புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
4 Posts - 27%
சிவா
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
310 Posts - 42%
heezulia
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
கருவின் கதை - Page 3 Poll_c10கருவின் கதை - Page 3 Poll_m10கருவின் கதை - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவின் கதை


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:03 pm

First topic message reminder :

பெண்களே! நீங்கள் புதிதாக கர்ப்பம் தரித்தவரா? அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கும். கர்ப்பம் தரித்த முதல் வாரம் தொடங்கி 9 மாதம் வரை குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும்? அதற்கேற்ப உடலில் நிகழும் மாற்றங்கள் எவை? என்பது போன்ற கேள்வி களுக்கு திருப்தியான விடை கிடைக்காமல் தவிக்கலாம். இதுபோன்ற உங்களின் சந்தேகங்களுக்கு தெள்ளத் தெளிவான பதில்களையும், விளக்கங்களையும், ஒவ்வொரு வாரத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ முறைகள் பற்றியும் இந்தப் பகுதியில் காணலாம்.


1 முதல் 4 வாரம் வரை


சினையுற்ற கருமுட்டைகள் வளரத் தொடங்குகின்றன. அதனை சுற்றி தண்ணீரால் சூழப்பட்ட ஒரு இறுக்கமான உறை இருக்கும். அந்த உறை முழுவதும் நீர்மத்தால் நிரம்பத் தொடங்கும். இந்த உறைக்கு அம்னியோடிக் சேக் என்று பெயர். வளருகின்ற கருவுக்கு இந்த உறை குஷன் போல அமைகிறது

நச்சுக்கொடி வளருகிறது. இதனை பிளசன்டா என்று சொல்கிறோம். இந்த நச்சுக் கொடிதான் தாய்க்கும், சேய்க்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அதாவது குழந்தைக்கு தேவையான சத்துப் பொருட்களை தாயிடமிருந்து சேய்க்கு கடத்துகிறது. அதுபோல சேயிடமிருந்து வேண்டாத கழிவுகளை தாய்க்கு கடத்தி வெளியே அனுப்பும் வேலையை செய்கிறது. பிளசன்டா உருண்டையான குழாய் போல காணப்படும்.
.

முகம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படும். முதல் கட்டமாக கண்களுக்காக இரண்டு பெரிய கருப்பு வளையங்கள் உருவாகும். வாய், கீழ்த்தாடை, தொண்டை வளரத் தொடங்கும். ரத்த செல்கள் குறிப்பிட்ட வடிவத்தை அடைய தொடங்கி, ரத்த ஓட்டம் தொடங்கும்.

முதல் மாதத்தின் முடிவில் உங்கள் குழந்தை வெறும் 1_4 இஞ்ச் நீளம் மட்டுமே இருக்கும். அதாவது ஒரு நெல்லின் அளவை விட சிறியதாக இருக்கும்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:34 pm

15-வது வாரம்

13 வார கால உங்களுடைய கரு தற்போது 41. இஞ்ச் முதல் 4.5 இஞ்ச் வரை வளர்ந்து இருக்கும். 1.75 பவுண்டுகள் எடை இருக்கும். இப்போது குழந்தையின் உடம்பு மற்றும் மூட்டுக்களை சுற்றி மெல்லிய, லேசான நிறமுள்ள முடியால் மூடி இருக்கும். இதில் பெரும்பாலான முடிகள் குழந்தையின் 7-வது மாதத்தில் உதிர்ந்து விடும். மீதியுள்ள முடிகள் பிரசவத்துக்குப் பிறகு மறைந்து விடும். தலை முடி மற்றும் கண் இமைகள் வளர்ச்சி அடைய ஆரம்பிக்கும். உங்களுடைய குழந்தை இப்போதும் கை சூப்பும். எலும்புகள் கடினமாக வலிமையாக மாறிக் கொண்டிருக்கும்.

தொப்புளில் இருந்து கீழே 3 முதல் 4 இஞ்ச் வரை விரல்களால் மெதுவாக அழுத்திப் பார்த்தீர்களேயானால் உங்களுடைய கருவை புரிந்து கொள்ள முடியும். அடுத்த வருகின்ற 5 வாரங்களில் உங்களுக்கு maternal serum screening test எனப்படும் முப்பரிமாண சோதனை தேவைப்படலாம். இந்த சோதனையின் போது alpha-fetoprotein (AFP), human chorionic gonadotropin (HCG) பிளசண்டாவினால் தயாரிக்கப்படும் estrogen ஆகியவை கணக்கிடப் படும். இவைகள் மூன்றும் உங்களுடைய ரத்தத்தில் உள்ள வேதிப்பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் எடுப்பதன் மூலம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் ஏதாவது குறை ஏற்பட்டு உள்ளதா? என்பதை கண்டுபிடிக்கலாம். இது AFP டெஸ்ட்டை விட துல்லியமான முடிவை தரும். இதுதவிர கருவையும், அதைச் சுற்றியுள்ள திரவத்தையும் கொண்ட பையில் இருந்து அல்ட்ரா சவுன்ட் உதவியுடன் செயல்படும் நீளமான ஊசி மூலமாக சிறிதளவு திரவத்தை எடுத்து அதை சோதனைக்கு உட்படுத்துவர். இந்த சோதனை 15 முதல் 18 வாரங்களுக்குள் எடுப்பார்கள். நீங்கள் 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராய் இருந்தால், மேற்கண்ட முப்பரிமாண சோதனை மற்றும் AFP டெஸ்ட் ஆகியவற்றின் முடிவுகள் சந்தேகத்துக்கு இடமாக இருக்கும் சூழ்நிலையிலும் இந்த சோதனையை மருத்துவர்கள் செய்வதுண்டு.

டிப்ஸ்

நீங்கள் இடப்புறமாக படுத்து தூங்க வேண்டும். ஏனெனில் இம்முறையில் தான் ரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். 4 அல்லது 5 மாதங்களுக்குப் பிறகு மல்லாக்க படுத்து தூங்குவதும், குப்புற படுத்து தூங்குவதும் உங்களுடைய வயிற்றில் உள்ள குழந்தை மீது கூடுதலான அழுத்தத்தை திணிக்கும் செயல்களாகும். மேலும் இம்முறைகளில் படுத்து தூங்கினால் குழந்தைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து போகும். ஒருவேளை இப்படி தூங்க முடியாமல் தவிப்பவர்கள் இடதுபுறமாக சாய்ந்து படுத்தபடி முதுகுக்கு பின்புறமும், கால்களுக்கு இடையிலும் தலையணைகளை வைத்துக் கொள்ளலாம். தற்போது கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற தலையணைகளை தயாரிக்கிறார்கள். அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். இந்த வகை தலையணைகள் உங்கள் உடம்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:35 pm

16-வது வாரம்

உங்களுடைய குழந்தை இப்போது தலையில் இருந்து பின்பகுதி வரை 4.3 முதல் 4.6 இஞ்ச் நீளம் இருக்கும். சராசரியாக 2.8 அவுன்ஸ்கள் எடை இருக்கும். கை விரல்களில் நகங்கள் நன்றாக உருவாகி இருக்கும். தலையில் லேசான நிறமுள்ள மென்மையான முடி காணப்படும். முன் கைகளும், கால்களும் நகரும். நரம்பு மண்டலம் இயங்கத் தொடங்கும். மூளையின் தூண்டுதல்களுக்கு ஏற்றபடி உங்கள் குழந்தைகளின் தசைகளில் இயக்கம் காணப்படும். உங்கள் குழந்தையின் இதயத் துடிப்பை மருத்துவரின் அறையில் வைத்து உங்களால் சிரமம் ஏதுமின்றி எளிதாக கேட்க முடியும்.

கருப்பை எடை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகாpத்து இருக்கும். அது சராசரியாக 8.75 அவுன்ஸ் எடை இருக்கும். அடுத்து வரப்போகும் சில வாரங்களில் வயிற்றில் உள்ள உங்கள் குழந்தையின் இயக்கத்தை உணர்ந்து கொள்வீர்கள். அது மென்மையான காற்று நிரப்பப்பட்ட பலூன் நகருவதைப் போல இருக்கும். இந்த உணர்வு அடிக்கடி காணப்படும். இதுதவிர வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ரத்தம் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வகையில் உங்களுடைய உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும். குறிப்பாக ரத்தக் குழாய்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவதை சாதாரணமாகவே காண முடியும். இப்போது உங்களுடைய கருப்பை நகர்ந்து விடும் என்பதால் நீங்கள் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும்.

டிப்ஸ்

கால்களில் வீக்கம் ஏற்படும். இதனை சின்ன சின்ன உடற் பயிற்சிகள் மூலம் மாற்றி விடலாம். அதனால் ரத்த ஓட்டம் சீராகி விடும். ஆகையால் கால்கள் வீங்குவதைப் பார்த்து பயந்து விட வேண்டாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:35 pm

குழந்தையின் தலையில் முடி வளரத் தொடங்கும். லானுகோ எனப்படும் மென்மையான முடி குழந்தையின் தோள்பட்டைகள், பின்பாகம் மற்றும் கன்னப் பொறிகளில் முடி இருக்கும். குழந்தை களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த மென்மையான முடி, குழந்தை பிறந்த முதல் வாரத்திற்குள் மறைந்து விடும்.

கருப்பையில் காணப்படும் அம்னியோடிக் திரவம் குழந்தையின் தோலை தாக்கி விடாமல் பாதுகாக்கும் வகையில் வெர்னிக் காசியோசா எனப்படும் வெண்ணெய் போன்ற வெண்ணை நிற வழுவழுப்பு திரவம் தோலை மூடிக் கொண்டிருக்கும். இந்த படலம் குழந்தை பிறப்பதற்கு சற்றுமுன் தானாகவே அகன்று விடும்.

குழந்தைக்கு தசைகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் என்பதால் அது உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யும். அதனால் குழந்தையின் இயக்கத்தை நீங்கள் அனுபவப் பூர்வமாக உணர முடியும்.

5-வது மாத முடிவில் குழந்தை 10 இஞ்ச் நீளமும், 1_2 பவுண்டு முதல் 1 பவுண்டு எடையுடனும் இருக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:36 pm

17-வது வாரம்

உங்கள் குழந்தை அதனுடைய தொடர் வளர்ச்சியில் 15-வது வாரத்தில் இருக்கும். இந்த கால கட்டத்தில் குழந்தையின் நீளம் தலை முதல் பின் பாகம் வரை 4.4 முதல் 4.8 இஞ்ச் வரையிலும், எடையைப் பொறுத்த மட்டில் கடந்த இரண்டு வாரங்களில் இருந்ததைக் காட்டிலும் இரண்டு மடங்கு, அதாவது 3.5 அவுன்ஸ்கள் கூடி இருக்கும். கொழுப்பு உருவாகத் தொடங்கி குழந்தையின் வளர்சிதை மாற்றத்துக்கும், வெப்ப உற்பத்திக்கும் உதவி செய்யும். நுரையீரல்கள் அம்னியோடிக் திரவத்தை வெளியே தள்ள ஆரம்பிக்கும். ரத்த ஓட்ட மண்டலமும், சிறுநீரக அமைப்புகளும் வேலை செய்யும். தலை, கண் புருவம், கண் இமைகள் ஆகியவற்றில் முடி நிரம்பி இருக்கும்.

இந்த வாரத்தில் உங்களுடைய அடி வயிற்றில் ஒரு வீக்கம் காணப்படும். எடை யானது 5 முதல் 10 பவுண்டுகள் வரை கூடும். அதே நேரத்தில் பசி உணர்வும் அதிகரித்திருப்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

இவ்வாரத்துக்கான டிப்ஸ்

இந்த வாரத்தில் நீங்கள் கீழே உட்காரும் போதும், படுத்திருந்து விட்டு எழுந்திருக்கும் போதும் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மெதுவாக செய்ய வேண்டும். தக்கு.. புக்கு.. என்று துள்ளி குதிக்க வேண்டாம். தலை சுற்றல், மயக்கம் வருவது போல தெரிந்தால் பேசாமல் தரையில் உட்கார்ந்து விடுங்கள். ஒருவேளை லேசாக தலைவலிக்குமானால் கீழே உட்கார்ந்து தலையை குனிந்து கொள்ளுங்கள். அல்லது கொஞ்சம நேரம் படுத்துக் கொள்ளுங்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:36 pm

18-வது வாரம்

தற்போது குழந்தையானது 5 முதல் 5.6 இஞ்ச்கள் வரை நீளமும், 5.25 பவுண்டுகள் எடையும் கொண்டிருக்கும். வயிற்றில் உள்ள உங்களுடைய செல்லக்குட்டி வேகமாக வளருவதையும், அதன் எதிரொலியாக செல்லமான உதைகள் அதிகரிப்பதையும் நீங்கள் காணலாம். இந்த வாரத்தில் குழந்தை கொட்டாவி விடும். உடம்பை நீட்டி நெளிக்கும். முகத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட ஆரம்பிக்கும். அத்தனை ஏன்? உங்கள் குழந்தை கோபம் படவும் செய்யும். நாக்கில் உள்ள ருசி மொட்டுக்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். அதன் காரணமாக இனிப்பான உணவுகளை மற்ற கசப்பான உணவுகளில் இருந்து பிரித்தறிய இயலும். உதடுகளை கூட்டி சப்புக் கொட்டும். விக்கல் கூட வரும். குழந்தையின் கண் விழித்திரை வெளிச்சத்துக்கு தகுந்தாற் போல இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்கள் அடிவயிற்றில் அதிகமான வெளிச்சம் பட்டால் குழந்தை அதிலிருந்து தப்பிக்கும் வகையில் நகர்ந்து கொள்ளும். அது வெளிச்சம் கண்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் அமையும்.

கருப்பையின் அளவு பெரிதாகுவதன் காரணமாக தொப்புள் கொடிக்கு சற்று கீழ் வரை வளர்ந்திருப்பதை உங்களால் அறிய முடியும். குழந்தையின் இயக்கத்தை மேலும் தெளிவாக உணர்வீர்கள். கர்ப்பத்தின் இடைக்காலத்தில் எடுக்கப்படும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளை இந்த வாரத்திலிருந்து 22-வது வாரம் வரை எடுக்கலாம். அதன் மூலம் கருவின் வளர்ச்சி, உறுப்புகளின் வளர்ச்சி, டெலிவரி நாள் ஆகியவற்றை கணக்கிட முடியும். குழந்தை சரியான நிலையில் இருக்குமானால் அல்ட்ராசவுண்ட் டெஸ்ட் மூலம் அது ஆணா? பெண்ணா? என்று கூட கண்டுபிடிக்க முடியும். கருவில் உள்ள குழந்தைக்கு சப்போர்ட் செய்வதற்காக உங்களுடைய இதயம் 40 முதல் 50 சதவீதம் கூடுதலாக வேலை செய்யும்.

இவ்வாரத்துக்கான டிப்ஸ்

அல்ட்ராசவுண்ட் டெஸ்டுக்கு உங்களுடன் கணவரையும் அழைத்துச் செல்லுங்கள். ஏனெனில் உங்கள் குழந்தையின் முதல் புகைப்படத்தை இரண்டு பேரும் சேர்ந்து பார்த்து மகிழும் வாய்ப்பு உள்ளது. அந்தப் படத்தை உங்கள் நண்பர்களிடமும், நெருக்கமான உறவுக்காரர் களிடமும் காட்டி மகிழலாம். ஆனால் சோனோகிராம் டெஸ்ட் எடுப்பதால் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் உள்ளது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் சில குறைபாடுகளை அதனால் சுட்டிக் காட்ட முடியும்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:37 pm

19-வது வாரம்

குழந்தை தலை முதல் பின்பாகம் வரை 5.2 முதல் 6 இஞ்ச் நீளம் வரை இருக்கும். 7 அவுன்ஸ் எடை இருக்கும். தோல் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும். ஆனாலும் அது மிகவும் மென்மையாக இருப்பதால் உள்ளே உள்ள ரத்த நாளங்கள் முதற்கொண்டு பல்வேறு சமாச்சாரங்களை எளிதாக காண முடியும். தோலைச் சுற்றி இருக்கும் வெண்மை நிற வெண்ணெய் போன்ற படலம் மேலும் வளரும்.

குழந்தை தொடர்ந்து வளரும். அதே சமயம், உங்களுக்கு கர்ப்பத்தின் இடைப்பட்ட காலத்துக்கே உரித்தான வலிகளும், உபாதைகளும் காணப்படும். அடி வயிற்றில் நெருடலான வலி, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், கால்களில் சுளுக்கு, மூட்டுக்கள் மற்றும் பாதங்களில் லேசான வீக்கம், முதுகு வலி போன்ற பல்வேறு உபாதைகள் காணப்படும். ரத்தக் குழாய்கள் விரிவடைவதால் முகம், முன் கைகள், தோள் பட்டைகள் ஆகிய இடங்களில் சிறிய அளவிலான ரத்த கட்டு அடையாளங்கள் காணப்படும். ஆனால் அவை தற்காலிகமானதே. கொஞ்ச நாளில் தானாகவே மறைந்து போகும்.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

குழந்தையின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும்மென்பதால் உங்களுடைய இதயம், சிறுநீரகங்கள், நுரையீரல்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் உங்களுக்கு சோர்வு ஏற்படலாம். அதற்கு இடம் கொடுக்காத வண்ணம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:37 pm

20-வது வாரம்

குழந்தை தலை முதல் பின்பாகம் வரை 5.6 முதல் 6.4 இஞ்ச் வரை நீளம் இருக்கும். எடை 9 அவுன்சுகள் இருக்கும். இந்த வாரத்தில் குழந்தையால் உங்களுடைய இதயம் இயங்கும் சத்தம், வயிற்றில் ஏற்படும் கடாமுடா சத்தங்கள், வெளிப்புற சத்தங்கள், உங்களுடைய பேச்சு ஆகியவற்றை கேட்க முடியும். அதிகமான சத்தத்தை கேட்க நேர்ந்தால் உடனடியாக கைகளைக் கொண்டு காதுகளை பொத்திக் கொள்ளும். அந்த வகையில் திடுக்கிட்டு துள்ளிக் குதிக்கவும் செய்யும். குழந்தையிடம் அடிக்கடி அசைவுகள், இயக்கங்கள் காணப்படும். இதில் திரும்புதல், புரண்டு கொள்தல், இப்படியும், அப்படியுமாக பக்கவாட்டில் வேகமாக அசைந்து செல்லுவது, கைகளால் குத்துதல், கால்களால் உதைத்தல் போன்ற இயக்கங்கள் அடங்கும்.

நீங்கள் இப்போது கர்ப்பத்தின் மத்திய பகுதிக்கு வந்து விட்டீர்கள். தொப்புளுக்கு இணையாக கருப்பை இறங்கி வந்து நிற்கும். உங்களுடைய சிக் இடையின் அளவு அதிரிக்கும். ஆனால் இது தற்காலிகமானதே. சிறுநீர் பாதையில் உள்ள மென்மையான தசைகள் ரிலாக்ஸ் ஆவதால் சிறுநீர்ப் பாதை தொற்றுநோய்கள் அதிகரிக்கும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடு காரணமாக வியர்த்துக் கொட்டும். ஆழமாக மூச்சு விடுவீர்கள்.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

முதுகுவலியை குறைக்க நின்றாலும், அமர்ந்தாலும், படுத்தாலும் உடம்பை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். உட்கார்ந்தால் ஒரு ஸ்டூல் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வசதியான நாற்காலியை பயன்படுத்துங்கள். நீண்ட நேரத்துக்கு நிற்க வேண்டாம். இடுப்புக்கு ஒரு சிறிய தலைகாணி வைத்துக் கொள்ளவும். ஏதாவது தூக்க வேண்டுமானால் முதுகு பலத்தை பிரயோகிக்காமல் கால்கள் மூலம் தூக்க முயற்சி செய்யுங்கள்;.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:38 pm

21 முதல் 25-வது வாரம் வரை

6 மாத முடிவில் உங்களுடைய குழந்தை 12 இஞ்ச் நீளமும், 2 பவுண்டு எடையும் இருக்கும். தோல் மென்மையாக சிவப்பு கலரில், சுருக்கங்களுடன் கூடியதாக இருக்கும். ரத்தக் குழாய்களை எளிதாக காண முடியும். குழந்தையின் கைவிரல் மற்றும் பாதம் ஆகியவற்றில் ரேகைகள் தெளிவாக தெரியும். கண் இமைகள் வேலை செய்யத் தொடங்குவதால் கண் திறந்து இருக்கும்.

வெளியில் உள்ள சத்தங்களுக்கு தகுந்தபடி குழந்தை அங்குமிங்குமாக அசையும். சில சமயங்களில் குறுக்கு நெடுக்காக வேகமாக நகருவதால் குதிப்பது போல நீங்கள் உணருவீர்கள்.

இந்த வார இடைவெளியில் குறைப்பிரசவமாக குழந்தை பிறக்கு மானால் 23-வது வாரத்துக்குப் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:38 pm

21-வது வாரம்

குழந்தை தலை முதல் பின் பாகம் வரை 7.2 இஞ்ச் நீளமும், 10.5 அவுன்சு எடையும் இருக்கும். கொழுப்பு தொடர்ந்து உருவாகி உடம்புக்கு சூடு ஏற்றிக் கொண்டு இருக்கும். வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தாலும், சீரண மண்டலம் தொடர்ந்து முதிர்ச்சி நிலையை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும். அம்னியோடிக் திரவத்தில் இருந்து குழந்தையின் மென்மையான தோலை பாதுகாப்பதற்காக, வெண்ணெய் போன்ற ஒரு மெழுகு திரவத்தை குழந்தையின் எண்ணெயச் சுரப்பிகள் சுரக்கும். நிரந்தரமான பற்களுக்கான ஈறுகள் உருவாக ஆரம்பிக்கும்.

இப்போது நண்பர்கள், உறவினர்கள், முன்பின் அறியாதவர்கள் கூட நீங்கள் கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்து விட முடியும். உங்களுடைய உடல் எடை 10 முதல் 14 பவுண்டுகள் வரை கூடும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Feb 15, 2009 2:39 pm

22-வது வாரம்

இந்த வாரத்தில் குழந்தை 7.6 இஞ்ச் நீளமும், 12.3 அவுன்ஸ் எடையும் இருக்கும். முந்தைய வாரங்களைக் காட்டிலும் இந்த வாரத்தில் குழந்தையின் தசைகள் வலுவானதாக மாறும். கண் புருவம், கண் இமைகள் நல்ல வளர்ச்சி பெறும். இசைக்கு தகுந்தபடி ஆட்டம் போடும் கழைக்கூத்தாடி போல வயிற்றில் உள்ள உங்கள் குழந்தை வெளிப்புற இசைகளுக்கு தகுந்தபடி உடலை இயக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பாடுவதற்கும், குழந்தையுடன் பேசுவதற்கும் முயற்சி செய்யலாம். நீங்கள் சொல்லும் நல்ல விஷயங்கள், கதைகள் கூறினால் அவற்றை குழந்தை அப்படியே கேட்டுக் கொண்டிருக்கும். குழந்தை பிறந்த பிறகு அவன் அல்லது அவள் வயிற்றில் இருக்கும் போது என்ன இசையை அதிகமாக கேட்டீர்களோ? அல்லது எந்த இசையை பாடினீர்களோ? அதே இசை அவனை _ அவளை சமாதானப்படுத்தும்

கருப்பை தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும். ஆனால் மசக்கை உபாதை கள் நின்று விடும். இப்போதும் கூட உங்களுடைய கால்கள் மற்றும் பாதங்களில் சுளுக்கு ஏற்படலாம். கை- கால் மூட்டுக்களில் லேசான வீக்கம் இருக்கும்.

இந்த வாரத்துக்கான டிப்ஸ்

சுளுக்குப் பிரச்சினையை சரிசெய்ய கால்சியம், பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள். படுக்கப் போவதற்கு முன்பாக ஒரு கப் பால், அல்லது பொட்டாசியம் சத்து நிறைந்த ஸ்நாக்ஸ், திராட்சைப் பழம், வாழைப்பழம், ஆரஞ்சுப் பழம் ஆகியவற்றை சாப்பிடுங்கள்;.

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக