புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
34 Posts - 52%
heezulia
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
17 Posts - 2%
prajai
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
9 Posts - 1%
Jenila
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_m10தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்! - பாவேந்தர்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 29, 2013 10:03 am

தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்.
முதலில் தமிழை ஒழுங்காகப் படியுங்கள்.
பிறகு, உங்கள் எண்ணத்தைத் துணிச்சலாகச் சொல்லுங்கள்!’


பாரதிதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

வார்த்தைகளை வாளாக வார்த்தவன். மொழியைத் தேனாக வடித்தவன். எதிரிகளைக் கவிதையால் அடித்தவன். கம்பீரத்தால் காலங்கள் கடந்தவன். பாரதியின் தாசன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவன் இந்த பாரதிதாசன்.  

புன்னகைசுப்புரத்தினம்- பெற்றோர் வைத்த பெயர். அப்பா பெயர் கனகசபை என்பதால், கனக சுப்புரத்தினம் எனும் பெயரால் கவிதைகள் வரைந்தார். தனது குருநாதர் மீதான பாசத்தால், பாரதிதாசன் என்ற பெயரைக் சூட்டிக்கொண்டார். அவரது கவிதைகளுக்கு புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்ற பட்டங்களே அடையாளம்!
 
புன்னகைகவிகாளமேகம், ராமானுஜர், பாலாமணி அல்லது பக்காத் திருடன், அபூர்வசிந்தாமணி, சுபத்திரா, சுலோசனா, பொன்மூடி, வளையாபதி ஆகிய படங்கள் அவரது பங்களிப்புடன் வந்தன. புதுவை கே.எஸ்.ஆர், கண்டெமுது  வோன், கிறுக்கன், கிண்டல்காரன் ஆகியவை இவரது புனைபெயர்கள்!
 
புன்னகை`வளையாபதி’ படத்துக்கு இவர் எழுதிக் கொடுத்த வசனத்தில் சில வரிகள் மாற்றப்பட்டதால் 40 ஆயிரம் பணத்தையும் நான்கு படங்களுக்கான ஒப்பந்தங்களை தூக்கி எறிந்துவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து கம்பீரமாக வெளியேறியவர்!
 
புன்னகைகோழி, புறா, பசு மூன்று அவர் விரும்பியவை `டேய்’ என்பார் கோழியை. `வாம்மா’ என்பார் சேவலை `வீடு என்று இருந்தால் இம்மூன்றும் இருக்க வேண்டும் என்று சொல்லித் தானும் வளர்த்து வந்தார்!
 
புன்னகையார் பேசும்போது மூக்கின் மீது விரல்வைத்தபடியே உன்னிப்பாகக் கவனிப்பார். எழுதும்போது மை சிந்தி விட்டால் அதைப் பூவாக மாற்றிவிட்டுத்தான் எழுதுவார். பாயைத் தரையில் விரித்து, தலையணை மீது குப்புறப்படுத்தபடியேதான் எழுதுவார்!

புன்னகை`என்னை ஏன் மக்கள் போற்றுகிறார்கள்? என்னுடைய அஞ்சாமைதான் அதற்குக் காரணம். மடமையை ஆதிரிப்பவர்களை, தமிழ்ப் பண்பாட்டினை இகழ்பவர்களை நான் திட்டுவேன். நீங்களும் திட்டுங்கள்!’ என்று தமிழக மக்களுக்கு உத்தரவு போட்டவர்!
 
புன்னகை`உங்களுக்கு எல்லாம் தமிழை நான் வாரிக் கொடுகிறேன். எனக்கெல்லாம் தமிழை வாரிக் கொடுப்பவர் பாரதிதாசன்’ என்று பாராட்டியவர் கிருபானந்த வாரியார். ஆத்திகர்களையும் தனது கொஞ்சு தமிழால் ஈர்த்த நாத்திகர்!
 
புன்னகை`ஏம்ப்பா... தி.நகர் வர்றியா?’ ஆட்டோக்காரரைக் கேட்டார். `தி. நகருக்கு வரல’ என்றார் அவர். `அப்ப ஏம்ப்பா இங்க நிக்கிற?’ என்று சண்டைக்குப் போனார் பாரதிதாசன். உணவு விடுதியில், `சூடா தோசை இருக்கு’ என்றார் கடைக்காரர். ஆனால், ஆறிய தோசை வந்தது. `இதுதான் உன் அகராதியில சூடா?’ என்று கொந்தளித்தார். இப்படி அவர் நித்தம் யுத்தம் செய்த இடங்கள் ஏராளம்!
 
புன்னகைபிறந்தது, வளர்ந்தது. வாழ்ந்தது, உயர்ந்தது அனைத்தும் புதுசேரியில். கடைசி இரண்டு ஆண்டுகள் சென்னையில் குடியேறி வாழ்ந்து வந்தார். `சென்னை அவரைக் கொன்றுவிட்டது’ என்பார்கள் நண்பர்கள்!
 
புன்னகைபுதுச்சேரியில் ஒரு முறை புயல் சுழன்றடித்தபோது இவரை ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்குத் தூக்கி எறிந்தது சூறாவளி. ஒரு முழு நாள் கழித்து வீட்டைத் தேடிக் கண்டு பிடித்து வந்தார். அவரது `பறந்து திரிந்த’ அனுபவங்களைக் `காற்றும் கனகசுப்புரத்தினமும்’ என்ற கட்டுரையாக வடித்தார் பாரதியார். அந்தக் கதையை மறுபடி மறுபடி சொல்லிக் கேட்டவர் அரவிந்தர்!
 
புன்னகைநாடு முழுவதும் நிதி திரட்டி 25 ஆயிரம் ரூபாயை இவருக்கு வழங்கினார் அண்ணா. `நான் கொடுக்க நீங்கள் வாங்கக் கூடாது’ என்ற அண்ணா. அந்தப் பணத்தைக் கையில் ஏந்தி நிற்க... பாரதிதாசன் எடுத்துக்கொண்டார்!
 
புன்னகைபாரதிதாசன் என்று இவர் பெயர் மாற்றம் செய்தை தி.க-வினர் கடுமையாக எதிர்த்தார்கள். `சாதிக் கொடுமையை உண்மையாக எதிர்த்தவர் பாரதி. அவரைப்போலவே எளிய நடையில் மக்களுக்கு வேண்டிய கருத்தை இயற்ற வேண்டும் என்பதால். பாரதிதாசன் எனப்பெயர் வைத்துக் கொண்டேன். யார் எதிர்த்தாலும் கவலை இல்லை’ என்றார்!
 
புன்னகைஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி புதுச்சேரி வந்தபோது, அவரை போலீஸீக்குத் தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி, நடுக்கடல் வரை கொண்டு சென்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்த அஞ்சாமைக்குச் சொந்தக்காரர்!
 
புன்னகைஎப்போதும் பச்சை சால்வைதான் அணிவார். அதற்குள் ஒரு கத்தியும் ஒரு வாளும் வைத்திருப்பார். இரவில் எங்கு சென்றாலும் அதை மறக்காமல் எடுத்துச் செல்வார்!
 
புன்னகைபுதுச்சேரி வேணு நாயக்கரின் சிலம்புக் கூடத்தில் சிலம்பம் கற்றார். குத்துச்சண்டையும் குஸ்தியும் தெரியும். அதற்காகவே உடும்புக் கறியை அதிகமாகச் சாப்பிட்டார். `உடல் நலனைப் பேணுதலே அனைத்துக்கும் அடிப்படை’ என்பார்!
 
புன்னகை`சுப்புரத்தினம் எனக்காக ஒரு பாட்டு எழுதேன்’ என்று பாரதியார் கேட்டுக் கொண்டதும் இவர் எழுதிய பாட்டுதான், `எங்கெங்கு காணினும் சக்தியடா!’
 
புன்னகைபள்ளி ஆசிரியராக 37 ஆண்டுகள் இருந்தார். அவரை நிம்மதியாக ஓர் இடத்தில் பணியாற்றிவிடாமல் 15 பள்ளிகளுக்கு மாற்றிக்கொண்டே இருந்தார்கள், `அரசியல் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் என்னை மாற்ற மாட்டார்களாம். அரசியல் இல்லாமல் என்னால் எப்படி இருக்க முடியும்?’ என்று கொதித்தார்!’
 
புன்னகை'அ’ என்றால் அணில் என்று இருந்ததை `அம்மா’ என்று பாடப் புத்தகத்தில் மாற்றிய அன்பு ஆசான் இவர்தான்!
 
புன்னகைமளிகைக் கடைப் பொட்டலங்களில் இருக்கும் சணல், நூல் ஆகியவற்றைச் சேகரித்துவைக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. `நான் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன். மளிகைக் கடையில் வளர்ந்தவன். நூலின் அருமை எனக்குத்தான் தெரியும் என்பார்!
 
புன்னகைஇசை, மெட்டு குறையாமல் பாடக்கூடிய ஆற்றல் பெற்றவர். தான் எழுதிய பாடல்கள் அனைத்தையும் தானே பாடுவார். `வீர சுதந்திரம் வேண்டி நின்றார்’ பாடலை இவர் பாடிக்கொண்டு இருக்கும்போதுதான் பாரதியார் இவரை முதன் முதலாகப் பார்த்தார்!
 
புன்னகைபழனியம்மாள் இவரது மனைவி. இவர்களுக்கு சரஸ்வதி, வசந்தா, ரமணி ஆகிய மூன்று மகள்களுக் மன்னர் மன்னன் என்ற மகனும் உண்டு!
 
பாண்டியன் பரிசு திரைப்படம் எடுக்கவே சென்னை வந்தார். சிவாஜி, சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா நடிக்க ஒப்பந்தம் ஆனது. ஆனால், படப்பிடிப்பு துவஙகவே இல்லை. பாரதியார் வாழ்க்கை வரலாற்றைச் சினிமாவாக எடுக்கத் தொடக்க கலத்தில் முயற்சித்து கதை, வசனம் எழுதிவைத்திருந்தார். அதுவும் சாத்தியமாகவில்லை. பாவேந்தரின் திரைப்பட ஆசை கடைசி வரை நிறைவேறவே இல்லை!
 
புன்னகை`தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும். முதலில் தமிழை ஒழுங்காகப் படியுங்கள். பிறகு, உங்கள் எண்ணத்தைத் துணிச்சலாகச் சொல்லுங்கள்!’ என்று கட்டளையிட்டார்!’
 
புன்னகை ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பாரதிய ஞானபீட விருது இவருக்குத் தருவதாக முடிவானது. அதற்குள் அவர் இறந்து போனார். அவ்விருது, வாழும் கலைஞர்களுக்குத் தரப்படுவது என்பதால். இவருக்குக் கிடைக்கவில்லை!
 
புன்னகை `வாழ்க்கை என்பது ஆராய்ச்சியும் இல்லை.... அறிவாற்றலும் இல்லை. மக்களுக்கு உழைப்பதுதான் வாழ்க்கை. நன்மைக்கும் உண்மைக்கும் ஒருவன் அன்புடன் எழுதினால் என்றும் நிலைக்கும் அதைத்தான் நான் செய்கிறேன்’ என்றவரின் உடல் புதுச்சேரியில் அடக்கம் செய்யப்பட்டபோது, திரண்ட கூட்டம் அவரது கவிதைக்குக் கிடைத்த அங்கீகாரம் மயானக் கரையில் வைத்து அவ்வை டி.கே. சண்முகம் பாடினார்... `துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ... இன்பம் சேர்க்க மாட்டாயா!’
- நன்றி: ஆனந்த விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக