புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள் - Page 2 Poll_c10காதல் கவிதைகள் - Page 2 Poll_m10காதல் கவிதைகள் - Page 2 Poll_c10 
21 Posts - 95%
Geethmuru
காதல் கவிதைகள் - Page 2 Poll_c10காதல் கவிதைகள் - Page 2 Poll_m10காதல் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள் - Page 2 Poll_c10காதல் கவிதைகள் - Page 2 Poll_m10காதல் கவிதைகள் - Page 2 Poll_c10 
148 Posts - 58%
heezulia
காதல் கவிதைகள் - Page 2 Poll_c10காதல் கவிதைகள் - Page 2 Poll_m10காதல் கவிதைகள் - Page 2 Poll_c10 
83 Posts - 32%
T.N.Balasubramanian
காதல் கவிதைகள் - Page 2 Poll_c10காதல் கவிதைகள் - Page 2 Poll_m10காதல் கவிதைகள் - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
காதல் கவிதைகள் - Page 2 Poll_c10காதல் கவிதைகள் - Page 2 Poll_m10காதல் கவிதைகள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
காதல் கவிதைகள் - Page 2 Poll_c10காதல் கவிதைகள் - Page 2 Poll_m10காதல் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
காதல் கவிதைகள் - Page 2 Poll_c10காதல் கவிதைகள் - Page 2 Poll_m10காதல் கவிதைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
காதல் கவிதைகள் - Page 2 Poll_c10காதல் கவிதைகள் - Page 2 Poll_m10காதல் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
காதல் கவிதைகள் - Page 2 Poll_c10காதல் கவிதைகள் - Page 2 Poll_m10காதல் கவிதைகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதைகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 13, 2013 1:21 pm

First topic message reminder :

ஒரே  சுவாரஸ்யமற்றதாக வாழ்க்கை இருக்கிறதே.கொஞ்சல் சிலுசிலுப்பாக மாற்ரினாலென்ன.?
காதல் கவிதைகள் இதோ

1.கவிதைக் காதலி

எந்தன் கவிதைக் காதலியாள்
  ஏட்டில் மட்டும் வாழுகிறாள்
சந்தம் போட்டுப் பாடுகையில்
  சற்றே எட்டிப் பார்க்கின்றாள்
சொந்தம் என்றோர் முகமறியாள்
   சொல்லும் பெயரும் யாதுமிலாள்
விந்தை அவளுக் குண்மையிலே
  வாழும் உருவம் இல்லையய்யா

அன்றோர் மாலை நானிருந்தேன்
  ஆற்றங் கரையின் ஓரத்திலே
நின்றேன் தென்றல் நீவுசுகம்
 நிலவின் ஒளியோ போதைதர
மென்றே விழுங்குங் கனிசுவையும்
  மதுவின் இனிமை மனங்கொள்ள
நின்றாள் பக்கம் நான் கண்டேன்
  நிலவின் தங்கை  வாஎன்றேன்

செந்தேன் வழியும்  சிறுகுரலும்
 செல்லக் கிளியின் வளைமூக்கும்
வந்தேன் என்றே வலைவீசும்
  வட்டக் கரிய விழிகளையும்
கொந்தேன் என்றே அணில் தாவிக்
 கொள்ளா காக்கும் கொய்யாவாய்
பந்தாய்ச் சுவரில் பட்டலையும்
 பார்வைகொண்டே சுட்டெரித்தாள்

சிந்தை கண்டு சிறுமகளே
 சொல்லாய் யார்நீ நீயென்றேன்
உந்தன் கவிதை சிற்பியெனில்
 உணர்வில் வடித்த சிலையென்றாள்
முன்னே என்னை அறியீரோ
   முழுதாயுள்ளம் கொண்டீரே
என்னைத் தொட்டுப் பாரென்றால்
   எதுவுமில்லை காற்றானாள்

தேகம் இல்லாத் திருமகளோ
 திங்கள் வதனம் பொய்யானால்
ஆகும் வார்த்தை அத்தனையும்
 அகத்தே யெழுந்த கற்பனையோ
வேலும் வில்லாம் விழியென்றால்
  வீசும் கலையும்  வேடிக்கை
நாலும் நாலும் இரண்டாமோ
 நற்தமிழ் சொல்லும் பொய்யாமோ

வானில் வெய்யோன் வலம் கொள்ள
 வார்க்கும் வெம்மைத் தகிப்பாலே
கானல் நீராய் தொலைதோன்றும்
  காட்சி  காணும் கலைமான்போல்
வேனில்காலத்  தாகத்தை
  விருப்பைக் கொண்டு கலைந்தோடி
தானிப் புவியில்  தடுமாறும்
  தணலில் பொழியும் மழையாமோ

எந்தன்  மனதில் கவிவானில்
  எண்ணப் பஞ்சாம் முகிலாவாள்
தந்தோம் என்றே கவிபாடத்
   தோகையாக நடம்செய்வாள்
சந்தத் தமிழின் தங்கையவள்
   சாரீரத்தின் உருவுடையாள்
சிந்தையென்றோர்  சிற்றூரில்
    சொல்லும் கவிதைக் குறவானாள்

ஊனும் உடலம் இல்லாள் காண்
 உண்ணும் அன்னத் தோற்பையும்
தானும் கொள்ளாள் தண்ணிலவாள்
  தனியென் விழிமுன் நிழலாவாள்
தேனும்பாலும் போற்கவியில்
  திகழ்வாள் அவளைக் காணவென
வானும் வாழும் தேவர்களும்
வந்தாற்கூட  வடிவாகாள்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 13, 2013 4:48 pm

நன்றிகள் யினியவான் யாரது மாணிக்கம் ஐயா? புரியலையே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 13, 2013 4:57 pm

பெரியவர்களுக்கு மட்டும் என்பதால் நான் படிக்கவில்லை.
எனது மகன் படித்துவிட்டு , மிகவும் அருமை, நீலம் (அவனுக்கு spell பண்ணத் தெரியாது) அதிகம் என்கிறான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை.அன்பு மலர் நலமா? 

ரமணியன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 13, 2013 5:03 pm

T.N.Balasubramanian wrote:பெரியவர்களுக்கு மட்டும் என்பதால் நான் படிக்கவில்லை.
எனது மகன் படித்துவிட்டு , மிகவும் அருமை, நீலம் (அவனுக்கு spell பண்ணத் தெரியாது) அதிகம் என்கிறான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை.அன்பு மலர் நலமா? 
ரமணியன்
நலமய்யா! நான் அப்படிபோட்டதனால் இல்லாத அர்த்தம் எல்லாம் புதிதாக தெரிகிறது அதனால் முதல்கவிதை மாற்றிவிட்டேன்
வேறு ஏதாவது சரியில்லை என்றால்மாற்றிவிடுவேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 13, 2013 6:16 pm

kirikasan wrote:நன்றிகள் யினியவான் யாரது மாணிக்கம் ஐயா? புரியலையே
மாணிக்கம் நடேசன் அய்யா - நம்ம சிவாவோட இளமை ததும்பும் மருமகன் புன்னகை




kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Sep 15, 2013 3:19 pm

இது ஏற்கனவே வெளியானது .இருந்தும்

மோகம் கொல்லுதே

வண்ண நிலவினைக் கையில் பிழிந்ததை
வார்த்தவள் மேனிசெய்தான்
வெண்ணிற பஞ்செனும் மேகமதைக்கொண்டு
மென்மை அதற்களித்தான்
கண்ணில் கவர்ந்திட காந்தமதைக் கொண்டு
காதல்உணர்வு செய்தான்
பெண்ணில் அழகினில் பித்தனென்றாகிட
என்னை மயங்க வைத்தான்

கூந்தல் விரித்திட கூடுமின் வாசத்தில்
கொண்டமன மிழந்தேன்
ஏந்திழை காணிடை இன்பமதில் உள்ளம்
இத்தனைநாள் தொலைத்தேன்
காந்தள் மலர் எனும்கைவிரல் பட்டிட
காணும் உலகிழந்தேன்
பூந்தளிர் மேனியில் பொய்கை குளிர்தரும்
புத்துணர் வைஎடுத்தேன்

ஆயினும் இன்றவள் என்னை மறந்தவன்
அன்பினுக்காகிவிட்டாள்
போயவன் பக்கம் இருந்து எனதன்பை
தூசென விட்டுவிட்டாள்
சேலை இழுத்தவன் செய்யும் குறும்புக்குச்
சிந்தை பறி கொடுத்தாள்
பாயில் படுத்தவன் பக்கம் அணைத்துநீ
தேனென கொஞ்சுகிறாள்

மாயம் புரிந்தவன் மேனிஅழைந்தவள்
மார்பினில் தூங்குகையில்
நீயில்லையேல் இனிநானில்லை என்று
நீலி பசப்புகிறாள்
ஆவிதுடித்தவள் ஆற்றும் செயல்கண்டு
மேனி துடித்து நின்றேன்
பாவி என்னை மறந்தாயடி நீதியோ
பண்ணுவதேது என்றேன்

பூவிதழ் தன்னிலும் மெல்லியளால் ”அவன்
ஆழ்ந்து உறங்குகையில்
பாதி இரவினில் நான் வருவேன் இன்பம்
பார்த்திடுவோம்” என்கிறாள்
நானென்ன செய்வது நானிலத்தில் இந்த
கோதையரை நம்பியே
ஆண்படும்பாடு அறிந்து சரியென
ஓர் பதில் சொல்லிவிட்டேன்

போனது நேரம் பூமகள் இன்னமும்
காணவில்லை அவனோ
ஏனோ விழி மூடிதூங்கவில்லை என
எண்ணி பொறாமை கொண்டேன்!
நேரம் கடந்தவள் ஓடிவந்தாள் எந்தன்
நெஞ்சில் தலை புதைத்தாள்
ஆரத்தழுவி அவள்முகம்தாங்கி
ஆனது என்ன என்றேன்

தேனிதழால் ஒருமுத்தம்தந்து உங்கள்
செல்லமகன் குறும்போ
தாவியணைத்தென்னை ஓர்கணமும்
பிரியாத அன்பு கொண்டான்
ஆக அவன்இந்த அப்பாவுக்கு மகன்
தப்பாமல்தான் பிறந்தான்
தூங்க வைத்தே அவன்தொட்டிலில் இட்டிட
போதும் என்றாகிவிட்டேன்

நான் சிரித்தே அவள் நல்முகம் நோக்கி
எம் வாழ்வில் இனிமை தந்த
ஆனதொரு வயதான மழலை உன்
தேனிதழ் முத்தங்களை
பாதிதிருடி தன்பால் நறுவாசம்கொள்
ஈர்கன்னம் கொண்டான் என்றேன்
மீதி இன்னும்நூறு உள்ளதென்று விழி
மூடி இதழ் இணைத்தாள்:

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக