புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சரவணா ஸ்டோர்! Poll_c10சரவணா ஸ்டோர்! Poll_m10சரவணா ஸ்டோர்! Poll_c10 
15 Posts - 88%
Guna.D
சரவணா ஸ்டோர்! Poll_c10சரவணா ஸ்டோர்! Poll_m10சரவணா ஸ்டோர்! Poll_c10 
1 Post - 6%
T.N.Balasubramanian
சரவணா ஸ்டோர்! Poll_c10சரவணா ஸ்டோர்! Poll_m10சரவணா ஸ்டோர்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரவணா ஸ்டோர்! Poll_c10சரவணா ஸ்டோர்! Poll_m10சரவணா ஸ்டோர்! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சரவணா ஸ்டோர்! Poll_c10சரவணா ஸ்டோர்! Poll_m10சரவணா ஸ்டோர்! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சரவணா ஸ்டோர்! Poll_c10சரவணா ஸ்டோர்! Poll_m10சரவணா ஸ்டோர்! Poll_c10 
17 Posts - 4%
prajai
சரவணா ஸ்டோர்! Poll_c10சரவணா ஸ்டோர்! Poll_m10சரவணா ஸ்டோர்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சரவணா ஸ்டோர்! Poll_c10சரவணா ஸ்டோர்! Poll_m10சரவணா ஸ்டோர்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சரவணா ஸ்டோர்! Poll_c10சரவணா ஸ்டோர்! Poll_m10சரவணா ஸ்டோர்! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
சரவணா ஸ்டோர்! Poll_c10சரவணா ஸ்டோர்! Poll_m10சரவணா ஸ்டோர்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சரவணா ஸ்டோர்! Poll_c10சரவணா ஸ்டோர்! Poll_m10சரவணா ஸ்டோர்! Poll_c10 
4 Posts - 1%
jairam
சரவணா ஸ்டோர்! Poll_c10சரவணா ஸ்டோர்! Poll_m10சரவணா ஸ்டோர்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சரவணா ஸ்டோர்! Poll_c10சரவணா ஸ்டோர்! Poll_m10சரவணா ஸ்டோர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரவணா ஸ்டோர்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 12:14 am

சரவணா ஸ்டோர்ஸ்க்கு அடிக்கடி போவதுண்டு. அங்கு வரும் பல்வேறு விதமான மனிதர்களை பார்க்க பிடிக்கும் என்பதும், அங்கு வேலைப்பார்க்க வந்திருக்கும் நெல்லை மண் மணம் மாறா தொழிலாளர்களுடன் பேசுவது பிடிக்கும் என்பதும் அங்கு போவதற்கான காரணம்.
வேலைப்பளுவுக்கிடையில் அவர்கள் நெல்லை பேச்சுவழக்கில் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டும் கிண்டல் செய்து கொண்டுமிருப்பார்கள். சமயங்களில் ரொம்ப நேரம் எதும் வாங்காமல் சும்மா நோண்டிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களையும் தங்களுக்குள் ஓட்டிக்கொள்வதையும் கவனித்திருக்கிறேன்.
அங்கு எப்போது சென்றாலும் வேலைப்பார்க்கும் ஏதாவது ஒரு பையனிடமோ பெண்ணிடமோ பேச்சுக் கொடுக்க ஆரம்பிப்பேன். “நானும் திருநெல்வேலிக்காரந்தாம்டே..”னு சொல்லி பேச ஆரம்பித்தால் போதும் அவங்களும் உற்சாகமாப்பேச ஆரம்பிப்பார்கள். அவர்களின் கதைகளை கேட்க பரிதாபமாக இருக்கும். அவர்களிடம் பேசிவிட்டு வரும் நாட்கள் எல்லாம் மனம் கனத்துப்போகும்.
இன்று அங்கு சென்றிருந்தபோது அந்த காட்சியைக் கண்டேன். ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க எலும்பு தோலுமாக இருந்த இளம்பெண் ஒருவர் சோர்ந்துபோய் துணிகள் தொங்கவிடப்பட்ட இடங்களுக்கு நடுவில் மறைவாய் அமர்ந்திருந்தார்.
சரவணா ஸ்டோர்! Index
“என்னம்மா ஆச்சு..” என்றேன்.
“கால்வலிண்ணே… முடியல..” என்றார் பரிதாபமாக.
“ஏன் உங்களுக்கு உட்கார நாற்காலி எதுவும் வைக்க மாட்டாங்களா..?”
“அதெல்லாம் கிடையாதுண்ணே.. காலையில வந்ததுல இருந்து திரும்ப தூங்கப்போறவரைக்கும் பதினாறு மணிநேரம் நாங்க நின்னுட்டு தான் வேலைப்பார்க்கணும்.. வலி எடுக்கும்.. கொஞ்சம் ஓரமா உக்காரலாம்னு பார்த்தா சூப்பர்வைஸருங்க கண்ல பட்டா செத்தோம்..” என்று அவர் கூறியபோது என் கால்கள் வலிக்க ஆரம்பித்தது.
சரவணா ஸ்டோருக்குள் பொருட்கள் வாங்கவோ, குறைந்த பட்சம் அந்த பல அடுக்கு மாளிகைக்குள் சுற்றிப்பார்க்கவாவது நாம் சென்றிருப்போம்.
சரவணா ஸ்டோருக்குள் நுழைந்தால் முதல் ஒரு மணிநேரம் உற்சாகமாக சுற்றி வந்து பொருட்களை வாங்க முடியும். அதன்பிறகு தன்னியல்பாக உங்கள் கால்களில் உளைச்சல் ஏற்படும். எங்காவது உட்காரலாம் என்று கால்கள் கெஞ்சும்.
அந்தமாதிரியான தருணத்தில் எப்போதாவது நீங்கள் அங்கு பதினாறு மணிநேரம் நின்றுக்கொண்டே பணிபுரியும் ஊழியர்களின் கால்களைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா..
நம்முடைய கால்களைப் போன்றே அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கும் கால்கள் உண்டு. அந்த கால்களுக்கும் வலி எடுக்கும்.. அவர்கள் எங்கு உட்கார்கிறார்கள் ஏன் அவர்களுக்கு உட்கார இருக்கை கொடுக்கவில்லை என்பது குறித்து எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..
இப்படி பதினாறு மணிநேரம் நின்றுக்கொண்டே வேலைப்பார்க்கும் நிலைக்கு காரணம் அவர்களின் குடும்ப சூழல். அதைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது சரவணா ஸ்டோர் கும்பல்.
தென்மாவட்டங்களில் இருந்து குறைவான ஊதியத்திற்கு கொத்தடிமைகளை இறக்குமதி செய்த சரவணா ஸ்டோர் ஓனர்கள் இப்போது வட இந்திய தொழிலாளர்களை குறிவைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழர்களை விட இன்னும்கூட குறைவாக ஊதியம் கொடுக்கலாம். அவர்களின் குடும்ப வறுமையை பயன்படுத்தி சுரண்டுவதுதான் ஓனர்களின் தந்திரம். குறைவான ஊதியத்திலும் முடிவெட்டுறது முதற்கொண்டு பல காரணங்களைச் சொல்லி பிடித்தமும் செய்துக் கொள்வார்கள்.
இப்படி தொழிலாளர்களிடம் ஆட்டையப்போட்ட பணத்தை தான் நடிகைகளுக்கும் நடிகன்களுக்கும் விளம்பரம் என்றப்பெயரில் வாரி இறைக்கிறார்கள் சரவணாஸ்டோர்ஸ் முதலாளிகள்.
இந்தமாதிரி தொழிலாளர்களை சுரண்டும் நிறுவனத்திற்கு `அகரம் பவுண்டேசன்’ என்றப்பெயரில் கல்வி சேவை செய்யும் மனிதநேயமிக்க சூர்யா விளம்பரதாரர்.. எப்படி இருக்கு சேவை.
பதினாறு மணிநேரம் நின்று கொண்டே வேலைப்பார்க்கும் அந்த தொழிலாளர்களைப் பார்க்கும்போதெல்லாம், இவர்களைப்பற்றி அக்கறைக்கொள்ள தமிழக தொழிலாளர் நலத்துறையில் ஒரு யோக்கியன் கூடவா அதிகாரியாக இல்லாமல் இருக்கிறான் என்று தோன்றுகிறது. இந்த கொடுமைகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி அங்காடித்தெரு என்ற படமும் வந்திருக்கிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. இடதுசாரி இயக்கங்கள் இந்த தொழிலாளர்கள் விசயத்தில் ஏன் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.
தொழிலாளர்களின் உரிமையான எட்டுமணி நேர வேலை என்பதை விடுங்கள்.. குறைந்தபட்சம் முதலில் பதினாறு மணிநேரம் நின்றுக் கொண்டு வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு நாற்காலியாவது போட்டுக்கொடுக்க சொல்லுங்கள் பாவிகளே..
“எடுத்துக்கோ.. எடுத்துக்கோ..
அண்ணாச்சிக்கடையில் எடுத்துக்கோ.. ”
என்று சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் விதவிதமான நடிகைகள் வந்து துள்ளிக் குதிப்பதை பார்க்கும்போது, இனிமேல் கொஞ்சம் இந்த தொழிலாளர்களின் கால்களையும் நினைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே…
அந்த கால்களிலிருந்து சரவணா ஸ்டோர் அண்ணாச்சிகளால் உறிஞ்சப்பட்ட ரத்தமே அந்த நடிகைகளிடம் கொட்டப்படும் கோடிகள்..
-கார்ட்டூனிஸ்ட்.பாலா

 நன்றி - தமிழ்நியூஸ்24x7.காம் 

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Mon Jul 15, 2013 10:51 am

உருக்கமான பதிவு படிக்கும் போதே கண் கலங்குகிறது..... தொழிலாளர்களின் ரத்தம் குடிக்கும் முதலாளிக்கு நல்ல சாவு வராது .....
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)
manikandan.dp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் manikandan.dp



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 15, 2013 12:25 pm

manikandan.dp wrote:
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)
இதைப் பற்றி நான் அறிந்திருக்க வில்லை. சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் நண்பரே!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 15, 2013 12:30 pm

பார்த்திபன் wrote:
manikandan.dp wrote:
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)
இதைப் பற்றி நான் அறிந்திருக்க வில்லை. சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் நண்பரே!
அதானே , எனக்கும் தெரியாதே என்ன நடந்தது ?! கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் நண்பரே

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 15, 2013 12:35 pm

அங்காடிப் பட்சிகள்

பள்ளி இடைவிலகளோடு
பசிப்போக்கப் போராட
பட்டணத்தை நோக்கிப்
பறந்து வந்த
பாவப்பட்ட பட்சிகள் !

இரவும் பகலும் உருளும்
இயந்திரமாய் எமையாக்கி
உறிஞ்சி உறிஞ்சி – எம்
உதிரம் சப்புகிறது அங்காடி;
உரிமையாளனும் கட்டிடமும்
இன்னும் உயர்வதற்காய் !

செய்யா தப்பிற்கும்
கன்னத்தில் ஐவிரல் சித்திரங்களோடு;
மனிதம் செத்த மாக்கள் மேய்க்கும்
மக்களாகிப் போகின்றோம்-
மட்கிப் போன கனாக்களோடு !

அவர்கள் - மகிழ்வோடு சுற்ற
மகிழூந்து துடைக்கவும்...
காலணி மினுக்கி,
காரி உமிழுமிடம் கழுவிப் போடவும்;
ஊரிலிருந்து ஓடிவந்து-
கொத்தடிமைகளாய்ச் செத்து மடிகின்றோம் !

சிறுநீருக்கும் தேநீருக்கும் கூட
அனுமதி வேண்டி அங்கலாய்கிறோம்!
சதா ரணம் சாதாரணமாகிப் போக
சாதம் உண்ணும் வேளையிலும்
சக்கை உண்டுச் சாகின்றோம் !

கந்தலானாலும்
கண்களைக் கசக்கிக்
கட்டிக் கொள்கின்றோம்- அகத்துள்
நெருப்போடும் வெறுப்போடும்,
ஆடையகத் தொழிலாளிகள் என்ற
அடையாளங்களுடன் !

இங்கே எல்லாமே
உயர்விலை தான்
மலிவாக - நாம் மட்டுமே !

நிமிர்ந்து நடக்கும் போதே
கூன் விழுந்த வாழ்க்கை...
நேர்ப்படும் நேரம் சொல்ல
யாருமில்லை !

  - நண்பர் 'கே.எஸ்.கலை' (eluthu.com)

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 15, 2013 12:42 pm

பதினாறு மணிநேரம் நின்று கொண்டே வேலைப்பார்க்கும் அந்த தொழிலாளர்களைப் பார்க்கும்போதெல்லாம், இவர்களைப்பற்றி அக்கறைக்கொள்ள தமிழக தொழிலாளர் நலத்துறையில் ஒரு யோக்கியன் கூடவா அதிகாரியாக இல்லாமல் இருக்கிறான் என்று தோன்றுகிறது. இந்த கொடுமைகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி அங்காடித்தெரு என்ற படமும் வந்திருக்கிறது.

இன்று சென்னையில் மட்டும் இல்லை , அதே போல சரவணா ஸ்டோர் மட்டும் இல்லை பெரும்பாலான வர்த்தகநிறுவனங்கள் வேலை செய்யும் தொழிலாளர் நிலைமை இதுதான் ...
இதயம் இழந்து இயந்திரமாய்
இயக்கப்படும் இரக்கமற்ற
இவர்களின் இதயம் என்ன இயந்திரமா ?
இல்லாதவரை இல்லாமல் ஆக்கிடும்
இவர்களுக்குள் இரக்கமும் வாரதோ ?






ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 15, 2013 12:45 pm

manikandan.dp wrote:உருக்கமான பதிவு படிக்கும் போதே கண் கலங்குகிறது..... தொழிலாளர்களின் ரத்தம் குடிக்கும் முதலாளிக்கு நல்ல சாவு வராது .....
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)

என்னது இறந்துட்டாரா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 15, 2013 12:45 pm

பூவன் wrote:
பதினாறு மணிநேரம் நின்று கொண்டே வேலைப்பார்க்கும் அந்த தொழிலாளர்களைப் பார்க்கும்போதெல்லாம், இவர்களைப்பற்றி அக்கறைக்கொள்ள தமிழக தொழிலாளர் நலத்துறையில் ஒரு யோக்கியன் கூடவா அதிகாரியாக இல்லாமல் இருக்கிறான் என்று தோன்றுகிறது. இந்த கொடுமைகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி அங்காடித்தெரு என்ற படமும் வந்திருக்கிறது.

இன்று  சென்னையில்  மட்டும்  இல்லை  , அதே  போல  சரவணா ஸ்டோர் மட்டும்  இல்லை  பெரும்பாலான  வர்த்தகநிறுவனங்கள் வேலை செய்யும்  தொழிலாளர்  நிலைமை  இதுதான்  ...
இதயம்  இழந்து  இயந்திரமாய்  
இயக்கப்படும்  இரக்கமற்ற
இவர்களின் இதயம் என்ன  இயந்திரமா ?
இல்லாதவரை  இல்லாமல் ஆக்கிடும்
இவர்களுக்குள்   இரக்கமும் வாரதோ ?  




 
சூப்பர் பூவன் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 15, 2013 12:45 pm

பார்த்திபன் wrote:அங்காடிப் பட்சிகள்

பள்ளி இடைவிலகளோடு
பசிப்போக்கப் போராட
பட்டணத்தை நோக்கிப்
பறந்து வந்த
பாவப்பட்ட பட்சிகள் !

இரவும் பகலும் உருளும்
இயந்திரமாய் எமையாக்கி
உறிஞ்சி உறிஞ்சி – எம்
உதிரம் சப்புகிறது அங்காடி;
உரிமையாளனும் கட்டிடமும்
இன்னும் உயர்வதற்காய் !

செய்யா தப்பிற்கும்
கன்னத்தில் ஐவிரல் சித்திரங்களோடு;
மனிதம் செத்த மாக்கள் மேய்க்கும்
மக்களாகிப் போகின்றோம்-
மட்கிப் போன கனாக்களோடு !

அவர்கள் - மகிழ்வோடு சுற்ற
மகிழூந்து துடைக்கவும்...
காலணி மினுக்கி,
காரி உமிழுமிடம் கழுவிப் போடவும்;
ஊரிலிருந்து ஓடிவந்து-
கொத்தடிமைகளாய்ச் செத்து மடிகின்றோம் !

சிறுநீருக்கும் தேநீருக்கும் கூட
அனுமதி வேண்டி அங்கலாய்கிறோம்!
சதா ரணம் சாதாரணமாகிப் போக
சாதம் உண்ணும் வேளையிலும்
சக்கை உண்டுச் சாகின்றோம் !

கந்தலானாலும்
கண்களைக் கசக்கிக்
கட்டிக் கொள்கின்றோம்- அகத்துள்
நெருப்போடும் வெறுப்போடும்,
ஆடையகத் தொழிலாளிகள் என்ற
அடையாளங்களுடன் !

இங்கே எல்லாமே
உயர்விலை தான்
மலிவாக - நாம் மட்டுமே !

நிமிர்ந்து நடக்கும் போதே
கூன் விழுந்த வாழ்க்கை...
நேர்ப்படும் நேரம் சொல்ல
யாருமில்லை !

  - நண்பர் 'கே.எஸ்.கலை' (eluthu.com)

மனம் கனக்கும் கவிதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Mon Jul 15, 2013 12:49 pm

ராஜா wrote:
பார்த்திபன் wrote:
manikandan.dp wrote:
(உதாரணம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி தான்..... அவர் இறந்து இரண்டு நாள் கழித்துதான் உலகத்துக்கு தெரியவந்தது)
இதைப் பற்றி நான் அறிந்திருக்க வில்லை. சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் நண்பரே!
அதானே , எனக்கும் தெரியாதே என்ன நடந்தது ?! கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் நண்பரே

எனக்கு தெரிந்ததை கூறுகிறேன் ......
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி இறந்ததை அவரது மகன்கள் வெளியே சொல்லாமல் அடக்கம் செய்துவிட்டனர் ..... பின் உறவினர்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் தான் தெரிய வந்தது.
இதற்க்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது
1) இறந்த செய்தி தெரிந்தால் சரவணா ஸ்டோர் வியாபாரம் பாதிக்கப்பட்டும் மற்றும் குறைந்தது 2 நாள் கடையை மூட நேரிடும் ....
2)சொத்துகளில் இருந்த பிரச்சனையை சரிசெய்ய அல்லது பங்கு பிரிக்க இரண்டு நாள் தேவை
3)அவர் நோய்வாய் பட்டு இறந்தால் (வெளியே சொல்ல முடியாத நோயாக இருக்கலாம் )
என பல காரணங்கள் நான் கேள்விபட்டேன்
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் இறந்ததை சொல்லாமல் இருந்தற்கு ஒரு நல்ல காரணங்கள் இருக்க வாய்ப்புஇல்லை ...



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக