புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 
64 Posts - 58%
heezulia
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 
106 Posts - 60%
heezulia
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம்


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:11 pm

First topic message reminder :

பதிப்புரை

என்னுரை

முன்னுரை (மாலன்)

முன்னீடு

வம்ச விருத்தி

1. துரி

2. ஒரு சாதம்

3. கிரகணம்

4. விழுக்காடு

5. பீஃனிக்ஸ் பறவை

6. முழு விலக்கு

7. முடிச்சு

8. ஞானம்

9. சிலம்பு செல்லப்பா

10. வம்ச விருத்தி

11. பருத்திப் பூ



 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:45 pm


ஆரவாரத்துடன் எங்களை வரவேற்றவர் முன்பென்றும் இல்லாத மாதிரி பற்கள் தெரிய அட்டகாசமாக சிரித்தபடியே குரங்குகள் பிடிக்கும் செலவிற்கும் பேரம் பேசத் தொடங்கினார். அந்தக் கால அரசர்களிடம் அஸ்வசாஸ்திரம் தெரிந்த விற்பன்னர்கள் பக்கத்திலேயே இருப்பார்களாம். அதுபோல இவரிடமும் குரங்கு சாஸ்திர நிபுணா ஒருவர் நீண்ட நெடுமரமாக ஒரு பக்கத்திலே நின்றுகொண்டு அவ்வப்போதுதன் ஞானக்கண்ணைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தார். கத்தி படாத தாடையை சொறிந்து சொறிந்து ஒன்றிரண்டு ஞானமுத்துக்களை உதிர்த்தார். மற்றப் பக்கத்திலே அடைப்பைக்காரன் போல வண்ணம் அவ்வப்போது கோலாநட் சப்ளை செய்தவண்ணம் இருந்தார். இவர் முகத்திலே, காவடி எடுப்பவர்கள் செடில் குத்தியதுபோல கன்னங்களிலும், நெற்றியிலும், கண்களுக்குக் கீழேயும், உதட்டின் மேலேயும், நாடியிலும் மீன் செதிள் போன்ற 'மென்டே' இனத்து சின்னங்கள் விழுப்புண்களாக பரவிக் கிடந்து அழகூட்டின.

ஒரு குரங்கு பிடிப்பதற்கு காசு இருநூறு லியோன்வரை தயங்காமல் கேட்டார் தலைக்குடிமகன். இவர்கள் இருவரும் ஒரே 'கரண்டில்' வேலை செய்வது போல் வேகமாக ஆமோதித்து தலையாட்டினார்கள். இது போன வருடத்திலும் பார்க்க பத்து மடங்கு அதிகம். நாங்கள் என்ன, குரங்கைப் பிடித்துமூட்டை கட்டி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறோமோ? பிடிப்பதற்குத்தானே பணம்; மறுபடியும் காட்டிலே விட்டுடத்தானே போகிறோம்!

கடைசி விலை நாற்பது லியோன் என்று நான் சொன்னதும் தலைக்குடிமகன் ஆவென்று வாயைப் பிளந்தார். அங்கே முப்பத்திரண்டு பற்களும், அறுபத்திநாலு சானல்களும் தெரிந்தன, நீண்ட நேர மந்திராலோசனைக்குப் பிறகு ஒருவாறு தலைக்குடிமகன் இறங்கி வந்தார். நூறு லியொனுக்கு பேரம் பூர்த்தியானது. பட்ஜெட் இடிக்கத் தொடங்கிவிட்டது; என்றாலும் வேறு வழியென்ன? பாதி சவாரியில் இறங்க முடியுமா? நாங்கள் அவர் கேட்ட அக்கிரமமான விலையை கொடுப்பதற்கு சம்மதித்தோம்.

ஆபிரிக்கக் காட்டில் இரண்டு மாங்கள் ஓடிவிட்டன. ஆரம்பகாலத்து ஆர்வமெல்லாம் மறைந்து எங்கள் முகங்கள் களையிழந்து காணப்பட்டன. நுளம்புகள் கடித்து பண்பட்ட எங்கள் உடம்பு திட்டுத் திட்டாகத் தடித்து தடுக்குப் பாய்போல ஆகியிருந்தது. பசளையில்லாமல் பயிரிட்ட பாவக்காய் போல முறுகி, 'புஃல்லாபிரட்' என்று சிறப்பு நாமதேயம் பெற்ற ரொட்டியையும், அவித்த கடலையையும், வறுத்த சோளத்தையும் சாப்பிட்டு, சாப்பிட்டு வாய் மரத்துவிட்டது. கடைசி மாவிலே பிடித்த கொழுக்கட்டைபோல 'மொக்கட்டி, நெக்கட்டியான' படுக்கையிலே ஒரு கண் நித்திரைகூட வரமறுத்தது. 'படுக்கை நொந்தபடி' என்ற பாடல் வரிகளின் அர்த்தம் மூளையில் இறங்கியது. குலையீனா வாழைக் குருத்துகள் போன்ற இளம் ஆபிரிக்கப் பெண்கள் காலையும், மாலையும் தண்­ருக்கும், விறகுக்குமாக அலைந்து திரிந்து தலைச்சுமையோடு அசைந்து நடந்து வரும் அழகை காத்திருந்து பார்ப்பதுகூட எங்களுக்கு இப்பவெல்லாம் அலுத்துவிட்டது.

இப்படியாக மனமுடைந்திருந்த சமயத்தில்தான் ஒரு நாள் அதிகாலை தலைக் குடிமகனிடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்த செய்தி வந்தது. சிறுவர்களும் பெரியவர்களுமாக தாரை தப்பட்டைகளை தட்டிய படியே குரங்கு கூட்டத்தை துரத்தி வந்து ஒரு பெரும் மரத்திலே ஏற்றி விட்டார்கள். நாங்கள் அங்கே ஓடிவந்தபோது பக்கத்திலே வளர்ந்திருந்த சிறுமரங்களையும் செடிகளையும் தறித்துவெறுமையாக்கி கொண்டிருந்தார்கள். குரங்குகள் பாவம் 'கீயாமாயா' என்று கத்தியபடி கீழேயும் மேலேயும் போய் அலறத் தொடங்கின. பேச வழியில்லை என்று தெரிந்ததும் அலறல் அழுகையாக மாறத் தொடங்கியது. மரத்தின் கீழே வலைப்பரப்பி தயார் நிலையில் இருந்தது. குரங்கு சாஸ்திர விற்பன்னரும், அடைப்பைக்காரரும் ஓடியாடி மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் காட்சி ஓர் அபூர்வமான காட்சி. வாழ்நாளிலே காணக் கிடைக்காத காட்சி. சின்னதும் பெரிதுமாக எத்தனை நிறத்தில் எத்தனை விதமான குரங்குகள். திகிலுடன் கிளைக்கு கிளை பாய்ந்து 'கீகீ' என்று கோஷமிட்டு அவை செய்த கூத்தை விவரிக்க ஏலாது. தவ்வல் குட்டிகள் தாயின் மடியை இறுக்கிப் பிடிக்க தாய் குரங்குகள் தடுமாறியபடி கிளைக்கு கிளை தாவி தப்புவதற்கு வழி தேடின. சின்ன விரல் சைஸ் கிளைகளில் நுனியில் குரங்குகள் தொங்கியபடி ஊஞ்சல் ஆடின. மனம் 'என்ன ஆகுமோ?' என்று பயந்து துணுக்குற்றது. 'என்னை விரைந்தேற்றுக் கொள்ளாத கொம்பு?' என்ற கம்பர் கூற்றின் உட்கருத்து எனக்கு புலனாகியது.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி குரங்குகள் பொத் பொத்தென்று எங்கள் கைகளில் வந்து குதிப்பதாய் தெரியவில்லை. அப்பொழுது அடைப்பைக்காரர் பெரிய கோடாரியொன்றை எடுத்து மரத்தை 'டம், டம்' என்று அடிக்கத் தொடங்கினார். அனுபவமில்லாத ஒரு குரங்கு மரத்தை யாரோ வெட்டுகிறார்களென்று பயந்து அவசரமாக குதித்தது. அதைத் தொடர்ந்து வெள்ளையும் சிவப்புமாக குரங்குகள் குதிக்கத் தொடங்கின. அந்தக் காட்சி வெள்ளை மலர்களையும் சிவப்பு மலர்களையும் தேவர்கள் ஆகாயத்திலிருந்து கொட்டுவது போல இருந்தது. 'ஸ்வீட் ஜ“சஸ்' என்று கத்தியபடி டேமியன் செய்வதறியாது அங்குமிங்கம் ஓடினான். அளவுக்கு மீறிய பரபரப்பான சமயங்களில் டேமியன் இப்படி கத்துவது வழக்கம். குரங்குகள் குதிக்க குதிக்க ஆபிரிக்க சிறுவர்கள் 'பொக்கு பிளென்டி! லெவ்வாம், லெவ்வாம்!' என்று கூவியபடி கோழிக்குஞ்சை அமுக்குவது போல் பக்கென்று அவற்றைப் பிடித்துக்கொண்டு ஓடியோடிப்போய் மூங்கில் கூட்டிலே அடைத்துவிட்டு வந்தார்கள்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:45 pm


கொலபஸ் குரங்குகளில் இரண்டு விதம் இருந்தது. ஒன்று சிவப்பு வரை; மற்றது கழுத்திலே வெள்ளை வளையம் போட்டது. தவறுதலாக வலையில் பிடிபட்ட சாதாரண குரங்குகளை நாங்கள் திரும்பவும் கொண்டு போய் காட்டிலே விட்டுவிட்டோம். ஒன்றிரண்டு கொழுத்த குரங்குகளை அவர்கள் சாப்பாட்டுக்காக வைத்துக்கொண்டார்கள். குரங்கு இறைச்சியை ஆபிரிக்காவின் மென்டே இனம் விரும்பிச் சாப்பிடும். நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான வெற்றி. ஆஹா, என்ன நிம்மதி! இனி எங்கள் வேலைகள் இரண்டு நாளிலேயே சுலபமாக முடிந்துவிடும்.

டேமியனுக்கு சந்தோஷம் தலைகால் புரியவில்லை. அதைக்காட்டும் முகமாக 'பாம்' மரங்களில் ஏறி ஏறி இறங்கினான். அவனுக்கு பாம் மரங்களில் ஏறுவதும் எஸ்கலேட்டரில் மேலே போவதும் ஒன்றுதான். மரத்தின் உச்சிக்குப் போனதும் முட்டிகளில் வடிந்திருக்கும் பாம் வைனை ஒரு மிடறு குடித்து ருசி பார்த்துவிட்டு போன வீச்சில் இறங்கிவிடுவான். கற்பாறைகளை வெறும் கையால் பிடித்து ஏறுபவனுக்கு பாம் மரம் ஏறுவது ஒரு காரியமா? வேலைகள் தலைக்குமேல் இருக்கும்போது இவன் இப்படி சிறு பிள்ளைத்தனமாக விளையாடிக் கொண்டிருந்தது, எனக்க எரிச்சலாக இருந்தது. அவனுடைய மரம் ஏறும் வித்தைக்கு விரைவிலேயே ஒர் உபயோகம் வரப்போகும் விஷயம் எனக்கு அப்போது தெரியவில்லை.

ஆபிரிக்கக் காடுகளின் உட்பகதிகளில் கட்டியிருக்கும் சில குடிசைகளின் பக்கம் அந்நிய மனிதர்கள் அணுக முடியாது. களி மண்ணும் வைக்கோலும் சேர்த்து பிசைந்த ஒரு கலவையால் கட்டிய குடிசைகள் அவை. வைக்கோல் கூரை. இந்தக் குடிசைகளில் தான் ஆபிரிக்க சிறுவர்களுக்கான சில ரகஸ்ய சடங்குகள் நடைபெறும். மிகவும் ரகஸ்யமாக நடக்கும் இந்த சடங்கின் பின்தான் ஒரு சிறுவன் மனிதன் ஆகிறான் என்பது இங்கே ஐதீகம். அந்த சடங்கிற்காக போடப்பட்ட பழைய குடிசை ஒன்றிலே பெரியவர்கள் ஓர் ஆந்தையையும் இரண்டு குஞ்சுகளையும் கண்டு விட்டார்கள். ஆந்தை என்றால் ஆபிரிக்காவில் பேய் பறவை என்று பேர். அங்கே கண்டாலும் அதை அந்தக் கணமே கொண்டுவிட வேண்டும். துப்பும் பாம்பைக்கூட சட்டை செய்யாமல் கிட்டப்போய் வெறும் கையால் பிடித்துவிடும். ஆபிரிக்கர்கள் ஆந்தையைக் கண்டால் ஒரு கட்டை தூரம் ஓடிவிடுவார்கள்.

ஆந்தை அவர்களுக்கு கெடுதல் விளைவிக்கிறது என்று முழு மூச்சுடன் நம்பினார்கள். ஒருமுறை ஆந்தையினால் அந்த கிராமத்தில் பேதி வந்து அரைவாசிப் பேர் இறந்து போனார்களாம். இன்னொரு தடவை உரிய நேரத்துக்கு மழை வராமல் பயிர்கள் எல்லாம் அழித்து விட்டனவாம். முழு கிராமமும் ஒன்றுகூடி இது பற்றி நீண்ட நேரம் விவாதம் செய்தது. முடிவாக குடிசையுடனேயே சேர்த்து ஆந்தையையும் குஞ்சுகளையும் கொளுத்தி விடுவது என்று தீர்மானமாகியது.

இந்த செய்திகள் அவ்வப்போது எங்களுக்கு மெண்டே சிறுவர்கள் மூலம் வந்து கொண்டிருந்தன. எனக்கு தெரிந்த கொஞ்சம் மெண்டே பாஷையை வைத்து அவர்கள் கூறுவதை புரிந்து கொண்டேன். இதை நான் டேமியனுக்குச் சொன்னதும் அவன் 'ஸ்வீட் ஜ“ஸஸ்' என்று தலையிலே கைவைத்து கத்தினான். ஆந்தைகளைப் பற்றி அவனுடைய ஞானம் அபாரமானது. தீவிர ஆராய்ச்சிகள் செய்து சயன்ஸ் பத்திரிகைகளில் கட்டுரைகள் எல்லாம் எழுதியிருக்கிறான். அவனால் இந்த அநீதியை ஜ“ரணிக்க முடியாமல் இருந்தது. எப்படியும் அந்த ஆந்தைகளை காப்பாற்றுவது என்று அவன் மனதிலே தீர்மானித்துக் கொண்டான்; இதற்கு அவன் என் தயவையோ, கட்டளையையோ எதிர்பார்க்கவில்லை.

கடவுளால் படைக்கப்பட்ட அத்தனை ஜ“வராசிகளிலும் மிகவும் அற்புதமானது ஆந்தை என்பது அவன் கருத்து. முதலாவதாக, பறவை இனத்திலே அது ஒன்றுதான் இரவு பட்சிணி. வெளவால் பறவையல்ல, மிருகம். ஆகவே அதைக் கணக்கிலே சேர்க்கக்கூடாது. இரண்டாவதாக கண்களை திருப்பாமல் கழுத்தை மட்டும் நூற்றியம்பது டிகிரி திருப்பி தன் இரையைத் தேடும் வல்லமை படைத்தது. வேறொரு மிருகத்துக்கோ பறவைக்கோ இந்த சலுகை கிடையாது. கண்கள் பெரிதாக இரவிலே பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். காதுகள் இரண்டும் ஒன்று மேல் பார்த்தும் மற்றது கீழ் பார்த்தும் இருட்டிலே திறையறிவதற்கு ஏற்றமாதிரி அமைந்திருந்தன. அது மாத்திரமல்ல, உடம்பின் ஒவ்வொரு பகுதியும் ஒலியை வாங்கி திசையறிவதற்கு தகுந்தமாதிரி இதற்கு அமைக்கப்பட்டிருந்தது.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:46 pm


இது பறக்கும் விசித்திரத்தை விஞ்ஞானிகள் இன்னும் முற்றிலும் கற்றுத் தேறவில்லை. மற்றப் பறவைகள் பறக்கும்போது சடசடவென்று செட்டைகளை அடித்து பறக்கும். இரவு வேளைகளில் இப்படி ஆரவாரம் செய்து பறந்தால் இதனுடைய இரை ஓடி மறைந்து கொள்ளும் அபாயம் உள்ளது. ஆகவோ, இது பட்டம் பறப்பதுபோல் ஒருவித சத்தமும் போடாமுல் விசுக்கென்று இறாஞ்சி விழுந்து இரையைப் பிடித்துவிடும். கும்மிருட்டிலே காதுகளின் ஒலியை மட்டுமே வைத்து எங்கோ புதருக்குள் ஓடும் எலியை வந்து லபக்கென்று பிடித்துவிடும் அற்புதம் வேறு எந்த பறவையிடமும் கிடையாது.

ஆனால் இதனிலும் விசித்திரம் அது சாப்பிடும் முறைதான். பிடிக்கும் இரையை அது அப்படியே முழுசாக விழுங்கிவிடும். மற்றப் பறவையினம்பேல இரையை கால நகங்களிலே கௌவிப் பிடித்து அலகினால் கொத்தித் கிழித்து சாப்பிட இதற்குத் தெரியாது. சில பெரிய ஆந்தைகள் ஒரு சிறிய முயற்குட்டியைக்கூட அப்படியே முழுசாக தூக்கி விழுங்கி விடுமாம். உண்ட சிறிது நேரத்தில் உணவு செரித்தபின் வேண்டாத எலும்புகளையும் கழிவுகளையும் அப்படியே துப்பிவிடும்.

இதிலே அதிசயம் என்னவென்றால் ஆபிரிக்க ஆந்தைகள் விவசாயத்திற்க செய்யும் தொண்டு அளப்பரியது. மனிதன் பாடுபட்டு விளைவித்த தானியங்களைச் சேதமாக்கும் சுண்டெலிகள், எலிகள், பெருச்சாளிகள் போன்ற எல்லாவற்றையும் ஆந்தைகள் தேடிப்பிடித்து சாப்பிட்டுவிடும். ஆந்தைகளினால் மனிதனுக்கு நன்மையே ஒழிய ஒருவித தீங்கும் கிடையாது. டேமியன் செய்த ஆராய்ச்சியின் பிரகாரம் ஆந்தைகள் இல்லாவிட்டால் ஆபிரிக்காவின் உணவுப் பற்றாக்குறை இருபதுவீதம் அதிகரித்து விடுமாம்.

இதுதான் டேமியனுக்கு பொறுக்க முடியாததாக இருந்தது. அவனை என்னால் தடுக்க முடியாது. ஆகவே உதவி செய்வதாகத் தீர்மானித்தேன். இந்தக் காரியத்தில் அவன் பிடிபட்டால் என்ன நடக்கும் என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது. ஆனால் எங்களுடைய ஐந்து வருட கொலபஸ் ஆராய்ச்சி மட்டும் தொடர முடியாமல் ஸ்தம்பித்து போகும் என்பதில் எனக்கு ஒருவித சந்தேகமும் இல்லை.

அன்றிரவு நடுநிசியளவில் டேமியன் கையுறைகளையும், முதுகுப் பையையும் மாட்டி, வளையம் வைத்த லைட்டையும் தலையிலே பொருந்திக் கொண்டு துணிச்சலுடன் புறப்பட்டான். நான் வேவுபார்த்துக்கொண்டு வெளியிலேயே காவல் இருந்தேன். ரகஸ்ய சடங்கு குடிசையை அடைந்ததும் டேமியன் தலையில் மாட்டிய லைட்டை இயக்கினான். அதிர்ஷ்ட வசமாக தாய் ஆந்தையையும், குஞ்சுகளும் அங்கேயே இருந்தன. திடீரென லைட்டைக் கண்டு திகைத்திருந்த தாய் ஆந்தையை முதலில் பிடிப்பதில் டேமியனுக்கு ஒருவித சிரமமும் இருக்கவில்லை. பிறக இரண்டு குஞ்சுகளையும் பிடித்து முதுகுப் பையிலே மரம் ஒன்று சிறிது தூரத்திலேயே இருந்தது. டேமியன் அந்த மரத்தில் சறுசறுவென்று ஏறி ஆந்தையையும் குஞ்சுகளையும் வெகு கவனமாக ஒரு மரங்கொத்திப் பொந்தில் தெரியாமல் இருவரும் வெகு வாதுவாக திரும்பி வந்து படுத்து விட்டோம்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே சத்தம் கேட்டு விழித்துக்கொண்டோம். ஆரவாரம் காதைப் பிளக்க வெளியே வந்து பார்த்தோம். தலைக்குடிமகனை கயிற்றுப் பல்லக்கில் தூக்கியபடி பல்லக்கு காவிகள் ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தனர். மலைபோன்ற உடம்பை நிமிர்த்தி வைத்து இடமும் வலமும் பார்த்தபடி போனார் தலைக்குடிமகன்.

சூரன்போர் திருவிழாவில் சூரன், சிங்கமுகன் பானுகோபன் என்று மாறிமாறி வரும். உடம்பு ஒன்று; தலைமாத்திரம்தான் மாறும். சகடையில் வைத்து தள்ளிவரும்போது புன்னாலைக்கட்டுவன் தச்சனார் பின்னாலிருந்து சூரனுடைய காதுகளை இறுக்கிப் பிடித்து இடமும் வலமும் ஆட்டியபடியே இருப்பார். அதற்கேற்றபடி கைவாளும் மேலும் கீழும் ஆடும். நாங்கள் சூப்புத்தடியை நக்கியவாறு பயத்துடன் இந்த வைபவத்தை பார்த்துக்கொண்டு இருப்போம். அப்ப 'பானுகோபன், பானுகோபன்' என்று சத்தம் கேட்கும். சூரனுடைய மகன் பதுமகோமளைக்கு பிறந்தவன். சிறுபிள்ளையாக இருந்தபோது கோபத்தில் சூரியனையே பிடித்து தொட்டில் காலுடன் கட்டியவன். தலையை இரண்டு பக்கமும் ஆட்டியபடி வருவான். நாங்கள் பயத்துடன் பெரியவர்கள் கையைப் பிடித்துக் கொள்வோம்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:46 pm

அதுபோலத்தான் தலைக்குடிமகன் வந்து கொண்டிருந்தார். அறுத்துக்கொண்டோடிய மாடுகள்போல முன்னுக்கும் பின்னுக்குமாக சனங்கள் தலைதறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆரவாரம் காதைப் பிறந்தது. பெரியவர்களும், சிறுவர்களும், பெண்களுமாக கூட்டம். எங்கள் ஊரில் சொக்கப்பானை எரிப்பதுபோல் அந்தக் குடிசை எரிந்து கொண்டிருந்தது. தலைக் குடிமகன் இந்தச் சொக்கப்பானை வைபவத்தை நேரிலே மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் அடைப்பைக்காரரும, பல்லக்கு காவிகளும் மிகவும் பவ்யமாக நின்று கொண்டிருந்தனர். நாங்களும் ஒன்றும் அறியாத பூனைகள்போல போய் அந்த ஆரவாரத்தல் கலந்து கொண்டோம்.

   திரும்பி வரும்போது இந்த மூட நம்பிகைக்யைப் பற்றி டேமியன் தாங்கியபடியே வந்தான். முழுக்க முழுக்க மனிதனுக்கு நன்மையே செய்யும் ஒரு பறவையை கெட்ட சகுனமாக கருதுவது எவ்வளவு மடமை என்றெல்லாம் உரத்து பேசியபடியே எங்கள் குடிசைக்கு கிட்ட வந்தான். அப்படி வந்தவன் சடுதியில் வாயை திறந்தபடியே மூடாது 'ஆ'வென்று சிறிதுநேரம் வைத்துக் கொண்டிருந்தான். கண்கன் நிலைகுத்தி நின்றன, பிறகு ஸ்வீட் ஜ“ஸஸ்' என்றான். நாங்கள் பாடுபட்டு கட்டிய மூங்கில் கூடு திறந்து கிடந்தது. கொலபஸ் குரங்குகள் எல்லாம் மாயமாய் மறைந்து விட்டன.

   நான் மாடக்கூடலில் நரியைப் பரியாக்கிய அற்புதம் இங்கேயும் நடக்கிறதா? கூட்டிலே அடைத்து வைத்த குரங்குகளை மறைந்த மாயம் என்ன? ஒன்றையொன்று சாப்பிட்டு விட்டனவா? பூமியிலே புதைந்து விட்டனவா? காற்றிலே கரைந்து விட்டனவா? 'கறையான் தின்றதோ, கள்வன் கவர்ந்து சென்றானோ?' என்று தர்பார் ராகத்தில் வாய்விட்டு அழுதோம். குரங்குகளைக் காணவில்லை; காரணமும் தெரியவில்லை. டேமியன் கூட்டுக் கதவை சரியாக கட்டவில்லை என்பது என் வாதம். குரங்குகளே கதவைத் திறந்து விட்டன என்பது அவனுடைய கட்சி.

   குனிந்த தலையுடன் இருவருமாக தலைக்குடிமகனிடம் போய் எங்களுக்கு நேர்ந்த கதியை முறையிட்டோம். அவருடைய உதட்டிலே புன்சிரிப்பு. குரங்கு சாஸ்திர விற்பன்னரை நோக்கி அவர் பார்வை திரும்பியது. அவர் ஓடோடி வந்து தலைக்குடிமகன் பக்கத்திலே நின்று கொண்டார். இப்போது இரண்டாவது 'எபிஸோட்' தொடங்கியது. அவருடைய கவலையெல்லாம் இன்னொரு தடவை குரங்கு பிடிக்கும்போது எவ்வளவு வருமானம் அதிகரிக்கும் என்று கணிப்பதிலேயே இருந்தது. முந்திப் பேசிய விலைப்படி இன்னொரு முறை குரங்கு கூட்டத்தை பிடிப்பதற்கு சம்மதம் தந்தார். எவ்வளவு கெஞ்சியும் அவர் விலையை குறைக்கவில்லை. பட்டம் பிய்த்துக் கொண்டு போவதுபோல எங்கள் பட்ஜெட் தறிகெட்டு போவதை செய்வதறியயாது பார்த்துக் கொண்டு நின்றோம்.

   டேமியன் உலகம் கவிழ்ந்ததுபோல இருந்தான். ஆந்தையினால் கிராமத்துக்கு ஏற்பட வேண்டிய கெடுதல் எங்களுக்கு வந்துவிட்டது என்று அவன் நினைத்தான். எனக்கு இது அதிசயமாக இருந்தது. நான் "எங்கள் கவனக்குறைவால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஆந்தை என்ன செய்யும்? ஆந்தை இறக்கவில்லை; ஆனால் அது இறந்து விட்டதென்று கிராம மக்கள் நம்புகிறார்கள். அவர்களுக்க நஷ்டத்திற்குப் பதிலாக இப்போது இரட்டிப்பு லாபம் அல்லவா கிடைக்கிறது? அவர்களைப் பொறுத்த மட்டில் ஆந்தை அவர்களுக்கு ஒரு அதிர்ஸ்ட தேவதைதான்" என்றேன். டேமியன் ஒன்றுமே பேசவில்லை. துண்டுவிழும் கணக்கை எப்படி சமாளிப்பது என்ற விசாரத்தில் மூழ்கிக் கிடந்தான். அவனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

   அன்றிரவு பாதுகாப்பான மரப்பொந்திலிருந்து ஆந்தையுடைய அற்புதமான கூவல் 'க்கூம், க்கூம்' என்று டேமியனுக்கு நன்றி கூறுகூதுபோல கேட்டது. அப்படியான ஒரு சோகமான இனிமையான நான் என் வாழ்நாளில் கேட்டதேயில்லை. மனிதர்களின் அறியாமையை நினைத்து அதனுடைய சோக கீதம் இருந்திருக்கலாம்; அல்லது ஆபிரிக்காவின் உணவு உற்பத்தியில் தனக்கிருக்கும் பங்கை பறை சாற்றுவதாகவும் இருந்திருக்கலாம். அந்த தாலாட்டில் எப்பொழுது தூங்கினேன் என்பது எனக்கு நினைவு இல்லை.

   * * *




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:47 pm

9. 'சிலம்பு' செல்லப்பா

   'சிலம்பு' செல்லப்பா என்று முகத்துக்கு முன்னாலும், 'அலம்பல்' செல்லப்பா என்று முதுகுக்குப் பின்னாலும் அழைக்கப்படும் செல்லப்பாவை நான் முதன் முதலில் நாலு வருடங்களுக்கு முன்புதான் சந்தித்தேன். மறக்க முடியாத சந்திப்பு அது. பல வருடங்களாக வெளிநாடுகளிலேயே உத்தியோகம் பார்த்துவந்த நான், ஒரு ப்ரொஜெக்ட் விஷயமாக ஓர் ஆறுமாத காலம் கொழும்பில் வேலை பார்க்க வேண்டிவந்தது. அந்த சமயத்தில்தான் என் பழைய நண்பர் சண்முகத்தின் தரிசனமும் அவர் மூலம் செல்லப்பாவின் நட்பும் எனக்கு கிட்டின.

   ஆறு மாதங்களுக்கு ஒரு தன்வீடு எடுத்து இருப்பது எனக்கு தோதுப்படவில்லை. ஒரு வாரத்திற்கு மேல் ஹோட்டல் சாப்பாடும் தாங்காது. காலிரோடும், சென்ற ரோரன்ஸ் வீதியும் சேரும் சந்திப்பில் நின்றபடி ஒரு மாலை நேரம் இதுபற்றி நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போதுதான் என் குருகுலவாச நண்பரான சண்முகம் தென்பட்டார். அந்தக் காலத்திலேயே என்னைத் 'தம்பி' என்று பாசத்தோடு அழைத்தவர்; இருபது வருடம் ஆகியும் வெகு சுலபமாக என்னை அடையாளம் கண்டுகொண்டு விட்டார்.

   அதன் விளைவுதான் என்னுடைய 'சமறி' வாழ்க்கை. விடாப்பிடியாக கையைப் பிடித்து அழைத்து வந்துவிட்டார் சண்முகம். அவருடைய உடம்பைப் போலவே அவருக்கு தாராளமான மனசு. அவர்தான் எனக்கு 'சிலம்பு' செல்லப்பாவை அறிமுகம் செய்து வைத்தவர். 'சிலம்பு' என்ற அடைமொழி வந்த விருத்தாந்தத்தை நான் இங்கே விளக்கத் தேவையில்லை. அந்த மகத்தான காரியத்தை நீங்களே ஏற்கனவே செய்து முடித்திருப்பீர்கள். சிலப்பதிகாரத்திற்கு நடமாடும் authority செல்லப்பா தான். இளங்கோ அடிகள் உயிரோடு இருந்திருந்தால் அவரே வந்து இவரிடம் சில ஐயங்களை தீர்த்துக் கொண்டிருப்பார்.

   செல்லப்பாவுக்கு வயது 45க்கு மேலே இருக்கும். நித்தமும் ஏகாசி விரதம் அநுட்டிப்பார் போன்ற மெலிந்த தோற்றம். நாலு நாள் தாடி. வெள்ளை மயிரும் கறுப்பு மயிரும் சரிசமமாக பங்குபோட்டு அவர் தாடையிலே படர்ந்திருக்கும். உணர்ச்சிவசப்படும் மெல்லிய நீண்ட மூக்கு; ஆழ்ந்து யோசிக்கும் கண்கள். வெற்றிலைப் பிரியர். நாறப்பாக்கு, பிஞ்சுப்பாக்கு, களிப்பாக்கு என்று அலங்காரமாக அடுக்கி வைத்து, தன் கையால் žவி, வாய்க்கு ஒய்வு கொடுக்காமல் மென்று கொண்டேயிருப்பார். பேசத் தொடங்கினார் என்றால் பாத்திரம் அலம்புவது போல நீட்டுக்கு பேசிக்கொண்டே போவார். அவருக்கு வேண்டாதவர்களை 'பிரேக் இல்லாத சைக்கிள்' என்று அவரை வர்ணித்தால் அதை நீங்கள் கண்டு கொள்ளக் கூடாது.

   தமிழ் தினசரி ஒன்றில் கடந்த பதினைந்து வருடங்களாக வேலை பார்த்து வந்தார். அவர் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிய 'சிலம்பின் சிறப்பு' கட்டுரைகள் புத்தகமாக வந்திருந்தது. இலக்கியத்தில் இடைவிடாத ஆர்வம். தானும் தன் வெற்றிலையுமென்று இருப்பார். சிலப்பதிகாரத்தில் அவருடைய ஈடுபாட்டை கேள்விப்பட்ட உடனேயே பள்ளி நாட்கள் தொட்டு எனக்கு இருந்து வந்த ஒரு சந்தேகத்தை கேட்டுவிடுவதென்று தீர்மானித்துக் கொண்டேன். சாப்பிடும்போதுதான் இதற்கு சரியான வசதி. பல விவாதங்களும், போர்களும், சிரிப்புகளும் அதே சாப்பாட்டு மேசையை சுற்றியே அங்கே நடைபெற்றன. நான் உண்மையில் என்னுடைய ஐயத்தை கிளப்பிய தன் காரணம் அவருடைய ஆழ்ந்த புலமையை சோதிப்பதற்காகவும் இருக்கலாம்.

   "சிலப்பதிகாரத்தில், புகார்க் காண்டத்தில் வரும் மங்கல வாழ்த்துப் பாடல், 'திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!' என்று தொடங்குகிறது. அதற்குப் பிறகுதான் 'ஞாயிறு போற்றுதும்' என்று வருகிறது. இது என்ன நியாயம்? உயிர்களுக்கெல்லாம் ஆதாரம் சூரியன் அல்லவா? சூரியன் இல்லாவிடில் சந்திரன் ஏது? சந்திரனை முன் வைத்து, சூரியனை பின் வைத்தது சரியா? என்பதுதான் என் ஐயம்.

   செல்லப்பா சிறிது நேரம் என்னையே உற்றுப் பார்த்தார். அவர் என்னுடைய கேள்விக்கு அவகாசம் வேண்டி நேரத்தை கடத்தவில்லை. 'இவர் என்னைச் சோதிக்கிறாரோ?' என்பது போலத்தான் அந்த பார்வை இருந்தது. அதை நிச்சயம் செய்துகொண்டு செல்லப்பா கதைக்கத் தொடங்கினார்.

   "சிலப்பதிகாரத்தை படிக்கும்போது அவசரம் கூடாது. அதில் சொல்லாத விஷயங்களே இல்லை. இந்தக் கேள்விக்குப் பதில் பின்னால் 'அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் வருகிறது.



 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:47 pm


"நீங்கள் ஒரு நண்பர் வீட்டுக்கு போகும்போது அவர் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி போகிறீர்கள் அல்லவா? குழந்தைக்கு செய்வது பெற்றோர்க்கு செய்வதுபோல. பெருங்காப்பியங்கள் பாடும்போது விநாயகருக்குத்தானே முதல் வணக்கம்; மற்றக் கடவுளருக்கு பின்னால்தான். பிள்ளையை வணங்கினால் பெற்றோரை வணங்கியதற்கு சமம்.

"சூரியன் கடலிலே மறைந்து விட்டான். பூமாதேவி தன் ஆசைநாயகனை காணாது வருந்துகிறாள். 'கதிர்கள் எல்லாம் பரப்பி என்னை ஆள்பவனை திடீரென்று காணவில்லையே! நிலவுக்கதிர்களை விரித்து ஒளிசெய்யும் என் செல்வன் சந்திரனையும் காண்கிலேனே!' என்று நிலமடந்தை புலம்புகிறாள்.

"பூமியை அரசியாகவும், சூரியனை அரசனாகவும், சந்திரனை அவர்கள் செல்வனாகவும் கண்ட புலவருடைய கற்பனை இது.

விரிகதிர் பரப்பி, உலகம் முழுதாண்ட ஒருதனித் திகிரி உரவோன் காணேன்; அங்கண் வானத்து, அணிநிலா விரிக்கும் திங்கள் அம் செல்வன் யாண்டுளன் கொல்?

"இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் 'திங்களைப் போற்றுதல்?' முதலடியாக வந்தது பெரிய குற்றமாகத் தெரியாது. எமக்கு முன் வந்துபாடி வைத்துப் போன முனிவர்கள். தியானத்தில் இருந்துவிட்டு பாடியவை இவை. ஒவ்வொரு வார்த்தையையும் ஆழ்ந்து சிந்தித்த பின்தான் அவர்கள் பாடலை இயற்றினார்கள்" என்றார்.

செல்லப்பாவின் புலமையில் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்துக்கு நான் எனக்குள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

'சமறி' வாழ்க்கை எனக்கு புதுமையாகவும், வசதியாகவும் இருந்தது. சமைத்துப் போட ஒரு நல்ல சமையல்காரர் இருந்தார்; வீட்டைக் கூட்டி சுத்தமாக வைப்பதற்கு ஒரு மனுசி வந்து போகும்; ஞாயிறு தோறும் சலவைக்காரர் வருவார். எல்லாமாக அந்த சமறியில் எட்டுப் பேர் குடியிருந்தார்கள். மாதமுடிவில் கணக்குப்பண்ணி செலவை எட்டில் ஒரு பங்காக பிரித்துக் கொள்வோம். எல்லோருமே மணமுடித்த பேர்வழிகள். சிலர் மனைவியை இழந்தவர்கள்; சிலர் ஓய்வெடுத்தவர்கள்; சிலர் பிள்ளைகளின் படிப்புக்காக குடும்பத்தை பிரிந்து வந்தவர்கள்.

அங்கே பிரதானமாக மூன்று 'குரூப்கள்' இருந்தன. கடுதாசி சிளையாடி. தண்ணி அடிப்பதை தலையாய பொழுதுபோக்காகக் கொண்டது ஒன்று; அடுத்து, அலுவலகத்தில் ஓவர் டைம் செய்து வீட்டிலே வந்து நித்திரை கொண்டு தீர்க்கும் கும்பல். இது தொல்லையில்லாத, சத்தமேயில்லாத குரூப். மூன்றாவது குழுவில்தான் செல்லப்பாவும், சண்முகமும் நானும் அடங்குவோம். படங்கள் பார்ப்பது, சஞ்சிகைகள், புத்தகங்கள் படிப்பது, இலக்கிய சர்ச்சை இப்படியாக எங்கள் பொழுது போகும்.

அடுத்து வந்த ஞாயிறு ஒன்றில் சமையலறை அல்லோல கல்லோலப்பட்டது. சண்முகம் சமையற்காரனை அனுப்பிவிட்டு தானே கருவாட்டுக்கறி சமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இப்படி அடிக்கடி அங்கே சமையலறை ஆட்சி மாறும். சுதுமலையாருடைய முறைப்படி கருவாட்டுக்கறி வைப்பதில் இவர் ஒரு விண்ணர். கருவாட்டை நீளநீளமாக வெட்டி எண்ணெய்ச் சட்டியில் போட்டு 'தீய்ச்சுக்' கொண்டிருந்தார்.

கல்லோயா சாராயம் ஒரு 'பெக்' அடித்திருந்ததினால் ஒரு சாண் உயரத்தில் மிதந்து கொண்டிருந்தார். எனக்கு கனநாளாக கேட்கவேணும் என்றிருந்த 'அந்த விஷயத்தை' கேட்பதற்கு இது நல்ல சந்தர்ப்பம் போல பட்டது.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:47 pm


நாங்கள் படிக்கும்போது நாகலிங்க மாஸ்டர் தான் எங்களுக்கு ஆங்கிலம் எடுத்தவர். நேற்றுத்தான் சிவதனுசை முறித்தவர் போன்ற தோற்றம். விலத்தி, விலதிதிதான் நடப்பார். எங்கள் கிளாஸ’ல் தங்கரத்தினம் என்று ஒரு பெட்டை. நெருப்பில் சுட்ட ராசவள்ளிக் கிழங்குபோல் சிவப்பாய் இருப்பாள். எந்த நேரமும் பசலை நோய் வாட்டும் கண்கள். சண்முகத்துக்கு அப்ப காதல் செய்யும் வயசு. சும்மா இருப்பாரா? இரவும் பகலும் கண்விழித்து அவளுக்கு ஒரு காதல் வாசகம் எழுதினார். சமயம் வரும்போது கொடுப்பதற்காக 'Tale of Two Cities` புத்தகத்தின் கடைசி ஒற்றையில் ஒளித்துவைத்திருந்தார். அன்றைக்கென்று பார்த்து இவருடைய புத்தகத்தை வாங்கி பரடம் எடுத்தார் நாகலிங்க மாஸ்டர். இவருடைய காதலின் ஆழத்தையும் ஆங்கில விசாலத்தையும் காட்டுவதற்காக தீட்டப்பட்ட அந்தக் கடிதம் சமய சந்தர்ப்பம் தெரியாமல் மாஸ்டரின் காலடியில் விழுந்தது.

My dear Thangaratinam, When your father and mother went to see saparam (சப்பரம்) tonight I will come to your house.

இவ்வளவுதான் கடிதத்தின் வாசகம். மாஸ்டருக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தவிட்டது. நுனியிலே சுட்டு பதப்படுத்தப்பட்ட துவரந்தடியை எடுத்து விளாசத் தொடங்கினார். அவர் அடிக்கும் போது "இங்கலீஸ’ல் எழுதுவியா? இங்கிலீஸ’ல் எழுதுவியா?" என்று சொல்லிச் சொல்லித்தான் அடித்தார். பார்க்க பாவமாயிருந்தது. பெட்டைக்கு முன்னால் அடி வாங்குவது எவ்வளவு அவமானம்! அந்தப் பள்ளிக்கூடத்தில் இந்த Tale of Two Lovers கொஞ்ச காலமாக மூலை முடுக்கெல்லாம் இழுபறிப்பட்டது.

அந்த விவகாரத்தின் முடிவு என்ன? அதைப்பற்றித்தான் கேட்பதற்கு நான் 'சுழன்று, சுழன்று' வந்து கொண்டிருந்தேன். நான் துணிவை வரவழைத்து அவரைக் கேட்டபோது, "தம்பி, சிவப்பு பெட்டையளை நம்பக்கூடாது; அவள் சும்மா எனக்கு போக்கு காட்டினவள். பிறகு ஒரு சப்இன்ஸ்பெக்டரை முடிச்சுக்கொண்டு ஓடிப் போட்டாள்" என்று கதைக்கு முத்தாய்ப்பு வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் சமையலறையை ஆண் பிள்ளைகள் அண்ட முடியாது. சண்முகம் என்னவென்றால் கை தேர்ந்த பரிசாரகனைப்போல சமைத்து வைத்திருந்தார். அந்த மணத்துடன் அரைப்பானை சோறு சாப்பிடலாம். கருவாட்டை பல்லிலே கடித்து இழுத்து ரசித்தபோது நாலாவது பரிமாணத்துக்கு ஆளைத் தூக்கிப் போனது. 'எங்கே இப்படி வைக்கக்கற்றுக் கொண்டார்?' என்று கேட்கத் தோன்றியது. சித்திரகூட மலையில் இலக்குமணன் தன்னந்தனியாக கட்டிய பர்ணசாலையை பார்த்த ராமன் 'என்று கற்றனை நீ இதுபோல்? என்று கட்டி அணைத்து அழுதார் அல்லவா? அதுபோல் சண்முகத்தை கட்டி அணைக்கத்தான் தோன்றியது. அவர் பலூன்போல மிதந்து கொண்டிருந்த படியால் அந்த எண்ணத்தை நான் கைவிட வேண்டி வந்தது.

சாப்பிடும்போது வழக்கம்போல செல்லப்பா வந்து கலந்து கொண்டார். சாப்பாடோ நல்ல உறைப்பு. சண்முகம் சிறிது தலையை ஆட்டியபடி, கண்களிலே நீர் ஓட, சாப்பிட்டுக் கொண்டிருந்தார். தங்கரத்தினத்தன் ஞாபகம் வந்ததோ? என்னவோ? அப்படிச் சாப்பிட்டவர் சடுதியாக செல்லப்பாவின் பக்கம் திரும்பினார்.

சண்முகத்துக்கு சிலப்பதிகாரப் புத்தகத்தின் அட்டைகூட எப்படி இருக்கும் என்று தெரியாது; ஆனால் எங்கள் வாக்குவாதங்களில் உற்சாகமாக ஆலவட்டம் பிடித்து, 'சிரித்துக் கொடுத்து' கதைக்கு சுவை சேர்ப்பதுதான் அவருடைய பங்கு. சண்முகம் வாய் திறந்தால் அநேகமாக அது செல்லப்பாவை žண்டுவதற்காகத்தான் இருக்கும். கருவாட்டைக் கடிச்சு இழுத்துக்கொண்டு செல்லப்பாவை நோக்கி ஒரு கேள்விக் கணை தொடுத்தார். சண்முகம், நான் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"ஏன் ஐஸே! சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியெல்லாம் கருவாடு சாப்பிட்டிருப்பினமோ?" என்று துருவினார்.

செல்லப்பா சிரித்துவிட்டு பேசாமல் இருந்துவிடுவார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவர் வாயிலிருந்து கடைசி கருவாட்டுத்துண்டை சப்பி விழுங்கிவிட்டு, தாடையைத் தடவி, புருவத்தை நெரித்து, சண்முகம் கேட்ட கேள்விக்கு žரியஸாக பதில் சொல்லத் தொடங்கினார். கதை கேட்பதற்கு அவருக்கு முன்னால் ஆட்கள் இருந்தால் அவர் அவ்வளவு சுலபத்தில் அந்த சான்ஸை இழக்க சம்மதிப்பாரா?

"அரச வம்சத்தினர் முறையாக வேட்டையாடியதை உண்பது தர்மம் என்று வாழ்மீகியே கூறியிருக்கிறார். சிலப்பதிகாரம், வணிக குலத்தின் சிறப்பை சிதிதரிக்க எழுந்த முதல் நூல். இதிலே கானல் வரியிலே கடற்கரையில் காயப்போட்ட கருவாட்டை பறவைகள் கொத்தாமல் அழகிய பெண்கள் காத்துக்கொண்டு நின்றார்கள் என்று வருகிறது. கருவாட்டை விருப்பமுடன் தின்பவர்கள் அப்போது நிறைய இருந்திருக்கிறார்கள். ஆனால் கோவலன் உண்டானா என்பது தெரியவில்லை? அவன் மதுரைக்கு போய் கொலை படுமுன் கண்ணகி கையால் உண்ட கடைசி உணவைப் பற்றி சிலப்பதிகாரம் அழகுடன் வர்ணிக்கிறது.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:48 pm


"'குமரி வாழையின் குருத்தகம் விரித்து' கண்ணகியானவள் கோவலனுக்கு உணவு பரிமாறுகிறாள். என்ன சாப்பாடு?

கோளிப் பாகல், கொழுங்கனித் திரள்காய் வாள்வரிக் கொடுங்காய், மாதுளம் பசுங்காய் மாவின் கனியொடு, வாழைத் தீங்கனி

இவற்றுடன் சோறும் சமைத்து, பால் நெய் மோருடன் கோவலனுக்கு கடைசி முறையாக உணவு பரிமாறுகிறாள், கண்ணகி. அந்த சாப்பாடு செரிக்குமுன்பே அவன் இறக்கப்போவது அவளுக்கு அப்போது தெரியாது."

உருக்கமாக செல்லப்பா வர்ணித்ததைக் கேட்டபோது அவர் புலமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. அத்துடன் நின்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ஆனால் அதற்கு அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் தெரியாமல் போய் ஒரு கேள்வியை கேட்டு நான் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டேன்.

சண்முகம் என்னோடு ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், ஒரு வருடம் படித்தவர். 'கற்க கசடறக் கற்க' என்பதற்கிணங்க ஆறஅமரப் படிக்கவேண்டும் என்ற அசைக்க முடியாத ஆசையுள்ளவர். அந்த லட்சியத்தை சாதிப்பதற்காக ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருடம் தங்கி தன் அறிவை விருத்தி செய்தவர். அவர் எட்டாம் வகுப்பில் 'வாங்கு தேய்ச்சுக்' கொண்டிருந்தபோது நான் அவரை எட்டிப் பிடித்துவிட்டேன். அப்பவோ அவர் இளந்தாரி; என்னைத் 'தம்பி' என்றுதான் அழைப்பார். வஞ்சகமில்லாத அவருடைய உடம்பு வத்தகப்பழம் போல 'பொதுக், பொதுக்' என்று இருக்கும். எந்தக் கிளாஸ”க்கு போனாலும் கடைசி வாங்கு ஆட்சியுரிமை அவருக்குத்தான்.

அவருடைய முகம் 'பக்கீஸ்' பெட்டி வடிவத்தில் சதுரமாக இருந்தால் 'சப்பட்டை' சண்முகம் என்று ஆசையாக அழைக்கப்பட்டார். இலவசமாகக் கிடைக்கும் கோயில் தளிசைக்கு உயிரையும் கொடுப்பார். சின்னப்பெடியன் கூட சேட்டைவிடும் அளவுக்கு நல்ல மனிதர்.

அவருடைய உயரத்தையும், அகலத்தையும் பார்த்து உதைபந்தாட்ட அணியில் அவரை சேர்த்துக் கொண்டார்கள். எங்களுக்கு பெருமை. எட்டாம் வகுப்பில் இருந்து எடுபட்டவர் இவர் ஒருவரே. Right full back ஆக பதவியேற்றார். பந்து வரும் போதெல்லாம் ஓங்கி, ஓங்கி அடிப்பார். காலில் பந்து பட்டுதோ எட்டுமூலைக் கொடிபோல விண் கூவிக் கொண்டு பறந்து அடுத்த கோல் போஸ்டுக்கு கிட்டப் போய் விழும். ஆனால் பத்துக்கு ஒன்பது தடவை மிஸ் பண்ணிவிடுவார்.

அந்தக் காலத்தில் இப்படி தவறி விடுவதை 'ஓலம் விடுதல்' என்று சொல்லுவார்கள். அது 'தமிழ் வார்த்தையா, ஆங்கில வார்த்தையா' என்பது எனக்கு இன்றுவரை தெரியாது. ஒருநாள் முற்றவெளியில் நடந்த ஒரு முக்கிய மாட்ச்சில் இப்படி இவர் 'காலைத் தூக்கி ஆடி' அளவுக்கு அதிகமாக 'ஓலம் விட்டு' எங்களுக்கு தோல்வியைத் தேடித் தந்தார்.

அடுத்த நாள் காலை எங்கள் தமிழ் மாஸ்டர் வகுப்புக்குள் நுழைந்தார். அவருடைய சொண்டுகள் சிறியவை; அவருடைய எடுப்பான பற்களை மூட தைரியமில்லாதவை. அறமிஞ்சி கோபம் வந்தாலொழிய அடிக்க மாட்டார். அவர் வந்ததுமே என்றுமில்லாத வழக்கமாக பின்வரும் கந்தப்புராணப் பாடலை கரும்பலகையில் எழுதினார்:

நண்ணுதற் கினியாய் ஓலம்
ஞான நாயகனே ஓலம்
பண்ணவற் கிறையே ஓலம்
பரஞ்சுடர் முதலே ஓலம்

இதை எழுதிவிட்டு 'என்ன, சண்முகம் சரிதானே?' என்று கேட்டார். கிளாஸ் முழுக்க 'கொல்' என்று சிரித்தது. கொஞ்ச நாளாக அவர் 'ஓலம் சண்முகம்' என்று அழைக்கப்படாத ஞாபகம். காலப்போக்கில் இந்த சங்கதி மறந்து அவர் பழையபடி 'சப்பட்டை' சண்முகமானார்.

இது தவிர, மறக்கமுடியாத உற்ற நண்பராக நான் அவரை கருதுவதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவர்தான் முதன்முதலாக எனக்கு 'எப்படி சோதனைக்கு படிப்பது?' என்ற தேவரகஸ்யத்தை உபதேசித்தவர். ஒரு பெரிய அண்டாவில் சுடுநீர் நிரப்பி அதற்குள்ளே காலை வைத்து இரவு ஒரு மணி, இரண்டு மணி என்று படிப்பாராம். இந்த சூட்சுமத்தை எனக்கு மட்டுமே கூறியிருந்தார். ஆனால் இந்த வழியைப் பின்பற்றி அவர் அடைந்த வெற்றி வாகைகளை கணக்கெடுத்த நான் அதிக நாள் தொடர்ந்து இந்த முறையை அநுசரிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:48 pm


இப்படியாக பல விதங்களில் குருவாகவும், நண்பனாகவும் இரு நத சண்முகம் எனக்கு சமறி வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை நுணுக்கமாக கற்றுத் தந்தார். சமறி வாழ்க்கையின் அநுகூலங்கள் தெரியாமல் 'இவ்வளவு நாளும் என் வாழ்க்கையை வீணாக்கிவிட்டேன்' என்று வருத்தப்பட்டேன். அது சொர்க்கத்துக்கு அடுத்தபடி தின்னவேலி சூத்திரக்கிணறு சுத்துவதுபோல எல்லாம் ஒரு கிரமத்துடன்தான் அங்கே நடக்கும். பிச்சுப்பிடுங்கல் இல்லை; அதிகாலைகளில் மனைவியின் சுப்ரபாதம் போன்ற நச்சரிப்பு கிடையாது. 'தேடிச்சோறு நிதம் தின்று, பல சின்னம் சிறுக்தைகள் பேசி' சோம்பலை வளர்ப்பதற்கு இதைவிட சொர்க்கம் பூலோகத்திலே இல்லையென்று அடித்துச் சொல்லலாம்.

இந்த மாதிரி அமைதியாகப் போகும் வாழ்க்கை, சனிக்கிழமை காலை வேளைகளில் திறை மாறிவிடும். 'சனி நீராடு' என்று ஓளவையார் எழுதிவைத்தது யாழ்ப்பாணத்து கோழிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். சைக்கிள் கரியரில் உமலைக் கட்டியபடி பெரியகடைக்கு கணவாய் வாங்கப் போகும் ஜனக்கூடங்களும் இந்த நாட்களில்தான். சமறி குடும்பத்தினர் எல்லாம் வழிய, வழிய எண்ணெய் வைத்து முழுகி தங்கள் பாரம்பரிய தர்மத்தை நிலைநாட்டுவதும் இந்தச் சனிக்கிழமைகளில்தான்.

எல்லோரும் இப்படி எண்ணெய் தேய்த்து, சுவறவிட்டு 'தப்பு தப்பு' என்று தப்பி நிற்கும்போது பார்த்தால் ஏதோ மல்யுத்த விளையாட்டுக்கு தயார் செய்வதுபோலத் தோன்றும். அதிலும் சண்முகம் சப்பாத்திக்கு தட்டுவதுபோல 'தப்தப்' என்று தப்பாமல் தட்டியவாறே இருப்பார். செல்லப்பா தப்பல் பிரியல் அல்ல; அவருடைய சித்தாந்தம் சூடுபறக்கத் தேய்ப்பது. ஆகவே அவர் இந்த நாட்களில் தேய்த்து தேய்த்து கால் இஞ்சி கட்டையாகிவிடுவார்.

சண்முகம், அச்சரக்கூட்டை அரக்கிவிட்டு, வயிற்றிலுள்ள சுருக்கங்களை இழுத்து நெளிவெடுத்து எண்ணெய் தேய்ப்பது பார்க்க அம்சமாக இருக்கும். முன்னொரு காலத்தில் ஒரு பிரம்மாண்டமான யாவாரி நல்லூரில் இருந்தாராம். அவருடைய வயிற்று மடிப்புகளை கலைத்து எண்ணெய் பூச இரண்டு பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தாராம். ஒருமுறை அவருடைய வயிற்று மடிப்பை குலைத்த போது தேரை ஒன்று துள்ளிப் பாய்ந்ததாம், அப்படித்தான், சண்முகம் மடிப்புகளை விரித்து விடும்போது நான் கண்களை ஆவலோடு மேயவிட்டு காத்துக் கொண்டிருப்பேன். ஆனால் இந்த அற்புதமான மத்தியான ஆர்ப்பாட்டங்கள் என்னுடைய ஒரு மடைத்தனமான கேள்வியால் ஒருநாள் சரிந்து வீழ்ந்தன.

சாலிவாகனன் என்று ஒரு பிராம்மணச் சிறுவன். சிக்கலான வழக்குகளுக்கு தீர்ப்புக் கூறுவதில் வெகு சமர்த்தன். அரசன் கைவிட்ட ஒரு கேஸை எடுத்து அதிசாமர்த்தியமாக தீர்ப்பு வழங்கி அரசனுடைய கோபத்துக்கு ஆளாகியவன்.

சாகக் கிடந்த ஒரு வைசியன் தன் நாலு பிள்ளைகளையும் அழைத்து தான் இறந்த பிறகு தன் திரவியம் எல்லாவற்றையும் தன்னுடைய கட்டில் காலின் கீழ்வைத்திருக்கும் குறிப்பின்படி பகிர்ந்து கொள்ளும்படி கூறி இறந்துவிட்டான். ஒரு கட்டில் காலின் கீழ் உமியும், ஒரு காலின் கீழ் மண்ணும், மற்றதின் கீழ் சாணமும், கடைசிக் காலின் கீழ் ஒரு பொற்காசும் இருந்ததை கண்டார்கள். இந்த குறிப்பின்படி மன்னன்வடத் தீர்ப்பு கூறு முடியவில்லை. ஆனால் சாலிவாகனன் அந்தக் குறிப்புகளை சரியாக உணர்ந்து முதல் பிள்ளைக்கு நெல்தானியமும், மற்றவனுக்கு நிலமும், அடுத்தவனுக்கு மாடுகளும், கடைசிப் பிள்ளைக்கு தங்க நகைகளுமாகப் பிரித்து கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கினானாம். இப்படி நீதி வழுவாத மூதாதையரைக் கொண்ட நாட்டின் வழிவந்த பாண்டியன் நெடுஞ்செழியன் செய்த காரியம் அட்டூழியமாகப் பட்டது. இதைச் சொல்லப் போய் தான் எனக்கு ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது.

"பாண்டியன் மன்னன் ஊடலில் இருக்கும் தேவியைத் தணிப்பதற்காக அவளுடைய அந்தப்புரம் நோக்கி வேகமாகப் போகிறான். அந்த நேரம் பார்த்து பொற்கொல்லன் வந்து சிலம்பு திருடிய கள்வனைப் பற்றிய விபரம் சொல்கிறான். அதற்கு அரசன், தன் அவசரத்தில் நிதானம் இழந்து 'கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு' என்று கூறி விடுகிறான். ஓர் அரசனுடைய தலையாய கடமை நீதிவழுவாது ஆட்சி புரிவது. இங்கே அந்த நீதித்துறை அமைச்சையே வெறும் ஊர்க்காவலரிடம் கொடுத்து விடுகிறான்.

"இரண்டாவதாக, கோவலனிடமிருந்து ஊர்க்காவலர் பிடுங்கி வந்த சிலம்பை அரசியாருடைய சிலம்புடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம்; அரசன் செய்யவில்லை. ஓசையை ஒத்துப் பார்த்திருக்கலாம், அதுவுமில்லை. சிலம்பின் மூட்டுவாயை திறந்து உள்ளிருக்கும் பரல்கள் முத்தா? மாணிக்கமா? என்றாவது ஆராய்ந்திருக்கலாம்; அதையும் செய்யவில்லை.

"சரி கடைசியில் நடந்ததைப் பார்ப்போம். விரித்த குழலும் கையில் தனிச்சிலம்புமாக பாண்டியன் சபையில் நுழைகிறான், கண்ணகி. அந்தச் சமயத்திலாவது அரசன் நிதானமாக கோபலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பை தன் அதிகாரிகளிடம் கொடுத்து விசாரித்திருக்கலாம், இல்லையா? மாறாக இந்த ஒரே evidence ஐயும் கண்ணகியிடம் கொடுக்க அவள் சபை நடுவே அதை உடைத்து வீசுகிறாள். இதுதான் நீதி வழுவா நெறிமுறையா?" என்று நான் மூச்சு விடாமல் ஆவேசத்துடன் சொல்லி நிறுத்தினேன்.

செல்லப்பாவுக்கு கோபம் வந்து நான் இதற்கு முன்பு கண்டதில்லை. சண்முகம் எவ்வளவு žண்டினாலும் சிரித்துவிட்டு போகும் அவர் என்மீது எரிகொள்ளிபோல் பாய்ந்தார். "என்ன, நான் கடந்த இருபது வருடங்களாக இதைத்தான் படிக்கிறேன்; எழுதுகிறேன்; சிந்திக்கிறேன். நேற்று வந்த உமக்கு அவ்வளவு தெரியுமா? அரையும், குறையுமாய் படித்துவிட்டு ஆகாயத்தில் குதிக்கிறீரே? சிலப்பதிகாரத்தின் சாரம் ஒருவர் தன் ஆயுளில் படித்து அறியக் கூடியதோ?




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:48 pm


"வழக்குரை காதையில் சொல்லியுள்ள கடைசி செய்யுளை படித்துப் பாரும். தீர விசாரிக்காம அவசரத்தில் செய்த காரியம் பாண்டியன் மனதை நெருடிக் கொண்டே இருந்தது. தான் செய்தது பெருங்குற்றம் என்பதை அவன் ஏற்கனவே உள்ளூர உணர்ந்திருந்தான். காதல் மயக்கத்தில் ஒரு கணம் அறிவிழந்து விட்டான். அது எவ்வளவு பாரதூரமான நிகழ்ச்சியாக உருவெடுத்துவிட்டது. 'ஒரு பெண் விரித்த கூந்தலும், நீர்வழிந்த கண்களுமாக, கையில் தனிச் சிலம்புடன் வந்திருக்கிறாள்' என்றதுமே பாண்டியனுக்கு தான் நீதி தவறியதும், தன் முடிவுகாலம் நெருங்கியதும் தெரிந்து விடுகிறது. அவன் பிராயச்சித்தமாக தன் உயிரைக் கொடுத்தான்; கோப்பெருந்தேவியை பலி கொடுத்தான்; மதுரை மாநகரத்தையே தீக்கிரையாகக் கொடுத்தான்.

"மெய்யிற் பொடியும், விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்­ரும் - வையக்கோன் கண்டனவே தோற்றான், அக்காரிகைதான் சொற் செவியில் உண்டளவே தோற்றான் உயிர்."

"இன்ன குற்றத்திற்க இன்ன தண்டனை என்று வரைமுறை உண்டு. பாண்டியன் அநுபவித்த தண்டனையோ மகா கொடியது. இதிலும் பார்க்க வேறு என்ன ஐயா வேண்டும்?" இப்படிக் கோபாவேசமாகச் சொல்லிக் கொண்டே கையை துவாலையில் வேகமாகத் துடைத்து கொண்டார். பிறகு துணியை மேசைமீது விசுக்கென்று வீசிவிட்டு போய்விட்டார்.

எனக்கு நாதாளி முள் குத்தியபோல சுருக்கென்றது. 'ஏன்டா இப்படிக் கேட்டோம்? சாதுவான இந்த மனுசன் சாரைப் பாம்புபோல என்மேல் žறி விட்டாரே!' என்று வருத்தப்பட்டேன்.

சண்முகத்துக்கு தெரியாத பூர்வாங்கமே கிடையாது. மனைவியையும், மகளையும் பிரிந்து செல்லப்பா சமறியில் வாழும் காரணத்தை அவர் ஒருநாள் எனக்கு விளக்கினார்.

அப்ப செல்லப்பாவின் மகளுக்கு பதினான்கு வயதிருக்குமாம். ஒரே மகள். சில்லறைக் காசைக் கிலுக்கியதுபோல எப்பவும் சிரித்தபடியே இருப்பாள். இவரை எட்டியெட்டி கொஞ்சுவாள். அவள்மேல் இவரும் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஒருமுறை கொபம்பிலிருந்து விடுப்பில்போய் இவர் நின்றபோதுதான் அது நடந்தது. அவர்கள் வீட்டு வேலியில் 'ஓஸோன்' ஒட்டை போல ஓர் ஒட்டை. அந்தப் பொட்டு வழியாக அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்த இவருடைய மகள் பக்கத்து வீட்டுப் பெடியனோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டாள். ஆத்திரத்தில் மதிகெட்டுப்போன செல்லப்பா அவள் கன்னத்தில அஞ்சு விரலும் பதிய அறைந்துவிட்டார். அவள் திடுக்கிட்டுவிட்டாள். பிறந்த நாளிலிலிருந்து அவளை அணைப்பதற்கு மட்டுமே தொட்ட கை அது. அவளால் நம்பவே முடியவில்லை. 'பட்சமுள்ள அப்பா, பட்சமுள்ள அப்பா' என்று கிழமை தவறாமல் கடிதம் எழுதியவள் பிறகு எழுதவேயில்லை; கதைக்கவுமில்லை. அவர் கொழும்பில் வீடு பார்த்த பிறகும் வர மறுத்து விட்டாள். தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு ஒரு குழந்தையின் நட்பை விகாரப்படுத்தியதற்காக செல்லப்பா தன்னை பெரிதும் வருத்திக் கொண்டார்.

சிலப்பதிகாரத்தை மட்டுமே நெங்சிலே சுமக்கிறார் என்று நான் நினைத்திருந்த செல்லப்பா இப்படி ஒரு பாரத்தையும் தாங்குகிறார் என்ற விஷயம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கன்னத்திலே ஒரு தட்டு தட்டியதற்காக ஐந்து வருடங்களாகியும் அவள் கதைக்கவில்லை. எவ்வளவு பெரிய தண்டனை! அப்போதுதான் இனிமேல் எங்கள் சம்பாஷணைகளில் 'சிலப்பதிகாரம்' தவறியும் புகுந்துவிடாமல் பார்க்க வேண்டுமென்று நான் சங்கல்பம் செய்துகொண்டேன்.

யேசு ஆணவர் கடைசி உணவு அருந்தியபின் தன் பிரதம žடரான பீட்டரைப் பார்த்து "என் அன்புக்குரியவனே, இன்றிரவு சேவல் கூவுமுன் நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய்" என்று கூறினார். பீட்டர் "அது நடக்காத காரியம்" என்று சங்கல்பம் செய்து கொண்டார். ஆனால் யேசுபிரான் உரைத்த பிரகாரம் பீட்டர் மூன்றுதரம் மறுதலிக்க வேண்டி வந்தது அல்லவா?

அதுமாதிரி இந்த விஷயத்திலும் நான் எடுத்த சங்கல்பம் விரைவிலேயே தவிடு பொடியாகியது. ஆனால் குற்றவாளி நான் அல்ல.

இந்த சொற்ப காலத்தில் கிடைத்த அற்புதமான சிநேகிதத்தை அநியாயமாக இழப்பது எனக்கு வருத்தமாக இருந்தது. அவர் செய்த குற்றத்திற்கு அவருக்கு கிடைத்த தண்டனை அதீதமானதுதான். ஆனால் நான் செய்த மகாபாபம் என்ன? என்னை அறியாமல் ஒரு மெல்லிய நரம்பை உரசிவிட்டேன் போலத் தோன்றியது. அந்தச் சம்பவத்திற்கு பிறகு செல்லப்பா திண்ணையில் காயப் போட்ட தேங்காய் மூடிபோல எட்டிப் போய்விட்டார். என்னுடன் முகம் கொடுத்து பேசவுமில்லை; பழகவுமில்லை. முன்புபோல் சத்தம்போட்டு எங்களோடு கதைப்பதற்கும், சிரிப்பதற்கும் எதோவொன்று அவரைத்தடுத்து வந்தது.

என்னுடைய பயணச்žட்டு வந்துவிட்டது, இன்னும் சில நாட்களே இருந்தன. ஒரு மத்தியான வேளை நாங்கள் மூவரும் மேசையில் வந்து அமர்ந்தோம். மற்றவர்கள் சாப்பிட்டுவிட்டு சிறு தூக்கம் போட போய்விட்டார்கள். நாங்கள் சாப்பிட்டு முடியுந்தறுவாயில் சமையல்காரன் தயிர் கொண்டுவந்து வைத்தான். தயிர் இல்லாவிட்டால் எனக்கு சாப்பிட்டது போலவே இருக்காது. எல்லோருக்கும் அது தெரிந்த விஷயம். செல்லப்பா ஒரு சிறங்கை தயிர் அள்ளி சாப்பிட்டுவிட்டு 'ஆஹ்' என்றார்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக