புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10 
3 Posts - 6%
prajai
உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10 
2 Posts - 4%
Rutu
உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10 
1 Post - 2%
சிவா
உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10 
1 Post - 2%
viyasan
உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10 
2 Posts - 15%
Rutu
உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 65 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 65 of 81 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 73 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 65 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 16, 2016 5:44 pm

Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them.
என்பார் ஷேக்ஸ்பியர் .

நீச்சல் வீராங்கனை BONN IS BORN GREAT .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:39 pm

அரசாங்க நிதியுதவி பெற குழந்தைகளுக்கு போலியான அறுவை சிகிச்சை செய்த தாயாருக்கு 7ஆண்டுகள் ஜெயில்

இங்கிலாந்து நாட்டில் அரசாங்க நிதியுதவி பெறுவதற்காக பெற்ற குழந்தைகளுக்கு போலியான அறுவை சிகிச்சை செய்த தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள கிராய்டன் நகரில் பெயர் வெளியிடப்படாத தாயார் ஒருவர் தனது 6 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.இந்நிலையில், வறுமை மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் அரசாங்க நிதியுதவியான 3,75,000 பவுண்ட் (3.2 கோடி ரூபாய்) தொகையை பெற திட்டமிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து 6 குழந்தைகளில் இருவர் ஊனமுற்றவராக நடிக்க அவர் பயிற்சி அளித்து வந்துள்ளார். இதன் அடிப்படையில், இருவருக்கும் ஆஸ்துமா மற்றும் மன இறுக்க நோய் இருப்பதாக தாயார் நாடகமாடியுள்ளார்.

பின்னர், குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி மருந்து மாத்திரைகளையும் கொடுத்து வந்துள்ளார். மேலும், பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் நுகர்வு குழாய்களும் பொறுத்தப்பட்டது.

இந்த சிகிச்சைகளுக்காக அவர் 2002 முதல் 2013 வரை சுமார் 2,87,800 பவுண்ட்( ரூ.2.49 கோடி ரூபாய்) அரசாங்க நிதியுதவியை பெற்றுள்ளார்.மேலும், எஞ்சிய தொகையினை பெற முயற்சி செய்தபோது அவரது நாடகம் அம்பலமாக கடந்த 2013ம் ஆண்டு தாயார் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இதன் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, அரசாங்க நிதியுதவியை பெறுவதற்காக பெற்ற குழந்தைகளுக்கு போலியான அறுவை சிகிச்சை செய்த தாயாருக்கு 7.6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்



உலகச் செய்திகள்!  - Page 65 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 18, 2016 7:01 am

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ கோரத்தாண்டவம் 82 ஆயிரம் பேர் வெளியேற உத்தரவு

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ கோரத்தாண்டவமாடி வருகிறது. இதன் காரணமாக 82 ஆயிரம் பேர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீ

அமெரிக்காவில் இப்போது கோடை காலம் ஆகும். அங்கு, கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை காட்டுத்தீ பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. காட்டுத்தீயின் கோரத்தாண்டவத்தில் இதுவரை 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நாசமாகி உள்ளது.

இந்த ஆண்டு கோடை காலத்தில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்திய தீ விபத்தாக இது கருதப்படுகிறது.

வீடுகளுக்கு ஆபத்து

‘புளுகட் பயர்’ என்றழைக்கப்படுகிற இந்த தீ விபத்தினால், அங்கு சான்பெர்னார்டினோ நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், அமெரிக்க அரசின் உதவியைப் பெறும் வகையிலும் அங்கு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து கலிபோர்னியா மாகாண கவர்னர் ஜெர்ரி பிரவுன் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீயில் அழிந்து விட்டன.

நெடுஞ்சாலை மூடல்

இந்த தீ விபத்து குறித்து அமெரிக்க தீயணைப்பு படை செய்தி தொடர்பாளர் லின் சீலியட் கூறும்போது,‘‘ இந்த தீ அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தீயின் பின்னால் அதிவேகமாக காற்று உள்ளது. இது கட்டுப்படுத்துவதற்கு கடினமான ஒன்று’’ என்று குறிப்பிட்டார்.

காட்டுத்தீ பரவி வருவதால் விரும்பத்தகாத விளைவுகளை தவிர்க்கிற வகையில் அங்கு லாஸ் வேகாஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை இணைக்கிற ‘இன்டர்ஸ்டேட்–15’ நெடுஞ்சாலை மூடப்பட்டு விட்டது.

700 வீரர்கள்

கஜோன் பாஸ் பகுதியில் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 700 தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்டமாக இந்த தீ, மொஜாவே பாலைவனத்தை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சான் பெர்னார்டினோ ரைட் உட் மற்றும், பெலான் நகர் பகுதிகளில் வாழ்கிற மக்கள் 82 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர்.

சாம்பல் மழை

காட்டுத்தீ காரணமாக பெலான் பகுதியில் சாம்பல் மழை பெய்வதாக அங்குள்ள கால்நடை வளர்ப்பு பண்ணை அதிபர் தெரிவித்தார்.

இன்னொரு பக்கம் வடக்கு கலிபோர்னியாவில் கிளேட்டன் பகுதியிலும் கடந்த சனிக்கிழமை காட்டு தீ பிடித்து பரவி வருகிறது. இந்த தீ விபத்தில் 175 வீடுகள் அழிந்தன. இங்கு 35 சதவீத தீ இப்போதுதான் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதே போன்று மத்திய கலிபோர்னியாவில் சிம்னியில் காட்டுத்தீ பரவியதில் 6,900 ஏக்கர் பரப்பளவு அழிந்தது. 40 கட்டிடங்களும் நாசமாகின.



உலகச் செய்திகள்!  - Page 65 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 18, 2016 6:01 pm

டுவிட்டரில் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு அதிகரித்திருப்பதாக வல்லுநர்கள் கணிப்பு

சமூக வலைத்தளமான டுவிட்டரில், ஆங்கிலத்தில் உலகளவில் அனுப்பப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வு சார்ந்த டுவீட்கள் அதிக அளவில் உயர்ந்திருப்பதாக பிபிசி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதத்தில், இஸ்லாமிய எதிர்ப்பு, தரக்குறைவான அல்லது வெறுப்புணர்வைக் காட்டும் டுவீட்கள் மொத்தம் 7 ஆயிரம் அனுப்பப்பட்டதாக பிரிட்டிஷ் கருத்தாய்வு நிறுவனம் டெமோஸ் அமைப்பை சேர்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில், இது போன்ற டுவீட்டுகள் 2,500 ஆக இருந்தது.

ஐரோப்பாவிலிருந்து வெளிவந்த இது போன்ற டுவீட்களில் பெரும்பாலானவை பிரிட்டனில் இருந்தே வந்துள்ளன. ஜூன் 15 ஆம் தேதி அன்று இது போன்ற டுவீட்கள் அதிகபட்சமாக பதிவாகி உள்ளன.

இதற்கு முந்தைய நாள், பிரஞ்சு நகரமான நீஸில் டிரக் தாக்குதல் நிகழ்ந்து 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என அழைத்து கொள்ளும் அமைப்பினர் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.



உலகச் செய்திகள்!  - Page 65 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 20, 2016 9:21 pm

சீனாவில் முயல் என நினைத்து சிறுமியை வேட்டைக்காரர்கள் சுட்டு கொலை செய்ததை அடுத்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சீனாவின் அன்ஹுயி மாகாணம் லுயான் பகுதியில் டிரக்கில் வந்த மூன்று வேட்டைக்காரர்கள், அங்குள்ள பண்ணையில் செடி கொடிகள் மற்றும் புற்கள் நிறைந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை முயல் என நினைத்து துப்பாக்கியால் சுட்டனர்.

பின்னர் அருகில் சென்று பார்த்தபோது சிறுமி என்று தெரிந்ததும், சம்பவ இடத்திலிருந்து தப்பித்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த சிறுமியை கண்ட அவரது பெற்றோர், அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, அந்த மூன்று வேட்டைக்காரர்களும், அருகிலிருந்த போலீசில் சரணடைந்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்



உலகச் செய்திகள்!  - Page 65 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 21, 2016 10:10 am

உலகச் செய்திகள்!  - Page 65 G5ZZ7O42QmOqezwrDXcw+turkeyblast
-
துருக்கியில் திருமண நிகழ்ச்சியொன்றில் குண்டு வெடிப்பு: 22 பேர் பலி!

-
துருக்கியில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபம் ஒன்றின் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலியானார்கள்.

துருக்கி நாட்டில் சிரியா எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள நகரம் காஜியண்டெப். இந்த நகரத்தில் சனிக்கிழமை இரவில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபம் ஒன்றின் அருகில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சுமார் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி இரவு 10.50 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் அரபு நாட்டு பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக துருக்கிபின் ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின் காஜியண்டெப் நகர எம்.பி சமில் தய்யார் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தற்கொலை படையிப்பினரின் முயற்சியாக இருக்கலாம் என்று துருக்கி துணை பிரதமர் மெஹ்மட் சிம்ஸ்க் தெரிவித்தார்.இந்த சம்பவத்திற்கு துருக்கி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தினமணி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 21, 2016 12:43 pm

சோகம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 21, 2016 7:19 pm

சிவா wrote:சீனாவில் முயல் என நினைத்து சிறுமியை வேட்டைக்காரர்கள் சுட்டு கொலை செய்ததை அடுத்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சீனாவின் அன்ஹுயி மாகாணம் லுயான் பகுதியில் டிரக்கில் வந்த மூன்று வேட்டைக்காரர்கள், அங்குள்ள பண்ணையில் செடி கொடிகள் மற்றும் புற்கள் நிறைந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை முயல் என நினைத்து துப்பாக்கியால் சுட்டனர்.

பின்னர் அருகில் சென்று பார்த்தபோது சிறுமி என்று தெரிந்ததும், சம்பவ இடத்திலிருந்து தப்பித்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த சிறுமியை கண்ட அவரது பெற்றோர், அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து, அந்த மூன்று வேட்டைக்காரர்களும், அருகிலிருந்த போலீசில் சரணடைந்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேற்கோள் செய்த பதிவு: 1219424

மரணம் எப்பிடி எல்லாம் சம்பவிக்கிறது . ஐயோ பாவம் !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 21, 2016 7:19 pm

ayyasamy ram wrote:உலகச் செய்திகள்!  - Page 65 G5ZZ7O42QmOqezwrDXcw+turkeyblast
-
துருக்கியில் திருமண நிகழ்ச்சியொன்றில் குண்டு வெடிப்பு: 22 பேர் பலி!

-
துருக்கியில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபம் ஒன்றின் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலியானார்கள்.

துருக்கி நாட்டில் சிரியா எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள நகரம் காஜியண்டெப். இந்த நகரத்தில் சனிக்கிழமை இரவில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபம் ஒன்றின் அருகில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சுமார் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி இரவு 10.50 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் அரபு நாட்டு பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக துருக்கிபின் ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின் காஜியண்டெப் நகர எம்.பி சமில் தய்யார் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தற்கொலை படையிப்பினரின் முயற்சியாக இருக்கலாம் என்று துருக்கி துணை பிரதமர் மெஹ்மட் சிம்ஸ்க் தெரிவித்தார்.இந்த சம்பவத்திற்கு துருக்கி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1219456

மரணம் எப்பிடி எல்லாம் சம்பவிக்கிறது . ஐயோ பாவம் !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 28, 2018 1:48 am

கடனை திருப்பி செலுத்துவதற்கு பதிலாக சிறுமிகளை முதியவர்களுக்கு விற்பனை செய்யும் கொடுமை ! அதிர்ச்சி செய்தி




பொதுவாக கறுப்பின மக்கள் தங்களது அன்றாட தேவைகளை நிறைவு செய்வதற்கு தேவையான பணத்தை பெற்று கொள்ள தங்களது பெண் பிள்ளைகளை விற்று அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு நிறைவு செய்கின்றனர் .இவர்களன் வாழ்வு மிகவும் அவலமானது ..அதாவது 12 வயது கூட நிரம்பாத சிறுமிகளை முதியவர்களிடம் விற்று அவர்கள் மூலம் அந்த சிறுமிகள் கர்பமடைவது தான் கொடுமையின் உச்சம் .இப்படிதான் ஒரு அவலம் நைஜிரியாவில் நடக்கின்றது .

நைஜீரியாவில் பெசவோ இன மக்கள் தங்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடனை அடைக்க சிறுமிகளை திருமணத்திற்காக விற்பனை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் கடனை திருப்பிச் செலுத்த முடியாத மக்கள் தங்கள் பிள்ளைகளை திருமணத்திற்காக விற்கும் அவலம் அங்கு நடந்தேறி வருகிறது.

இந்த வழக்கத்தில் சிக்கிய சிறுமி ஒருவர் மீட்கப்பட்டு, தமது கண்ணீர் கதையை சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதில், தம்முடன் உறவு கொள்ள வேண்டும் என்பதற்காகவே முதியவர் ஒருவர் தம்மை விலை தந்து வாங்கியதாகவும், ஒரு பெண் உள்ளிட்ட நான்கு பேர் வலுக்கட்டாயமாக தன்னை பிடித்திருக்க, அந்த முதியவர் உறவு வைத்துக் கொண்டார் எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

டோரொத்தி என்ற அந்த சிறுமி தமக்கு தாத்தா வயதுடைய நபருடன் நிர்பத்தப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.

கடன் சுமை அதிகரித்ததால் வேறு வழியின்றி தாயார் மற்றும் உறவினர்களால் டோரொத்தி விற்பனை செய்யப்பட்டார்.

டோரொத்தி முதன் முறையாக கருவுறும்போது அவருக்கு 12 வயது கூட நிரம்பவில்லை.

பெசவோ இன மக்களால் விற்கப்படும் சிறுமிகள் வாங்கும் ஆண்களின் உரிமைச் சொத்து. சில சிறுமிகள் குழந்தை தொழிலாளர்களாக மாறுகின்றனர், எஞ்சியவர்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆனால் கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்தே இந்த வழக்கத்தை அரசு தடை செய்துள்ளதாகவும், இதுபோன்ற வழக்கம் தற்போது நடைபெறுவதில்லை எனவும் அரசு சார்பில் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சமீபத்தில் மீட்க்கப்பட்ட சிறுமி ஒருவர் தம்மை வாங்கிய அந்த நபர் கொடூரமாக துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் எனவும், கொன்றால் கூட எவரும் கேட்க மாட்டார்கள் என அடிக்கடி கூறி வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.

கொடூரத்தின் உச்சமாக, முதியவர் ஒருவருக்கு விற்கப்பட்ட 7 வயதே நிரம்பிய சிறுமி ஒருவரை அதிகாரிகள் சமீபத்தில் மீட்டுள்ளனர்.

உலகில் உள்ள எஞ்சிய குழந்தைகளை போலவே உரிமை கொண்ட இந்த சிறுமிகளின் எதிர்காலம் கேள்விக்குறியே என சமூக ஆர்வலர்கள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.



உலகச் செய்திகள்!  - Page 65 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 65 of 81 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 73 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக