை காக்கும் வழியைக் காணேன்

தேரைக் கண்டேன் தெய்வக் கோவில்
திகழும்தீபம் ஒளிரக் கண்டேன்
தாரை யாகக் கொட்டும் மழையும்
தரையில் நெளியும் நதியும் கண்டேன்
வேரைக் கொண்ட மரமும் கிளையில்
விளையும் கனிகள் தூங்கக் கண்டேன்
ஊரைக் காக்கும் தெய்வம் மட்டும்
உண்மை கொண்டே இரங்கக் காணேன்

வாழ்வைக் கண்டேன் வளமும் கண்டேன்
வாழும் மனிதர் சிரிக்கக் கண்டேன்
தாழ்வில் லாத்தலை முறையென் றங்கே
தளைத்தே ஓங்கும் தகமை கண்டேன்
வீழ்வே இல்லை வெற்றிக் களிப்பும்
வேற்றாம் மொழியில் கண்டேன் ஆயின்
ஆழ்ந்தே உறங்கும் அமைதிக் கணமும்
அன்னை மண்ணில் காணேன்! காணேன் !!

**************

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக